Category: பெரியார் முழக்கம் 2016

மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!

மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!

“கூழுக்கு குழந்தைகள் அழும்போது குழவிக் கல்லுக்கு பாலாபிஷேகமா?” என்ற கேள்வியை பெரியார் இயக்கம், மக்கள் முன் வைத்தது. முடிவெய்திய சுயமரியாதை சுடரொளி சுவரெழுத்து சுப்பையா இதை சுவரெழுத்துகளில் தார் கொண்டு எழுதினார். பக்தியின் பெயரால் பொருள், பணம், நேரம் வீணாக்கப்படும் அவலம் உலகில் இந்த நாட்டைப் போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. கடந்த ஏப்.8ஆம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வந்த ஒரு செய்தி வியப்பிலாழ்த்தியது. சென்னையில் பெசன்ட் நகரில் ‘அஷ்டலட்சுமி’ கோயில் இருக்கிறது. கூட்டம் அதிகம் வரும் கோயில். பக்தர்கள் தேங்காய் உடைப்பார்கள்; தேங்காய்க்குள் உள்ள ‘இளநீர்’ வீணாக தரையில் ஓடும். பெசன்ட் நகர் குடியிருப்புகளில் வாழும் 50 மூத்த குடிமக்கள் ஒன்று சேர்ந்து இப்படி சிறந்த உணவான இளநீர் வீணாகிறதே என்று கவலைப் பட்டார்கள். மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததோடு, தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதப் போவதாகக் கூறுகிறார்கள். முதலமைச்சரே மூடத்தனத்தில் உறைந்து கிடக்கும்போது அவருக்கு கடிதம்...

கூட்டணிக்கு ஆள் கிடைக்காத பா.ஜ.க.

கூட்டணிக்கு ஆள் கிடைக்காத பா.ஜ.க.

தமிழ்நாட்டில் கூட்டணிக்கு கட்சி கிடைக் காமல் தனித்து விடப்பட்டிருக்கிறது பாரதிய ஜனதா. இந்து மக்கள் கட்சி நடத்தும் அர்ஜுன் சம்பத் கூட பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரவில்லை. அவர் வேட்பாளர்களை தனியாக நிறுத்தப் போவதாகக் கூறுகிறார். பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் என்ற பதவியில் இருக்கும் எச். ராஜா என்ற பார்ப்பனர், மத்தியில் அதிகாரத்துக்கு வந்துவிட்ட இறுமாப்பில், தடித்த வார்த்தைகளைப் பேசி வந்தார். இந்தியாவே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதைப்போல அவர் காட்டிய திமிர் இப்போது பேர் சொல்வதற்குக் கூட ஒரு ஆதரவு கட்சி இல்லாமல் அநாதையாக அலையவிட்டிருக்கிறது. சமத்துவ மக்கள் கட்சியை நடத்தும் சரத்குமாரும், பா.ஜ.க.வோடு கூட்டணி பேசி முடித்த பிறகு ‘அம்போ’ என்று கைவிட்டு மீண்டும் போயஸ் கார்டனுக்கு ஓடி விட்டார். வாசனின் த.மா.க.வுடன் இரண்டு சுற்றுப் பேச்சு வார்த்தை முடிந்து விட்டது என்றார். மாநில தலைவர் தமிழிசை, வாசனும் ‘டாட்டா’ காட்டி விட்டார். “எங்கள் ஆதரவின்றி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் ஆட்சி...

குடும்ப சொத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தை நீக்கியது மோடி ஆட்சி

குடும்ப சொத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தை நீக்கியது மோடி ஆட்சி

குடும்ப சொத்தில் ஆண்களைப்போலவே பெண்களுக்கும் உரிமை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, 1929இல் செங்கல்பட்டில் நடந்த தமிழ் மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின்போது அன்றைய முதல்வர் கலைஞர் இதை சட்டமாக்கினார். 2005ஆம் ஆண்டு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்றத்திலேயே குடும்ப சொத்தில் பெண்களின் பங்கை உறுதிப்படுத்தும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது ஏற்கெனவே அமுலில் இருந்து வந்த இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தமாகும். இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி தேவையற்ற சட்டங்கள் என்று சுமார் 140 சட்டங்களை நீக்கிவிட்டது. இனி இந்தச் சட்டங்கள் அமுலில் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டமும் இதில் இடம் பெற்றிருக்கிறது. பெண்களுக்கு குடும்ப சொத்தில் உரிய பங்கினை உறுதி செய்யும் ஒரு முக்கியமான சட்டத்தை எந்தவித...

திருப்பூரில் கருத்துகளை விதைத்த பெரியாரியல் பயிலரங்கம்

திருப்பூரில் கருத்துகளை விதைத்த பெரியாரியல் பயிலரங்கம்

திருப்பூரில் கோவை-திருப்பூர் மாவட்டக் கழகங்களின் தோழர்களுக்காக மார்ச் 3ஆம் தேதி ஒருநாள் பெரியார் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. தேர்தல் ஆணையம், தேர்தல் அரசியலில் பங்கேற்காத திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பயிற்சி முகாம்களுக்கும் ‘கெடுபிடி’ காட்டுகிறது. மேட்டுப்பாளை யத்தில் பயிற்சி முகாம் நடத்த திட்ட மிடப்பட்டது. கோவை மாவட்டக் கழகத் தலைவர் இராமச்சந்திரன், இதற்காக மண்டபங்களை அணுகியபோது, “தேர்தல் ஆணையம் அனுமதியின்றி மண்டபத்தில் நிகழ்வு நடத்த அனுமதிக்க முடியாது. இது தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப் பாடு” என்று கூறி விட்டார்கள். இரண்டு நாள் பயிற்சி முகாமில் தோழர்கள் தங்குவதற்கும் அங்கே உணவு வழங்குவதற்கும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் கழகப் பொருளாளர் துரைசாமி தமது இல்லத் தோட்டத்திலேயே பந்தல் அமைத்து பயிலரங்கம் நடத்த முன் வந்தார். திட்டமிட்டபடி பயிலரங்கம் நடந்தது. பயிலரங்கத்தில் பெண்கள்  உள்பட 70 தோழர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில் ராசு...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (16) ம.பொ.சி. மட்டுமே சென்னை நகரை மீட்டுக் கொடுத்தாரா? வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (16) ம.பொ.சி. மட்டுமே சென்னை நகரை மீட்டுக் கொடுத்தாரா? வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளில் ம.பொ.சி. மட்டும்தான் சென்னை நகரை மீட்டுக் கொடுத்தார் என்று நம்புகின்றனர். இது உண்மையல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்தியாவில் மொழிவழி மாநிலம்  பிரிப்பதற்காக இந்திய அரசினரால் முதன் முதலில் அமைக்கப்பட்டது  நீதிபதி தார் தலைமையிலான குழு ஆகும். குடிஅரசு தலைவரால் 1948இல் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மொத்தம் நான்கு பேர் இருந்தனர் நீதிபதி எ.கே. தார் தலைவராகவும் டாக்டர் பன்னாலால், திரு ஜகத் நாரியன் லால், பி.சி. பானர்ஜி ஆகியோர் உறுப்பினர் களாகவும் இருந்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் குழுவினருக்கு அறிவுரை வழங்குவதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது. 10.12.1948இல் இந்திய அரசிடம் இக்குழு அறிக்கையைக் கொடுத்தது. இப்போது உள்ள நிலையில் புதிய மாநிலம் எதையும் உருவாக்கத் தேவை யில்லை என்று இக்குழு கருதியது. அந்த அறிக்கையில் மொழிவாரி மாநிலம்...

கூட்டணி பேரங்களைத் தடுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை

கூட்டணி பேரங்களைத் தடுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை

தேர்தலில் வேட்பாளர் செலவு தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. அதைத் தாண்டி கணக்கில் காட்டாமல் கோடி கோடியாக அள்ளி வீசப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பல்வேறு கட்சி யினரும் பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்போது தொகுதி வாரியாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் போட்டி என்ற நடைமுறை உள்ளது. இதில் மாற்றம் செய்து, ‘விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை’ கொண்டு வர பரிசீலிக்கலாம் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோ உள்ளிட்ட ஆய்வாளர்கள் யோசனை அளித்துள்ளனர். இந்நிலையில்தான் அந்தக் கேள்வி எழுகிறது. அது என்ன விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை? இதன் சிறப்பம்சங்கள் என்ன? விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் வேட்பாளர் இருக்க மாட்டார்கள். மாறாக அரசியல் கட்சிகள்தான் போட்டியிடும். கட்சி களின் பிரதிநிதிகள் பட்டியலை முறைப்படுத்தி முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் கட்சி சின்னம் மட்டுமே இருக்கும். கட்சிக்கு கிடைக்கும் மொத்த வாக்குகளுக்கேற்ப எம்.பி.,...

