Category: தலையங்கம்

தலையங்கம் ‘மிடூ’ இயக்கத்தை ஆதரிப்போம்

தலையங்கம் ‘மிடூ’ இயக்கத்தை ஆதரிப்போம்

நாங்களும்கூட’ (Metoo) இயக்கம் தீவிரமடைந்து வருகிறது. பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் மிரட்டல்களுக்கு உள்ளான பெண்கள், இந்த இயக்கத்தின் வழியாக மனம் திறந்து பேசுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை என்றாலும், துணிவோடு வெளியிடுவதற்கான பாதுகாப்பான சமூக சூழல் இப்போதுதான் வந்திருக்கிறது. இதில் குற்றக் கூண்டில் நிறுத்தப்படுகிற தனி நபர்கள் யார் என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லை. பிரச்சினைகள்தான் முக்கியம் என்பதே நமது கருத்து. பெண்கள் ‘உல்லாசத்துக்கும் இன்ப நுகர்ச் சிக்குமான’வர்கள் என்ற கருத்தியலை சமூகத்தில் கட்டமைத்தது ஆண் ஆதிக்க சிந்தனை. அந்த ஆணாதிக்க சிந்தனையை உரமிட்டு வளர்த்தது.  பொதுப் புத்தியில் திணித்து வைத்தது – மதங்களும், மதங்கள் கற்பித்த சடங்குகள் – பெண்கள் குறித்த பார்வைகள் தான். எந்த ஒரு ஆணும் தனது ‘பாலுறவு வக்கிரமங்களை’ பெருமையோடு பகிர்ந்து கொள்ள இந்த சமுதாயம் அனுமதிக்கிறது. அதற்காக எந்த ஆணும் வெட்கப்படுவது இல்லை. ஆனால் ஒரு பெண் அப்படி சமூகத்தில் பேசத்...

ஒன்றுபட்ட தமிழகம் – 7 தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது

ஒன்றுபட்ட தமிழகம் – 7 தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை 161ஆவது விதியின் கீழ் இராஜிவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளதை வரவேற்று பாராட்டுகிறோம். தமிழ்நாட்டின் வரலாற்றில் இது வரை இல்லாத ஒரு அதிசயமாக தமிழக அரசின் இந்த முடிவை அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் ஒருமித்து வரவேற்றிருப்பதைப் பெருமையுடன் சுட்டிக்காட்ட வேண்டும். இப்படி ஒரு பொதுக் கருத்தை தமிழ் மண்ணின் உணர்வாக மாற்றியது கடந்த காலங்களில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட பரப்புரைகளும் போராட்டங் களும், செங்கொடியின் உயிர்த் தியாகமும்தான். சமுதாயத்தைப் பக்குவப்படுத்தி விட்டால் சட்டம் அதன் பின்னால் ஓடி வரும் எனும் சமூகவியலை இது மெய்ப்பித்திருக்கிறது. இதுவே இந்த மண்ணை சமூகநீதிக்கும் சுயமரியாதைக்குமான விளைச்சல் பூமியாக்கிட பெரியார் பின்பற்றிய அணுகுமுறையும்கூட! மாநில அரசுக்கு  அரசியல் சட்டப் பிரிவு 161இன் கீழ் வழங்கப்பட்ட உரிமை ஒரு கூட்டாட்சி அமைப்பில் மாநில இறையாண்மையை உறுதி செய்கிறது. இதே வழக்குகளில்...

தலையங்கம் மே 22 – படுகொலைகள்

தலையங்கம் மே 22 – படுகொலைகள்

தமிழக வரலாற்றில் இரத்தக் கறைப் படிந்த நாள் மே 22. அன்னிய இராணுவம் ஒரு நாட்டில் படையெடுத்து – அந்த நாட்டு மக்களை ஈவிரக்கமின்றி கொன்றுக் குவிப்பதைப் போன்ற நிகழ்வு, தூத்துக்குடியில் நடந்து முடிந்திருக்கிறது. இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடுகள் காவல்துறை வன்முறைகளிலிருந்து மிகவும் வேறுபட்டது தூத்துக்குடி காலித்தனம். ‘ஸ்டெர்லைட்’ ஆலையை மூட வேண்டும் என்ற ஒரே குரல் தான் அங்கே அழுத்தமாக ஒலித்தது. “இந்த ஆலை இருக்கட்டும்” என்று அப்பகுதி யிலிருந்து ஒற்றைக்குரல்கூட கேட்கவில்லை. 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நச்சு ஆலையையே மூடாமல், அதன் இரண்டாவது பிரிவு தொடங்கவும் அனுமதித்த நிலையில் தான் மக்கள் போராட்டத்தைத் தீவிரமாக்கினார்கள். 99 நாட்கள்  அமைதியான போராட்டம் நடந்தது. எந்த அரசியல் கட்சிகளின் தலையீட்டையும் மக்கள் அனுமதிக்கவில்லை. மக்களின் 99 நாள் போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் அலட்சியப்படுத்தின. நூறாவது நாள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தவுடன் காவல்துறை தலையிட்டு பிளவை...

தலையங்கம் ‘சி.பி.எஸ்.ஈ.’ வெளியேறட்டும்!

தலையங்கம் ‘சி.பி.எஸ்.ஈ.’ வெளியேறட்டும்!

‘சி.பி.எஸ்.ஈ.’ என்ற பார்ப்பன கல்வி அமைப்பு, தமிழ்நாட்டில் சமூக நீதியால் கல்வி பெற்று உயர்ந்து மேலே வரத் துடிக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவி யர்களை ‘நீட்’ தேர்வு நடத்துவதற்கு தனக்குக் கிடைத்துள்ள உரிமையைப் பயன் படுத்தி அவர்களை அவமானப்படுத்தியிருக் கிறது; சொத்தடிமைகளாக நடத்தியிருக் கிறது. ‘சி.பி.எஸ்.ஈ.’க்கு தேர்வு நடத்தும் உரிமையே கிடையாது என்று 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ‘நீட்’ வழக்கு வந்தபோது, அப்போது தலைமை நீதிபதி யாக இருந்த அல்டாமஸ் கபீர் தலைமை யிலான நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது. அண்மையில் நடந்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்த வேண்டும். ‘சி.பி.எஸ்.ஈ.’ 10ஆம் வகுப்பு கணித வினாத்தாளும் 12ஆம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான வினாத்தாளும் முன்கூட்டியே ‘அவுட்’ ஆகிவிட்டன. இதைத் தொடர்ந்து பல இலட்சம் மாணவர்கள் மீண்டும் அதே தேர்வை எழுதும் நிலைக்குத் தள்ளப்பட் டனர். பெற்றோர்களையும் மாணவர்களை யும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி யது ‘சி.பி.எஸ்.ஈ.’. அந்த...

தலையங்கம் சிலிர்த்தெழுந்தது தமிழினம்!

தலையங்கம் சிலிர்த்தெழுந்தது தமிழினம்!

திரிபுராவில் லெனின் சிலை உடைப்பை நியாயப்படுத்தியும்,  அடுத்து தமிழ்நாட்டில் ஜாதி வெறியர் ஈ.வெ.ரா. சிலை உடைக்கப்படும் என்றும், பா.ஜ.க.வின் தேசியச் செயலாளராக உள்ள எச். ராஜாவின் முகநூல் பதிவு தமிழகத்தையே பெரியாருக்கு ஆதரவாக சிலிர்த்தெழச் செய்துவிட்டது.  ‘அப்படி ஒரு பதிவை நான் போடவில்லை; என்னுடைய வலைதளப் பொறுப்பை ஏற்றுள்ள ஊழியர் (அட்மின்) தவறாகப் பதிவேற்றி விட்டார்.’ என்று பதுங்கினார் எச். ராஜா. அவர் கக்கிய நஞ்சை அவரையே திரும்ப விழுங்க வைத்தது இந்த எழுச்சி. பிரதமர் மோடியும் பா.ஜ.க. தலைவர் அமீத்ஷாவும் மத்திய  அமைச்சர் பொன் இராதா கிருஷ்ணனும், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையும் எச்.ராஜா வின் கருத்தை ஏற்க முடியாது என்று  அறிவிக்கும் நிலையை உருவாக்கியது – தமிழ்நாட்டின் சிலிர்ப்பு. பெரியாரை அவ்வப்போது விமர்சனத்துக்குள்ளாக்கி வந்த சில தமிழ்த் தேசிய அமைப்புகளும் கலைத் துறையினரும் தங்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்து நின்ற ‘பெரியார்’ மீதான உணர்வுகளை வெளிப்படுத்தினர். கேரள முதல்வர்...

தலையங்கம் 24 ஆண்டுகளுக்குப் பிறகும்…

தலையங்கம் 24 ஆண்டுகளுக்குப் பிறகும்…

மண்டல் பரிந்துரை செயல்பாட்டுக்கு வந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகும், 27 சதவீத இடஒதுக்கீட்டில் மத்திய அரசுப் பணிகளில் பாதியளவைக்கூட எட்டிப் பிடிக்க முடியாத நிலையில் தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் நிலை உள்ளது. சமூக நீதி செயல்பாட்டாளர் முனைவர் ஈ. முரளிதரன், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ள தகவல்களை இதே இதழில் வெளியிட்டிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியானாலும், பா.ஜ.க ஆட்சியானாலும் சமூக நீதிக்கான கதவுகள் அடைக்கப்பட்டே இருக்கின்றன. முடிவெடுக்கும் அதிகார மய்யத்தில் கோலோச்சும் பார்ப்பன அதிகார வர்க்கம் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினரோடு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்து வருகிறது. இதைத் தட்டிக் கேட்கும் துணிவு கொண்ட ஆட்சியாளர்களோ, சக்தி வாய்ந்த சமூக நீதித் தலைவர்களோ இல்லை என்பதுதான் அவலம். இருக்கும் நிலையைப் பார்த்தால் இந்த நூற்றாண்டில்கூட 27 சதவீத இடஒதுக்கீட்டில் முழுமையாகப் பிற்படுத்தப்பட்டோர் அமரப்போவது கனவாகத்தான் இருக்கும். இந்துத்துவா சக்திகள் பெரும்பான்மைவாதம் பேசுகிறார்கள். இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில்...

