Category: நிமிர்-கட்டுரைகள்

பட்டியல் இனப் பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர்

பட்டியல் இனப் பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர்

உச்சநீதிமன்றப் பட்டியல் இனப் பிரி வினரை தீர்மானிப்பதில் முதன்முறையாக ‘கிரிமிலேயரை’ப் புகுத்தி ஆபத்தான தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதி மன்றத் தீர்ப்பை வரவேற்ற தமிழ்நாட்டுத் தலை வர்கள் இதை கவனத்தில் கொள்ள வில்லை. பட்டியல் இனப் பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கான பதவிகளில் பதவி உயர்வு நிலையிலும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு – சமூக நீதிக்கு பெரும் பின்னடைவாகும். செப். 26ஆம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான அமர்வு – பட்டியல் இனப் பிரிவு மற்றும் பழங்குடி மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தீர்ப்பளித்தது உண்மைதான்; ஆனால், ‘கிரிமிலேயர்’ எனும் வடிகட்டும் முறையை அதில் புகுத்தி, தீர்ப்பின் நோக்கத்தையே கெடுத்துவிட்டது. அது மட்டுமின்றி, பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வழங்குவதா வேண்டாமா என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....

ஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன

ஆரியர்களே பூர்வீகக் குடிகள் என்ற வரலாற்றுப் புரட்டுகள் தகர்கின்றன

திராவிட நாகரிகத்தை உறுதி செய்கிறது, ராகிகடி ஆய்வு அரியானாவில் ராகிகடி  என்ற இடத்தில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மிகப் பழமையான மனித எலும்புக் கூடு அறிவியல் சோதனைக்கு (டி.என்.ஏ.) உள்ளாக்கப்பட்டது.  அப்பகுதியில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்கள் திராவிடர்களே என்றும், ஆரிய மரபணு வழி வந்தவர்கள் அல்ல என்றும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல; அவர்கள் பூர்வீகக் குடிகள் என்ற இந்துத்துவா வரலாற்றுப் புரட்டுக்கு சரியான  அறிவியல் மறுப்பாக வெளி வந்திருக்கும் இந்த ஆய்வை கடந்த 3 ஆண்டு காலமாக  வெளியிடாமலேயே ஆய்வாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். ‘இந்தியா டுடே’ 2018 செப்.10இல் வெளிவந்த ஆங்கிலப் பதிப்பு ‘சங்கடம் தரும் உண்மை’ “ஹn ஐnஉடிnஎநnநைவே கூசரவா” என்ற தலைப்பில் விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கமான தமிழ் வடிவம்: புனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் ஷிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது...

‘இந்துராஷ்டிரம்’ உருவாக்க ‘படுகொலைகள்’

‘இந்துராஷ்டிரம்’ உருவாக்க ‘படுகொலைகள்’

‘சனாதன் சன்ஸ்தா’வின் பார்ப்பன பயங்கரவாத பின்னணி தபோல்கரிலிருந்து  – கவுரி லங்கேஷ் வரை சுட்டுக் கொன்ற இந்த அமைப்பு, இராணுவம், போலீசை வீழ்த்தவும் படை திரட்டுகிறது.  தேர்தல், நீதிமன்றம், ஜனநாயகத்துக்கு அவர்கள் அமைக்கப் போவதாகக் கூறும் இந்து இராஷ்டிரத்தில் இடமில்லை என்று தனது பத்திரிகையில் எழுதி வருகிறது. நகர்ப்புற கொரிலாக்கள் என்ற பெயரில் சமுதாய சிந்தனைகளை விதைத்து வரும் எழுத்தாளர்கள், கருத்தாளர்களை பயங்கரவாதி களாக்கி தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்து வரும் மோடி ஆட்சி, ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடி வரும் ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்து மதவெறி அமைப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது. இந்து ஆன்மீகம் பேசிக் கொண்டே அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போரை நடத்துகிறோம் என்ற கொள்கையைக் கொண்ட இந்த அமைப்பு 2025க்குள் இந்தியாவை ‘கடவுள் ராஜ்யம்’ அல்லது ‘இந்து இராஷ்டிர’மாக மாற்றுவோம் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது....

ஊழல் பெருச்சாளிப் பார்ப்பனர் கேத்தன் தேசாயை  காப்பாற்றி வரும் குஜராத் அரசு

ஊழல் பெருச்சாளிப் பார்ப்பனர் கேத்தன் தேசாயை காப்பாற்றி வரும் குஜராத் அரசு

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில், முதல் குற்ற வாளியாக சேர்க்கப்பட்டுள்ள பார்ப்பன கேத்தன் தேசாயைத் தப்பவிடும் வேலையில், குஜராத் மாநில பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. பார்ப்பன கேத்தன் தேசாயிடம், சிபிஐ விசாரணை நடத்துவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்தார் கேத்தன் தேசாய். இவர் தனதுபதவிக்காலத்தில், நாடு முழுவதும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி களுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கல்லூரி ஒன்றுக்கு தலா 25 கோடி முதல் 30 கோடி ரூபாய் வரைபெற்றதாகக் கூறப்பட்டது. மேலும், 200 தனியார் மருத்துவக் கல்லூரிகள், தலா 5 மருத்துவப் படிப்புக்கான இடங்களை கேத்தன் தேசாய்க்கு ஒதுக்கீடு செய்ததும், அந்த இடங்களை பல கோடி ரூபாய்க்கு மாணவர்களுக்கு அவர் விற்றதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து மருத்துவக் கவுன்சிலே கலைக்கப்பட்டதுடன், கேத்தன் தேசாய் மீதும் கடந்த 2010-ஆம் ஆண்டு சிபிஐ மூலம்வழக்கு பதிவு செய்யப்பட்டது....

பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான்

பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான்

பார்ப்பான் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று பார்ப்பன நீதிபதியின் முன்பாகவே முழக்கமிட்ட போராளி! 21 மாதங்கள் சிறை சென்ற ஜாதி ஒழிப்புப் போராளியின் நினைவலைகள் 25ஆவது அகவையில் அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்து 21 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற பெரியார் தொண்டர் இடையாற்றுமங்கலம் முத்து செழியன். பெரும் பண்ணையார் குடும்பத்தில் பிறந்தவர். இப்போதும் சொந்த கிராமத்தில் கொள்கை உறுதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வயது 86. சிறையிலிருந்த காலத்திலேயே திருச்சி தேசியக் கல்லூரியில் பட்டப்படிப்புக்கான தேர்வுகளை காவல்துறை பாதுகாப்புடன் எழுதியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் மெய்சிலிர்க்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். தஞ்சாவூரில் 1957 நவம்பர் 3இல் நடந்த சாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாட்டில் மிகப் பெரிய ஊர்வலம் நடந்தது. அதில் எம்.ஆர். ராதா அவர்கள் வெள்ளைக் குதிரையில் வந்தார். அவருக்கு ஜோடியாக திருச்சி வீ.அ. பழனி இன்னொரு குதிரையில் வந்தார். இலட்சக்க ணக்கான மக்கள்...

அய்யப்ப ஆச்சாரம்? – முல்லைவேந்தன் பெரியார்

அய்யப்ப ஆச்சாரம்? – முல்லைவேந்தன் பெரியார்

கோவணம் கட்டாமல் சென்றவன் ஜட்டிபோட்டு சென்றபோது மாறிய ஆச்சாரம்?   வீடுமுதல் வீடுவரை அய்யப்பன்கோவில் நடைபயணம் ஊர்திகளில் பயணித்த போது மாறிய ஆச்சாரம்?   நாற்பத்தெட்டு நாள் விரதம் மாறி இன்று மாலைபோட்டு நாளை சபரிமலை சென்றபோது மாறிய ஆச்சாரம்?   வெறும் காலில் மலையேறி ஒருமுடியில் இருந்த உணவுதின்றது மாறி உணவக வியாபாரம் உச்சி சென்றபோது மாறிய ஆச்சாரம்?? நெய் எரிந்த வெளிச்சம் மின்விளக்காய் பரிணமித்தபோது மாறிய ஆச்சாரம்???   மலைமேல் மாலை அவிழ்த்து, மலையிறங்கி கோவணம் அவிழ்த்து குடி,கும்மாளம் போட்ட சாமிகளின் கொண்டாட்டத்தால் மாறிய ஆச்சாரம்???   பெண்ணின் பிறப்புறுப்பில் ??? தீட்டோடு பிரவித்த அய்யப்ப(னும்) பக்த(னும்) பெண்களை தீட்டென ஒதுக்குவது தங்களின் ஆச்சார பலகீனம் பல்லிளித்து உலகம் சிரிக்குது,   பெண்கள் வருகை கண்டு பீதியில் பேதியாவது அய்யப்பனா?? அய்யப்ப பக்தனா?? ஆச்சார போர்வைக்குள். – முல்லைவேந்தன் பெரியார் நிமிர்வோம் அக்டோபர் 2018 இதழ்

இரட்டை வேடம்

இரட்டை வேடம்

“சபரிமலை பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இயற்கை யாகவே ஏற்றுக் கொள்ள முடியாது; கோடிக் கணக்கான பக்தர்களின் உணர்வை நீதிமன்றம் தனது தீர்ப்பில் கவனத்தில் கொள்ளவில்லை; பாரம்பரியத்தை கடைபிடிக்கும் ஏராளமான பெண்களின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை; இந்து சமுதாயத்தின் மீது மட்டும் ஏன் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் அமைதி யின்மையை ஏற்படுத்தி உள்ளது; சமுதாயத் தில் பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறது.” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் “கோயில்களில் பெண்களைத் தடை செய்தது போன்ற அநீதியான மரபுகள் மாற்றப்பட வேண்டும்; இது போன்ற முக்கியப் பிரச்சனைகள் அரசியல் மயமாக்கப்படக் கூடாது; ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் எந்த விதமான பாகுபாடுமின்றி கோயில்களில் நுழைய ஆர்எஸ்எஸ் அனுமதிக்கிறது; தற்போதைய காலங்களில் பெண்களே வேதங்களைப் படிப்பதோடு, கோயில்களில் பூஜையும் செய்கிறார்கள்.” ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி நிமிர்வோம் அக்டோபர் 2018 இதழ்