வேதக் கல்வி நிறுவனத்துக்காக தலித் மக்களை வெளியேற்றிய ஆர்.எஸ்.எஸ்.

வேதக் கல்வி நிறுவனத்துக்காக தலித் மக்களை வெளியேற்றிய ஆர்.எஸ்.எஸ்.

ஜாதி அமைப்பையும் ‘மனுதர்மத்தை’யும் இலட்சியங்களாகக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். – நாக்பூரில் இந்துக்களுக்குள் பாகுபாடு கூடாது என்று பேசியிருப்பதை முன் வைத்து ‘தமிழ் இந்து’ நாளேட்டில் ‘சமஸ்’ எழுதிய கட்டுரை இது. “ஆர்.எஸ்.எஸ். வலிமையான பண்பாட்டு சக்தி” ஜாதியை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ்.சால்தான் முடியும் என்பது போன்ற கட்டுரையாளரின் கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனி யத்துக்கு ஆதாரமான பல செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. மாறுபட்ட கருத்துகளையும் வெட்டி விடாமல் கட்டுரையை முழுமையாக வெளியிடு கிறோம். ‘ஜாதிய வன்முறைகள் நடக்கும் போதெல் லாம் ஆர்.எஸ்.எஸ். ஏன் வாய்மூடி இருக்கிறது?’ என்ற கேள்வி பொதுவாக எழுவதில்லை. சாதிய அமைப்புக்கு எதிராக எப்போதுமே பேசுவதில்லை என்பதால் தான். ‘இப்போது ஏன் பேசுவதில்லை’ என்ற கேள்வி யும் எழுவதில்லையோ என்றும் தோன்றுகிறது. இந்தியாவை நிலைகுலைய வைத்த எந்தச் சம்பவத்தின்போதும் ஆர்.எஸ்.எஸ். வாய் திறந்து பேசியதாகவோ, களத்தில் போய் நின்றதாகவோ தெரியவில்லை. சுதந்திர இந்தியாவை அதிரவைத்த...

பிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’

பிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’

இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கனமன’ பாடலுக்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோஷி பேசிய செய்தி ஏடுகளில் வெளி வந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. இப்போது பய்யாஜி அப்படி கூறவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மறுத்திருக்கிறார். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சார செயலாளராக உள்ள (இந்தப் பொறுப்புக்கு ஆர்.எஸ்.எஸ்.சில் ‘பிரச்சார் பிரமுக்’ என்று சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது) எம்.ஜி.வைத்யா, பய்யாஜி ஜோஷியின் கருத்துக்கு தனது வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார். “மூவர்ண தேசியக் கொடியை அரசியல் சட்டம் ஏற்றுள்ளது. இதை மதிக்க வேண்டும்; அதே நேரத்தல், நமது ‘பாரதத்தின்’ பூர்வீக கலாச்சாரத்தின் சின்னமாக காவிக் கொடி ‘தேசியக் கொடி’ உருவாவதற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. அதேபோல் ‘ஜனகணமன’ பாடல் நமது ‘இராஜ்யம்’ பற்றி கூறுகிறது. ஆனால், ‘வந்தே மாதரம்’, நமது கலாச்சாரத்தின் அடையாளம். எனவே நாம் காவிக் கொடி,...

தமிழர்களே புரோகித சடங்குகளை புறக்கணிப்பீர்! சேலம் மாநாட்டின் ஒற்றைத் தீர்மானம்

24-12-2016 அன்று சேலத்தில், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த ஒற்றை தீர்மானம் : வேதங்கள் – பகவத்கீதை – மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும். வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றி விட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் – சமணர் – புத்தர் – சித்தர்கள் – வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது. இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

டிசம்பர் மாதத்தோடு சந்தா முடிவடையும் வாசகர்களுக்கு ஜனவரியிலிருந்து இதழ் அனுப்புவது நிறுத்தப்படும். தோழர்கள் சந்தாவை புதுப்பிக்க வேண்டுகிறோம். – நிர்வாகி ஆண்டுக்கட்டணம் ரூ.200 பெரியார் முழக்கம் 29122016 இதழ்

‘சங்கீதா மெடிக்கல்’ பாலசுப்பிரமணியம் ஒரு இலட்சம் நன்கொடை

‘சங்கீதா மெடிக்கல்’ பாலசுப்பிரமணியம் ஒரு இலட்சம் நன்கொடை

மாநாட்டில் கழகத் தோழர் சேலம் ‘சங்கீதா மெடிக்கல்’ பாலசுப்பிரமணியம் மாநாட்டுக்கு ரூ.50,000-மும், கழகக் கட்டமைப்பு நிதிக்கு முதல் தவணையாக ரூ.50,000-மும் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் 29122016 இதழ்

சேலம் மாநாட்டு களத்திலிருந்து…

திராவிடர் விடுதலைக் கழகம் இதுவரை நடத்திய மாநாடுகளி லிருந்து தனித்துவம் பெற்ற மாநாடாக வேதமரபு மறுப்பு மாநாடு இருந்தது. மாநாட்டு அரங்குகளில் வேத மரபை மறுத்த கபிலர், திருமூலர், வள்ளார் கருத்துகளும், நூற்றாண்டு காணும் எழுத்தாளர் விந்தன் எழுதிய ‘பெரியார் அறிவுச்சுவடி’யில் இடம் பெற்ற வாசகங்களும் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன. இவர் களுடன் பெரியார், அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் கருத்துகளும் வைக்கப்பட்டிருந்தன. காலை அமர்வு நடந்த அரங்கிற்கு கபிலர், திருமூலர் அரங்கு என்றும், மாலை நடந்த திறந்தவெளி மாநாட்டு அரங்கிற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அரங்கு என்றும் பெயர் சூட்டப்பட் டிருந்தது. இறை நம்பிக்கைக் கொண்ட வேத மரபுகளை எதிர்த்த பார்ப்பன எதிர்ப்பாளர்களின் பெயர்களும் படங்களும் கடவுள் மறுப்பு தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெரியார் இயக்கத்தின் மாநாட்டு மேடைகளுக்கு சூட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் கடவுள் மறுப்பு தத்துவத்தின் நோக்கம், ஒடுக்கப் பட்ட மக்கள் மீதான இழிவு ஒழிப்பு மற்றும் சமூக உரிமை...

இறை நம்பிக்கையாளர்களையும் இன உணர்வாளர்களையும் இணைத்தது – சேலம் மாநாடு

வேத மரபுக்கு எதிராகப் போர்க்குரல்! இந்து மதத்துக்கு தாங்களே உரிமைக் குரியவர்கள் போல் வெகுமக்களை ஏமாற்றி வந்த பார்ப்பனிய மிரட்டலுக்கு பதிலடி தந்துள்ளது சேலம் மாநாடு. வேத மரபினை மறுப்போம், வெகு மக்கள் உரிமைகளை மீட்போம் என்கிற பார்ப்பன இந்துத்துவ எதிர்ப்பு இலட்சிய முழக்கத்தை முன் வைத்து சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் வேத மரபு மறுப்பு மாநாடு டிசம்பர் 24, 2016 அன்று சேலம் போஸ் மைதானம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் இசை நிகழ்ச்சி, கருத்தரங்கம், வீதிநாடகம், கழகத் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்குதல், புரட்சி பெரியார் முழக்க சந்தா வழங்குதல் கழக கட்டமைப்பு நிதி மற்றும் பொது மாநாடு எழுச்சியுடன் நடைப்பெற்றது. முன்னதாக தந்தை பெரியாரின் 40ஆவது நினைவு நாளை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர்...

