தலையங்கம் ‘மிடூ’ இயக்கத்தை ஆதரிப்போம்
நாங்களும்கூட’ (Metoo) இயக்கம் தீவிரமடைந்து வருகிறது. பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் மிரட்டல்களுக்கு உள்ளான பெண்கள், இந்த இயக்கத்தின் வழியாக மனம் திறந்து பேசுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை என்றாலும், துணிவோடு வெளியிடுவதற்கான பாதுகாப்பான சமூக சூழல் இப்போதுதான் வந்திருக்கிறது. இதில் குற்றக் கூண்டில் நிறுத்தப்படுகிற தனி நபர்கள் யார் என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லை. பிரச்சினைகள்தான் முக்கியம் என்பதே நமது கருத்து. பெண்கள் ‘உல்லாசத்துக்கும் இன்ப நுகர்ச் சிக்குமான’வர்கள் என்ற கருத்தியலை சமூகத்தில் கட்டமைத்தது ஆண் ஆதிக்க சிந்தனை. அந்த ஆணாதிக்க சிந்தனையை உரமிட்டு வளர்த்தது. பொதுப் புத்தியில் திணித்து வைத்தது – மதங்களும், மதங்கள் கற்பித்த சடங்குகள் – பெண்கள் குறித்த பார்வைகள் தான். எந்த ஒரு ஆணும் தனது ‘பாலுறவு வக்கிரமங்களை’ பெருமையோடு பகிர்ந்து கொள்ள இந்த சமுதாயம் அனுமதிக்கிறது. அதற்காக எந்த ஆணும் வெட்கப்படுவது இல்லை. ஆனால் ஒரு பெண் அப்படி சமூகத்தில் பேசத்...