செங்கொடி நினைவு நாளில் மரணதண்டனைக்கு எதிராக கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

தோழர்  செங்கொடி நினைவு நாளான ஆகஸ்டு 28 அன்று தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வெள்ளமடை நாகராசன் தலைமை தாங்கினார். மாவட்ட காப்பாளர் மேட்டுப் பாளையம் இராமச்சந்திரன், மாநகர தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.

கழகப் பொறுப்பாளர்கள் து. ஜெய்ந்த் கிருஷ்ணன், பாலமுரளி, ஆன்ட்ரூஸ், நாகராஜ், பிரதாப், சிலம்பரசன், நேரு தாஸ், பிரசன்னா, சதீஸ், இராஜாமணி, இரத்னபுரி சதீஸ், விக்கி, மகேசு, பிரசாந்த், திருப்பூர் அகிலன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 05092013 இதழ்

You may also like...