திராவிடர் விடுதலைக் கழகம்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

டிசம்பர் மாதத்தோடு சந்தா முடிவடையும் வாசகர்களுக்கு ஜனவரியிலிருந்து இதழ் அனுப்புவது நிறுத்தப்படும். தோழர்கள் சந்தாவை புதுப்பிக்க வேண்டுகிறோம். – நிர்வாகி பெரியார் முழக்கம் 22122016 இதழ்

‘துக்ளக்’ சோவின் இனப்பற்று; படம் பிடிக்கிறார், பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1973ஆம் ஆண்டு ‘தென்மொழி’ ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி: ‘இராசாசி நினைவாலயத்துக்கு’ இவர்கள் தரும் விளம்பரம், காந்திக்குக் கூடத் தந்ததில்லை. ‘தமிழகத்தில் இராசாசி காலடிப்பட்ட இடங்களை யெல்லாம் புண்ணியதலமாகக் கருத வேண்டும்’ என்று ‘சுதந்திர’க்கட்சி சா. கணேசன் வெளிப்படுத்திய கருத்தை இவர்கள் மிகப் பெருமையுடன் வெளி யிட்டுக் கொண்டனர். (சா. கணேசன் மூளையில் இவ்வளவு அடிமைத்தனம் புகுந்திருக்கக் கூடாது) துக்ளக்கில் ‘சோ’ இவர்கள் இனத் தலைவர் இராசாசியைப் பற்றி இப்படி எழுதி யிருந்தார்: “இராசாசியைப் பாராட்டுவதற்கோ அல்லது அவரிடம் குற்றம் காண் பதற்கோ அவருக்கு நிகரானவர்கள் யாரும் இந்நாட்டில் இல்லாமல் போய் விட்டார்கள்… மனம், சிந்தனை, வாக்கு, செயல் எல்லாவற்றிலும் பரிபூரணத் தூய்மையுடன் விளங்கிய ஒரு அசாதாரணமான மனிதரை மிகச் சாதாரணமாக மதித்துவிட்ட மடத் தனத்தின் விளைவுகளிலிருந்து இந்த நாடு என்று விடுபடுமோ தெரியாது… இராசாசி தெய்வ நம்பிக்கை மிகுந்தவர். அந்த ஒரு கரணியத்திற்காகவாவது அவர் வாழ்ந்த...

நிமிர் மாத இதழ்

நாள்காட்டி தயார்! சேலம் மாநாட்டில் கிடைக்கும்! நாள்காட்டியின் : விலை : ரூ. 60 தொடர்புக்கு :  தபசி. குமரன், தலைமைக் கழகச் செயலாளர், பேசி: 9941759641   சேலம் மாநாட்டில் கிடைக்கும்! ‘நிமிர்’ கழக மாத இதழ் பேராசிரியர் அரசு வ. கீதா ஆய்வாளர் ஆர். முத்துக்குமார் பேராசிரியர் ஜெயரஞ்சன் எழுத்தாளர் ஜெயராணி கட்டுரைகளுடன் கருத்துக் கருவூலமாக வெளி வருகிறது.

‘கீதை’யின் வஞ்சகப் பின்னணி!

சேலம் மாநாட்டுச் சிந்தனை ட           கீதையின் காலம் குறித்தும் – அது ஒருவரால் தான் இயற்றப்பட்டது என்பது குறித்தும் – குழப்பமான கருத்துகள் நிலவுகின்றன. ட           “சாதியக் கட்டமைப்பின் இறுக்கம் நொறுங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் மீண்டும் சாதியக் கட்டுமானத்தை வலிமைப் படுத்தவே கீதை வந்தது என்கிறார், ஆய்வாளர் டி.பி.ஹில். ட           பாரதப் போரில் அர்ச்சுணனுக்கு, தேரோட்டுபவனாக இருந்த கிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு கூறிய அறிவுரைதான் கீதை என்ற கருத்தை ஏற்க இயலாது. போர்க் களத்தில் போர்ச் சூழல் பற்றிய உரையாடல்கள் தான் நடந்திருக்க முடியுமே தவிர வேறு பல தத்துவங்கள் பற்றிப் பேச, போர்க் களம் உரிய இடமாக இருக்காது. எனவே கீதையின் உள்ளடக்கம், பிற்காலத்தில் விரிவுபடுத்தி எழுதப் பட்டது என்பது பல ஆய்வாளர் களின் கருத்து. ஆனால் பகவத்கீதை இறைவனால் ‘அருளப்பட்டது’ என்று பார்ப்பனர்கள் கூறு கிறார்கள். ட           கீதை – ஒரு வரலாற்று நிகழ்வு என்பது சந்தேகத்துக்குரியது என்கிறார்...

‘ஆர்யபட்டரை’ வெறுத்து ஒதுக்கிய பார்ப்பனர்கள்

சேலம் மாநாட்டுச் சிந்தனை ட           பார்ப்பனியத்தின் உயிர்நாடி, வேத மதத்தின் அடிப்படைக் கருத்தியல்கள், உபநிடதங்களின் உள்ளுறை, தர்ம சாத்திரங்களின் தகிடுதத்தங்கள் ஆகிய அனைத்தும் கீதையில் உள்ளடங்கியிருப்பதை உணர்ந்து கொண்ட பார்ப்பனர்கள், எதிரிகளை சிதறடிப்பதற்கான ஆயுதமாக கீதையைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ட           கீதை – புரட்சிகரமாக தோற்றம் காட்டக்கூடிய வெற்று முழக்கங்களை மிக சாமர்த்தியமாக முன்னிறுத்துகிறது. எனவே கீதைக்கு விளக்க உரை எழுதியவர்களும், இந்த முழக்கங்களை முன்னிறுத்துவதையே கலாச் சாரமாக்கிக் கொண்டார்கள். பிறகு இந்துத்துவமே முழக்கங்களில் உயிர் வாழும் ஒரு இயக்கமாகி விட்டது. ட           “கதம்பக் குவியலான கீதைத் தத்துவம், புதிது புதிதான விளக்கங்களை நுழைப்பதற்கு இடமளிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது. ஆனால் சமூகத் தடைகளைக் கடந்து புதுவழியில் செல்வதற்கு அது வழிகாட்ட வில்லை” என் கிறார் வரலாற்று ஆய்வாளர் கோசாம்பி. ட           கீதையின் முரண்பாடுகளைப் போலவே – இந்துக்களின் பண்பு நலனும் சொல் ஒன்று, செயலொன்றாகியது. உயர்ந்த தத்துவங்களைப் பேசும் அறிவு ஜீவி...

பவுத்தர்களை வீழ்த்திய பார்ப்பனர்கள்

சேலம் வேத மரபு மறுப்பு மாநாட்டு சிந்தனை வேத மரபுகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் சூழ்ச்சிகரமாக வீழ்த்திய வரலாறு – கடந்த இரண்டு இதழ்களில் வெளி வந்தது. பவுத்தத்தை வேத மரபு வீழ்த்தியது எப்படி? ட           பவுத்தத்தை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் வேதத்தை அரியணையில் ஏற்றத் துடித்தார்கள் பார்ப்பனர்கள். இதற்கு – முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் படைப்பு இலக்கி யங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும் வேலையைத் துவக்கினர். குறிப்பாக நாத்திகத்தை வலியுறுத்திய லோகாயதவாதிகளின் இலக்கி யங்களை முழுமையாக மீட்கவே முடியாதவாறு அழித்து ஒழித்து விட்டனர். இந்த லோகாயதர் களின் வேத-கடவுள் மறுப்பு சிந்தனைகளை எதிர்த்தும், இகழ்ந்தும் பார்ப்பனர்கள் எழுதிய நூல்களிலிருந்து தான் துண்டுதுண்டாக லோகாயத வாதம் பற்றிய கருத்துகள் காணக் கிடக்கின்றன. இதுபற்றி பிரபல ஆய்வாளர்  பிரசாத் சட்போ பாத்யாயா இவ்வாறு கூறுகிறார்: “பிற சிந்தனை மரபுகளின் படைப்பிலக்கியங் களாவது ஓரளவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் லோகாயதர்களின் உன்னதப் படைப் பிலக்கியங்களின்...

கோயிலுக்கு வராதே!