தலையங்கம் உச்சநீதிமன்றத்தின் ‘அதிகார நீதி’

தலையங்கம் உச்சநீதிமன்றத்தின் ‘அதிகார நீதி’

இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையாக உச்சநீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்ட சூழல் அண்மைக் காலமாக உருவாகியுள்ளது. அதனால் உச்சநீதிமன்றம் விவாதங்களுக்கு அப்பாற்பட்டநேர்மையான அமைப்பாக செயல்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. ஆனால் என்ன நடக்கிறது? இப்போது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள்மீது இலஞ்சப் புகார் குற்றச் சாட்டுகள் வரத் தொடங்கியிருக்கின்றன. ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த ஒரு கல்வி அறக்கட்டளை – மருத்துவக் கல்லூரி தொடங்க மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி கேட்டது. மருத்துவக் கவுன்சில் மறுக்கவே நீதிமன்றத்தை நாடியது அந்த அறக்கட்டளை. நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற நீதிபதிகளுக்கு இலஞ்சம் பெற்றுத் தரும் விஸ்வநாத் அகர்வால் என்ற இடைத்தரகரை நாடியது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தருவதாக உறுதி கூறிய அந்த தரகர், அதற்கு நீதிபதிகளுக்கு கொடுப்பதாகக் கூறி பெரும் தொகையை இலஞ்சமாகப் பெற்றார். இது குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி பெரும் தொகை இலஞ்சமாக பெற்றதை உறுதி...

தலையங்கம் அறிவியல் ‘கடவுள்’ தயாராகி விட்டார்!

தலையங்கம் அறிவியல் ‘கடவுள்’ தயாராகி விட்டார்!

மனிதர்கள் மூளை சிந்திக்கிறது; அந்த சிந்தனை தான் மனிதர்களையும் வாழ்க்கையையும் வழி நடத்தி வருகிறது. இந்த ‘மூளை’க்குள் மனித சமூகத்தை முன்னேற்றும் கருத்துகளும் மனித சமூகத்தை சீரழித்து பின்னுக்கு இழுத்துச் செல்லும் கருத்துகளும் பதிகின்றன. ஒரு மனிதன் சமூக வெளியிலிருந்து கண்களால், காதுகளால், பேச்சுகளால் பெறப்படும் கருத்துகளே மூளைக்குள் பதிவாகி அந்த மூளை அதன் வழியாக சிந்திக்கும் செயல்பாட்டை நிகழ்த்துகிறது. ‘வேதங்களை’ப் படித்து தங்களது மூளைக்குள் ஏற்றிக் கொண்டு அதை பிற மக்கள் கற்றுக் கொள்ளக் கூடாது என்று ‘எழுத்து வடிவத்தை’ நீண்டகாலத்துக்குத் தராமல் இருந்தார்கள் பார்ப்பனர்கள். ஏனைய மனிதப் பிறவிகளின் ‘மூளை’யை விட தங்கள் ‘மூளை’யே மேலானது; உயர்வானது. இது கடவுளால் தங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்று இன்று வரை கூறி வருகிறார்கள். அந்த ‘மூளை’யின் கற்பனையிலேயே கடவுள் உருவாக்கப் பட்டது; மதம் உருவாக்கப்பட்டது; மதத்தின் தத்துவங்கள் உருவாக்கப்பட்டன. ‘மனுதர்மம்’ என்ற மனித விரோத சட்டத்தை உருவாக்கியதும், ஹிட்லர், முசோலினி,...

தலையங்கம்‘தேவ-அசுரப்’ போராட்டம் முடியவில்லை

தலையங்கம்‘தேவ-அசுரப்’ போராட்டம் முடியவில்லை

காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். இல்லை; அதற்கான சான்றுகளும் இல்லை என்று பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் சாதிக்கிறார்கள். அவர் ஆர்.எஸ்.எஸ்.காரரா? அதில் உறுப்பினரா? என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். கோட்சே ஒரு ‘சித்பவன்’ பார்ப்பனர்; அவரை காந்திக்கு எதிராக துப்பாக்கி தூக்க வைத்தது. அவரிடமிருந்த ‘இந்துத்துவம்’ என்ற அரசியல் மதவெறி என்பதை அவர்கள் மூடிமறைக்கப் பார்க்கிறார்கள். காந்தி கொலையில் தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சே, நாராயணன் ஆப்தே இருவருமே பார்ப்பனர்கள். “சங்பரிவார் குடும்பத்தில் வளர்ந்தவர்கள் நாங்கள்” என்று இந்தக் கொலையில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனையில் 15 ஆண்டுகாலம் கழித்து பிறகு விடுதலை செய்யப்பட்ட நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே வெளிப்படையாகவே கூறுகிறார். இப்போது உச்சநீதிமன்றத்தில் காந்தி கொலை குறித்து ஒரு வழக்கு – காந்தி கொலை நடந்து முடிந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது. மும்பையைச் சார்ந்த ‘அபினவ் பாரத்’ என்ற அமைப்பைச் சார்ந்த டாக்டர் பங்கஜ் பத்னிஸ் என்பவர் இந்த வழக்கை...

தலையங்கம் ஜப்பான் முன்னாள் பிரதமர் எச்சரிக்கிறார்

தலையங்கம் ஜப்பான் முன்னாள் பிரதமர் எச்சரிக்கிறார்

அரசுகளின் ‘வளர்ச்சித் திட்டங்கள்’ மக்கள் முன்னேற்றத்துக்கு அவர்களின் மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவுகின்றன என்பது இப்போது விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. 1990இல் ‘உலக மயமாக்கல்’ என்ற கோட்பாட்டின் கீழ் உலக வர்த்தக நிறுவனத்துடன் இந்திய பார்ப்பன ஆட்சி உடன்பாடு செய்து கொள்வதற்கு முன் கொண்டு வரப்பட்ட வளர்ச்சித் திட்டங்களினால் மக்கள் பயன் பெற்றார்கள் என்பது உண்மை.  பொதுத் துறை நிறுவனங்கள் வழியாக வேலை வாய்ப்புகள் பொருளியல் வளர்ச்சிகள் வந்தன. ஆனால் உலக மயமாக்கல் கொள்கைக்குப் பிறகு மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு பன்னாட்டு நிறுவனங் களின் சுரண்டல்களுக்கு முன்னுரிமை தரப்படும் நிலை உருவானது. உள்ளூர் சிறு, குறு தொழில்கள் முற்றிலும் நசுக்கப்பட்டு விவசாயத் துறை வஞ்சிக்கப் பட்டு இயற்கை வளங்களை சூறையாடி மக்களின் வாழ்வாதாரங்களை நசுக்குவதே அதன் நோக்கமாகி விட்டன. எனவே வளர்ச்சித் திட்டங்கள் மக்களின் வாழ்வதாரத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் அந்த மாநில மக்களின் வளர்ச்சிக்கும் பயன்படுவதாக இருக்க  வேண்டும். உலகின் பல்வேறு...

தலையங்கம் கேரள அரசின் ஜாதி ஒழிப்புப் புரட்சி

தலையங்கம் கேரள அரசின் ஜாதி ஒழிப்புப் புரட்சி

 ‘திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு’ 36 பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகர்களாக்கி சாதனைப் படைத்திருக்கிறது. இதில் 6 அர்ச்சகர்கள் ‘தலித்’துகள் என்பது கூடுதல் சிறப்பு. ஆகம விதிமுறைகளைப் பின்பற்றும் பெரும் கோயில்களில் ‘பிராமணர்கள்’ மட்டுமே அர்ச்சகராக முடியும்; வேறு ‘பிரிவினர்’ அர்ச்சகராவது ஆகமங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் எதிரானது என்று தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் ஜாதித் திமிரோடு கூறி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி 1970ஆம் ஆண்டே தந்தை பெரியார் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. பார்ப்பனர்கள் நேரடியாக உச்சநீதிமன்றம் சென்று சட்டத்தை முடக்கினார்கள். தொடர்ந்து எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது இது குறித்து ஆராய நீதிபதி மகாராஜன் தலைமையில் 1979ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரை 1982இல் வெளியிடப்பட்டது. ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக எந்தத் தடையும் இல்லை என்று சாஸ்திர ஆதாரங்களை விரிவாக எடுத்துக் காட்டி, அந்தக் குழுப் பரிந்துரை வழங்கியது. 2003ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம், இப்பிரச்சினைக்கு மீண்டும்...

தலையங்கம் காவிரி புஷ்கரமாம்!