அய்.நா. ஆய்வே அம்பலப்படுத்துகிறது: உலகமயமாக்கலின் படுதோல்வி –  முனைவர் ஜெ.ஜெயரஞ்சன்

அய்.நா. ஆய்வே அம்பலப்படுத்துகிறது: உலகமயமாக்கலின் படுதோல்வி – முனைவர் ஜெ.ஜெயரஞ்சன்

உலகமயமாக்கல் – தனியார் மயமாக்கல் – தாராளமயமாக்கல் கொள்கை – ஏற்றத் தாழ்வுகளை ஆதரித்து பெரும் நிறுவனங்களின் சுரண்டல்களை அதிகரித்திருக்கிறது என்ற உண்மையை அய்.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பே அம்பலப்படுத்தியிருக்கிறது. உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கல் (Liberalisation, Privatisation, Globalisation) இவை மூன்றும்தான் உலகப் பொருளாதாரத்தை புதிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும், வளர்ச்சி அதிகரிக்கும், செல்வம் பெருகும், மக்களின் வாழ்வு சிறக்கும் என்ற தாரக மந்திரம், 1980களிலிருந்து ஒலிக்கத்துவங்கி 1990களில் வலுப்பெற்றது. இக்கருத்தாக்கத்தின் அரசியல் வலிமை என்பது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் ஆதரவினால் கூடுதலானது. உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் இதனை அனைத்து நாடுகளுக்குமான சர்வ ரோக நிவாரணியாக பரிந்துரைக்கத் துவங்கின. பரிந்துரைத்தன என்பதைவிட அவைகளின் கட்டளைகளாவே இவை மாறின. இதன்விளைவாக வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி பல வளரும் நாடுகளும் இக்கொள்கைகளை ஏற்று செயல்படுத்த வேண்டிய கட்டாய நிலை எற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, உலகளவில்...

ஜாதி அமைப்பின் கொடூர வடிவம் கிராமங்கள் மனுஷ புத்திரன்

ஜாதி அமைப்பின் கொடூர வடிவம் கிராமங்கள் மனுஷ புத்திரன்

என் மதத்தைச் சார்ந்தவன் என்ற காரணத்துக்காக அவனுக் குத் தகுதியில்லாவிட்டாலும் நான் அவனை மேலே கொண்டு வருவேன் என்பதை விட பெரிய ஊழல் இந்த நாட்டில் எதுவுமே இருக்க முடியாது. கடந்த பல ஆண்டுகளாக தமிழகத் தினுடைய வரலாறாக தமிழகத்தினுடைய அடையாளமாக படுகொலைகளும், சாதிப் படுகொலைகளும், வன்முறைகளும் தான் ஒவ்வொரு ஊரினுடைய அடையாளமாக மாறிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இப்படியே போனால் தமிழகத்தினுடைய வரலாறு சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜாதிப் படுகொலைகளுடைய வரலாறாக இருக்கப் போகிறது என்ற அச்சம் எழுகிறது.  முக்கியமாக இந்துத்துவாவை வேரறுக்க வேண்டும். பிராமணியத்தை வேரறுக்க வேண்டும் என்று நண்பர்கள் சொன்னார்கள். நானும்  அந்த கருத்துக்களை தீவிரமாக முன் வைக்கக்க கூடியவன் தான். ஆனால் இந்துத்துவா என்பது இந்துத்துவா என்கின்ற இந்த சமூகத்தில் இல்லை . அது பல்வேறு வடிவங்களில் பல்வேறு முகமூடிகளில் இருக்கிறது. அதேபோல் பார்ப்பனியம் என்பது பெயரில் இல்லை அது பல்வேறு வடிவங்களில் பல்வேறு முகமூடிகளில்...

மதயானை வருகிறது!

மதயானை வருகிறது!

“அப்பா! மதம் பிடித்த யானை வருகிறதாமே! வாங்களேன் போவோம், வேடிக்கைப் பார்க்க! நான் பார்த்ததே இல்லையே, மதம்பிடித்த யானையை! வாங்க! வாங்க! சீக்கிரம் வாங்க!” இப்படி ஒரு சிறு பிள்ளைகூடக் கூப்பிட மாட்டான். யானை பார்த்திராதவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் யானை வந்தால் கட்டாயம் பார்த்தே தீருவார்கள். முன்பு பார்த்தவர்களேகூட மீண்டும் பார்க்கத்தான் ஆசைப்படுவார்கள்! யானையிலேயே வெள்ளை யானை வருகிறது என்றால், நீங்களும் நானும்கூடத்தான் பார்க்க ஆசைப்படுவோம்! காரணமென்ன? யானை பூனையைப்போல நாள்தோறும் வீட்டில் பார்க்கப்படும் விலங்கல்ல. அதன் அமைப்பே ஒரு அலாதி! ஆகையால்தான் பார்க்க ஆசைப்படுகிறோம். யானையின் நிறம் சாதாரணமாகக் கறுப்பு. ஆதலால் வெள்ளை யானையென்றால் இன்னும் ஆச்சரியமல்லவா? இந்திரனிடத்தில் மட்டும் (இதுமேல் உலக விஷயம்! என்னைப் போல அடிக்கடி பார்க்கிறவர்கள் மட்டுந்தான் நம்புவார்கள்!) ஒரே ஒரு வெள்ளை யானை இருப்பதாகக் கதை! போன வருஷத்தில் பர்மா காட்டிலிருந்து ஒரு வெள்ளை யானையைப் பிடித்து வந்ததாகப் பத்திரிகையில் படித்தேன். நீங்களும்...

“நான் மகிழ்ச்சியான பெண்ணியவாதி”

“நான் மகிழ்ச்சியான பெண்ணியவாதி”

இன்று ஆங்கிலத்தில் எழுதும் மிக முக்கியமான கறுப்பின எழுத்தாளர்களில் சிமாமாண்டா எங்கோஸி அடீச்சியும் ஒருவர். நைஜீரியாவைச் சேர்ந்த இவர், இதுவரை ஆறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். பெண்ணியம் குறித்த சரியான புரிதலை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது இவரது எழுத்து. இவருக்குக் கடந்த 2018 ஜூன் 12இல் ‘பென்’ (ஞநுசூ) பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர் ஹரால்ட் பிண்ட்டரின் நினைவாக இந்தப் பரிசு ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டன், காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இந்த உலகத்தின் மீது துணிச்சலான, தடுமாற்றம் இல்லாத பார்வையைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் விதமாக இந்தப் பரிசு ஒன்பது ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அடீச்சிக்கு இந்தப் பரிசு வழங்கப்பட உள்ளது. பாலினம், நிறம், உலக அளவிலான சமத்துவமின்மை ஆகியவற்றின் மீது இவர் கொண்டிருக்கும் நவீன அணுகுமுறையே இந்தப் பரிசுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணம் என்று...

கருநாடக இசை பார்ப்பனர்களின் தனிச் சொத்தா?   ராமச்சந்திர வைத்தியநாத்

கருநாடக இசை பார்ப்பனர்களின் தனிச் சொத்தா? ராமச்சந்திர வைத்தியநாத்

கருநாடக இசை ‘இந்து’க் கடவுள்களுக்கே உரித்தானது என்று பார்ப்பனர்கள் வெளிப் படையாகப் பேசுவதோடு பிற மதக் கடவுள்களை கருநாடக இசையில் பாடுவோரை யும் மிரட்டுகிறார்கள். இசைக்கு மதம் உண்டா என்ற கேள்வியை எழுப்புகிறார், கட்டுரையாளர். கர்நாடக சங்கீதம் எனும் மரபு சார்ந்த இசை வடிவம் காலங்காலமாய் இருந்த கட்டுத் தளைகளிலிருந்து அறுபட்டு ஜனநாயகப் படுத்தும் முயற்சிகளுக்கு உட்படுகையில், அதை சாதி வடிவத்திற்குள் அடைக்கும் சமீபத்திய முயற்சி விபரீதமானது. இந்து இசைக் கலைஞர்கள் இந்து அல்லாத மற்ற மதங்களுக் குரிய தெய்வங்களைப் பற்றியோ,நம்பிக்கைகள் குறித்தோ பாடலாகாது என்று எச்சரிக்கை விடப்படுகிறது. எச்சரிக்கை விடுக்கும் ராமநாதன் எனும் அந்நபர் ராஷ்ட்ரீய சனாதன் சேவா சங் எனும் அமைப்பின் நிர்வாகி என்ற முறையில் பல்வேறு இசைக் கலைஞர்களை தொடர்பு கொண்டு அச்சுறுத்தியும் வருகிறார். பார்ப்பனர்களுக்கான பிரத்யேக அரசியல் அமைப்புதான் ராஷ்ட்ரீய சனாதன் சேவா சங் என்று அவரும், சென்னை செல்வகுமார் சாஸ்திரிகளும் கூறி வருவதால் இந்த...

‘பிரம்மத்தை’ப் பார்த்த “பிராமணன்” உண்டா?

‘பிரம்மத்தை’ப் பார்த்த “பிராமணன்” உண்டா?

புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை முன் வைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள் விடுதலை இராசேந்திரன் “யாகத்துக்காக நீங்கள் நெருப்பைமூட்டி அதில் யாகத்துக் காகவே பொருள்களைக் கொட்டி ஜாதியை சுத்தம்செய்துவிடலாம். தீங்குகளை ஒழித்து விடலாம் என்று கூறுகிறீர்கள். ஒருவனை ஜாதியி லிருந்தும் தீங்கிலிருந்தும் விடுவிக்கும் சக்தி நீங்கள் வளர்க்கும் யாக நெருப்புக்கு உள்ளே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது அந்த யாக நெருப்புக்கு வெளியே இருக்கிறது. அந்த நெருப்பு மக்களின் சிந்தனைகளில் மூட்ட வேண்டிய நெருப்பு. நான் அந்த நெருப்பைத்தான் மூட்டுகிறேன்; நீங்கள் மூட்டிய யாக நெருப்பு அணைந்துவிடும்; நான் மக்களின் சிந்தனையில் மூட்டும் நெருப்பு அணையாது” என்று பதிலடி தந்தார் புத்தர். பெரியார் 1953ஆம் ஆண்டு நடத்திய விநாயகன் சிலை உடைப்புப் போராட்டம் வர்ணாஸ்ரம எதிர்ப்புக்கான போராட்டம்தான். 1952இல் தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டி யிட்டு மக்களை சந்திக்காமல் கொல்லைப்புற வழியாக பார்ப்பனர் இராஜகோபாலாச்சாரி முதல்வரானார். பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவி வர்ணாஸ்ரமத்தை காப்பாற்ற...

‘விநாயகன்’  அரசியலுக்கு வந்த வரலாறு தமிழகத்தில்  பகுத்தறிவு அரசியலில்  இருந்த விநாயகர்

‘விநாயகன்’ அரசியலுக்கு வந்த வரலாறு தமிழகத்தில் பகுத்தறிவு அரசியலில் இருந்த விநாயகர்

மற்ற இந்திய பகுதிகளைப் போலவே ஊர்வல அரசியலுக்கு வந்தது 1980களில்தான். பேஷ்வா பார்ப்பனர்களின் குடும்ப விழாவாக இருந்த விநாயக சதுர்த்தி அரசியல் வடிவம் எடுத்தது எப்படி? இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் மும்பை. உலக கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நவநாகரீக இந்தியப் பெருநகரம். அந்த நகரையே திக்குமுக்காட வைக்கும் நிகழ்வொன்று ஆண்டுக்கு ஒருமுறை வரும். அப்போது ஆர்ப்பரிக்கும் கூட்டம் மும்பை வீதிகளில் வழிந்து நிற்கும். தீபாவளிக்குப் பிறகு இந்தியா முழுக்க கொண்டாடப்படும் ஒரு விழா என்றால் அது விநாயாகர் சதுர்த்திதான். கடந்த அரை நூற்றாண்டுகளில் இந்து அமைப்புகளால்  இந்தியா முழுக்க கொண்டு சேர்க்கப்பட்டுள்ள விநாயகர் ஊர்வலத்துக்கு ஆன்மீக ரீதியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதையும் தாண்டிய காரணம் ஒன்று உள்ளது. அது இந்துத்துவா அரசியல். நாடு முழுக்க இந்துத்துவா அரசியலை இந்துக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதன்பேரில் அவர்களை ஒன்று திரட்டவும் அறிவிக்கப்படாத ரத யாத்திரையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடந்து வருகின்றன. உண்மையில் இதன்...

மோடி ஆட்சியில் சீர்குலைந்த  பொருளாதாரம்  புள்ளி விவரங்கள் உண்மையை  படம் பிடிக்கின்றன செ.கார்கி

மோடி ஆட்சியில் சீர்குலைந்த பொருளாதாரம் புள்ளி விவரங்கள் உண்மையை படம் பிடிக்கின்றன செ.கார்கி

“பங்குச்சந்தையில் முதலீடு செய்து கொள்ளையடிக்க வந்த அந்நிய மூலதனம் எப்போதுமே நிலையாக இருப்பதில்லை. அவை எங்கு லாபம் கிடைக்குமோ அங்கு வெட்டுகிளி கூட்டத்தைப் போல ஓடிக்கொண்டே இருக்கும். இந்தியாவில் இருந்து வெளியேறிய அந்நிய முதலீடுகள் 2010 ஆம் ஆண்டு 30 சதவீதமாகவும் 2016-2017 ஆம் ஆண்டு 36 சதவீதமாகவும் 2017-2018(ஜனவரி வரை) 47 சதவீதமாகவும் உயர்ந்திருக்கின்றது.”   மோடியின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடியப்போகின்றது. நரகத்தின் எண்ணெய் சட்டியில் இருந்து எழுந்து ஓட இந்தியர்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் இந்த முறையும் மோடி பழைய பொய்களுக்கு பதில் பதிய பொய்களைத் தூக்கிக் கொண்டு உங்களை சந்திக்க வருவார். இந்த முறை முன்பைவிட  கவர்ச்சியான அதி பயங்கரமான பொய்களை அவர் கட்டவிழ்த்து விடுவார். இறந்து போனவர்களை உயிர்ப் பிப்பேன் என்றோ, உயிரோடு இருப்பவர்களுக்கு மரணமற்ற பெருவாழ்வை தருவேன் என்றோ அவர் வாக்குறுதி தரலாம். பொய்யையும், உண்மையையும் பிரித்தறிய திராணியற்ற பார்ப்பனியத்தால் மூளை...

‘அவர்களின் கைப்பிடித்து நடப்போம்’ ‘டீன்ஏஜ்‘ குழந்தைகளின் பாலின ஈர்ப்பை  பெற்றோர்கள் எப்படி எதிர்கொள்வது?

‘அவர்களின் கைப்பிடித்து நடப்போம்’ ‘டீன்ஏஜ்‘ குழந்தைகளின் பாலின ஈர்ப்பை பெற்றோர்கள் எப்படி எதிர்கொள்வது?

பள்ளிக்குச் செல்லும் வழியில் கல்லூரி மாணவன் ஒருவன் தன்னைச் சில நாட்களாகப் பின்தொடர்ந்து வருவதை ரேவதி கவனித்தாள். அவனைத் திரும்பிப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. ஆனால், அவன் அதைக் கவனித்துவிடுவானோ என்று பதற்றமாகவும் இருந்தது. பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று அவன் ஒரு வாழ்த்து அட்டையை அவளிடம் கொடுத்தான். கைகள் தீண்டியபொழுது கிடைத்த ஸ்பரிசம் அவளுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. கூடவே யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயமாகவும் இருந்தது. பிறந்த நாளன்று புது டிரெஸ் அணிந்து அத்தை வீட்டுக்கு இனிப்பு கொடுக்கப் போனாள் ஸ்வேதா. அத்தை, மாமாவிடம் கொடுத்துவிட்டு சந்துருவைத் தேடினாள். அவன் அறைக்குள் இருப்பதாக அத்தை சொன்னார். கதவுக்குப் பின்னால் மறைந்து இருந்தவன் அவள் உள்ளே நுழைந்தவுடன் ‘பே’ என்று பயமுறுத்தினான். அவள் பயந்துவிட்டாள் என்று தெரிந்தவுடன், ‘சும்மா’ என்று சொல்லி விட்டு, இனிப்பை எடுத்துச் சாப்பிட்டான். இன்னொரு இனிப்பை எடுத்து அவளுக்கு ஊட்டிவிடப் போனான். அவள் பின்னால் போவதைப்...

நீர் நிலைகளை மாசுபடுத்தும் ‘கடவுள்’ கரைப்புகள்

நீர் நிலைகளை மாசுபடுத்தும் ‘கடவுள்’ கரைப்புகள்

பல்வேறு வகையில் வெளியேறும் கழிவுநீரும் நீர்நிலைகளை மாசுபடுத்துகிறது. ஆனால், கடவுள் சிலைகளைக் கரைப்பதால் ஏற்படும் ஆபத்தைவிடக் குறைவான பாதிப்பையே கழிவுநீர் ஏற்படுத்துகிறது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள், நீர்நிலைகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், செயற்கைக் களிமண் (பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்), சுட்ட களிமண், காகிதக்கூழ் போன்றவற்றால் செய்யப்படும் சிலைகள், நீர்நிலைகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும். தவிர, இந்தச் சிலைகளைச் செய்யவும் அலங்கரிக்கவும் பயன்படுத்தப்படும் ரசாயனப் பூச்சுகள், வண்ணத் திரவங்கள், இரும்புக் கம்பிகள், பல வகையான துணி ரகங்கள், செயற்கை மணிகள் – மாலைகள் போன்றவையும் நீர்நிலைகளைப் பெரிய அளவில் மாசுபடுத்து கின்றன. ரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், குரோமியம், துத்தநாகம், ஆர்சனிக், காரீயம் போன்ற கன உலோகங்கள் நிறைந்திருக்கும். இவற்றில் பல புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை. இவை நீரில் கரையும்போது அங்கு வாழும் உயிரினங்களும் அந்தப் பகுதியைச் சுற்றி வாழும் பறவை யினங்களும்...

சுயமரியாதை இதழியல்: புதுவைச் சிவத்தின் கருத்துலகப் போர் ட  மணிகோ. பன்னீர்செல்வம்

சுயமரியாதை இதழியல்: புதுவைச் சிவத்தின் கருத்துலகப் போர் ட மணிகோ. பன்னீர்செல்வம்

புதுவையில் திராவிட இயக்கத் தூண்களில் ஒருவராகவும் இதழிய லாளருமாக செயல்பட்ட புதுவை சிவம் அவர்களை முன் வைத்து சுயமரியாதை இயக்கத்iதை ஆய்வுக்கு உட்படுத்துகிறது இக்கட்டுரை. திராவிட இயக்க இதழியல் என்பது முதன்மையாக இந்தியர் என்பதற்கு எதிர்த்தேசியமாக அமைந்த திராவிடம் என்கிற நிலப்பரப்பு, பண்பாட்டு வெளி, மொழி இனக் குறித்தொகுதி  என்பவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது எனலாம். ஆனால் சுயமரியாதை இதழியல் என்பது தனியொரு மனிதனின் சமூகத்தின் மீது கவிந்துள்ள மத அடையாளத்தை சாதிய இழிவை பால்நிலைப் பாகுபாட்டை நீக்குவதும் களைவதும் என்பதோடு தொடர்புடையதாகும். இவ்விடத்து சுயம் உருவாக்கம் குறித்த சில வரலாற்று விவரங்களையும் காண்போம். இந்தப் பொருண்மையை விளங்கிக்கொள்ள அது இன்றியமையாததாகும். ஐரோப்பாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய நவீன அறிவொளிக் காலம் பல்வேறு விடுதலையியல் சிந்தனைகளை ஏற் படுத்தியது. இந்த விடுதலையியல் சிந்தனைகளின் பெருவெள்ளத்தில் கடவுளர்களின் திருஉருக்கள் அடித்து செல்லப்பட்டாலும் மதத்தின் எச்ச சொச்சமான, மாயையான கருத்து ஒன்று (fetish) நீடித்து வரவே செய்தது....

