Category: குடி அரசு 1933

ஸ்பெயினும் இந்தியாவும்

ஸ்பெயினும் இந்தியாவும்

ராஜவை விரட்டி அடித்த பிறகும் ஸ்பெயின் தேசத்தில் முதலாளி களுடைய ஆட்சியே ‘குடி அரசு’ ஆட்சி என்னும் போர்வையைப் போற்றிக் கொண்டு அதாவது இந்தியாவில் எப்படி சுயராஜியம்-தேசீயம் என்னும் போர் வையை போத்திக் கொண்டு முதலாளிகளுடைய ஆட்சிக்கு காங்கிரசின் மூலம் சிறிது காலமாய் அஸ்திவாரம் போடப்பட்டு வருகின்றதோ அதுபோல் நடந்து வந்தது. இன்றும் அப்படியே நடந்து வருகிறது என்றாலும் இப்போது அங்கு இந்த முதலாளிக் குடி அரசு ஆட்சியையும் அழிக்க ஒரு கூட்டம் துணிந்து வெளியில் கிளம்பி வந்து, தேசீயத்தையும் ஒழித்து, போலிக் குடி அரசையும் ஒழிக்கப் புரட்சி செய்து பொது உடமை ஆட்சி ஆக்க முயற்சித்து ஒரு அளவுக்கு வெற்றியும் பெற்று வருகின்றதாக தெரியவருகிறது. ஸ்பெயினைச் சேர்ந்த கட்டலோனியா மாகாணத்தில் கிண்டிகலிஸ்ட் (அனார்க் கிஸ்ட்) அதாவது சர்க்கார் ஆட்சி என்பதே இல்லாமல் எல்லாம் தன்னரசு நாடாகவே இருக்க வேண்டும் என்கின்ற ஒரு வித கொள்கை மீது ஒரு பெரிய இயக்கம்...

“சுப்பராயன் மசோதா” வின் இரகசியம்

“சுப்பராயன் மசோதா” வின் இரகசியம்

டாக்டர் சுப்பராயன் அவர்களின் மசோதாவானது தீண்டாமை ஒழிப்பு விஷயத்தில் ஏதோ பிரமாதமான நன்மை செய்துவிடப்போவதாக ஜனங் களுக்குள் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைப்பற்றி முன் ஒரு குறிப்பு காட்டி இருந்தோம். அதன் இரகசியம் என்ன என்பதும், எதற்காக அந்தப்படி பிரசாரம் செய்யப்படுகின்றது என்பதும் அநேகர் அறிந்திருக்கவே மாட்டார்கள். இருந்தபோதிலும் அந்த மசோதாவின் யோக்கியதை என்ன என்பதும் அதனால் என்ன பயன் ஏற்படும் என்பதும் அடியில் குறிப்பிட்ட தோழர்         சி. ராஜகோபாலாச்சாரியாரின் இரண்டொரு வாக்கியத்தில் இருந்து ஒருவாறு உணரலாம். அதாவது, “டாக்டர் சுப்பராயனின் கோவில் பிரவேச மசோதாவை அவர்கள் (வைதீக ஜனங்கள்) எதிர்க்க வேண்டிய அவசியமே ஏற்படாது. ஹரிஜனங்களை கோவிலுக்குள்விட்டே தீரவேண்டுமென்றும், அம்மசோதா சொல்லவில்லை.   அம்மசோதா சட்டமானவுடன் ஹரி ஜனங்கள் கோவிலுக்குள் நுழைந்து விடுவார்கள் என்று யாரும் எண்ணிக் கொள்ள வேண்டாம்” என்று 9-1-33-ந் தேதி சுதந்திரச்சங்கு என்னும் பேப் பரில் 5-வது பக்கம் இரண்டாவது கலத்தில் எழுதி இருக்கிறார். இதைப்பற்றி வியாக்கி யானம்...

காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு

காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு

தீண்டாமை ஒழிப்பா? நிலைப்பா என்று சென்ற வாரம் நாம் தலையங் கம் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அதற்கு பதில், அல்லது சமாதானம் என்று கருதும்படி தோழர் காந்தியவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், மோர்வி மாஜி திவானுக்கு அளித்த பதிலிலும் காணப்படும் அடியிற்கண்ட விஷயங்கள் நமது கருத்தை ஊர்ச்சிதப் படுத்துவதாக இருக்கின்றதா? இல்லையா என்பதைச் சற்று கூர்ந்து கவனிக்கும்படி வாசகர் களை வேண்டுகின்றோம். தோழர் காந்தியார் கூறுவதாவது:- “நான் கலப்பு மணத்தையும், சமபந்தி போஜனத்தையும் ஆதரிப்ப தில்லை” (ஏன்?) “சுத்தமில்லாமல் இருப்பவர்களையும், மாட்டு மாமிசம் சாப்பிடுபவர் களையும் ஆலயத்துக்குள் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்“ என்று கூறி இருக்கிறார். காந்தியார் அறிக்கை கூறுவதாவது:- எனது ராஜி பிரேரேபணையை யார் கண்டித்தாலும் நான் வாப்பீசு வாங்கிக் கொள்ளப் போவதில்லை. மத விஷயத்தில் நிர்ப்பந்தமென்பது இருக்கக் கூடாது. மத விஷயத்தில் பிறர் கொண்டுள்ள நம்பிக்கையை முக்கிய விஷயத் திற்கு இணங்கிய அளவுக்கு மதித்து நடக்க...

கத்தோலிக்கர்களுக்கோர் விண்ணப்பம்

கத்தோலிக்கர்களுக்கோர் விண்ணப்பம்

நமது பகுத்தறிவு இயக்கத்தை தாக்கி எழுதும் முறையில் திருச்சி “கிங்ஸ் ரோலி” என்ற ஆங்கில மாதச் சஞ்சிகையையும், சர்வவியாபி என்ற ஒரு தமிழ் வாரப் பத்திரிகையும் நம்மை திட்டி எழுதியிருந்தவைகளை நமக்கோர் நற்சாட்சிப் பத்திரமாக எண்ணி நமது கொள்கைகளை ஆதரிக்கும் அமெரிக்கா, ஐரோப்பாவிலுள்ள பகுத்தறிவு இயக்க ஸ்தாபனங்களுக்கு அதன் பிரதிகள் சிலவற்றை வாங்கி அனுப்பினோம். அவர்கள் நமது தொண்டைக் கண்டு மகிழ்ந்து அதற்கு வெகுமதியாக ஞசநைளவ வாந றுடிஅநn யனே வாந ஊடிகேநளளiடியேட ணுரநளவiடிn கடிச ஊயவாடிடiஉள சுடிஅயn ஊயவாடிடiஉளைஅ ஹயேடலணநன குகைவல லநயசள in வாந உhரசஉh டிக சுடிஅந ஊடிகேநளளiடிn டிக ய சூரn முதலிய புத்தகங்களை அனுப்பியுள்ளார்கள். அவைகளின் மொழி பெயர்ப்பு இனி குடி அரசில் வெளியாகிக் கொண்டு வரும். கத்தோலிக்கர் களுக்கும் மற்ற வைதீக கிறிஸ்துவர்களுக்கும் நாமாக ஏதாவது சொல்வதா யிருந்தால் தான் அவர்கள் கோபித்துக் கொள்ள இடமேற்படலாம். ஆத லாலேயே இனி கத்தோலிக்கு பாதிரிகளும்,...

