யாழ் பிரபா- மணிகண்டன் இணையேற்பு ஒப்பந்த விழா

கழகத் தோழர் யாழ் இரவி- திராவிடச்செல்வி இணையரின், மகள் யாழ் பிரபா- மணிகண்டன் ஆகியோரின் இணையேற்பு ஒப்பந்த விழா 2.09.2021  மாலை 6 மணியளவில், மேடவாக்கம் ஆ’ள பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. திராவிடச் செல்வி மறைந்த கழகப் பேச்சாளர் கீசகனின் மகள் வயிற்றுப்  பேத்தி ஆவார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று இணையேற்பை நடத்தி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், புதிய குரல் ஓவியா, தமிழக மக்கள் முன்னணி பொழிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கழக ஏட்டிற்கு நன்கொடையாக ரூ. 2000/- வழங்கினர்.

பெரியார் முழக்கம் 04112021 இதழ்

You may also like...