அடிமைகளை மீட்டெடுக்கப் போராடிய ஸ்பார்டகஸ்

அடிமைகளை மீட்டெடுக்கப் போராடிய ஸ்பார்டகஸ்

மனிதர்களை மனிதர்களே அடிமை களாக வைத்திருக்கும் பழக்கம் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவிக்கிடந்தது. ரோம் நகரில் இந்தக் கலாசாரம் கொஞ்சம் தீவிரமாக இருந்தது. பொன், பொருளை வைத்திருப்பதைப் போல அதிக அடிமைகளை வைத்திருப்பதையும் கவுரவமாகக் கருதியவர்கள் அங்கு நிரம்ப இருந்தனர். மாடமாளிகைகளை கட்டுவதற்காக வும், தோட்டம் வயல்களைப் பராமரிப்ப தற்காகவும் சொல்லும் வேலையை சொன்னபடி செய்யவும் தங்களைப் புகழ்ந்து கவிபாடவும் அந்த அடிமைகளை செல்வச்செழிப்பு மிகுந்த பலரும் பயன்படுத்தினர். மேலும் சிலர் தங்களை எதிர்க்க நினைப்பவர்களிடம் வாதங்கள் செய் வதற்கும், போரிடுவதற்கும்கூட, தாங்கள் விலை கொடுத்து வாங்கியவர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அப்படி விலைக்கு வாங்கப்பட்ட வர்களில் ஒருவன் தான் ஸ்பார்டகஸ். தற்போது பல்கேரியாவாக உருவகம் கொண்டிருக்கும் அப்போதைய கிரேஸ் நாட்டில் பிறந்தவன் ஸ்பார்டகஸ். ரோம் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட, அடிமையாக விற்பனை செய்யப்பட்டான். திடகாத்திரமான வலிமை மிகுந்த அவனது உடலைக் கண்டு ரோம் நகர செல்வந்தர்கள் அதிசயித்தனர். அவனை மற்றவர்களைப் போல...

பா.ஜ.க. ஆட்சியில் வாராக் கடன் தள்ளுபடி 7 மடங்கு அதிகரிப்பு!

பா.ஜ.க. ஆட்சியில் வாராக் கடன் தள்ளுபடி 7 மடங்கு அதிகரிப்பு!

மோடி ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் வாராக்கடன்கள் என்று முடிவுகட்டி, தள்ளுபடி செய்யப்பட்ட கடன்தொகையும் 7 மடங்கு அதிகரித் திருப்பது, ரிசர்வ் வங்கியின் அறிக்கை மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதன்படி, கடந்த 2017-ஆம் ஆண்டின் இறுதியில், வங்கிகளின் வாராக்கடன் 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியிருந்த நிலையில், அதில் 2017-18 நிதியாண்டில் மட்டும், 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களில் திரும்பி வராத தொகையை, பயன்தராத சொத்துக்கள் (சூடிn ஞநசகடிசஅiபே ஹளளநவ) என்று கூறுகின்றனர். அதாவது இந்த சொத்துக்கள் வட்டியை ஈட்டித் தராவிட்டாலும், கடனுக்கான ஈட்டுச் சொத்துக்கள் இருக்கின்றன என்று பொருள்படும். இதனால், வங்கிகளுக்கு பெரிய நஷ்டம் எதுவும் இருக்காது. ஆனால், ஒருகட்டத்தில் இந்த வாராக் கடன்களை வசூலிக்கவே முடியாது; ஈடுகட்டும் அளவிற்கு சொத்துக்களும் இல்லை என்று தீர்மானித்து, அந்த கடன்களை தள்ளுபடி செய்யும்போது, வங்கிகள் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கின்றன....

உழைக்கும் மக்கள் திறன்களைவிட பட்டம் பெற்றவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல!  – பெரியார்

உழைக்கும் மக்கள் திறன்களைவிட பட்டம் பெற்றவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல! – பெரியார்

கல்வி குறித்து பெரியாரின் கருத்துகள் ஆழமானவை; ஆய்வுக் குரியவை; ஆசிரியர் மாநாட்டில் அவர் நிகழ்த்திய உரை இது: என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருஷக் காலந்தாம் நான் பள்ளியில் படித்திருப் பேன். அப்போதும் என் கையெழுத்தைப் போடக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே, கல்வி முறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் உங்களுக்கு சொல்லக்கூடிய சக்தி என்னிடத்தில் இல்லை. ஏதோ என் புத்தி அனுபவத்திற்கெட்டிய வரையில் சில வார்த்தைகளைச் சொல்கிறேன். சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப் படுத்தலாம் என்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்கள் இருவரும் எப்படிக் குழந்தைகளைப் படிப்பிக்கின்றீர்களோ அப்படியே அவர்கள் தேசத்துக்கும், தேச நன்மைக்கும், ஒழுக்கத்துக்கும் உரிய மக்களாய் வாழக்கூடும். எனவே தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால்,...

அமெரிக்காவில் பார்ப்பனியம் திணிக்கும் ஜாதி

அமெரிக்காவில் பார்ப்பனியம் திணிக்கும் ஜாதி

கென்னத் ஜே கூப்பர் என்ற பிரபல ஆங்கில பத்திரிக்கையாளர் “தி வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் ‘அமெரிக்காவில் இந்தியர்கள் திணித்த சாதி’ என்றுகட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் பள்ளியிலும், வீட்டிலும், வேலைபார்க்கும் இடங்களிலும் எப்படி எல்லாம் சாதியைக் கடைப்பிடிக் கிறார்கள் என்றுபுள்ளிவிவரமாக எழுதி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். எழுத்தாளர்கள் தேன்மொழி சௌந்தர் ராஜன் மற்றும் மாரி சிவிக் -மைத்ரேயி ஆகியோர், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலரிடம் மேற்கொண்ட ஆய்வை மேற்கோளாகக் கொண்டு இந்த கட்டுரையை அவர் எழுதியுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் 3-இல் இரண்டு பட்டியலின சாதியினர் ஒடுக்குமுறைகளைச் சந்திக்கிறார்கள்; ஏனைய சாதி இந்துக்களின் பாகுபாட்டுக்கு ஆளாகிறார்கள்; பள்ளி மாணவர்களும் கூட இந்த பாகுபாட்டுக்கு தப்புவதில்லை; அலுவலகம், வெளியிடங்கள், திருமணம் என அனைத்து விஷயங்களிலும் சாதி இந்துக்கள், சாதியை-தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர் என்று கென்னத் ஜே கூப்பர் கூறியுள்ளார். நிறவேற்றுமை பிரச்சனையில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கடைப் பிடிக்கும் “பாஸ்ஸிங் (Passing)” என்று...

மோடி ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்துள்ளதா?

மோடி ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்துள்ளதா?

நாடு பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது என்று பா.ஜ.க.வினர் முன் வைக்கும் வாதங்களை அழுத்தமாக மறுக்கிறார் சி.அய்.டி.யு. பொதுச் செயலாளர் தபன்சென். பொருளாதாரம் அதிக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று மத்திய ஆட்சியாளர்கள் பெருமை பேசுகிறார்களே? மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது என அரசாங்கம் கூறுவது சந்தேகத்திற்குரியது. அத்தகைய வளர்ச்சி எங்காவது வெளிப்படுகிறதா? அரசு வறுமைக் கோட்டிற்குள்ளே உள்ள மக்களை வெளியே கொண்டு வந்துள்ளது; 28 சதவீத மக்கள் தான் இன்று வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. இது எப்படி சாத்தியம்? இதோ 2014க்கு பிறகு ஏற்றத்தாழ்வுகள் எவ்வளவு விரிவடைந்துள்ளது என்பதைப் பாருங்கள்! 2014ல் 1 சதவீத உயர்தட்டு செல்வந்தர்கள் தேச செல்வத்தில் 48 சதவீதத்தைக் கைவசம் வைத்திருந்தனர். 2016ல் இது 53 சதவீதமாக உயர்ந்தது. 2017ல் 78 சதவீத செல்வம் 1 சதவீதம் பேரிடம் உள்ளது. செல்வந்தர்களின் செழிப்பும், வறுமை ஒழிப்பும் எப்படி...

‘மனிதன் எங்கிருந்து வந்தான்?’ – புதிய ஆய்வு

‘மனிதன் எங்கிருந்து வந்தான்?’ – புதிய ஆய்வு

இதற்கு முந்தைய ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்டது போல, மனித இனம் ஆப்பிரிக்காவில் உள்ள கிழக்கு ஆப்பிரிக்க பகுதியிலோ அல்லது தெற்கு ஆப்பிரிக்க பகுதியிலோ மட்டுமே தோன்றவில்லை என்றும், மாறாக ஆப்பிரிக்க கண்டம் மொத்தத்திலும் பரவி வாழ்ந்திருக்கின்றனர் என்றும் விளக்குகிறது எலீனர் தலைமையிலான இந்த புதிய ஆய்வு. மனிதன் எங்கிருந்து வந்தான்? என்று யாரிடமாவது கேட்டால், சற்றும் யோசிக்காமல் ‘குரங்கில் இருந்து’ என்றே பலரும் கூறுவர். ஆனால் நாம் தற்போது வாழ்ந்துகொண்டு இருப்பது கூகுள் காலம். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள இந்த தகவல் யுகத்தில், மனிதன் எங்கிருந்து வந்தான் என்பது போன்ற அறிவியல் மற்றும் பரிணாமம் சார்ந்த ஆழமான கேள்விகளுக்கு, இனியும், பொதுவான, தகுந்த ஆதாரங்கள் இல்லாத மற்றும் பாரம்பரியமான பதில்களைச் சொன்னால் அது ஏற்புடைய தாகவும் இருக்காது, அறிவுப்பூர்வமான ஒரு பதிலாகவும் இருக்காது. அதுபோலவே, மனித பரிணாமம் என்றாலே, குனிந்த சில குரங்குகளில் இருந்து நிமிர்ந்த உடல்கொண்ட மனிதன்...