வேதகால பார்ப்பனச் சடங்குகள் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அரசு நிறுவனங்களும் துணை போய் மதச்சார்பின்மை கொள்கையை குழித் தோண்டி புதைக்கின்றன. பார்ப்பன மேலாதிக்கம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இவை சான்றுகள். காவிரியில் நீர் இல்லை; காவிரி நீரை கருநாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் முறையாக தர மறுப்பதால் விவசாயம் கடும்பாதிப்புக்கு உள்ளாகி விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உருவாகி யிருக்கிறது.  டெல்லியில் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யப் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.  காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வளம் சேர்க்கும் நதி; விவசாயத்துக்கு ஆதாரமானது என்பதால் தமிழர்கள் காவிரியைப் போற்றுகிறார்கள். தமிழ் இலக்கியங்கள் பெருமை பேசுகின்றன. ஆனால் பார்ப்பனர்களுக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. காவிரி வற்றினாலும் விவசாயிகள் மாண்டாலும் ‘காவிரி புஷ்கரம்’ நடத்தவே துடிக்கிறார்கள். அது என்ன ‘காவிரி புஷ்கரம்’? 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறதாம் ‘காவிரி புஷ்கரம்’. குருபகவான் ஒவ்வொரு ஆண்டும்...

தலையங்கம் ‘அனிதாவின் 1176’

தமிழ்நாட்டின் சமூக நீதி தத்துவம் வார்த்தெடுத்தப் பெண் அனிதா. ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் ஏழை தலித் குடும்பத்தில் வறுமைச் சூழலில் தனக்கும் மருத்துவராகும் ஆற்றல் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு இரவு பகலாக உழைத்து படித்துப் பெற்ற மதிப்பெண் 1200க்கு 1176. ‘நீட்’ தேர்வு என்பது இல்லாமலிருந்தால் மருத்துவக் கல்லூரியின் கதவுகள் அவருக்கு திறந்திருக்கும். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்தார். ஒரு கிராமத்தில் வறுமைச் சூழலில் ஜாதிய ஒடுக்குமுறை வலியோடு படித்தப் பெண்ணின் சாதனையை உச்சநீதிமன்றம் திரும்பிப் பார்க்க மறுத்துவிட்டது. மருத்துவக் கல்வியின் திறனை உயர்த்துவதற்குத்தான் நீட் தேர்வு என்று வாதிடுவோரை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சரியான விடைக்கு மதிப்பெண் என்பதுதான் நாம் பழகியிருக்கும் நேர்மையான கல்வித் திட்டம். ஆனால், தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு; தவறான விடையைத் தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு மாணவர்களைக் குழப்பி விடும் சூழ்ச்சித் திறன் மிகுந்த வினாக்கள் என்று அறமேயற்ற ஒரு பயிற்சித் தேர்வு ‘நீட்’....

தலையங்கம் சமூக நீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது

தலையங்கம் சமூக நீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது

தமிழ்நாட்டின் தனித்துவமான சமூகநீதி தத்துவத்துக்கு சாவுமணி அடித்துவிட்டது நடுவண் பா.ஜ.க. ஆட்சி. ஓராண்டுக்கு தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு தருவதாகக் கூறி முன் வந்து, தமிழக அரசிடம் அவசரச் சட்டத்தை தயாரிக்கச் சொல்லி விட்டு, உச்சநீதிமன்றத்தில் ஒரு மாநிலத்துக்கு மட்டும் விதி விலக்கு தர முடியாது என்று கூறும் துணிச்சல்  மோடியின் பா.ஜ.க. ஆட்சிக்கு எப்படி வந்தது? தமிழர்கள் அவ்வளவு ஏமாளிகள் என்று கருதி விட்டார்கள். மாநில அரசு பாடத் திட்டத்தில் படித்த 85 சதவீத மாணவர்களில் மருத்துவப் படிப்புக்கு தேர்வு பெற்றவர்கள் 2224 பேர். 15 சதவீதம் பேர் மட்டுமே படித்த சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் தேர்வு பெற்றிருப்பவர்கள் 1310 பேர். நீட் தேர்வு நடத்தாமல் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு தேர்வு பெற்ற சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் எண்ணிக்கை 30 மட்டும்தான். சுமார் 45 சதவீதம் இப்போது அதிகரித்திருக்கிறது. இந்த அநீதியை முறைப்படுத்துவதற்கு மாநில அரசு பிறப்பித்த 85...

தலையங்கம் திருச்செங்கோடு தீர்மானங்கள்

2012 ஆகஸ்டு 12ஆம் தேதி ஈரோட்டில் உருவானது ‘திராவிடர் விடுதலைக் கழகம்’. தடம் மாறாத பெரியாரியல் பயணத்தை முன்னெடுக்க உறுதி ஏற்று இந்த இயக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கெடுத்து  களமாட முன் வந்தனர். மாறி வரும் அரசியல் சமூக சூழல்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற செயல் திட்டங்களை உருவாக்கி களப்பணியாற்றி வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். பொய்யான வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் பலவீனங் களையும் மூலதனமாக்கி இந்தியாவின் அதிகாரத்தைப் பிடித்தது பா.ஜ.க. அதிகாரம் தங்களிடம் வந்த பிறகு ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையுடன் ‘பார்ப்பனிய–மதவாதத்’ திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தத் தொடங்கி விட்டார்கள். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் தங்கள் அதிகாரப் பிடிக்குள் கொண்டு வருகிறார்கள். அதற்காக எத்தகைய ‘ஜனநாயக’ படுகொலைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியப் பார்ப்பனியத்துக்கும் இந்துத்துவ ஒடுக்குமுறை அரசியலுக்கும் நேர் முரணாக மக்கள் விடுதலைக்கான கொள்கைகளைக் கொண்டிருக்கும் வலிமையான கருத்தியல் பெரியாரியம்; அம்பேத்கரியம். இந்த உண்மை,...

தலையங்கம்‘ஒற்றை ஆட்சி’ ஆபத்து!

தலையங்கம்‘ஒற்றை ஆட்சி’ ஆபத்து!

மோடியின் நடுவண் ஆட்சி இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை முற்றாக ஒழித்துவிட்டு ஒற்றை ஆட்சி முறையாக மாற்றியமைத்திடும் சட்டபூர்வ முயற்சிகளைத் தொடங்கிவிட்டது. மொழி வழியிலமைக்கப்பட்ட மாநிலங்களும் மாநிலங்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள இறையாண்மையும் இந்தியாவை ‘இந்துத்துவா’ நாடாக்கும் முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பதை உணர்ந்து ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலோடு இந்த ஆபத்தான திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கிவிட்டனர். பொதுப் பட்டியலில் கல்வி உரிமை இருப்பதைப் பயன்படுத்தி தேசிய கல்விக் கொள்கையும் நீட் தேர்வுகளும் வந்து விட்டன. உணவு உரிமைப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் மாநிலங்களின் உணவு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. மும்மொழித் திட்டம் திணிக்கப்படுகிறது. மாநில உரிமைகளின் கீழ் வரும் கால்நடைத் துறையிலும் தலையிட்டு மாட்டு விற்பனையை ஒழுங்குப்படுத்தும் சட்டங்களைக் கொண்டு வந்தனர்.  மருத்துவ சுகாதார சேவைகளையும் முடக்குகிறார்கள். இப்போது மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனையின் சில பகுதிகளை தனியே பிரித்து, தனியாருக்கு குத்தகைக்கு விடும் ஒரு ஆபத்தான யோசனையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். ‘நிதி அயோக்’...

தலையங்கம் தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம்

தலையங்கம் தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம்

மதுரையில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பார்ப்பனிய கூத்து அரங்கேறியிருக்கிறது. கேசவ சேவா கேந்திரம் மற்றும் சிறீகிருஷ்ணா அறக்கட்டளை சார்பாக ‘பாத பூஜை’ – ‘பாரத மாதா பூஜை’ நடத்த பள்ளி நிர்வாகம் அனுமதித்துள்ளது. மாணவர் – ஆசிரியர்கள் கால்களைக் கழுவும் ‘பாத பூஜை’யும் ஆர்.எஸ்.எஸ். கொடியை கரங்களில் ஏந்தியபடி நிற்கும் ‘பாரத மாதா’ சிலை வணக்கமும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ‘விசுவ இந்து பரிஷத்’ முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி அருகே மாடுகளை விற்பனைக்குக் கொண்டு சென்ற ஒரு வாகனத்தைத் தடுத்து நிறுத்திய மன்னார்குடியைச் சார்ந்த ஒரு பார்ப்பன ‘ஜீயர்’ காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார். மதவெறி சக்திகள் திரண்டு வன்முறையில் இறங்கவே பொது மக்கள் திரண்டு வன்முறைக் கும்பலை திருப்பித் தாக்கி விரட்டியடித்ததாக செய்திகள் வந்துள்ளன. பார்ப்பன ஜீயர் பாதுகாப்போடு ஊர் திரும்பி விட்டார். ஈஸ்டர் பண்டிகையின்போது...