“மனம் புண்படுகிறது என்று நினைப்பவர்கள் எல்லாம் எனது நாடகத்தைப் பார்க்க வரவேண்டாம்” என்று அறிவித்தார், மறைந்த புரட்சி நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா. இது நேர்மையான ஒரு கடவுள் “மறுப்பாளனின்” பிரகடனம்! “கோயில் கருவறைக்குள் நுழையாதே! இங்கே நான் மட்டுமே கடவுளின் பிரதிநிதி. இதோ பார், எங்களிடம் உச்சநீதிமன்றத் தீர்ப்பே இருக்கிறது” என்று பூணூல் மார்பை தட்டிக் கொண்டே பேசுகிறார்கள் அர்ச்சகப் பார்ப்பனர்கள். இது பார்ப்பனத் திமிரின் அடையாளம். “உன்னை இழிவு செய்யும் கோயிலுக்கு ஏன் மானங்கெட்டுப் போகிறாய்? அங்கே அர்ச்சகப் பார்ப்பானிடம் தட்சணையை கொடுத்துவிட்டு, கை கட்டி கர்ப்பகிரகத்துக்கு வெளியே நிற்கிறாயே; இது அவமான மில்லையா? அப்படியே உனக்கு பக்தி பீறிட்டு நிற்கிறது என்றால் உடைக்க வேண்டிய தேங்காயையும், கொளுத்த வேண்டிய கற்பூரத்தையும் கோயிலுக்கு வெளியே உடைத்து, நீயே வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போ. ‘சூத்திரன்’ என்று இழிவுபடுத்தும் அர்ச்சகப் பார்ப்பானிடம் கை கட்டி நிற்காதே.” இது பெரியாரின் சுயமரியாதைக்கான...

மோடி அறிவிப்பால் கறுப்புப் பணம் ஒழிந்து விடுமா? பேராசிரியர் ஜெயரஞ்சன்

சராசரியாக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் கோடி கள்ளப் பணம் பன்னாட்டு வர்த்தகம் வாயிலாக வெளியேறுகிறது கறுப்புப் பணம் உள்நாட்டில் முதலீடு செய்யப்படுவது மிகவும் சொற்பம். இதுகுறித்து ஆய்வு நடத்திய தேவ்கர் என்ற பொருளாதார வல்லுநர், 2010ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘The Driver and Dynamics of Illicit Financial Flows’ என்ற நெடிய ஆய்வுக் கட்டுரையில், இந்திய நாட்டில் உருவாகும் கறுப்புப் பணத்தில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே உள்நாட்டு சொத்துகளில் முதலீடு செய்யப்படு வதாக நிறுவுகிறார். மீதமுள்ள கறுப்புப் பணம் அனைத்தும் வெளிநாடுகளில்தான் முதலீடு செய்யப்படு கிறது. இத்தகைய பணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் பெருமளவில் சென்றடைகின்றன என்பதையும் அவர் பொதுவெளியில் உள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார். இவ்வாறு வெளியேறும் பணத்தின் அளவின்படி பார்த்தால் இந்தியா, உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. மிக முக்கியமாக, அவரது ஆய்வின் வாயிலாக நாம் நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கள்ளப்...

வெங்கட்-இராஜலட்சுமி ஜாதி மறுப்புத் திருமணம்

4.12.2016 ஞாயிறு அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் செ.வெங்கட் (எ) வெங்கடேசனுக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் இராஜலட்சுமிக்கும் எமகண்ட நேரத்தில் ஜாதி மறுத்து தாலிமறுத்து சுயமரியாதை திருமணமாக கோவையில் நடைபெற்றது. தோழர் சூலூர் பன்னீர்செல்வம் திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் திக, தபெதிக,திவிக தோழர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இணையர்கள் இணையேற்பின் நினைவாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’ இதழ் வளர்ச்சி நிதியாக 1000 ரூபாயும் கழக கட்டமைப்பு நிதியாக 1000 ரூபாயும் சேர்த்து 2000 ரூபாயை சூலூர் பன்னீர் செல்வத்திடம் வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 15122016 இதழ்

வேத மரபை எதிர்த்துப் போராடிய வைகுண்ட சாமிகள்

வேத மரபை எதிர்த்துப் போராடிய வைகுண்ட சாமிகள்

வேத மரபை எதிர்த்த முன்னோடிகளில் ஒருவர் வைகுண்ட சாமிகள். கன்யாகுமரிக்கு அருகே பூவண்டன் தோப்பு எனும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ‘முடி சூடும் பெருமாள்’. ஆனால் அந்த காலத்தில் மன்னர்கள் அல்லது பார்ப்பன உயர்ஜாதியினர் வைத்துக் கொள்ளும் பெயர்களை ‘தாழ்ந்த’ ஜாதியினராக கருதப்பட்டவர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. எனவே இப்பெயர் வைத்தமைக்காக பார்ப்பனர், உயர்ஜாதியினர் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்களும் பெயரை மாற்ற உத்தரவிட்டனர். வேறு வழியின்றி பெற்றோர்கள், பெயரை ‘முத்துக்குட்டி’ என்று மாற்றினர். 1833இலிருந்து பொது வாழ்வில் இறங்கினார். தொடக்கத்தில் விஷ்ணு பக்தராக இருந்த இவர், தனது பெயரை ‘வைகுண்டர்’ என மாற்றிக் கொண்டார். குமரிப் பகுதி அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்தது. ஜாதி வெறியோடு ஆட்சி நடத்திய அரசர்கள், ஒடுக்கப்பட்ட ஜாதியினரை அடிமைகளாக நடத்தினர். அநியாயமாக வரி போட்டனர். மன்னனை எதிர்த்து துணிவோடு...

நெல்லையில் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு

அணு உலைப் பூங்கா என்பது, இரண்டுக்கும் மேற்பட்ட அணுவுலைகளை ஒரே இடத்தில் நிறுவுவதாகும். கூடங்குளத்தில் அமையவிருக்கும் 3,4,5,6 என்று அடுத்தடுத்து அணு உலை அமைக்க நினைக்கிறது அரசு. கூடங்குளத்தில் ஓர் அணு உலைப் பூங்கா அமைப்பதே திட்டம். அணு உலைப் பூங்காக்களால் போர், பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடரால் பேராபத்து  நிகழலாம். எனவே அணு உலை வேண்டாம் என்று தொடர்ந்து பல்வேறு பரப்புரைகளையும், போராட்டங்களையும் நடத்தி வரும், “அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு” சார்பாக 03-12-2016 சனிக்கிழமை அன்று மாலை 3-00 மணி முதல் இரவு வரை, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள கிங்ஸ் சிக் அரங்கில் “கூடங்குளம் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு” நடைபெற்றது. அமெரிக்கா, ஜப்பான், இரஷ்யாவுடனான அணு ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டும்; கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைப்பதையும், கல்பாக்கத்தில் விரிவாக்கம் செய்வதையும் கைவிட வேண்டும்;...

வேத மரபு மறுப்பு மாநாடு – ஏன்?

வேத மரபு மறுப்பு மாநாடு – ஏன்?

வேதங்களை பார்ப்பனர்கள் தங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அதை அச்சில் ஏற்றவில்லை. எனவே அதற்கு ‘கேளாக் கிளவி’ என்ற பெயரும் உண்டு. தங்கள் மூளைக்குள்ளே பரம்பரையாக வேதங்களை மனப்பாடம் செய்து வந்தவர்கள் கடவுள்களோடு பேசும் உரிமை தங்களுக்கும் தங்கள் வேதத்துக்கும் மட்டுமே உண்டு என்று சமூகத்தை நம்ப வைத்தார்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தோன்றிய இந்த பார்ப்பன மேலாதிக்க சூழ்ச்சி இன்று வரை தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது? அர்ச்சர்கர் ஆகும் உரிமை; யாகம் நடத்தும் உரிமை; கும்பாபிஷேகம் செய்யும் உரிமை; மதச் சடங்கு, பரிகாரங்கள் செய்யும் உரிமை; ஆளுநர் குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர், உயர் அதிகாரிகளுக்கு எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் உரிமை அத்தனையும் இப்போதும் யாரிடம்? பார்ப்பன புரோகிதர்களிடம் தானே! இப்படி வேதத்தை கடவுளை அரசியல் தலைவர் களை வழி நடத்துதலை தங்கள் வசமாக்கிக் கொண்டவர்கள் ஒரு காலத்தில் படிப்பையும் இதேபோல்...

தமிழகத்தில் பா.ஜ.க.  கால் ஊன்றுமா?

தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா?

‘அந்திமழை’ டிசம்பர் மாத இதழில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை. மகாராஷ்டிராவை ‘இந்து இராஜ்ய மாக்குவோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து அங்கே ஆட்சியைப் பிடித்தது சிவசேனை. அதேபோல் தமிழ்நாட்டை இந்துக்களின் தேசமாக மாற்றிக் காட்டுகிறாம் என்று கூறி வாக்கு கேட்கும் துணிவு தமிழக பா.ஜ.க. வுக்கோ, அதன் சார்பு அமைப்புகளுக்கோ இருக்குமா? இத்தனைக்கும் ‘இந்தியா இந்துக்களுக்கான நாடு’ என்பதற்காகவே தொடங்கப்பட்டதுதானே பாரதிய ஜனதா! மகாராஷ்டிராவில் முன் வைத்த முழக்கத்தை தமிழ்நாட்டில் கூறிவிட்டு, தங்கள் அரசியலை முன்னெடுக்க முடியாது என்பது அதன் தமிழக தலைவர்களுக்கே தெரியும்! தமிழ்நாடு, மத தேசியத்திலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டிருக்கிற ஒரு மாநிலம். தமிழ், தமிழன், சமூக நீதி, சமூக நல்லிணக்கம் என்பதே தமிழக அரசியலுக்கான மய்ய நீரோட்டம், இதற்கான விதைகள், 1920ஆம் ஆண்டுகளிலேயே இங்கே விதைக்கப்பட்டு விட்டன. திராவிடர் இயக்கம், திராவிட அரசியல் கட்சிகளின் வேரை தமிழகத்தில் கிள்ளி எறிந்து விடுவது அவ்வளவு...

வேத மரபு மறுப்பாளர்கள் ஒன்று கூடுகிறார்கள்! ‘களை’ கட்டுகிறது சேலம் மாநாடு!

பூமியில் இருந்த கடவுள் களை விண்ணுலக கடவுள் களாக மாற்றிய பார்ப்பனர்கள், அந்த கடவுள்களிடம் நேரடி தொடர்புக்கு ‘மந்திர சக்தி’, ‘யாகம்’, ‘சடங்கு’களை சமூகத் தில் திணித்த வரலாற்றை கடந்த இதழில்  எழுதியிருந்தோம். பார்ப்பனர்களின் சடங்குகளும் யாகங்களும் எல்லை மீறிய போது மக்கள் வெறுக்கும் நிலை உருவானது. அப்போது இந்த புரோகித சடங்குகளுக்கு எதிர்ப்புகள் உருவாகத் தொடங்கின. எந்த வகையான எதிர்ப்புகள்? சடங்கு, யாகங்களை கை விட்டு, காடுகளுக்குச் சென்று உடலை வருத்திக் கொண்டு, ‘ஆன்ம பலம்’ பெற்று வாழ்வின் துயரங்களுக்கு விடை காண முடியும் என்று நம்பிய சிலர், காடுகளுக்குப் போனார்கள். சடங்கு, யாகங்களை எதிர்த்தார்கள். யாகம் செய்வதைவிட ‘தியானமே’ சரியானது என்பது இவர்கள் கொள்கை. இதற்காக காடுகளுக்கு சென்றவர்கள் உருவாக்கிய சிந்தனைதான் ‘ஆரண்யகம்’, யாக மோசடிகளை புரோகித நயவஞ்சகத்தை ‘ஆரண்யகம்’ தோலுரித்தது. (யாகம் – சடங்குகளுக்கு எதிராக உருவானதே தியானம். இப்போது பார்ப்பனியம் ‘தியான’த்தையும், வேத மரபோடு இணைத்துக்...

சீருடையுடன் கூடுவோம்!

டிசம்பர் 24, சேலம் மாநாட்டுக்கு, தோழர்கள் கட்டாயம் கழக சீருடையான கருப்பு சட்டை – நீலநிற ஜீன்ஸ்  பேண்டுடன் வருமாறு கேட்டுக் கொள்கிறோம். சீருடையில், பெரியார் பெரும் படையின் பேரணியும், அணி வகுப்பும் மாநாட்டில் மிகவும் முத்தாய்ப்பானது என்பதை சொல்லத் தேவையில்லை. பெரியார் இயக்க வரலாற்றில் பல திருப்பங்களை ஏற்படுத்திய பெருமை சேலத்துக்கு உண்டு. இதே சேலத்தில்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகமாக பெயர் மாற்றமும், பண்பு மாற்றமும் பெற்றது. இந்த சேலத்தில்தான் வேத மத மறுப்பின் தொடர்ச்சியாக 1971ஆம் ஆண்டு பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நாட்டையே கலங்கடித்தது! பெரியார் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடு மாநாட்டின் தலைப் பிலும் கருத்தரங்க தலைப்புகளிலும் புதிய யுக்தியை கழகம் பின்பற்றி யிருக்கிறது. கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காத வேத மத மறுப்பாளர்கள் பலரும் மாநாட்டில் பேசவிருக் கிறார்கள். மாநாட்டின் அரங்குகளுக்கும்  வேத மரபு மறுப்பாளர்களின்...

நிமிர் – மாத இதழ்

நிமிர் – மாத இதழ்

விரைவில் கழகத்தின் புதிய மாத இதழ் ‘நிமிர்’ தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் – எழுத்தாளர்கள் – படைப்பாளிகள் எழுதுகிறார்கள். – விரிவான அறிவிப்பு அடுத்த இதழில் பெரியார் முழக்கம் 08122016 இதழ்

‘மாவீரன் கிட்டு’

‘மாவீரன் கிட்டு’

சமரசம் இல்லா மல் ஜாதி ஒடுக்கு முறை கவுரவக் கொலைகளை சாடு கிறது. ‘மாவீரன் கிட்டு’ திரைப் படம், ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஜீவா’ போன்ற சிறப்பான படங்களை இயக்கிய சுசீந்திரன், இத்திரைப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். “தீண்டப்படாத வர்களின்” பிணங்களைக்கூட ஜாதி வெறியர்கள் தங்கள் வீதி களில் எடுத்துச் செல்ல அனுமதிக்காத போக்கு இப்போ தும் தொடருகிறது. அதே காட்சியை முன் வைத்து திரைப் படம் தொடங்குகிறது. சொந்த மகளையே தலித் இளைஞரை திருமணம் செய்த ‘குற்றத்துக் காக’ ஜாதி சமூகத்தின் ஒதுக்க லுக்கு உள்ளாகி விடுவோம் என அஞ்சி, காதல் மணம் முடித்து வந்த மகளையே கொலை செய் கிறார் ஆதிக்க ஜாதி தந்தை.  ஆதிக்க ஜாதியில் பிறந்தாலும், ஜாதி எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக நின்று சொந்த மகளை ‘தலித்’ இளைஞருக்கு திருமணம் செய்ய முன் வரு கிறார் ஒரு ஜாதி எதிர்ப்பாளர். அதன் காரணமாக ஜாதி ஆதிக்க வாதிகள் அவரை...

மக்கள் கவிஞர் இன்குலாப் முடிவெய்தினார்

மக்கள் கவிஞர் இன்குலாப் முடிவெய்தினார்

மக்கள் கவிஞர் இன்குலாப் (73) டிசம்பர் முதல் தேதி சென்னையில் முடிவெய்திவிட்டார். சமரசத்துக்கு இடமில்லாத கவிஞர். அவரது கவிதைகள் மக்களுக்காகவே பேசின. சென்னைப் புதுக் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியர். ஆனாலும் கவிஞராக, போராளியாக, நாடக ஆசிரியராக  அவரது அடையாளங்கள் விரிந்து நின்றன. மார்க்சிய லெனினியத்திலும் பெரியாரி யத்திலும் அவர் ஈர்க்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இன்குலாப் இல்லாமல் பெரியார் திராவிடர் கழக மேடைகள் இல்லை என்ற அளவுக்கு நெருக்கமாக இருந்தவர். 17.9.2000ஆம் ஆண்டு சென்னை இராயப் பேட்டை சைவ முத்தையா முதலி 5ஆவது வீதியில்  பெரியார் திராவிடர் கழகத்துக்கான தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தவர் கவிஞர் இன்குலாப். விளம்பர வெளிச்சங்களி லிருந்து ஒதுங்கி நின்ற உண்மையான மனிதர். தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதையும் ஒரு இலட்சம் ரூபாயையும் தமிழக அரசுக்கு திருப்பி...

