சென்னை, திருப்பூரில் பொங்கல் விழா; ஏற்பாடுகள் தீவிரம்

_திருவல்லிக்கேணி பகுதி 24ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டிகளை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் இளைஞர் – பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

13.01.2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றவுள்ளனர்.

மயிலாப்பூர் : மயிலாப்பூர் பகுதியில் 8ஆம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 07ம் தேதி சுப்பராயன் சாலையில் நடைபெற்றது. பரிசளிப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும்.

வட சென்னை : தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஜனவரி 15ம் தேதி பச்சையப்பன் கல்லூரி பின்புறம் உள்ள வைத்தியநாதன் தெருவில் நடைபெறும்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் 14ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் மாஸ்கோ நகரில் நடைபெறுகிறது.

பெரியார் முழக்கம் 11012024 இதழ்

You may also like...