தலையங்கம் ஆரியத் திமிரை அடித்து நொறுக்கும் மரபணு ஆய்வு

தலையங்கம் ஆரியத் திமிரை அடித்து நொறுக்கும் மரபணு ஆய்வு

இந்தியாவின் பூர்வீகக் குடிகள் ஆரியர்கள்தான் என்றும், அவர்கள் சிந்துவெளி நாகரிக மக்கள் மீது தங்கள் பண்பாட்டைத் திணித்தார்கள் என்பது கட்டுக்கதைகள் என்றும் பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் இதுவரை எழுதியும் பேசியும் வந்தனர். இதையே உறுதிப்படுத்தி மரபணு சோதனை முறையில் நடத்தப்பட்ட சில ஆய்வுகள் வந்த பிறகு, பார்ப்பன சக்திகள் மிகத் தீவிரமாக ‘மண்ணின் மைந்தர்கள் நாங்களே’ என்று மார்தட்ட ஆரம்பித்தனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கொள்கைகளை உருவாக்கிய கோல்வாக்கர், “ஆரியர்களே பூர்வக் குடிகள்; உலகம் தோன்றிய காலத்திலிருந்தே ஆரியர்களும் இருந்து வருகிறார்கள். ஆரியர்களைத் தவிர, ஏனையோர் மிலேச்சர்கள்; இரு கால் பிராணிகள்” என்ற கருத்தை முன் வைத்தார். இப்போது அந்த கருத்துகளின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கும் நவீன மரபணு ஆய்வு வெளி வந்துவிட்டது. ஹார்வார்டு மருத்துவக் கல்லூரியின் மரபணு ஆய்வாளர் பேராசிரியர் மார்டின் பி. ரிச்சர்ட் தலைமையிலான 16 விஞ்ஞானிகள், 16,224 மரபணுக்களை சேகரித்து ஆய்வு நடத்தி “BMC Evolutionary Biology” என்ற ஆய்வு...

தலையங்கம் பேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்?

தலையங்கம் பேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்?

பேரறிவாளன் உடல்நலமில்லாத தனது தந்தையுடன் இருப்பதற்காக பரோலில் விடுதலை செய்யுமாறு கேட்ட கோரிக்கையை தமிழகத்தில் பா.ஜ.க. பினாமி ஆட்சியான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மறுத்துள்ளது, வன்மையான கண்டனத்துக்கு உரியது. 30 நாள்கள் கழித்து வேலூர் சிறை அதிகாரி பரோல் அனுமதியை மறுத்துள்ளார். மத்திய அரசு கீழ் உள்ள சட்டத்தின்படி, பேரறிவாளன் தண்டிக்கப் பட்டுள்ளதால், மாநில அரசுக்குரிய பரோலில் விடுதலை செய்யும் உரிமை (தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்புக்கான விதிகள் 1982) தமிழக அரசுக்கு இல்லை என்று சிறை அதிகாரி காரணம் கூறியிருக்கிறார். தண்டனைக் குறைப்பு அதிகாரமே மாநில அரசுக்கு இல்லை என்று இதுவரை கூறி வந்தது தமிழக அரசு. இப்போது பரோலில் விடுதலை செய்யும் உரிமையும் இல்லை என்று கூறியிருப்பது தமிழக ஆட்சியாளர்கள்  இறையாண்மையை நடுவண் அரசுக்கு விலைபேசி விற்று விட்டார்களா அல்லது அடகு வைத்து விட்டார்களா என்று கேட்கத் தோன்றுகிறது. பரோல் மறுப்புக்கு தமிழ்நாடு அரசு கூறும் இந்த வாதம்,...

தலையங்கம் இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே – பதில் கூறுங்கள்!

தலையங்கம் இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே – பதில் கூறுங்கள்!

பிறப்பால் பார்ப்பனரான வைணவ மதப் பிரிவைச் சார்ந்த இராமானுஜரின் ஆயிரமா வது ஆண்டு விழா இப்போது கொண் டாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவாரங்கள் – வைணவப் பார்ப்பனர்கள் – இராமானுஜருக்கு விழா எடுக்கிறார்கள். ஆனால் இராமானுஜர் முன் வைத்த கருத்து களை இவர்கள் பின்பற்று கிறார்களா? இராமானுஜர், பாரதியைப்  போல் ஒடுக்கப்பட்ட ஜாதியினரும் ‘பூணூல்’ அணிந்து, ‘பிரம்மத்தை’ அடையலாம்; ‘பிராமணர் என்பது பிறப்பால் வருவது அல்ல’ என்று கூறிய ஒரு சீர்திருத்தவாதி. 3 சதவீத பார்ப்பனர்கள், தங்கள் பிறவி மேலாண்மையின் அடையாளமாக அணியும் பூணூலை மற்றவர்களுக்கு அணியச் சொல்வதைவிட பிறவி அகங்காரத்தை வெளிப்படுத்தும் பூணூலை பார்ப்பனர்களே ஏன் கழற்றி வீசக் கூடாது என்பதுதான் பெரியார் இயக்கம் முன் வைத்த கேள்வி. அரிசியில் கல் கலந்துவிட்ட நிலையில் கல்லைப் பொறுக்கி, அரிசியைத் தூய்மைப்படுத்த வேண்டுமே தவிர, அதைச் செய்யாது, அரிசிகளை பொறுக்கிக் கொண்டிருப்பது அறிவுடைமையாகுமா என்று பெரியார் கேட்டார். இத்தகைய...

தலையங்கம் ஆபத்து – எச்சரிக்கை!

தலையங்கம் ஆபத்து – எச்சரிக்கை!

இந்தியாவை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வரு வதற்கும், இந்துத்துவ சர்வாதி காரத்தை ‘ஜனநாயக’ வழிமுறைகள் வழியாக திணிப்பதற்குமான ஆபத்தான திட்டங்களை நடுவண் பா.ஜ.க. ஆட்சி மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. இதற்கு எத்தனையோ சான்றுகளை அடுக்கடுக்காக காட்ட முடியும். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை நுழைத்து, தமிழகத்தின் தனித் துவத்தைப் பறித்து விட்டார்கள். பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கும் இது வரப் போகிறது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் தரும் சட்டத்தை இயற்றிய போது அதை நாமும் வரவேற்றோம். அதன் வழியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஒரு ஜாதியை இணைப்பது அல்லது நீக்குவது எனும் உரிமையை  மாநில அரசிடமிருந்து பறித்து விட்டார்கள். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாநில அரசு திருத்தங்களை செய்ய முடியாது. காவிரி நீர் உரிமைக்காக நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், நடுவர் மன்றம் நிர்ணயித்த 192 டி.எம்.சி. தண்ணீரை...

தலையங்கம் தருண் விஜய் உண்மை முகம்!

தலையங்கம் தருண் விஜய் உண்மை முகம்!

திருக்குறள் பெருமையைப் பேசுகிறார், தருண் விஜய் என்று தமிழ்நாட்டில் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து பாராட்டு மழைகளை பொழிந்தவர்கள் உண்டு. பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான அவர், அரித்துவாரில் கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை வைக்கப் போவதாகக் கூறினார். வைதீகப் பார்ப்பனர்கள், திருவள்ளுவர்  ‘தீண்டத்தகாதவர்’ என்று கூறி, சிலையை ‘புனித நதி’க் கரையில் நிறுவ எதிர்த்தனர். அதற்குப் பிறகு ‘சங்கராச்சாரி சதுக்கம்’ என்ற இடத்தில் சிலையை நிறுவ முடிவு செய்த போது சொரூபானந்த சரசுவதி எனும் பார்ப்பனர் தலைமையில் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். இது ஆதிசங்கரர் அறக்கட்டளைக் குரிய இடம். ஆதிசங்கரர் சிலை மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறி விட்டனர். கடைசியில் பொதுப் பணித்துறை விருந்தினர் வளாகத்தில் சிலை திறப்பு நடந்தது. தருண் விஜய் இப்படியெல்லாம் நடத்திய ‘தமிழ்ப் பற்று’ நாடகம், இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. புதுடில்லி நொய்டா பகுதியில் ஆப்பிரிக்க நாட்டின் மாணவர் தாக்கப்பட்டது குறித்து சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு...

சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு ‘தமிழ் இந்து’ தலையங்கம்

‘தமிழ் இந்து’ நாளேடு மார்ச் 24ஆம் தேதி பாரூக் படுகொலைக் குறித்து எழுதிய தலையங்கம். கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்கு கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செய லாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடு களையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில்...

தலையங்கம் தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு

தலையங்கம் தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் ஒவ்வொரு நாளும் திடீர் திடீர் மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றுதலையே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் கட்சிகளில் அதன் ஒற்றை சர்வாதிகாரத் தலைமையில் வெற்றிடம் உருவாகிடும்போது கட்சி சிதறுண்டுதான் போகும். அணி சேர்க்கைகளுக்கு ஆதார சுருதியாக அதிகார மய்யங்களைக் கைப்பற்றுதலே இருக்குமே தவிர, கொள்கைப் பிரச்சினைகளுக்கு வாய்ப்பே இல்லை. அ.இ.அ.தி.மு.க. கட்சியே தமிழக பா.ஜ.க. தான். தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளுக்கு மத அடையாளம் தந்து, கட்சி நிகழ்வுகளையே மதச் சடங்குகளாக மாற்றிய கட்சி அது. பகுத்தறிவு சிந்தனைக்கோ, பகுத்தறிவாளர்களுக்கோ, அக்கட்சியில் துளியும் இடமில்லை. கட்சி அமைப்பும், ஜாதிய கட்டமைப்புக் குள்ளேயே முடங்கிக் கிடந்தது. இந்த நிலையில் பிளவுபட்டு நிற்கும் அணிகளில் எந்த அணி கொள்கைக்கானது என்ற ‘தேடல்களில்’ இறங்குவது, ‘இருட்டறைக்குள் கருப்புப் பூனையை’த் தேடும் கதையாகவே இருக்கும். பெரியார் வாழ்ந்த காலத்தின் அரசியல் களமும், பொது வாழ்க்கை நேர்மையும் முற்றிலும் வேறானது. தனது கொள்கைகளை முன்னெடுத்துச்...