கைகளால் கழிவு அள்ளுவோர் 20 ஆயிரம் பேர்!

கைகளால் கழிவு அள்ளுவோர் 20 ஆயிரம் பேர்!

நாட்டில் 20 ஆயிரத்து500 பேர் கைகளால் கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 6,126 பேரு, மகாராஷ்டிராவில் 5,269பேரும் கைகளால் கழிவுகளை அள்ளுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது 18 மாநிலங்களின் கணக்குதான். நிமிர்வோம் செப் 2018 இதழ்

ஜாதி ஆணவப் படுகொலைகளையும் ஜாதிய சமூகத்தின் வெறுப்பு  உளவியலையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது  ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்.

ஜாதி ஆணவப் படுகொலைகளையும் ஜாதிய சமூகத்தின் வெறுப்பு உளவியலையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்.

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய ஜாதி வெறி, இப்போது தனது உருவத்தை மாற்றிக் கொண்டு நுட்பமாக செயல்படுவதைப் படம் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டு கிறது. நெல்லை மாவட்டம் புளியங்குளம் கிராமம் கதைக்களம். புளியங்குளத்து மக்கள் என்றாலே,  அவர்கள், ‘தலித் மக்கள் தான்’ என்று ஊரை வைத்தே ஜாதி அடையாளம் போர்த்தப்படுகிறது. அப்பகுதியில் 2005ஆம் ஆண்டு நிலவிய ஜாதியப் படிநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை இயல்பாகக் கண் முன் கொண்டு வந்து நிறுத்து கிறார்கள், ஒளிப்பதிவாளரும், இயக்குனரும். திரைப்படங்கள் தொடங்குவதற்கு முன்பு அரசு ஆணைப்படி கட்டாயமாகக் காட்டப் படும் காட்சிகளான “புகைப் பிடிப்பது – உயிருக்கு ஆபத்து; புற்று நோயை உருவாக்கும்; மது குடிப்பது – உடலுக்குக் கேடானது” என்ற விளம்பரத்தைத் தொடர்ந்து, “ஜாதியும் மதமும் – மனிதநேயத்தைக் கொல்லும்” என்ற அறிவிப் புடன் படம் தொடங்குகிறது. கதையின் நாயகன், உயிருக்கு உயிராக நேசிக்கும் அவனது வேட்டை நாய் ‘கருப்பியை’ உள்ளூர்...

‘ஆதி திராவிடர்’களை தனிமைப்படுத்துவதா? குன்றக்குடி அடிகளார்

‘ஆதி திராவிடர்’களை தனிமைப்படுத்துவதா? குன்றக்குடி அடிகளார்

இன்று தமிழகத்திற்கு மீண்டும் பெரியார் தேவை! ஏன்? பெரியார் தலை முறைக்கு முன் தமிழர்கள் வாழ்ந்த நிலைமைக்கு மீண்டும் விரைந்து சென்று கொண் டிருக்கின்றனர். ஆம்! தமிழினம் பல்குழு வழிப்பட்டு இன்று சிதறுண்டு வருகிறது. பெரியார் வார்த்தையில் சொன்னால் ‘நெல்லிக்காய்’ போலத் தமிழர் நம்முள் உட்பகைக் கொண்டு ஒருவரை ஒருவர் தொலைக்கச் சூளுரை கொள்கின்றனர். அரசியல் பொது வாழ்க்கையில் நாணயம் கடைச் சரக்காக மாறி வருகிறது. தன் பெண்டு, தன் மக்கள் என்று சுற்றித் திரிந்தும் சுருட்டியும் வாழும் ‘கடுகு மனத்’தவர்களாகத் தமிழர்கள் உருமாறி வருகின்றனர். புதுப்புதுக் கடவுள்கள் இறக்குமதி ஆகின்றன. புதுப்புதுக் கோயில்கள் நாள் தோறும் கட்டப்படுகின்றன. நடுவண் அரசின் பணித் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை அருகி வருகிறது. ஏன்? ஆரம்பப் பாடசாலையிலிருந்து ‘தர்ம மார்க்’கில் மாணவர்கள் வளர்ந்து வரு கின்றனர். ஏன் இந்த அவலம்? பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். ஏன்? பெண் குழந்தைகள் கொல்லப் படுகின்றனர். இங்கும் அங்கும்...

சாதி மதமொழித்த மனிதத்தை மதிப்போம் – அடிகளார் ‘விடுதலை’ பெரியார் மலருக்கு அடிகளார் எழுதிய கட்டுரை

சாதி மதமொழித்த மனிதத்தை மதிப்போம் – அடிகளார் ‘விடுதலை’ பெரியார் மலருக்கு அடிகளார் எழுதிய கட்டுரை

‘மனிதனை நெருங்கு பவன் கடவுளை நெருங்கு கிறான்’ என்பது மதத்தின் இதோபதேசமாக இருந்தாலும் செயலில் அப்படி இல்லை. தந்தை பெரியார் அவர்கள் இந்தத் தலைமுறைத் தமிழர்களுக்குத் தந்த மறைமொழி ‘மனிதனை நினை!’ என்பதேயாகும். ஆம்! தமிழகத்தின் கடந்த பலநூற்றாண்டு வரலாற்றை உற்றுநோக்கின் மனிதன் மதிக்கப் பெற்றதாகத் தெரியவில்லை. மனிதரிலும் மகளிர் ஒரு பொருளாக எண்ணப்பட்டதாகக் கூடத் தெரியவில்லை. கடவுள், மதம், மொழி, பணம்,  சொத்து, பதவி இவைகள் மதிக்கப் பெற்ற அளவுக்கு ‘மனிதன்’ மதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இங்கொன்றும் அங்கொன்று மாகச் சில வரலாற்று நிகழ்ச்சிகள் இருந்ததாகத் தெரிந்தாலும் அது அபூர்வ வாழ்க்கை. அது, இயற்கை நியதியன்று. அதனால் தானே வரலாற்றில் பல நூற்றாண்டுகள் பல கோடி மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுடைய பொறி புலன்கள் பயனற்றப் போயின. கல்வியறிவே இல்லாத மக்களாகப் பல கோடிப் பேரை வைத்திருந்து பல்லக்குச் சவாரி செய்த பெருமை உயர்சாதியினர்க்கு உண்டு. ஏன் இந்த...

காஞ்சி மடத்தின் ஆணையை மீறிய  குன்றக்குடி அடிகளார்

காஞ்சி மடத்தின் ஆணையை மீறிய குன்றக்குடி அடிகளார்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு வழி செய்வதற்கான மசோதாவை தி.மு.க. அரசு கொண்டு வந்தது. சட்ட மேலவையில் இந்த மசோதாவை எதிர்க்கும் படி காஞ்சி காமகோடி பீடத்திலிருந்து குன்றக்குடி அடிகளாருக்கு கோரிக்கை வந்தது.   பழைய தஞ்சாவூர் மாவட்டத்தின் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப் புத்தூருக்கு அருகேயுள்ள நடுத்திட்டு என்னும் கிராமத்தில் சீனிவாசப் பிள்ளை-சொர்ணத்தம்மாள் இணையருக்கு 1925ஆம் ஆண்டு சூலை மாதம் 11ஆம் நாள் பிறந்தவர் குன்றக்குடி அடிகளார். அவரது இயற்பெயர் அரங்கநாதன். 1952ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டுவரை குன்றக்குடி மடத்தின் தலைமை ஆதினமாக இருந்தவர். ஆன்மீகவாதியாக இருந்தாலும்கூட சமூக-சமத்துவத் தளங்களில் தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டாற்றிய பெருமையும் குன்றக்குடி அடிகளாருக்கு உண்டு. பெரியாரின் நாத்திகக் கருத்துகளோடு ஏராளமான முரண்பாடுகள் இருந்தாலும், ஜாதி ஒழிப்புக் கருத்துகளுக்கு இசைந்து பெரியாரோடு அந்தப் புள்ளியில் இணைந்தவர் குன்றக்குடி அடிகளார். சன்னிதானங்கள் பவனி வர பயன்படுத்தி வந்த பல்லக்கை தான் ஆதீனமாகப் பொறுப்பேற்ற ஆரம்பத்திலேயே தவிர்த்தது போன்ற எண்ணற்ற...

‘கருப்பும்-காவியும்’ இணைந்த வரலாறு

‘கருப்பும்-காவியும்’ இணைந்த வரலாறு

கடவுள் – மத மறுப்புகளைக் கடுமையாகப் பேசிய பெரியார், போராட்ட வடிவங்களிலும் கடுமையான அணுகுமுறை களையே பின்பற்றினார். பார்ப்பனியத்தில் ஊறிப் போய் நிற்கும் மக்களுக்கு இத்தகைய ‘அறுவை சிகிச்சை’ முறையே தேவை என்று கருதினார் பெரியார். ஆனால், தமிழ்நாட்டில் கொள்கை முரண் பாடுகளுக்கிடையே உரையாடல்களைத் தொடங்கி விவாதங்களுக்கு வழி திறந்து விட்டதுதான் பெரியார் இயக்கம், மாற்றுக் கருத்தாளர்களை எதிரிகளாக்கி வன்முறைக்கு தூபம் போட்டது இல்லை. இன்று எச். ராஜாக்களும், இந்து தீவிரவாத அமைப்புகளும் பேசும் தரமற்ற வன்முறைப் பேச்சுகளை பெரியார் இயக்கம் எப்போதும் பின்பற்றியதும் இல்லை. சைவத்திலும் பக்தியிலும் ஊறித் திளைத்த காவி உடை சாமியார் குன்றக்குடி அடிகளாரும் பெரியாரும் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டார்கள். அவரவர் நிலையிலிருந்து கருத்து மோதல்களை நிகழ்த்தினார்கள். தமிழர் இன நலன் என்று வரும்போது ‘கருப்பும் காவியும்’ ஒரே குரலில் ஒலித்தது. இந்த வரலாற்றை இளைய சமுதாயத்துக்கு நினைவூட்டுவதற்காக பெரியார் – அடிகளாருக்கிடையே நிலவிய உறவுகளை...