“சுப்பராயன் மசோதா”                        விளம்பரம்

“சுப்பராயன் மசோதா”                        விளம்பரம்

கோவில் பிரவேச மசோதா என்னும், டாக்டர் சுப்பராயன் மசோதா வுக்கு சிறிது காலத்துக்கு முன் ஜிண்டான் மாத்திரைக்குச் செய்யப்பட்ட விளம்பரத்துக்கு மேலாகவே செய்யப்பட்டு வருகின்றது. இவ்விளம்பரம் தோழர் ராஜகோபாலாச்சாரி சிபார்சின் மீது தோழர் காந்தியாலும் செய்யப் பட்டு வருவதைக் கண்டு டாக்டர் சுப்பராயனைப் பாராட்டாதவர்கள் இல்லை. டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு இது ஒரு சகட யோகமேயாகும். ஆனால் மசோதாவின் யோக்கியதை என்ன என்பதையும், பயன் என்ன என்பதையும் இதன் கருத்து என்னவென்பதையும், எதை உத்தேசித்து இந்தப் பித்தலாட்ட பிரசாரம் மகாத்மாக்களாலும், தேசீய பத்திரிக்கைகளாலும் நடைபெருகின்றது என்பதை சீக்கிரத்தில் நாமே விவரமாக வெளிப்படுத்த இருக்கிறோம். சிறிது தாமதம் ஆவதால் ஒன்றும் முழுகிப்போகாது. ஆதலால் அது சம்மந்தமாக வந்திருக்கும் பல வியாசங்களை வெளியிடாததற்கு நிருபர்கள் பொருத்துக் கொள்வார்களாக. குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு – 08.01.1933

நாடார் மகாஜன சங்கம்

நாடார் மகாஜன சங்கம்

சென்ற டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் கூடிய நாடார் மகாநாடு, நாடார் வாலிபர் மகாநாடு, நாடார் கல்வி மகாநாடு ஆகியவைகளின் தலைவர் களின் சொற்பொழிவுகளும், தீர்மானங்களும் இன்று நமது பத்திரிகையின் வேறிடத்து பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடியால் பல்வேறு தொல்லைகளுக்குட்பட்டு வரும் உலகிற்கும், சுயமரியாதை இழந்து பரிதவிக்கும் இந்திய மக்களுக்கும் நாடார் மகாநாட்டுத் தலைவர்களின் சொற்பெருக்குப் போதிய வழி காட்டியாயிருக்கு மென்பதில் கிஞ்சித்தும் ஐயமின்று. வாலிபர்கள் மகாநாட்டிற் றலைமை வகித்த தோழர் கூ. கா. ஆ. பெரியசாமி அவர்களின் தம் சொற்பொழிவு பல நுண்பொருளை அடக்கிக் கொண்டிருக்கிறது என்பதில் ஒரு சிறிதும் மிகையாகா. வருமைநோய், வேலையில்லாத் திண்டாட்டம்!  பொருளாதார நெருக்கடி!! பஞ்சம்!!! என்று துன்பவாழ்வைப் போக்க வழிதெரியாது பரிதவிக்கும் உலகிற்கு, “ருஷிய தேசத்தின் மாஸ்கோ என்ற நகரிலுள்ள 8 முதல் 13 வயதுவரையுள்ள பள்ளிச் சிறுமிகள் ஒரு சங்கமாகச் சேர்ந்து படிக்கும் நேரம் நீங்கலாக மற்ற நேரங்க ளில் படியாத தொழிலாளர்கள் வசிக்குமிடங்களுக்குச்...

இந்தியாவின் ஜனத் தொகையும்                     கல்வி நிலையும்

இந்தியாவின் ஜனத் தொகையும்                     கல்வி நிலையும்

சென்ற பத்து வருஷத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஜன கணித கணக்குப் படி இந்திய ஜனத்தொகை சுமார் 32 கோடியாகும். இப்பொழுது அதாவது 1931ல் எடுத்த ஜனக்கணிதப்படி இந்திய ஜனத்தொகை சுமார் 351/4 கோடியாகும், இவர்களில் 100க்கு 11 பெயர்களே பட்டணங்களில் வசிக்கின்ற வர்கள். பாக்கி 89 பெயர்கள் கிராமவாசிகள். 100க்கு 67பேர்கள் விவசாய ஜீவிதக்காரர்கள். பாக்கி 100 க்கு 33 பேர்கள் கூலி தொழிலும் மற்றும் பல வகை உத்தியோகம் முதலிய ஜீவிதங்களிலும் வாழ்கின்றவர்கள். ஜன சங்கையும், அவர்களது வாழ்க்கையும், ஜீவனமும் இந்நிலையில் இருக்க இனி இவர்கள் கல்வி நிலையைப் பற்றி சற்று விசாரிப்போம். கல்வி விகிதம் மேல்கண்ட 1931ம் வருஷத்திய ஜன கணிதப்படி மொத்த ஜனத் தொகையில் பகுதி சமூகமாகிய ஆண் சமூகத்தில் 100க்கு 151/2 பேரும், மொத்த ஜனத்தொகையில் மற்றப்பகுதி பேர்களாகிய பெண் சமூகத்தில் 100க்கு 23/4 இரண்டே முக்கால் பேர்களுமே எழுதப் படிக்க கற்று இருக்கிறார்கள் என்று...