தலையங்கம் ‘டிரம்ப்’பின் இந்துத்துவம்

தலையங்கம் ‘டிரம்ப்’பின் இந்துத்துவம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தல் பரப்புரையின் போது ‘இந்துத்துவா’ கொள்கை தனக்கு பிடிக்கும் என்றார். தமிழ்நாட்டில் மதவாத பார்ப்பன சக்திகளும், அமெரிக்கா வாழ் ‘இந்துத்துவ’ சக்திகளும் தங்களின் மதவாத கொள்கைக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்துவிட்டதில் ஆனந்தக் கூத்தாடின. எதிர்பார்த்ததுப் போலவே பதவிக்கு வந்தவுடன் தனது இஸ்லாமிய வெறுப்பு நஞ்சை கக்கத் தொடங்கிவிட்டார். இராக், சிரியா, லிபியா, ஏமன், சூடான் மற்றும் ஈரான் நாடுகளைச் சேர்ந்த (இஸ்லாமிய) அகதிகள், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார். இந்த ‘மதவெறி’ ‘வகுப்புவாத’ செயல்பாட்டுக்கு அமெரிக்காவின் பெண் அரசு வழக்கறிஞர் சாலியேட்ஸ் எதிர்ப்பு தெரிவித்து, “இது சட்டப்பூர்வமான ஆணையல்ல” என்று துணி வுடன் கூறினார். இந்தியாவில் கொழுத்த ஊதியத்தில் உச்சநீதி மன்றத்தில் வாதாடும் நமது அரசு வழக்கறிஞர்களிடம் (பெரும் பாலும் பார்ப்பனர்கள்தான்) இப்படி நெஞ்சுரத்துடன் அரசை எதிர்க்கும் நேர்மையை கனவில்கூட கற்பனை செய்ய முடியாது. அதேபோல் குடியேற்றத் துறை இயக்குனர்  டேனியல் ராக்ஸ்டேல் என்பவரும் எதிர்ப்பை...

தலையங்கம் இலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட எழுச்சி உலகம் முழுதும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் அவசரமாக டெல்லிக்குப் போய் பிரதமரிடம் அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியிருப்பது மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறைகளில் இறங்கிடாது அமைதி வழியில் போராட்டத்தைத்  தொடர்ந்து முன்னெடுத்திட வேண்டும் என்ற மாணவர், இளைஞர்களின் அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அந்த அணுகுமுறை தான் போராட்டத்தை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவதாகப் போராட்டத்தின் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழர்களின் உரிமைகள் பண்பாடுகளை தொடர்ந்து மறுத்து வரும் நடுவண் அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகளுக்கு எதிரானதே இந்தப் போராட்டத்தின் முதன்மையான இலக்கு. காவிரி உரிமை மறுப்பு, நுழைவுத் தேர்வு திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில் குலக்கல்வி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பறிப்புகளினால் உருவாகி வந்த அழுத்தங்களே ‘ஜல்லிக் கட்டு...

தலையங்கம் முக்கியத்துவம் பெறும் தீர்ப்பு!

தலையங்கம் முக்கியத்துவம் பெறும் தீர்ப்பு!

7 நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு மதச்சார்பின்மை குறித்து அளித்துள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவமானது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 1990ஆம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அபிராம் சிங், ‘இந்து ராஜ்யம்’ அமைப்பேன் என்று கூறி வாக்கு கேட்டார். மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்பது தேர்தல் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு (பிரிவு 123(3)) எதிரானது. மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. தேர்தல் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் கூறியது. 1995இல் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டுக்கு வந்தபோது வழக்கை விசாரித்த ஜே.எஸ். வர்மா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “இந்துமதம் அல்லது இந்துத்துவா என்பது இந்திய உபகண்டத்தில் மக்களின் வாழ்க்கை நெறி, அதை மதமாகக் கருத முடியாது” என்று கூறிவிட்டது. சங்பரிவாரங்கள் ஆனந்தக் கூத்தாடின. அன்றிலிருந்து இன்றுவரை “இந்து என்பது வாழ்க்கை நெறி” என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது என்று வாதிட்டு வருகிறார்கள். இந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தெளிவான விளக்கம் தரவேண்டும் என்று சில...

தலையங்கம் அய்.அய்.டி.களுக்குள் நுழைகிறது சமஸ்கிருதம்

தலையங்கம் அய்.அய்.டி.களுக்குள் நுழைகிறது சமஸ்கிருதம்

இந்திய தொழில்நுட்பக் கழகமான அய்.அய்.டி.களில் சமஸ்கிருதம் கற்றுத் தருவதற்கு மத்திய மனித வளத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி எழுத்து மூலம் அளித்த பதிலில், “வேதங்களில் கூறப்பட்ட அறிவியலை மாணவர்கள் படித்து அறிவதற்காக, சமஸ்கிருதத்தை கற்பிக்க தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும்” என்று அய்.அய்.டி.களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். புராணம் மற்றும் வேதங்களில் கூறியுள்ள ‘அறிவியல்’ கருத்துகளைப் பரப்பிடவும், சமஸ்கிருதத்தைப் பாதுகாத்திடவும் மோடி ஆட்சி ஒரு குழுவை நியமித்திருக்கிறது. முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியான தமிழ்நாட்டைச் சார்ந்த கோபால்சாமி அய்யங்கார், இந்தக் குழுவின் தலைவர். இந்தக் குழு நவீனகால படிப்புகளான கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், பொறியியல், தொழில் நுட்பம் தொடர்பாக வேதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாம். அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மோடி ஆட்சி இந்த முடிவை  எடுத்துள்ளதாம். இதற்கு ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த...

தலையங்கம் அடுத்து….?

தலையங்கம் அடுத்து….?

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த முதலமைச்சர் ஜெயலலிதா முடிவெய்திவிட்டார். ஆளுமைத் திறன் கொண்ட ஒரு பெண்ணாக தன்னை உயர்த்திக் கொண்டவர். பெண்களால் ஆட்சி சக்கரத்தை வலிமையோடு நகர்த்திச் செல்ல முடியும் என்று நிரூபித்தவர். தான் வழி நடத்திய கட்சிக்கு அவர் சர்வாதிகாரியாகவே செயல்பட்டார். அவரது விரல் அசைப்புக்கு அவரது அமைச்சர்களும், கட்சிப் பொறுப் பாளர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடிபணிந்து நின்றனர். ஆண்கள் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கும் அரசியல் உலகில் இது ஓர் அபூர்வக் காட்சி. கருத்து மாறுபாடு களையும் கடந்து பெண்களின் இத்தகைய ஆளுமைத் திறமையை பெரியார் பாராட்டியிருக்கிறார். இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவரது கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும்கூட ஒரு பெண் நாட்டை நிர்வகிக்க முடியும் என்பதற்கு பெருமையாக சான்று காட்டி, பெரியார்  பேசினார். சுயமரியாதைத் திருமணம் பற்றிய பெரியார் உரையில் (அது பிறகு ஒலித் தட்டாகவும் வெளி வந்தது) இந்தக் கருத்து இடம்...

தலையங்கம் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம்!

கியூபாவில் புரட்சிகர ஆயுதப் போராட்டம் வழியாக அங்கே நடந்த பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிந்து சோஷலிச ஆட்சியை நிறுவிய ஃபிடல் காஸ்ட்ரோ 90ஆம் வயதில் நவம்பர் 26 அன்று முடிவெய்தினார். கூப்பிடும் தூரத்திலுள்ள நாடு அமெரிக்கா. கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தூரம் 150 கிலோ மீட்டர் தான். ஆனாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற அவரை அமெரிக்காவால் வீழ்த்த முடியவில்லை. பொருளாதாரத் தடைகள்; ஆட்சிக் கலைப்பு சதித் திட்டங்கள்; காஸ்ட்ரோவைக் கொல்ல சதி என அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது அமெரிக்கா. காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்க உளவு நிறுவனம் 638 முறை சதித் திட்டம் தீட்டி தோற்றதாக செய்திகள் கூறுகின்றன. ‘சோஷலிசம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தை அவர் முன் வைத்தார். அவரது ‘சோஷலிசம்’ – இனவெறி எதிர்ப்பு, கல்வி வளர்ச்சி, சமூக மேம்பாடு என்ற சமுதாய சமத்துவக் கண்ணோட்டத்தை முதன்மைப் படுத்தியது. இதுவே அவர் முன்மொழிந்த சோஷலிசத்தின் தனித்துவம். உயர்கல்வியை...

தலையங்கம் இதுதான் பார்ப்பனர்களின் தகுதி திறமையா?

மக்களின் புழக்கத்தில் 80 சதவீதமாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இவை செல்லத் தக்கதல்ல என்று பிரதமர்  மோடி ஒரே இரவில் அறிவித்தபோது இப்படி ஒரு அதிர்ச்சி இந்தியாவின் ‘கருப்பு பொருளாதார சந்தைக்கு’ தேவைதான் என்றே நாம் கருதினோம். நாட்டின் பொருளா தாரத்தை சர்வதேச சந்தைக்கு திறந்து விடும் உலக மயமாக்கல் கொள்கைக்குப் பிறகு அந்நிய முதலீட்டுச் சுரண்டல்கள் கருப்புப் பொருளாதார சந்தைகள் பெருகி, அரசியல் கட்சிகள், பெரும் தொழிலதிபர்கள், ‘பகாசுர கம்பெனிகள்’ கொழிக்கத் தொடங்கின. பார்ப்பன பனியா வர்க்கம் மேலும் தனது அதிகாரத்தை வலிமைப்படுத்திக் கொண்டது. இந்த நிலையில் மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை கருப்புப் பணச் சந்தையை முடக்குமா என்ற சந்தேகத்தை பொருளியல் நிபுணர்கள்  எழுப்பினார்கள். அவர்களின் கேள்விகளை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. ஆனாலும்கூட புழக்கத்திலுள்ள போலி ரூபாய் நோட்டுகளை இது கட்டுப்படுத்தும் என்ற அளவில் இந்த முயற்சி வரவேற்கப்பட்டது. இப்போது இந்த அதிரடியால் அவதிக்குள்ளாகி...