இந்துவாக சாக மாட்டேன்!

இந்துவாக சாக மாட்டேன்!

கெடுவாய்ப்பாக, நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்து விட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன்: நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன். தனித்து இருந்த ஒரு நீர்த் துளி கடலிலே கலந்து, கரைந்து தன் இருத்தலைத் தொலைப்பது போல் ஒரு தனி மனிதன் சமூகத்தில் கரைந்து தன் முழுமையைத் தொலைத்துவிடுவதில்லை. மனிதன் சுதந்திரமானவன். அவன் இந்த சமூகத் திற்குத் தொண்டு செய்வதற்காகப் பிறக்க வில்லை. தான் மேம்பாடு அடைவதற் காகவே பிறந்தான். இந்தக் கருத்து புரிந்து கொள்ளப் பட்டதாலேயே வளர்ந்த நாடுகளி லெல்லாம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அடிமைப்படுத்திவிட முடிவ தில்லை. தனி மனிதனுக்கு எந்தவொரு பாத்திரமும் வழங்காத மதம் எனக்கு ஏற்புடையதில்லை. அதனால் தனி மனிதனை ஏற்றுக்கொள்ளாத இந்து மதம் எனக்கு ஏற்புடையதாயில்லை. ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே...

மேட்டூரில் ஜாதி ஒழிப்பு தெருமுனைக் கூட்டம்

மேட்டூரில் ஜாதி ஒழிப்பு தெருமுனைக் கூட்டம்

நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு வீரர்களின் நாளில் மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில் தெருமுனைக் கூட்டம் மேட்டூர் ஒர்க்சாப் கார்னர், பேருந்து நிலையம், நான்கு ரோடு, சின்னபார்க் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் ஜாதி ஒழிப்பு பாடல்கள் பாடப்பட்டன. தோழர்கள் சி. கோவிந்தராசு-சேலம் மேற்கு மாவட்ட செயலாளர், சுந்தர், குமரேசன் ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் குமரப்பா, முத்துக்குமார், கிட்டு, அம்ஜத்கான், சீனிவாசன், முத்துராஜ், சுசீந்திரகுமார், ஆனந்த், அண்ணாதுரை, பழனி ஆகியோர் கலந்துகொண்டனர். பொது மக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. பெரியார் முழக்கம் 08122016 இதழ்

சித்தோட்டில் சட்ட எரிப்புப் போராளிகள் நினைவு நாள்

சித்தோட்டில் சட்ட எரிப்புப் போராளிகள் நினைவு நாள்

26.11.2016 சனிக்கிழமையன்று, திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக, சித்தோடு நான்கு முனைச் சந்திப்பில் மாலை 7.00 மணிக்கு “சட்ட எரிப்புப் போராட்டமும் பெரியார் தொண்டர்களின் தியாகமும்” என்கிற தலைப்பிலும், “பொது சிவில் சட்டத்தின் ஆபத்துகள்” என்கிற தலைப்பிலும் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. யாழ். எழிலன் வரவேற்க, மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தின சாமி தலைமையேற்றும், இரா. கமலக்கண்ணன் முன்னிலை வகிக்கவும், தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி. வேலுச்சாமி, வீரா கார்த்திக் மற்றும் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.  வேணுகோபால், ராசண்ணன், சத்தியராஜ், சித்தோடு தோழர்கள் முருகேஷ், நடராஜ், சுப்பையா, முத்துசாமி, பிரபு, ரமேஷ், பள்ளி பாளையம், காஞ்சிக்கோயில் திருமூர்த்தி, அய்யப்பன், சாமியப்பன், அரங்கம்பாளையம் பிரபு, தமிழ்ச் செல்வன் ஆகியோர் பங்கேற்க மாவட்டப் பொருளாளர் பி.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்புடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 08122016 இதழ்

கழகத் தோழர் பாரூக் மீதான குண்டர் சட்டம்: அறிவுரைக் குழுமம் இரத்து செய்தது

கழகத் தோழர் பாரூக் மீதான குண்டர் சட்டம்: அறிவுரைக் குழுமம் இரத்து செய்தது

கோவையில் 22.9.2016 அன்று இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் டி.சசிக்குமார் என்பவர் அடையாளம் தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை நகர் முழுதும் கலவரம், தீ வைப்பு, உடைமைகளை அழிப்பது என இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்கள். இதற்காக தமிழகம் முழுதுமிருந்தும்  ஆட்கள் அழைக்கப்பட்டனர். காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அப்போது உக்கடம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் பாரூக், குழந்தைக்கு பால் வாங்க வந்தபோது கலவரக்காரர்கள் சூறையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. காவல்துறை ‘இந்து அமைப்பைச் சார்ந்த சிலரையும், இ°லாமியர்கள் சிலரையும் கணக்கு காட்ட கைது  செய்தது. அதில் பால் வாங்க வநத தோழர் பாரூக்கையும் கைது செய்து பின்பு அவர் மீது குண்டர் சட்டத்தையும் ஏவியது. அதைத் தொடர்ந்து குண்டர் சட்ட விதிமுறை யின் கீழ் நவம்பர் 8ஆம் தேதி சென்னையிலுள்ள அறிவுரை குழுமத்தின் முன்பு பாரூக் நேர் நிறுத்தப் பட்டார். குண்டர் சட்டத்தில்...

தலையங்கம் அடுத்து….?

தலையங்கம் அடுத்து….?

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த முதலமைச்சர் ஜெயலலிதா முடிவெய்திவிட்டார். ஆளுமைத் திறன் கொண்ட ஒரு பெண்ணாக தன்னை உயர்த்திக் கொண்டவர். பெண்களால் ஆட்சி சக்கரத்தை வலிமையோடு நகர்த்திச் செல்ல முடியும் என்று நிரூபித்தவர். தான் வழி நடத்திய கட்சிக்கு அவர் சர்வாதிகாரியாகவே செயல்பட்டார். அவரது விரல் அசைப்புக்கு அவரது அமைச்சர்களும், கட்சிப் பொறுப் பாளர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடிபணிந்து நின்றனர். ஆண்கள் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கும் அரசியல் உலகில் இது ஓர் அபூர்வக் காட்சி. கருத்து மாறுபாடு களையும் கடந்து பெண்களின் இத்தகைய ஆளுமைத் திறமையை பெரியார் பாராட்டியிருக்கிறார். இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவரது கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும்கூட ஒரு பெண் நாட்டை நிர்வகிக்க முடியும் என்பதற்கு பெருமையாக சான்று காட்டி, பெரியார்  பேசினார். சுயமரியாதைத் திருமணம் பற்றிய பெரியார் உரையில் (அது பிறகு ஒலித் தட்டாகவும் வெளி வந்தது) இந்தக் கருத்து இடம்...

ஜன கண மன…

ஜன கண மன…

தேசபக்தியை திரையரங்குகள் வழியாகத்தான் ஊட்டி வளர்க்க முடியும் என்ற உறுதியான முடிவுக்கு உச்சநீதி மன்றம் வந்திருக்கிறது. இனி திரைப்படம் தொடங்கு வதற்கு முன்பு திரையரங்க கதவுகளை இழுத்து மூடிவிட்டு திரையில் தேசியக் கொடியை காட்டி ‘ஜன கண மன’ பாடலை பாட வேண்டுமாம்! அப்போது எல்லோரும் எழுந்து நிற்க வேண்டுமாம்! திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு புகைப் பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும்; மது அருந்துவது உடலுக்குக் கேடு தரும் என்ற விளம்பரங்கள் போடுவது கட்டாயப் படுத்தப்பட்டிருந்தது. இந்த வரிசையில் “ஜன கண மன பாடுவது  தேச பக்தியை வளர்க்கும்; அப்போது எழுந்து நின்றால், கால் வலி, மூட்டு உபாதை நீங்கும்” என்ற விளம்பரத்தையும் சேர்த்துக் கொள்ள லாம்! இதேபோல் ‘டா°மாக்’ கடைகள் நட்சத்திர ஓட்டல், மதுபான விடுதிகளில் ஜன கண மன’ பாடலை திறக்கும் போதும், மூடும் போதும் ஒலிபரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விடுமோ? வேண்டாமய்யா… அங்கே...

மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமைகள் பறிப்பு

மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமைகள் பறிப்பு

“முஜே தமில் நஹி மாலும், இந்தி மே போலோ” (எனக்கு தமிழ் தெரியாது, இந்தியில் சொல்). இன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், இரயில்வே பயணச் சீட்டு பெறும் இடங்கள், வாழ்நாள் காப்பீடு, பொதுக் காப்பீடு மற்றும் பொதுத் துறை வங்கிகளில் பணி யாற்றும் ஊழியர்களிடம் தமிழர்கள் இவ்வார்த்தைகளை எதிர் கொள் கிறார்கள். டெல்லி அரசுகளின்  கயமைத்தனத்தினால், சூழ்ச்சியினால் கடந்த பத்தாண்டுகளாக  தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசுத்துறைகளில் தமிழர்களுக்கான வேலை வாய்ப் புரிமை தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. இது சேவைத்துறைகளில் மட்டு மல்லாது தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் தொழிற்துறைகளான (Factories & Enterprises)  என்.எல்.சி (NLC), ஓ.என்.ஜி.சி (ONGC), பி.எச்.இ.எல் (BHEL), துப்பாக்கி தொழிற்சாலை, டாங்கி தொழிற்சாலை, இராணுவ உடை தயாரிப்பகம், (Defence Factories) இணைப்பு பெட்டி தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம்  ஆகிய தொழிற்சாலைகளில் இந்த நிலைதான். மத்திய அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்...

சென்னையில் காஸ்ட்ரோ – மாவீரர்களுக்கு வீர வணக்கம்!

சென்னையில் காஸ்ட்ரோ – மாவீரர்களுக்கு வீர வணக்கம்!

நவம்பர் 27 மாவீரர் நாளில், கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ நவம்.26இல் முடிவெய்தினார். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மயிலாப்பூர்  செயின்மேரீஸ் பாலம் அருகே காஸ்ட்ரோவுக்கும் ஈழத்தின் மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்வில் ஜான் மண்டேலா, வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார், மயிலாப்பூர் மற்றும் இராயப்பேட்டைப் பகுதியைச் சார்ந்த 40 கழகத் தோழர்கள் பங்கேற்று, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். பெரியார் முழக்கம் 01122016 இதழ்

‘அன்னக் காவடி’ ஆனாலும்…

பகுத்தறிவு சிந்தனைகளை திரைப்படங்கள் வழியாக பரப்புவதை தனது இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தன்னுடைய பணத்தையும் செல்வத்தையும் மக்களுக்கு வாரி வாரி வழங்கிய வள்ளல். பெரியார், கலைவாணர் தொண்டு குறித்து இவ்வாறு எழுதினார்: “இனி என்.எஸ். கிருஷ்ணன் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி ‘அன்னக் காவடி கிருஷ்ணன்’ ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப் பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அட்டைப் பக்கத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டப்படாததாக ஆகிவிடும்.                           (‘குடிஅரசு’ 11.11.1944) கலைவாணர், பெரியார் பற்றி இவ்வாறு கூறினார்: “நம் நாட்டைப் பொறுத்தவரையில் செயற்கரிய செய்த பெரியவர்கள் பலர். அவர்களின் வரிசையிலே இடம் பெறத்தக்க ஒரு பெரியார் நமது  தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருப்பது குறித்து நாம் பெருமை கொள்ளலாம். சிந்திப்பதே பாவம் – என்று எளியோரை வலியோர் அர்த்தமில்லாமல் வேத, புராண, இதிகாசங்கள் மூலமாக அடக்கி வருகின்றனர் என்று கருதப்படும் சூழ்ச்சியை  இரகசியமாகவோ,...

‘ரூபாய் நோட்டு’ அறிவிப்பின் அரசியல் பின்னணி என்ன?

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன. இந்த அறிவிப்பு வரப்போகிறது என்ற தகவல் முன்கூட்டியே கசிந்திருக்கிறது என்றும், அதன் காரணமாகவே மோடி அறிவிப்புக்கு சில மணி நேரத்துக்கு முன்பு, கல்கத்தாவில் பா.ஜ.க. 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒரு வங்கியில் ரூ.1 கோடிக்கு டெபாசிட் செய்ததையும் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவையில் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார். மேற்கு வங்க பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங், இந்த அறிவிப்பு வரப்போகும் தகவல் முன்கூட்டியே அம்பானி, அதானி தொழில் நிறுவனங்களுக்கு தரப்பட்டள்ளது என்று பேட்டி அளித்திருக்கிறார். கடந்த 3 மாதங்களாக வங்கிகளில் செலுத்தப்பட்ட ‘டெப்பாசிட்’ தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சந்தேக சூழலில் மோடி மீதே கருப்புப் பண குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களுடன் வெளி வந்திருக்கின்றன. மோடி மீதான கருப்புப் பண குற்றச்சாட்டுக்கான ஆவணங்கள்...

கடந்து வந்த புரட்சிப் பாதை!

கியூபா மக்களை யும் இயற்கையையும் நேசித்த உண்மையான கம்யூனிஸ்ட்டான ஃபிடல் காஸ்ட்ரோ, 90ஆவது வயதில் காலமான செய்தி, சமத்துவம்- சுதந்திரத்தை விரும்பும் உலக மக்களின் இதயத்தில் இடியாக இறங்கியது. பொருளாதார சமத்துவத்தையும் ஏழைகள் இல்லா கியூபாவையும் உருவாக்கி, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றிட அயராது உழைத்த காஸ்ட்ரோவின் மூச்சு நின்ற செய்தி, அந்நாட்டு மக்களிடையே மட்டுமல்ல… உலக நாடுகள் பலவற்றிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 1945இல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது உயர்கல்வியை முடித்திருந்த காஸ்ட்ரோ, ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசத்தின்மேல் அளவற்ற காதல் ஏற்பட்டது. ஹவானா பல்கலைக்கழகம்தான் காஸ்ட்ரோவின் இதயத்தையும் மனதையும் திறந்து அவரை ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் ஆக்கியது. அதே பல்கலைக் கழகத்தில் ஒரு சில மாணவர்கள் ஒரு வேளை உணவுக்குக் கஷ்டப்படும்போது, வேறு சிலரோ சுகபோகத்தில் திளைத்திருப்பதைக் கண்டு மனம் வெதும்பினார். அமெரிக்க நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக் குறித்து அப்போதைய அதிபரான பாடிஸ்டாவிடம் அவர்...

தலையங்கம் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம்!

கியூபாவில் புரட்சிகர ஆயுதப் போராட்டம் வழியாக அங்கே நடந்த பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிந்து சோஷலிச ஆட்சியை நிறுவிய ஃபிடல் காஸ்ட்ரோ 90ஆம் வயதில் நவம்பர் 26 அன்று முடிவெய்தினார். கூப்பிடும் தூரத்திலுள்ள நாடு அமெரிக்கா. கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தூரம் 150 கிலோ மீட்டர் தான். ஆனாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற அவரை அமெரிக்காவால் வீழ்த்த முடியவில்லை. பொருளாதாரத் தடைகள்; ஆட்சிக் கலைப்பு சதித் திட்டங்கள்; காஸ்ட்ரோவைக் கொல்ல சதி என அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது அமெரிக்கா. காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்க உளவு நிறுவனம் 638 முறை சதித் திட்டம் தீட்டி தோற்றதாக செய்திகள் கூறுகின்றன. ‘சோஷலிசம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தை அவர் முன் வைத்தார். அவரது ‘சோஷலிசம்’ – இனவெறி எதிர்ப்பு, கல்வி வளர்ச்சி, சமூக மேம்பாடு என்ற சமுதாய சமத்துவக் கண்ணோட்டத்தை முதன்மைப் படுத்தியது. இதுவே அவர் முன்மொழிந்த சோஷலிசத்தின் தனித்துவம். உயர்கல்வியை...

