ஊழல் பெருச்சாளிப் பார்ப்பனர் கேத்தன் தேசாயை காப்பாற்றி வரும் குஜராத் அரசு

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில், முதல் குற்ற வாளியாக சேர்க்கப்பட்டுள்ள பார்ப்பன கேத்தன் தேசாயைத் தப்பவிடும் வேலையில், குஜராத் மாநில பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. பார்ப்பன கேத்தன் தேசாயிடம், சிபிஐ விசாரணை நடத்துவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்தார் கேத்தன் தேசாய். இவர் தனதுபதவிக்காலத்தில், நாடு முழுவதும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி களுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கல்லூரி ஒன்றுக்கு தலா 25 கோடி முதல் 30 கோடி ரூபாய் வரைபெற்றதாகக் கூறப்பட்டது. மேலும், 200 தனியார் மருத்துவக் கல்லூரிகள், தலா 5 மருத்துவப் படிப்புக்கான இடங்களை கேத்தன் தேசாய்க்கு ஒதுக்கீடு செய்ததும், அந்த இடங்களை பல கோடி ரூபாய்க்கு மாணவர்களுக்கு அவர் விற்றதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து மருத்துவக் கவுன்சிலே கலைக்கப்பட்டதுடன், கேத்தன் தேசாய் மீதும் கடந்த 2010-ஆம் ஆண்டு சிபிஐ மூலம்வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தில்லி, பஞ்சாப், சண்டிகர்மற்றும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தேசாயின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை யில், தேசாயின் அகமதாபாத் வீட்டில் மட்டும் 212 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்குச் சொந்தமான கல்லூரியில் உள்ள லாக்கரிலும் பலகோடி ரூபாய் பணம் பிடிபட்டது. மொத்தம்ரூ. 2 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு ஊழல்நடந்திருக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகள் சந்தேகம் எழுப்பி யிருந்தனர். இவற்றின் அடிப்படையில் 2011-ஆம்ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி, தேசாய்மீது 142 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு, கடந்த 8 ஆண்டுகளாக இவ்வழக்கில் தேசாயை விசாரிக்க முடியாத நிலை சிபிஐ-க்கு ஏற்பட் டுள்ளது. காரணம், அரசுப் பதவியில் குறிப்பிட்ட அந்தஸ்தில் இருப்பவர் களிடம் விசாரணை நடத்த சம்மந்தப்பட்ட அரசு அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்பதே ஆகும்.  பார்ப்பன தேசாய், குஜராத் பாஜக அரசின் செல்லப்பிள்ளை என்பதால், அவரை விசாரிப்பதற்கு குஜராத் பாஜக அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. இந்த ஊழல் பார்ப்பனர் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் ஊழல் கண்டறியப்பட்ட பிறகு பல உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டார். இது தொடர்பாக வெளிப்படையான அறிவிப்பையும் குஜராத் அரசு வெளியிட்டது. அண்மையில் பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் தேசாய் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குஜராத் அரசின் அனுமதி மறுப்பை சிபிஐ சுட்டிக்காட்டியது. தங்களின் கையறு நிலையை சிபிஐ எடுத்துரைத்தது. மறுபுறத்தில், குஜராத் அரசின் அனுமதி இல்லாமல் தன்னை விசாரிக்கக் கூடாது என்று கேத்தன் தேசாய், தில்லி உயர்நீதிமன்றத்திற்கு சென்றார். அதனை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. அரசு அனுமதி இல்லாமல் விசாரிக்கக் கூடாது என்று தேசாய்க்கு சாதகமாக உத்தரவிட்டு பிறப்பித்து விட்டது.இதனால், ஊழல் பேர்வழியான கேத்தன்தேசாய், பாஜகவின் துணையுடன் மீண்டும் மீண்டும் விசாரணையிலிருந்து தப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிமிர்வோம் நவம்பர் 2018 இதழ்

You may also like...