தலையங்கம் கேள்விக்குறியாகும் எதிர்காலம்!

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதற்கு அண்மையில் தமிழ்நாடு தேர்வாணை யம் நடத்திய ‘குரூப்-4’ தேர்வே சரியான சாட்சி. 5,451 காலி இடங் களுக்கு தேர்வு எழுதியவர்கள் 15 இலட்சத்து 64 ஆயிரத்து, 471 பேர். 12ஆம் வகுப்புதான் கல்வித் தகுதி என்றாலும், பொறியியல் பட்டதாரிகள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர். 11 மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு 2014இல் நடத்திய தேர்வில் 3000 பேர் தேர்வு எழுதினர். 2015இல் முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) நடந்து முடிந்து 15 மாதங்கள் ஓடிய பிறகும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. துணை ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி போன்ற குரூப்-1 தேர்வுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சிப் பெறக் கூடியவர்கள் குறைந்தது மூன்று முறை தேர்வு எழுதியவர் களாகவே இருக்கிறார்கள். பட்டப் படிப்பு முடித்தது முதல் இந்தத் தேர்வுக்காகவே தயாராகி வரும் மாணவர்களுக்கு இறுதி கட்டத்தில் வயதுத் தடை...

தலையங்கம் – ‘சரசுவதி’ பூஜை வேண்டாம்; காமராசர் விழா நடத்துங்கள்!

இந்து பார்ப்பன பண்டிகைகளின் உள்ளடக்கங்கள் மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. உள்ளடக்கங்கள் மாறினாலும் ‘இந்து’ மத நீரோட்டத்துக்குள்ளேயே மக்களை நிறுத்தி வைக்கத் துடிக்கும் பார்ப்பனியம் இந்தப் பண்டிகைகள் சமூகத்தில் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டும் என்றே விரும்புகிறது.                                                                                      அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, மதங்களுக்கு அப்பாற்பட்ட அரசு அலுவலகங்களில் காவல் நிலையங்களில் ‘ஆயுத பூஜை’ கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இப்படி அரசு அலுவலகங்களை ‘பஜனை மடங்’களாக மாற்றக் கூடாது என்று அரசு ஆணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் இருப்பதை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சுட்டிக்காட்டி அவற்றை நகல் எடுத்து அனுப்பி வைத்து தொடர்ந்து போராட்டங்களை இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். மதம் சார்ந்த நம்பிக்கைகளோடு மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஓர் உளவியல் அடங்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி கவலைப்படாமல் எந்த எல்லை வரையும் சென்று வீண் விரயங்களில் பணத்தை செலவிடும் ‘உளவியலை’ மதம் சார்ந்த பண்டிகைகள் உருவாக்கி விடுகின்றன. தொழில்துறை அமைப்பான ‘அகோசம்’ வரவிருக்கும் ஆயுத பூஜை, சரசுவதி பூஜை,...

தலையங்கம் – காவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்

தலையங்கம் – காவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும், இறுதி தீர்ப்பையும் மதித்து செயல்பட கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகும் சட்டப்பூர்வமாக அரசு ஏற்பை அறிவிக்க, அரசிதழில் அதை வெளியிடுவதற்கும் கர்நாடக அரசு எதிர்த்தது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, அரசிதழில் பதிவானது. இதற்குப் பிறகு தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியானாலும் பா.ஜ.க. ஆட்சியானாலும் பொறுப்பைத் தட்டிக் கழித்தே வருகின்றன. இதனால் ஒவ்வொரு முறையும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திடம் முறையிட வேண்டி யிருக்கிறது. இப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை செப்டம்பர் 5ஆம் தேதி வரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. கன்னடர்கள் கலவரத்தில் இறங்கினார்கள், கர்நாடக அரசு...

தலையங்கம் கேரள முதல்வரின் பாராட்டுக்குரிய நடவடிக்கை

‘அரசு அலுவலகங்களில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட எந்த கொண்டாட்டங்களையும் கொண்டாடக் கூடாது’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தடை போட்டிருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராக இருக்கிறார் பினராயி விஜயன். ‘அரசு அலுவலகங்கள், பணி செய்ய வேண்டிய இடங்கள். அங்கே கொண்டாட்டத்திற்கு இடமில்லை’ என்று அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் ஆயுத பூஜை என்றால் அரசு அலுவலகங்கள் அமர்க்களப்படுகின்றன. அதிலும் குறிப்பாக காவல் நிலையங்கள், பஜனை மடங்களாகவே மாறி நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டபோது, இந்து அறநிலையத் துறையே ஜெயலலிதா விடுதலைக்கு, கோயிலில் விசேட பூஜைகள் நடத்துவதற்கு உத்தரவிட்டது. சில மாவட்ட ஆட்சித் தலைவர்களே கோயில் சடங்குகளில் யாகங்களில் பங்கேற்ற கூத்துகளும் அரங்கேறின. காவல் நிலையங்களில் யாகங்களை நடத்துவதும், ஆடுகளை வெட்டி பலியிடுவதும், ‘வாஸ்து’ பரிகாரங்களை செய்வதும் நடந்து கொண்டிருக்கின்றன. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் அரசு அலுவலகங்கள் பஜனை மடங்களாக...

தலையங்கம் – தோழர்களே தயாராவீர்!

தலையங்கம் – தோழர்களே தயாராவீர்!

மக்களை சந்திக்கும் பரப்புரைப் பயணங்களை தொடர்ச்சியாக  முன்னெடுத்து வரும் பெருமை திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு  உண்டு. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை நடத்தினர். மக்களிடம் ஜாதிய அமைப்பின் கொடூர முகங்களை விளக்கினர். ஆங்காங்கே சில ஜாதி வெறி சக்திகள் உருவாக்கிய ‘சலசலப்புகளை’ முறியடித்துப் பயணம் தொடர்ந்தது. அடுத்து இந்த முழக்கம் மேலும் விரிவாக்கப்பட்டது. “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” என்ற முழக்கத்தை மக்களிடம் கழக செயல் வீரர்கள் கொண்டு சென்றார்கள். இந்தப் பயணம் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மட்டுமல்ல; பிற்படுத்தப்பட்ட இளைஞர்களும் வேலை வாய்ப்பு வாழ்வுரிமை இழந்து நிற்கும் அவலங்களை பட்டியலிட்டு மக்களிடம் விளக்கியது.  பிற்படுத்தப்பட்டோரிடையே ஜாதி வெறியைத் தூண்டி, ஜாதி சங்கம் உருவாக்கி, அரசியலுக்குப் பயன்படுத்தும் சக்திகளின் சுயநலத்தையும் அந்தப் பரப்புரை கேள்விக்குள்ளாக்கி யது. ‘ஒடுக்கப்பட்ட இளைஞர்களே, ஜாதி சங்கத் தலைவர்களின் வலையில் விழுந்து விட்டில்...

தலையங்கம் – ஜாதி வெறிக்கு மற்றொரு  தலித் இளைஞர் பலியானாரே!

தலையங்கம் – ஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் மனைவி கண்முன்னே கணவரை மர்மக் கும்பல் வெட்டிய சம்பவம் திட்டமிட்ட ஜாதி வெறி படுகொலையாகும். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர் (21). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் பழனியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகள் கவுசல்யா(19)க்கும் கடந்த 8 மாதங் களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர் கள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் ஞாயிறன்று இருவரும் உடுமலை பேருந்து நிலையத்திற்கு வந்தபோது (மார்ச் 13) மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சங்கரை அவரது மனைவி கண் முன்னே சரமாரியாக வெட்டி யுள்ளனர். இந்த சம்பவத்தில் கவுசல்யாவும் படுகாயம் அடைந்தார். அங்கு...

தலையங்கம்: கமலேஷ் சர்மா நடத்தும் காமன்வெல்த் மாநாடு

தலையங்கம்: கமலேஷ் சர்மா நடத்தும் காமன்வெல்த் மாநாடு

கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்று, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப் பேச வேண்டுமே தவிர, அதைப் புறக்கணிப்பது சரியாகாது என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு இலங்கை அரசு, தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ‘கற்ற பாடம்; சமாதானப்படுத்தல்’ என்ற விசாரணை ஆணையம் – ஆண்டுகள் ஓடியும் எந்த விசாரணையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. 13 ஆவது சட்டத்திருத்தத்தில் மாகாண கவுன்சில்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலஉரிமை மற்றும் காவல்துறையை அமைத்துக் கொள்ளும் உரிமைகளையும் நீதிமன்றம் வழியாக இலங்கை அரசு பறித்துக் கொண்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் முறியடிக்கப்பட்டுவிட்டது. சிங்களர்களின் இன வெறியை திருப்திப்படுத்துவதே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஆட்சியிடம் இனியும் பேசுவதற்கு என்ன இருக்கிறது? வடக்கு மாகாணத்தின் முதல்வராக தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட விக்னேசுவரன், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கூறும்போது, தமிழகத்தில் மட்டும் ஈழ ஆதரவாளர்கள்...

தலையங்கம்: களமிறங்கிய தோழர்களைப் பாராட்டுகிறோம்!