மோசடி செய்து வெளிநாடு ஓடும் ‘பார்ப்பன-பனியாக்கள்’

மோசடி செய்து வெளிநாடு ஓடும் ‘பார்ப்பன-பனியாக்கள்’

விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி, நிதின் சந்தேசரா என பலரும் இந்தியாவில் நிதிமோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு ஓடி விட்டனர். இவர்களைப் பிடிப்பதற்காக, சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் பின்னாலேயே சென்றுள்ளன. இந்நிலையில், ஐஎல்எப்எஸ் (Infrastructure Leasing and Financial Services) நிறுவனத்தை 91 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்க விட்ட, அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரவி பார்த்தசாரதியும் தற்போது லண்டன் தப்பிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரவி பார்த்தசாரதி மருத்துவச் சிகிச்சைக்குத்தான் வெளிநாடு சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டாலும், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் இந்தியா திரும்புவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. உட்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதிச்சேவை (Infrastructure Leasing and Financial Services) என்ற நிறுவனம் ரூ. 91 ஆயிரம் கோடி கடனில் விடப்பட்டுள்ளது. அதில் ரூ. 57 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு செலுத்த வேண்டியதாகும். இந்த மோசமான நிலைக்குக் காரணம், நிறுவனத்தின்...

பூமி சூரியனை சுற்றுகிறது என்றால் சூரியன் எதைச் சுற்றுகிறது?

பூமி சூரியனை சுற்றுகிறது என்றால் சூரியன் எதைச் சுற்றுகிறது?

சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர் களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் தொடங்குகிறது. படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார். பூமியை நிலவு பாத்திரத்தில் ஒருவர் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பூமியைச் சுற்றுவார். ஆக, நிலவு மனிதர் ஒரே நேரத்தில் பூமியையும் சூரியனையும் சுற்றுவார். இந்த அறிவியல் விளக்கம் ஒரு அற்புதமான நடனம்போல் படத்தில் அமைக்கப் பட்டிருக்கும். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த என் நண்பர் கேட்டார், “சூரியன் பாத்திரத்தை ஏற்ற நபர் அப்படியே இருக்கிறாரே. உண்மையில் சூரியன் அசையாமல் இருக்கிறதா, அல்லது சுற்றுகிறதா?” கொஞ்சம் தலைசுற்றவைக்கும் கேள்விதான்! நாம் எல்லோரும் தோற்றத்தை நம்பி...

பெல்காமில் பெரியார்-காந்தி-ராஜாஜி உரையாடல்

பெல்காமில் பெரியார்-காந்தி-ராஜாஜி உரையாடல்

“பார்ப்பனரல்லாதாருக்கு 90 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்தார் காந்தி.” காங்கிரசில் கதர்போர்டு தலைவராக பெரியார் இருந்த காலத்தில் அது தொடர்பான பதவிகள் பார்ப்பனர்களுக்கே வழங்கப்படுவதை எதிர்த்து அனைத்து சமூகத்தினருக்கும் பகிர்ந் தளிக்க முயற்சித்தார். போர்டு செயலாளராக இருந்த சி.ஆர். சந்தானம் ஒரு பார்ப்பனர். கதர் போர்டு முழுவதையும் பார்ப்பனர்களையேக் கொண்டு குவித்தார். இதற்கு ராஜாஜி எனும் இராஜகோபாலாச்சாரியும் உடந்தை. கருநாடக மாநிலத்திலுள்ள பெல்காமில் காங்கிரஸ் மாநாட்டின்போது இது குறித்து காந்தியாரிடம் புகார் போனது. 1924ஆம் ஆண்டு டிசம்பர் 24, 27 தேதிகளில் இந்திய தேசிய காங்கிரசின் 39ஆவது மாநாடு பெல்காமில் நடந்தது. மாநாட்டின் தலைவர் காந்தி. காந்தி தலைமை தாங்கிய ஒரே காங்கிரஸ் மாநாடும் இதுதான். பெரியாரும் இந்த மாநாட்டுக்குச் சென்றிருந்தார். பெரியாருக்கும் சந்தானத்துக்கும் பார்ப்பனர் ஆதிக்கப் பிரச்சினையில் உருவான மோதலில், சந்தானம் பதவியிலிருந்து விலக முன் வந்தார். அப்போது பெல்காமில் நடந்த சந்திப்பு இது. இது குறித்து ‘குடிஅரசு’ ஏட்டில் (6.9.1927)...

இசையிலும் ‘இந்துத்துவா’ வெறி

இசையிலும் ‘இந்துத்துவா’ வெறி

ஓ.எஸ். அருண் என்ற கர்னாடக இசைக் கலைஞர் ஏசுவின் புகழ் பாடும் கிறிஸ்தவப் பாடலைப் பாட முயன்றதற்கு பார்ப்பனர்கள் மிரட்ட – பாடகர் நிகழ்ச்சியையே இரத்து செய்து விட்டார் ஆரம்பப் புள்ளி, பாடகர் ஓ.எஸ்.அருண். ‘இயேசுவின் சங்கம சங்கீதம்’ என்ற பெயரில் ஆகஸ்ட் 25-ம் தேதி  ‘பல நூற்றாண்டுகளைக் கடந்த காலத்தால் அழியாத கிறிஸ்துவ கீர்த்தனைகள் ஓ.எஸ்.அருணின் உள்ளம் உருக்கும் குரலில்’ என்ற போஸ்டர், சமூக ஊடகங்களில் வெளியானது. உடனே கொதித் தெழுந்தார்கள் இந்துமதப் பாதுகாவலர்களாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும் ‘கலாச்சார தாதாக்கள்’. ‘கிறித்துவ அமைப்புக்காக என்னமா பாடப்போச்சு’ என்று அருணை வசை பாடினார்கள். ‘பணத்துக்காக எது வேண்டு மானாலும் செய்யறதா?’ என்று தூற்றினார்கள். நமக்கேன் வம்பு என்று குடும்ப நிர்ப்பந்தங்களைக் காரணமாகச் சொல்லி கச்சேரியை ரத்துசெய்வதாக அறிவித்தார் ஓ.எஸ்.அருண். நியாயமாக அத்துடன் முடிந்திருக்க வேண்டிய பிரச்னை, மேலும் விஸ்வரூபம் எடுத்தது. ‘இப்போது ரத்துசெய்வது இருக்கட்டும்.. அந்தக் கச்சேரியை முதலில் ஏன் ஒப்புக்கொண்டீர்கள்?’...

தமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் (2) – சு. அறிவுக்கரசு

தமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் (2) – சு. அறிவுக்கரசு

அறிவியல் வளராத காலத்தில் உருவான தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளாமல் அதைப் பெருமைப்படுத்துவது என்ன நியாயம் என்ற கேள்வியை எழுப்புவதோடு உ.வே.சாமிநாதய்யரின் உரைகளில் திணிக்கப்பட்ட பார்ப்பனியத்தையும் சுட்டிக்காட்டுகிறது இந்தக் கட்டுரை. வானில் தோன்றும் நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவை மனிதகுல வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன எனும் நம்பிக்கை தமிழரிடையே நிறையவே உண்டு. தீய நிமித்தங்களுக்கும் வானில் ஏற்படும் நிலைகள் தாம் காரணிகள் என்று தமிழர் அஞ்சினர். இதனைக் கணித்துக் கூறும் ஆண்கள் கணியன் என்றழைக்கப்பட்டனர். அக்கலை அய்ந்திரம் எனப்பட்டது. அதுவே பஞ்சாங்கம் என இன்று அழைக்கப்படுகிறது. மேலை நாடுகளில் அது ALMANAC எனப்படுகிறது. ஆனால், மேலை நாடுகளுக்கும் இந்திய நாட்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மேலை நாட்டுப் பஞ்சாங்கம் ஒன்றே ஒன்று. இந்திய நாட்டில் பஞ்சாங்கங்கள் மொத்தம் எட்டு. தமிழ்நாட்டில் பஞ்சாங்கம் இரண்டு. சுத்த வாக்கியப் பஞ்சாங்கம், எண் கணிதப் பஞ்சாங்கம் என இரண்டு உள்ளன. அதிலும் தனித்து...

அணுக் கழிவுகளை 1 இலட்சம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் சுந்தர்ராஜன்

அணுக் கழிவுகளை 1 இலட்சம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் சுந்தர்ராஜன்

அணுவைக்கூட செயலிழக்க வைத்துவிடலாம். ஆனால் அணுக் கழிவுகளை கையாள்வதற்கான தொழில்நுட்பம் உலகத்தின்  எந்த நாட்டிலும் கிடையாது. ஆனால் இந்திய அரசு அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, எந்தெந்த தொழில்நுட்பங்களை உலக நாடுகளில் சோதனை செய்யவில்லையோ அந்த அணு உலைகளை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. 2000 வருடங்களாக மனிதர்களுக்குள், நாடுகளுக்குள் ஏன் போர் வருகிறது என்றால் அடிப்படையில் அவை எல்லாமே வளங்களுக்கான போர்தான். பெட்ரோலியப் பொருட்களின் தேவைக்காகத்தான் அமெரிக்கா ஈராக் மீது குண்டு வீசியது. கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் தண்ணீருக்கானப் பிரச்சினை. இந்தியாவுக்கும், வங்க தேசத்துக்கும் கங்கை நதியில் பிரச்சினை.  ஆக பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மக்களுக்கு வளங்கள்தான் சண்டைக்கான காரணமாகவுள்ளது. அது பெட்ரோல், தண்ணீர், தாதுக்கள் என்று எந்த வளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதேபோல, புவிசார் அரசியலும் சண்டைக் குரிய காரணியாக மாறும். அதுதான் ஈழத்தில் நடந்தது. அங்கே தமிழர்களின் பகுதியில் திரிகோணமலையில் இருக்கிற வளங்களை சுரண்டத்தான்...