காஞ்சி மக்கள் மன்றத்தில் மாவீரர் நாள்

காஞ்சி மக்கள் மன்றத்தில் மாவீரர் நாள்

காஞ்சி மக்கள் மன்றத்தின் பொது வாழ்வக வளாகத்தில் நவம்பர் 26 அன்று மேதகு பிரபாகரன் பிறந்த நாளும் அன்று மாலையிலிருந்து நவம்பர் 27 வரை மாவீரர் நாளும் புரட்சிகர பாடல்கள் கருத்துரைகளுடன் நடைபெற்றன. நவம்பர் 26ஆம் தேதி காலை செங்கொடி நினைவகத்துக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காலை 8 மணிக்கு புலிக்கொடியை பேராசிரியர் சரசுவதி ஏற்றினார். மாலையில் கலை நிகழ்ச்சி மற்றும் கருத்துரை நிகழ்வுகள் இடம் பெற்றன. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இயக்குனர் களஞ்சியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட பலரும் வீரவணக்க உரையாற்றினர்.  

காவல்துறை தடைகளைத் தகர்த்து புலியூரில் ‘மாவீரர் நாள்’

தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்டங் களில் வீரச்சாவை தழுவிய வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் நவம்பர் 27 அன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உணர்வுபூர்வமாக 1989ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வருகிறது. 1990ஆம் ஆண்டிலிருந்து மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் புலியூர் பிரிவிலும் ‘மாவீரர் நாள்’ நிகழ்வு நடந்து வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக புலிகள் 1984லிருந்து 1986 முடிய ஆயுதப் பயிற்சி எடுத்த பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சொந்தமான இடத்தில் மூன்று ஆண்டுகள் நடந்த இந்த பயிற்சியில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பயிற்சி பெற்றார்கள். மேதகு பிரபாகரன், இந்த பயிற்சித் தளத்துக்கு அவ்வப்போது வந்து அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதி பொன்னம்மான், போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்தார். களத்தில் வீரமரணமடைந்த அவரது நினைவாக அப்பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நினைவு நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. புலிகள் பயிற்சி எடுத்த பகுதிக்கு ‘புலியூர்’...

‘சொர்க்கம்’ போக ‘ரொக்கம்’ செல்லாது!

நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ‘பகவான்’ களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டது. கோயில் உண்டியல் காணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாம்! அவ்வள வும் 500, 1000 நோட்டுகளாம். திருப்பதி, பழனி, திரு வரங்கம், திருத்தணி கோயில் களில் உண்டியல் நவீன மய மாக்கப்பட்டுள்ளது, அதற்குப் பெயர் ‘ஈ உண்டியல்’. இனி பக்தர்கள் ரொக்கமாக காணிக்கை செலுத்த முடியாது. டெபிட், கிரடிட் கார்டுகள் வழியாகவே ‘பகவானுக்கு’ காணிக்கை  செலுத்த முடியும். உண்டியல் காணிக்கை வங்கிக் கணக்குக்கு மாற்றப் பட்டு, பிறகு வங்கியிலிருந்து ‘பகவானுக்கு’ போய்ச் சேரும் போலும். ‘ரொக்கம்’ இல்லாத பணமாற்றத்துக்கு கடவுள்கள் தயார்படுத்தப்படுகிறார்கள். சிவன், பெருமாள் உள்ளிட்ட அனைத்து கடவுள் களையும் கறுப்புப் பணத்தையோ, செல்லாத நோட்டுகளையோ போட்டு பக்தர்கள் இனியும் ஏமாற்ற முடியாது. “கடவுளுக்கே இப்படி கருப்புப் பணத்தை காணிக்கை யாக்குகிறோமே இது தெய்வக் குற்றமாகிவிடுமே” என்ற அச்சம், பயம் எல்லாம் பறந்து போய் வெகு நாளாச்சு! இது குறித்து முகநூலில்...

2017ஆம் ஆண்டு கழக நாள்காட்டி தயாராகிறது!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் 2017ஆம் ஆண்டுக்கான நாள்காட்டிகள் தயாராகி வருகின்றன. புதிய பொலிவோடு – அழகிய வண்ணங்களில் – சமுதாயத் தலை வர்களின் படங்கள் – சிந்தனைகள் – வரலாற்றுக் குறிப்புகளுடன்… நாள்காட்டியின் விலை : ரூ. 60 முன் பதிவு செய்வோருக்கு : ரூ. 50 தோழர்கள் விரைந்து முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். முன்பதிவு எண்ணிக்கைக்கேற்பவே நாள்காட்டிகள் அச்சிடப்படுகின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்புக்கு : தபசி. குமரன், தலைமைக் கழகச் செயலாளர், பேசி: 9941759641

டிச.24-சேலத்தில் ‘வேத மரபு மறுப்பு மாநாடு’ தோழர்களே தயாராவீர்!

டிசம்பர் 24இல் பெரியார் நினைவு நாளில், சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒரு நாள் மாநாடு. “சித்தர்கள்-வள்ளலார்-பெரியார்-அடிச்சுவட்டில்… ‘வேத மரபு’ மறுப்பு மாநாடு காலை முதல் இரவு வரை கருத்தரங்குகள் – பேரணி – பொதுக் கூட்டம் – கலை நிகழ்ச்சிகள். கழகத்தின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு நிதி – முதல் தவணை யாக கழகத் தலைவரிடம்  வழங்கப்படுகிறது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு முதல் தவணையாக 5000 சந்தாக்கள் வழங்கப்படு கிறது. கழகத்தின் புதிய ‘மாத இதழ்’ வெளி வருகிறது. தமிழகத்தின் சிந்தனையாளர் கள் – பேச்சாளர்கள் – தலைவர் கள் பங்கேற்கிறார்கள். வேத மதமான பார்ப்பன மதத்தை பார்ப்பனர்கள் – பார்ப் பனரல்லாத மக்கள் மீது திணித்தார்கள். ‘இந்துக்கள்’ என்று பெயர் சூட்ட வைத் தார்கள். வேத மதத்துக்குள் வெகு மக்களை இழுத்துக் கொண் டவர்கள் அந்த மக்களின் சுய மரியாதையை மறுத்தார்கள். ஜாதிகளைத் திணித்து ஒடுக்கு முறை கட்டமைப்பை...

எண்ணூரில் மதவாத எதிர்ப்பு கருத்தரங்கம்

சென்னை மாவட்டம் எண்ணூர் கத்திவாக்கத்தில் அமைந்துள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் படிப்பகம் சார்பாக 20.11.2016 அன்று மாலை “மதவாதம் – கல்வி வியாபாரக் கொள்கைக்கு எதிராக பொது வெளி கருத்தரங்கம்” அரிகரன் தலைமையில் சிறப்புடன் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “ஆட்சியில் இந்துத்துவம்: விளைவுகள் – சவால்கள்” என்ற தலைப்பில் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார்.  இந்துத்துவம் இந்து என்று சொல்லப்படுகிறவர்களுக்கு எப்படியெல்லாம் கல்வி தர மறுக்கிறது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன் வைத்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, புதிய கல்விக் கொள்கையின் பேராபத்துகள் குறித்து விரிவாகப் பேசினார். தோழர் பகத்சிங் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் திருமூர்த்தி மற்றும் சென்னை மாவட்டத் தோழர்கள் கலந்துக் கொண்டனர். செய்தி: செந்தில்FDL பெரியார் முழக்கம் 24112016 இதழ்

நவ.27 – மாவீரர் நினைவு நாள் தேசியத் தலைவரின் வழிகாட்டும் உரைகள்!

1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம், ஈழத்தில் தமிழர்களை கொன்றொழித்துக் கொண்டிருந்த காலகட்டம். அப்போது மேதகு பிரபாகரன், இந்திய இராணுவத்தின் தீவிரத் தேடுதலில் இருந்தார். தமிழீழக் காடு ஒன்றில் தலைமறைவாக இருந்த பிரபாகரன், அங்கிருந்து தான் முதன்முதலாக ‘மாவீரர் நாள்’ திட்டத்தை அறிவித்தார். “இந்த வருடத்திலிருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக ஒரு வருடத்தில் நினைவு கூர்ந்த அந்த நாளையே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தி உள்ளோம். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவது வீரச்சாவு அடைந்த சங்கரின் நினைவு தினமான இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தி உள்ளோம். அத்தோடு வழமையாக மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள், வசதியானவர்கள் இப்படிப் பட்டவர்களைத்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல் எமது விடுதலை காலத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்துப் பார்த்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லா போராளிகளும் சமம்...