தலையங்கம்: களமிறங்கிய தோழர்களைப் பாராட்டுகிறோம்!

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மதச் சடங்குகளை கொண்டாடக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் இறங்கி செயல்பட்டது. ஆர்ப்பாட்டங்கள், துண்டறிக்கைகள் வழங்குதல், பரப்புரைகள் என்று பல்வேறு களங்களில் கருத்துகளைக் கொண்டு சென்றதோடு, அலுவலகங்களுக்கும் அரசு ஆணைகள், நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, தோழர்கள் வேண்டுகோள் கடிதங்களையும் கையளித்தனர். இந்த களச் செயல்பாடுகளுக்காக மயிலாடுதுறை, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு போன்ற ஊர்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டு 13 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் பிணையில் வெளி வந்துள்ளனர். மதவெறி சக்திகள் அரசியலில் தலைதூக்கக் கூடாது; அது ஆபத்தானது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் பேசி வந்தாலும்கூட, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிகழ்வுகளில் மதச் சடங்குகள் ஊடுருவி நிற்பதைக் கண்டிக்கத் தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மை. இத்தகைய நிகழ்வுகளின் வழியாகவே அரசு நிர்வாகக் கட்டமைப்பு, மத உணர்வுகளோடு இணைக்கப் படுகிறது. மத உணர்வுகள் ஜாதியத்தோடு நெருங்கி நிற்கிறது. அது தலித்,...

தலையங்கம்: அவமதிக்கிறது, இந்திய ஆட்சி!

தலையங்கம்: அவமதிக்கிறது, இந்திய ஆட்சி!

ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை களுக்கு உள்ளான வரலாற்றின் கொடூரத்துக்கு நீதி கேட்டால், ‘ஓட்டு அரசியல்’ என்று சிறுமைப்படுத்து கின்றன பார்ப்பன ஏடுகள். இனப்படுகொலை நடந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு கூட்டப்படுகிறதே என்பது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை. மன்மோகன் சிங் பங்கெடுக்காமல் தவிர்த்து விட்டாரே என்பதற்காக, அனலில் இட்ட புழுவாகத் துடிக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 11 முறை காமன்வெல்த் மாநாடு கூடியிருக்கிறது. இதில் 5 முறை இந்தியாவின் பிரதமர் பங்கேற்றது இல்லை; இது 6 ஆவது முறை. அவ்வளவு தான்! மன்மோகன் சிங் பங்கேற்காமல் போனதால் இலங்கை யுடனான உறவு துண்டிக்கப்பட்டுவிட்டதுபோலவும், அதற்குப் பிறகு எப்படி, தமிழர் உரிமைக்கும், மீனவர் பாதுகாப்புக்கும் இலங்கையிடம் பேச முடியும் என்றும் ‘இந்து’வின் ஆங்கில மற்றும் தமிழ் ஏடுகள் குடம் குடமாக கண்ணீர் வடிக்கின்றன. 2009 இல் இனப்படுகொலை உச்சக்கட்டத்தில் நடந்த நேரத்தில்கூட ராஜபக்சே தரப்பு நியாயங்களை எழுதிக் கொண்டிருந்த ஏடுதான் ‘இந்து’...

தலையங்கம்: நேர்மையற்ற வாதங்கள்!

தலையங்கம்: நேர்மையற்ற வாதங்கள்!

இலங்கையில் நடைபெறும் ‘காமன்வெல்த்’ நாடுகளின் மாநாட்டுக்கு இந்தியா சென்று, அந்த அரசின் மனித உரிமை மீறல்களை எடுத்துச் சொல்ல வேண்டும்; அதைப் புறக்கணிப்பது தவறு என்று ஒரு வாதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. வெளியுறவுத் துறை அதிகார வட்டாரங்கள் இதில் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த வாதங்களில் நேர்மையோ, உண்மையோ இல்லை. காமன்வெல்த் நாடுகளின் மாநாடு இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றியோ, போர்க் குற்றங்கள் பற்றியோ பேசுவதற்காகவோ கூடவில்லை. காமன்வெல்த் நாடுகளின் பெரும் தொழில் நிறுவனங்கள் இலங்கையில் தொழில் வணிக முதலீடுகளை செய்வது குறித்து விவாதிப்பதுதான் இந்த மாநாட்டின் முதன்மையான நோக்கம். நாட்டின் தiலைவர்கள் சந்திப்பைவிட அதைத் தொடர்ந்து நடக்கும் தொழிலதிபர்களின் சந்திப்புதான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதால் இந்தியாவுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்பட்டுவிடப் போவதும் இல்லை. போர்க் குற்றம் இனப்படுகொலை குற்றங்களை சுமந்து நிற்கும் ஒரு நாட்டில் காமன்வெல்த் தலைவர்கள் கூடலாமா என்பது ஒரு...

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

தலையங்கம்: மறு விசாரணை வேண்டும்

உண்மைகள் வெளிச்சத்துக்கு வர 23 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை சந்தித்துள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் மறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது மரணதண்டனை எதிர்ப்பு இயக்கம் தயாரித்து வெளியிட்டுள்ள ‘உயிர் வலி’ ஆவணப்படம் இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. ராஜிவ் கொலைக்கான மனித வெடிகுண்டு ‘பெல்ட்’டில் பயன்படுத்தப்பட்டது, போறிவாளன் வாங்கித் தந்த பேட்டரிதான் என்பதே அவரை தூக்கு மரத்தின் கொட்டடியில் கொண்டுபோய் நிறுத்துவதற்கான ஒரே சான்றாதாரம். தடா சட்டத்தின் கீழ் துன்புறுத்தி பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு சான்று ஆவணமாக உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டது. பேரறிவாளனிடம் சாட்சியத்தைப் பதிவு செய்த சி.பி.அய். அதிகாரி தியாகராசன், அய்.பி.எஸ். இப்போது இந்த ஆவணப் படத்துக்கு வழங்கியுள்ள பேட்டி, புதிய திருப்பத்தை உருவாக்கி விட்டது. பேரறிவாளன் தன்னிடம் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உள்ளது உள்ளபடியே பதிவு செய்யாமல் தவிர்த்து...

தலையங்கம்: இடித்தது சுற்றுச் சுவரை மட்டும் அல்ல!

தலையங்கம்: இடித்தது சுற்றுச் சுவரை மட்டும் அல்ல!

ஈழப் போரில் சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள், தாயகத்தின் விடுதலைக்காக இராணுவத்தை எதிர்த்துப் போராடி களப்பலியான மாவீரர்கள் நினைவாக தஞ்சையில் கடுமையான உழைப்பினால் கட்டி எழுப்பப்பட்ட முள்ளி வாய்க்கால் முற்றம் – தமிழினத்தின் வரலாற்றுச் சின்னம்! இழிவையும், மடமையையும், மக்கள் பொதுப் புத்தியில் ஏற்றிக் கொண்டிருக்கிற கோயில்கள் அல்ல இவை. இந்த முற்றம், தமிழர்களின் உள்ளத்தில் விடுதலை வேட்கையை கனலாக மூட்டி நிற்கிறது. தமிழ்நாட்டில் இத்தகைய எழுச்சியூட்டும் முற்றங்கள் தான் கோயில்களுக்கு மாற்று என்று நாம் கருதுகிறோம். இந்த முற்றத்தைக் கட்டி எழுப்ப எத்தனையோ தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து உழைத்திருக்கிறார்கள். தங்கள் ஆற்றல்களை பங்களிப்புகளாக வழங்கியிருக்கிறார்கள். அது செங்கல்லும் சிமெண்டும் கலந்த கட்டிடம் மட்டுமல்ல; உணர்வுகளைச் சுமந்து நிற்கும் பாசறையும்கூட! அத்தகைய முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை நெஞ்சில் ஈரமின்றி அதன் சுற்றுச் சுவரையும் அழகு மிளிர உருவாக்கப்பட்டிருந்த...

தலையங்கம்: மீண்டும் ‘377’

தலையங்கம்: மீண்டும் ‘377’

டெல்லி உயர்நீதிமன்றத்தால் 2009 இல் நீக்கம் செய்யப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவுக்கு இப்போது உச்சநீதிமன்றம் உயிர் கொடுத்திருப்பது நாடு முழுதும் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. “இயற்கைக்கு விரோதமாக உடல்உறவு கொள்வது தவறு; மீறுவோருக்கு ஆயுள் தண்டனை” என்று கூறும் இந்தச் சட்டம் 1860 இல் மெக்காலே உருவாக்கிய குற்றவியல் சட்டத்தில் இடம் பெற்றதாகும். பிரிட்டிஷ்காரர்கள் அன்றைய இங்கிலாந்தில் இதே போன்ற சட்டம் இருந்ததால் இந்தியாவுக்கும் கொண்டு வந்தார்கள். இன்று இங்கிலாந்திலேயே அந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் ஆணும்-ஆணும் அல்லது பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. திருமணத்தின் அடுத்தக்கட்டப் பரிமாணம் ‘இது’ என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. 18 ஆப்பிரிக்க நாடுகளும், 20 ஆசிய நாடுகளும் இந்த ‘ஓர் பால்’ திருமண முறையை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன. 78 நாடுகள் இதை குற்றமாகக் கருதுகின்றன. பாலின உறவுகள் தனி மனித உரிமைகளின் பாற்பட்டது....

தலையங்கம்: ‘மக்கள் சந்திப்புத் திட்டத்தை’ தீவிரப்படுத்துவோம்!