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரகடனம்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரகடனம்

“விழித்துக் கொண்டே ஒரு கனவு கண்டேன். அதில் நான், கட்சி, தமிழினம், நாடு, உலகம் இவை அனைத்தும் புத்தம் புதியதாய், பேரழகாய் மகிழ்ச்சியில் வாழ்வதைக் கண்டேன். காலத்தின் மாற்றங்களுக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்தே தொடங்கட்டும். இன்று நீங்கள் பார்க்கும், கேட்கும் மு.க. ஸ்டாலின் ஆகிய நான், புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான். தி.மு.க.வின் மரபணுக்களோடும், நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடும் உங்கள் முன்னால் பிறந்திருக்கிறேன். எதிர்காலத்தில் தி.மு.க.வினர் என்பவர் யாராக இருப்பர் என்றால், தன் ஜாதியே உயர்ந்தது என்று நினைப்போர் அல்ல. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரையும் தன் உடன்பிறப்பாக நினைப்போரும், எளியோருக்குக் கரம் கொடுப்போரும் தான். நாம் கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல. நாம் நம்பவில்லை எனினும் பிறரின் நம்பிக்கையை மதிப்போர். யார் தவறு செய்தாலும் அது நான் என்றாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுப்போர்...

ஜாதி சங்க மாநாடுகளில்  ஜாதியை எதிர்த்த பெரியார் (2)

ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (2)

பெரியாரியலுக்கு வலிமை சேர்க்கும் அண்மைக்கால வரவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருப்பது, பெரியாரிய ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன் தொகுத்து வெளியிட்டுள்ள ‘நமக்கு ஏன் இந்த இழிநிலை’ நூலாகும். ஜாதி மாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து சுமார் 400 பக்கங்களோடு இந்த நூல் வெளி வந்திருக்கிறது. இந்த நூலுக்கு தொகுப்பாசிரியர் 60 பக்கங்களுக்கு அய்ந்து அத்தியாயங்களைக் கொண்ட ஆழமான முன்னுரை எழுதியிருக்கிறார். இதில் ஜாதி சங்க மாநாடுகளில் பெரியார் எனும் தலைப்பில் எழுதியுள்ள பகுதியை இங்கு வெளியிடுகிறோம். ஜாதி சங்கங்களில் ஜாதியைக் கடுமையாக விமர்சித்துப் பேசக்கூடிய நேர்மையும் துணிவும் கொண்ட தலைவராக பெரியார் இருந்திருக்கிறார் என்பதை இதைப் படிக்கும்போது உணர முடியும். இப்போதும் ஜாதி ஒழிப்புக்கான கருத்தாயுதங்களாக இவை திகழ்கின்றன. ஆதி திராவிடர் மகாநாடுகள், நாடார் சங்க மகாநாடுகளுக்குப் பிறகு பெரியார் அதிகமாகப் பங்கேற்றது செங்குந்தர் மகாநாடுகளில்தான். இந்தத் தொகுப்பில் உள்ள உரைகளில் காலத்தால் முந்தியது அவிநாசியில்...

பெண்களின் ‘தீட்டும்’அய்யப்பன் ‘புனிதமும்’ செ.கார்கி

பெண்களின் ‘தீட்டும்’அய்யப்பன் ‘புனிதமும்’ செ.கார்கி

அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கேரள அரசு எடுத்த முடிவுதான் அய்யப்பன் கோபத்துக்கு உள்ளாகி, அதன் காரணமாக கேரளம் வெள்ளத்தால் தவிக்கிறது என்று ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களுக்கு எதிரான தீண்டாமைக்கு எதிராகப் போராடும் பெண்கள், அய்யப்பன் பக்திமயக்கத்திலிருந்தும் வெளியேற வேண்டாமா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றம் “ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் அனைவருக்கும் கோயிலில் வழிபட உரிமை உள்ளது” என்றும் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் கோயில் நிர்வாகம் “மாதவிடாய் காலத்தில் உள்ள 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தால் புனிதம் பாதிக்கப்படும் எனவே அவர்களை அனுமதிக்க முடியாது” என்று மறுத்துள்ளது. அதே போல நாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன்  “நன்கு...

பஞ்சாப் மாநிலத்தின் விபரீத சட்டம்

பஞ்சாப் மாநிலத்தின் விபரீத சட்டம்

புனித நூல்களாகக் கருதும் சீக்கியர்களின் குரு கிரந்த் சாகிப், இஸ்லாமியர்களின் குரான், இந்து பார்ப்பனர்களின் ‘பகவத்கீதை’ ஆகியவற்றை சேதப்படுத்துவோர், களங்கப்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனை என்று பஞ்சாப் மாநில அரசு சட்டம் நிறைவேற்றியிருக்கிறது. 1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த தண்டனைச் சட்டப்படி உள்நோக்கத்தோடு மத உணர்வுகளைப் புண்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இப்போது ஆயுள் தண்டனையாக மாற்றி திருத்தம் செய்திருக்கிறது பஞ்சாப் மாநில அரசு. ‘மத உணர்வுகளைப் புண்படுத்துதல்’ என்ற சட்டம் ஏற்கனவே முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத நூல்களை பகுத்தறிவு அடிப்படையில் கேள்விக்குட்படுத்தினாலே மத உணர்வைப் புண்படுத்துவதாக மதவாதிகள் கூச்சல் போட்டு பகுத்தறிவு சிந்தனைகளை முடக்கத் துடிக்கிறார்கள். இந்த நிலையில் இப்படி ஆயுள் தண்டனை வழங்கும் சட்டத் திருத்தம் மிகவும் கண்டிக்கத்தக்கது. “நான்கு வர்ணத்தை நான் தான் படைத்தேன் என்று பகவான் கிருஷ்ணன் கூறும் பகவத் கீதையை நியாயமாக தடை...

உமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்? செந்தில்

உமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்? செந்தில்

ஒன்றுக்கு ஒன்று தொடர் புடைய இரண்டு நிகழ்ச்சிகள் ஆக. 13, 2018 அன்று நடந்தன. முதலாவது ஆக. 13, 2018 மதியம் இந்நாட்டின் தலைநகர் தில்லியில் மையப் பகுதியில் இருக்கும் அரசமைப்பு மன்றம் என்று அழைக்கப்படும் இடத்தின் வளாகத்தில் நாடறிந்த மாணவ செயற்பாட்டாளர் தோழர் உமர் காலித்தை அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்தார். பின்புறமாக இருந்து அவரைத் தாக்க முயல உமர் நிலைதடுமாறிப் போனார். அந்த ஆள் உமர் காலித்தைச் சுடக் குறி வைத்து அவர் வயிற்றில் துப்பாக்கியை வைத்தார். உமர் காலித் இதை உணர்ந்து கொண்டு அவரைத் தள்ளினார். அக் கணத்தில் அவருடன் இருந்த தோழர்கள் காலித் சயிஃபி, சாரிக் உசைன், பனோஜ் யோட்சனா லாஹிரி அவரைத் தள்ளி விட்டனர். அவர் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். அவரை சாரிக் உசைன் விரட்டிப் பிடிக்கப் பார்த்தார். அந்நேரம் அவர் குறியின்றி ஒருமுறை சுடவும் செய்தார். ஆனால் சாரிக்...

மோடி பிற்படுத்தப்பட்டவரா?

மோடி பிற்படுத்தப்பட்டவரா?

காங்கிரசு கட்சி யின் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில் கூறியுள்ள கருத்து முக்கியமானது (9.5.2014). மோத் கன்சாஸ் என்ற உயர்ஜாதி வகுப்பில் பிறந்த நரேந்திர மோடி 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குஜராத் மாநில முதல்வராகப்பதவியேற்றார். அதன்பிறகு 3 மாதங்கள் கழித்து தனது ஜாதியை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இணைத்துக் கொண்டார். இதனால் உண்மையான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த வகுப்பினரிடம் மோடி மன்னிப்புக் கேட்கவேண்டும். காங்கிரசு ஆட்சிக் காலத்தில் மோத் கன்சீஸ் என்ற ஜாதிப்பிரிவு உள்ளிட்ட 40 ஜாதிப் பட்டியலை பிற்படுத்தப்பட்ட பிரிவில் இணைத்தது. இதில் எதுவுமே மோடியின் ஜாதி அல்ல; மோடி மோத் கன்சாஸ் என்ற உயர்ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர். வேறுபாடு கண்டு பிடிக்க முடியாத பெயர் ஒற்றுமை காரணமாக தனது ஜாதிப் பிரிவையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்குள் இரகசியமாக சேர்த்து அரசாணையை வெளியிட்டார். இந்த மாற்றம் அவரது அமைச்சரவையில் இருந்த...

‘ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல்’ கதை

‘ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல்’ கதை

நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோவிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறீரங்கம் கோவிலின் மதில்களைக் கட்டினான்.  ஆனால், அக்கோவிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகளுக்கோ அந்தக் கோவிலின் சின்னத்தையே அதாவது ‘நாமத்’தையே சாத்திவிட்டான்.  கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, கூலி தருகிறேன் என்று கூறி, காவிரி நடு ஆற்றில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் ஓடக்காரன் துணையோடு. ஆழ்வாரும் ஓடக்காரனும் கோயில் வந்து சேர்ந்தவுடன் அந்தத் தொழிலாளிகளுடைய பிள்ளைகள் இருவரையும் சூழ்ந்துகொண்டு, “எங்கள் பெற்றோர் எங்கே?” என்று கேட்டனர். “ஒரு தீவிலே பொன்னையும் பொருளையும் காட்டிவிட்டோம்; அவர்கள் அதை மூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஆழ்வார் அவர்களுக்கு சமாதானம் சொன்னார். அதை நம்பாத அந்தப் பிள்ளைகள், “எங்கள் தகப்பன், பாட்டன்மாரை ஆற்றில் தள்ளிக் கொன்று விட்டீர்கள். அவர்களை உயிருடன் கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்தினாலொழிய, உங்களைப்...

