சென்னையில் இணையதளப் பிரிவு கருத்தரங்கம்

கழகத்தின் இணையதளப் பிரிவு கருத்தரங்கம் சென்னை மாவட்ட இணையதளப் பிரிவு பொறுப்பாளர் இரண்யா தலைமையில் 26.03.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டுச் செய்திகளை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. யூடியூபில் செயல்பட வேண்டிய அவசியம், யூடியூப் சேனல்களைத் தொடங்கி இயக்குவது குறித்த அடிப்படையான தகவல்கள், சமூக வலைத்தளமான டிவிட்டரில் செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்தரங்கில் பேசப்பட்டது.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்க, தோழர்கள் சமூக வலைதளங்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து சில முன்னணி யூடியூபர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இறுதியாக திருப்பூர் மகிழவன் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 30032023 இதழ்

You may also like...