தலையங்கம்: ‘மக்கள் சந்திப்புத் திட்டத்தை’ தீவிரப்படுத்துவோம்!

‘மக்கள் சந்திப்புத் திட்டம்’ – கழக சார்பில் தோழர்களின் வேலைத் திட்டமாக முன் வைக்கப்பட்டுள்ளது. கழகத்தின் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோர், தோழர்களை மாவட்டந்தோறும் நேரில் சந்தித்து இதற்கான நன்கொடைப் படிவங்கள், துண்டறிக்கைகளை வழங்கியுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியாரியல் செயல்பாடுகளையும் அதன் முன்னுரிமைத் திட்டங்களையும் மக்களிடம் விளக்குவதற்கும் அவர்களின் ஆதரவை நன்கொடை வழியாக உறுதி செய்யவுமே இத்திட்டம். பெரியார் கொள்கைகள் உருவாக்கிய தாக்கம், தமிழ்நாட்டை வேறு மாநிலங்களிலிருந்து தனித்துவம் மிக்கதாக மாற்றியது. ஒப்பிட்டளவில் சமூக மாற்றத்துக்கு தமிழகத்தை பக்குவப்படுத்திய பெருமையும் சிறப்பும் பெரியாரியலுக்கு உண்டு. ஆனால், தமிழ்நாட்டை இன்று வேறு திசை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய ஆபத்தான முயற்சிகள் முனைப்பாக அரங்கேறி வருகின்றன. திராவிட அரசியல் கட்சிகள், பதவி அரசியல் என்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கான கொள்கை அடையாளங்களை கைவிட்டுவிட்டார்கள். தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாமல்...

‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு!

‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு!

71 ஆண்டுகளுக்கு முன் பெரியார் எழுதிய கட்டுரை ‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு! 1945ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ இதழில் கும்பகோணம் ‘மகாமகம்’ குறித்து பெரியார் எழுதிய கட்டுரை இது. 71 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கருத்துகள் இன்றைக்கும் பொருந்தி வருவதை இக்கட்டுரையைப் படிக்கும்போது புரிந்துணர முடியும். கும்பகோணத்தில் மகாமக உற்சவம் நடக்கப் போகிறது. அதற்குத் திராவிட மக்களை வரும்படியாக, கும்பகோணம் பார்ப்பனர்களால் அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்த வண்ணமாக விளம்பரங்கள் காணப்படுகின்றன. பார்ப்பனப் பத்திரிகைகள் மாமாங்கத்தைப் பற்றிப் பிரமாதப்படுத்தி மக்களை அங்குச் சேர்ப்பிக்க – தள்ளிவிட முயற்சிக்கின்றன. இந்த 20 ஆவது நூற்றாண்டுக்குப் பக்கத்தில் வாழும் திராவிட மக்கள் இப்படி ஓர் அறிவும், மானமும் சூன்யமான ஓர் உற்சவத்தை மதித்து, கும்பகோணம் சென்று கூமட்டைகள் ஆவதென்றால், இதை உலகின் 8ஆவது அதிசயமென்றுதான் சொல்ல வேண்டும். கும்பகோணத்தில் இவ்வளவு கூட்டம் சேர்க்கப்படுவதற்கு மாமாங்கத்தன்று அங்கு என்ன புதிய சங்கதி காணப்படப் போகிறது என்பதை யோசிப்போம்....

தலையங்கம் உரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்!

தலையங்கம் உரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்!

இந்து கோயில்களில் நுழைவதற்கே ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ அனைவருக்கும் பார்ப்பனர்கள் தடை போட்ட காலம் ஒன்று இருந்தது. அதுவே ‘ஆகம விதி’ – அதுவே தெய்வீக நடைமுறை என்று இறுமாப்பு பேசினர். இந்த ‘ஆகமம்’, ‘அய்தீக’ பூச்சாண்டிகளைப் புறந்தள்ளிவிட்டுத் தான் பெண்கள் உள்பட அனைத்துப் பிரிவினரும் கோயில்களுக்குள் நுழைந்து வழிபடவும் கோயில் ‘திருக்குளங்களில்’ நீராடவும் உரிமை வழங்கப்பட்டது. அதுதான் 1947ஆம் ஆண்டின் 5ஆவது சட்டமாகிய ‘ஆலய பிரவேச உரிமை’ சட்டம். ‘ஆகமம்’, ‘அய்தீகத்துக்கு’ எதிராக அப்படி ஒரு சட்டம் வராதிருக்குமானால், இப்போது கும்பகோணம் ‘மகாமகத்தில்’ முழுக்குப் போடும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே இருந்திருக்கும். சைவ மடாதிபதிகளுக்கே கூட அந்த உரிமை கிடைத்திருக்காது. கோயில் நுழைவு உரிமை கிடைத்தாலும்கூட கோயில் ‘கருவறை’க்குள் கடவுளை நேரடியாக வணங்குவதற்கோ அல்லது உரிய பயிற்சி பெற்று அர்ச்சகராவதற்கோ ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ மற்றும் பெண்களுக்கு உரிமை கிடையாது என்று கூறி, பார்ப்பனர்கள் தங்கள் சமூக மேலாதிக்கத்தை விட்டுத் தர மறுக்கிறார்கள்....

தலையங்கம் யாழ்ப்பாணத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர்

தலையங்கம் யாழ்ப்பாணத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர்

அய்.நா. மனித உரிமை ஆணையர், சையத் அல் உசேன், கடந்த வாரம், தமிழ் ஈழப் பகுதிகளுக்கு நேரில் சென்று போரில் பாதிக்கப்பட்ட மக்களையும், தமிழர் அமைப்பினரையும் நேரில் சந்தித்திருக்கிறார். வடக்கு மாகாண முதலமைச்சரும் அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான விக்னேசுவரன், ஆணையரை சந்தித்து சிங்கள அரசால் நீண்டகாலமாக சிறைபடுத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட இனப்படுகொலையின்போது ‘காணாமல்’ போனவர்களின் உறவினர்கள் அவர்களின் உருவப் படங்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் ‘நலன்புரி நிலையம்’ என்ற உதவி மய்யத்தில் தமிழர்களை ஆணையர் சந்தித்துள்ளார். அப்போது போரில் பாதிப்புற்று, சொந்தப் பகுதிகளுக்கு திரும்ப முடியாது தவிக்கும் தமிழர்கள், “எங்களுக்கு விமான நிலையமும் வேண்டாம்; துறைமுகமும் வேண்டாம்; எங்கள் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்திடமிருந்து மீட்டுத் தாருங்கள்” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திடவும், நேர்மையான மறுவாழ்வுக்கும் இலங்கை அரசுக்கும்...

தலையங்கம் ‘ரோகித்’களை காவு கேட்கும் ஜாதிவெறி!

படிக்கக் கூடாத கூட்டம் என்ற ‘மனு’ சாஸ்திரத்தால் தடை செய்யப்பட்ட சமூகம், சமூகப் புறக்கணிப்புகளைக் கடந்து, உயர் கல்வி வரை எட்டிப் பிடிக்கும்போது அங்கும் ஜாதியம், அவர்களின் உயிர்களைக் காவு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் இந்த ‘பாரத சமூகத்தின்’ பார்ப்பன ஜாதி தர்மம்! நெஞ்சு பதறுகிறது. அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் சமூகக் கல்வியில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்த 26 வயது தலித் மாணவர் ரோகித் வெமுலா, ஜாதி வெறி கொடுமைகளை எதிர்கொள்ள முடியாது தனது உயிரைப் பலியிட்டுக் கொண்டார். பார்ப்பன ஆதிக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் உயர்கல்வி நிறுவனங்கள், இடஒதுக்கீட்டின் கீழ் வரும் ‘தலித்’ மாணவர்களை அவமதிப்பதும், புறக்கணிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. பார்ப்பன உயர்ஜாதிப் பேராசிரியர்கள் பலரும் இந்த மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியேறிடக் கூடாது என்று தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், ‘சங்பரிவார்’ மாணவர் அமைப்பான ‘வித்யார்த்தி பரிஷத்’ உயர்கல்வி வளாகங்களில்...

தலையங்கம் இனியும் தேவையா, இந்த ஆகமங்கள்?

தலையங்கம் இனியும் தேவையா, இந்த ஆகமங்கள்?

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது, அரசியல் சட்டத்துக்கு உடன்பாடானதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. “பெண்கள் நுழைவதற்கு தடைவிதிப்பதற்கான அடிப்படை என்ன? இதற்கு நிர்வாகம் முன் வைக்கும் காரணங்கள் எவை? கோயிலுக்குப் போவதோ, போகாமல் இருப்பதோ, பெண்களுக்கான தனிப்பட்ட விருப்பம். ஆனால், அவர்களை 1500 ஆண்டுகளாக அனுமதிக்க மறுத்தது ஏன்? அனுமதிக்கக் கூடாது என்பதற்காக உங்களிடம் உள்ள சான்றுகள் எவை? என்று வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகள் ஆயத்தில் ஒருவரான தீபக் மிஸ்ரா, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு கேள்விகளை தொடுத்திருக்கிறார். வயதுக் கட்டுப்பாடு இல்லாமல் அனைத்துப் பெண்களையும் அய்யப்பன் கோயில் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் நான்கு பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்துள்ள வழக்கு இது. (தற்போது 10 வயதுக்குக் கீழே உள்ள – 50 வயதுக்கு அதிகமான பெண்கள் மட்டுமே இந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.) 1987ஆம் ஆண்டில் கன்னட நடிகை ஜெய்மாலா, அய்யப்பன் கோயில்...