நெஞ்சத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்!

நெஞ்சத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்!

திருப்பூர் மாவட்டம் திருமலைக் கவுண்டன்பாளையம் – தீண்டாமை ஒழிப்புச் சட்டத்துக்கு சவால் விட்டிருக்கிறது. தமிழகம் முழுதும் இதுபோல் எத்தனையோ ‘பாளையங்களில்’ நடக்கும் ஜாதி வெறித் தீண்டாமை இன்னும் வெளிச்சத்துக்கு வராமலே இருக்கிறது என்பதே உண்மை. ஜாதி வெறி இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது. அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த தோழர் பாப்பாள் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு சமைத்த உணவு தீட்டாகி விட்டதாகக் கூறி அவரைப் பணி இடமாற்றம் செய்வதற்குத் தூண்டி அரசு அதிகாரிகளையும் பணிய வைத்திருக்கிறார்கள் அங்கே உள்ள கவுண்டர் சமூகத்தின் ஒரு பகுதியினர். இத்தனைக்கும் பாப்பாள் சொந்த ஊர் அது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே பள்ளியில் சத்துணவு சமையராக அவர் பணியாற்றத் தொடங்கியபோது இதே ஜாதி வெறி எதிர்ப்புக் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டவர்தான் அவர். இடையில் ஒரு தலைமுறை மாற்றம் வந்த பிறகும் ‘ஜாதி வெறி’ மனநிலை மட்டும் 15 ஆண்டுகளாக மாறாத நிலையில் இருக்கிறது என்பதுதான் இதில்...

அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்

அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்

மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட நடுவண் ஆட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் வலிமையாக மாறி நிற்கும் ஒரு அவலம் – அரசியலில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆளுநர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உருவான நிலை என்று சுருக்கிப் பார்த்துவிட முடியாது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இந்த ‘அதிகார ஆக்கிரமிப்புகள்’ நடந்தன. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இது தீவிரம் பெற்று ‘ஆளுநரின் அதிகார ஆக்கிரமிப்புகள்’ ஒரு நிலைத்த அரசியல் நடவடிக்கைகளாகிவிட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையே நடக்கும் அதிகாரப் போட்டி, தமிழ்நாட்டில் வேறு புதிய வடிவத்தில் எழுந்து நிற்கிறது. இறையாண்மையுள்ள ஒரு மாநில அரசு தனக்கு மக்கள் வழங்கியிருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகளை தானாகவே முன் வந்து ஆளுநரின் கால்களில் வெட்கப்படாமல் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரின்  அதிகார அத்துமீறல்களை எதிர்த்து எதிர்க் கட்சிகள் தான் போராடுகின்றன. போராடினால் 7 ஆண்டு சிறை என்கிறது – ஆளுநர் மாளிகை அறிவிப்பு....

மோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள் அய்.நா.வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் ர. பிரகாசு

மோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள் அய்.நா.வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் ர. பிரகாசு

அனைத்திந்திய ‘தலித் மகிளா அதிகார் மான்ச்’ என்ற இந்த தலித் பெண்கள் அமைப்பு இந்தியாவில் நடந்த ஜாதி ரீதியான வன்முறைகளைத் தொகுத்து ஜூன் 21ஆம் தேதி ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவின் (ருசூழஊசு) கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளது. புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவிப்பது, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நிலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாத இந்துத்துவ சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக்குவது, தாழ்த்தப்பட்டவர்களை ’தலித்’ என்று அழைக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டது போன்ற செயல்கள் அண்மைக் காலங்களில் நடந்தன. இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜகவும் தான் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பு அரண்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கவே செய்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் குறைந்துவிட்டது என்றும் மோடி தொடர்ந்து சில இடங்களில் பதிவு செய்தார்....

பெரியாரின் ‘பயணம்’

பெரியாரின் ‘பயணம்’

90-வது வயதில்  மூ  180 கூட்டம். 91-வது வயதில்  மூ  150 கூட்டம். 93-வது வயதில்  மூ  249 கூட்டம். 94-வது வயதில்  மூ  229 கூட்டம். வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம். இத்தனையும், கடும் நோயின் வலி களுடன். ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்….. சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட் டிருக்கும்….. இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்கச் செய்தார்? எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்கச் செய்தார் ? அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா? மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா? நான் சொல்வதை கேட்டால் தான் உனக்கு சொர்க்கம்; என்னை வணங்காவிட்டால் நரகம் என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக் கிடையில்………… நான் தலைவன் நான் தவறே செய்தாலும் என்னை நீ ஆதரித்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில், யார் சொன்னாலும், நானே...

வேட்டி இந்து பண்பாடா? – செ.கார்கி

வேட்டி இந்து பண்பாடா? – செ.கார்கி

சிலர் இன்று வேட்டி என்பது இந்து பண்பாடு அது தமிழரின் பண்பாடு கிடையாது என சொல்லும் போக்கு உள்ளது. அது தவறான வாதமாகும். வரலாற்று வளர்ச்சி என்பது சுழல் ஏணி வரிசையில் முன்னோக்கி போவது.  இருக்கும் ஒரு வளர்ச்சி கட்டத்தில் இருந்து இன்னும் கூடுதலான ஒரு வளர்ச்சிக் கட்டத்திற்கு  செல்வதுதான் வளர்ச்சி. அப்படித்தான் சமூகம் மாறிவந்துள்ளது. எந்தச் சமூகமும் இருக்கும் நிலையில் இருந்து திடீரென சுழலேணியில் கீழ்மட்டத்தில் வந்து விழுந்துவிடாது. இந்த அடிப்படியில் இருந்துதான் நாம் வரலாற்றையும் மாறிவரும் மனிதர்களின் பண்பாடுகளையும் மதிப்பிட வேண்டும். உலகின் எல்லா சமூகங்களும் அநாகரிக நிலையில் இருந்துதான் நாகரிக நிலையை எட்டி இருக்கின்றன. எந்தச் சமூகம் அர்த்தமற்ற பழமையை கொண்டாடு கின்றதோ அந்தச் சமூகம் அறிவியல், பண்பாடு, என அனைத்திலும் தேங்கிவிடும். ஆனால் அப்படி தேங்கிப்போன சமூகங்களை இன்று உலகில் காண்பது அரிது. முதலாளித்துவத்தின் அபாரமான வளர்ச்சியானது தனது கரங்களை இந்தப் புவிப்பரப்பு எங்கும் பரப்பி...

ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (1)

ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (1)

ஆதி திராவிடர்களுக்கு யாராவது நன்மை செய்ய வேண்டுமென நினைத்தால், பொதுக் கிணறு, கோவில், பள்ளிக்கூடம் ஆகியவற்றில் நம்மோடு கலந்து வாழ்வதற்கு அனுமதிப்பதுதான்! பெரியாரியலுக்கு வலிமை சேர்க்கும் அண்மைக்கால வரவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருப்பது, பெரியாரிய ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன் தொகுத்து வெளியிட்டள்ள ‘நமக்கு ஏன் இந்த இழிநிலை’ நூலாகும். ஜாதி மாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து சுமார் 400 பக்கங்களோடு இந்த நூல் வெளி வந்திருக்கிறது. இந்த நூலுக்கு தொகுப்பாசிரியர் 60 பக்கங்களுக்கு அய்ந்து அத்தியாயங்களைக் கொண்ட ஆழமான முன்னுரை எழுதியிருக்கிறார். இதில் ஜாதி சங்க மாநாடுகளில் பெரியார் எனும் தலைப்பில் எழுதியுள்ள பகுதியை இங்கு வெளியிடுகிறோம். ஜாதி சங்கங்களில் ஜாதியைக் கடுமையாக விமர்சித்துப் பேசக்கூடிய நேர்மையும் துணிவும் கொண்ட தலைவராக பெரியார் இருந்திருக்கிறார் என்பதை இதைப் படிக்கும்போது உணர முடியும். இப்போதும் ஜாதி ஒழிப்புக்கான கருத்தாயுதங்களாக இவை திகழ்கின்றன. பெரியார் சாதி சங்க...

‘தலித்’ வீரர்களைப் புறக்கணிக்கும் கிரிக்கெட் பார்ப்பனியம்

‘தலித்’ வீரர்களைப் புறக்கணிக்கும் கிரிக்கெட் பார்ப்பனியம்

“கிரிக்கெட்டில் வியர்வை சிந்த வேண்டியதில்லை; பிறரைத் தொட வேண்டியதில்லை; சுறுசுறுப்பும் தேவையில்லை. இவை பார்ப்பனர்களின் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறைக்கு பொருத்தமாக இருப்பதாலேயே, ஒட்டுமொத்த கிரிக்கெட் விளையாட்டு துறையுமே பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்தியாவின் 85 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணியில் விளையாடிய 289 ஆண் கிரிக்கெட் வீரர்களில், 4 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில், கறுப்பின மக்களின் குறைவான பிரதிநிதித்துவம் கருத்தில் கொள்ளப்பட்டதைப்போல, இந்தியா வில் தாழ்த்தப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் குறைவான பிரதிநிதித்துவம், கண்டுகொள்ளப் படவில்லை. தென்னாப்பிரிக்க விளையாட்டுத் துறையின் தூண்டுதலால், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம், கறுப்பர்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது. இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்பு வரை, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம், எந்த சர்வதேச போட்டியையும் நடத்த அனுமதிக்கப் படவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய குடியரசு கட்சி தலைவர் ராமதாஸ் அத்வாலே (மத்திய அமைச்சர்), கிரிக்கெட்டில் இடஒதுக்கீட்டை கொண்டுவர தொடர்ச்சியாக வலியுறுத்தி...