காந்தியின் மற்றொரு ராஜி

காந்தியின் மற்றொரு ராஜி

தீண்டாமை ஒழிப்பா?  நிலைப்பா? அரசியலில் வேலையற்றதினால் பாமர மக்களுக்கு தம் மீது ஏற்பட்ட சலிப்பையும், வெறுப்பையும் தீர்த்துக் கொள்ளுவதற்காக சமூகத்துறையில் ஏதோ பெரியதொரு சீர்திருத்தம் செய்வதாக வெளிப்பட்டு, அவ்வெறுப்பை மாற்றிக் கொள்ளலாம் என்று கருதிய தோழர் காந்தியவர்கள் “பிள்ளையார் செய்யப் போய் குரங்காய் முடிந்தது” என்ற பழமொழிப்படி மக்களின் அதிகமான வெறுப்புக்கு ஆளாக நேரிட்டு, இப்போது அதிலிருந்தும் தப்பு வதற்கு ஒரு பெரிய குட்டிக் கரணம் போடவேண்டியதாய் ஏற்பட்டு விட்டது. அதென்னவெனில் தோழர் காந்தி, இர்வின் பிரபுவிடம் செய்து கொண்ட ராஜியின் பயனாய் இந்திய ஏழை மக்களின் மீது பணக்காரர்கள் ஆட்சியையும், முதலாளி ஆட்சியையும் இந்திய மகாராஜாக்கள் ஆட்சி யையும் எப்படி நிரந்தரமாய் இருக்கச் செய்து விட்டாரோ அதே போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று கள்ளிக்கோட்டை சாமூதிரினிடமும், சாஸ்திரிகளிடமும் செய்து கொள்ளும் ராஜியானது தீண்டப்படாத மக்களுக்கு தீண்டாமை என்பது என்றும் நிரந்தரமாய் இருக்க ஏற்பாடு செய்து தீர வேண்டிய நிலைமைக்கு வந்து...

சுயமரியாதை இயக்க லட்சியம், வேலைத்திட்டக் கூட்ட நடவடிக்கை

சுயமரியாதை இயக்க லட்சியம், வேலைத்திட்டக் கூட்ட நடவடிக்கை

திருத்தப்பட்டபடி நிறைவேறிய சுயமரியாதை இயக்க லக்ஷியம். 1.பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் தன்மைகொண்ட ஆட்சி யிலிருந்தும் இந்தியாவை பூரண விடுதலை அடையச் செய்வது. தேசத்தின் பேரால் கொடுக்கப்படவேண்டிய எல்லா கடன்களை ரத்து செய்வது. எல்லா தொழிற்சாலைகளையும், ரயில்வேக்களையும், பாங்கி களையும், கப்பல் படகு நீர் வழி போக்குவரத்து சாதனங்களையும் பொது மக்களுக்கு உரிமையாக்குவது. எந்தவிதமான பிரதிப் பிரயோஜனமும் கொடுபடாமல் தேசத்தில் உள்ள எல்லா விவசாய நிலங்களையும், காடுகளையும் மற்ற ஸ்தாவர சொத்துக்களையும் பொது ஜனங்களுக்கு உரிமையாக்குவது. குடியானவர்களும், தொழிலாளிகளும், லேவாதேவிக்காரர் களிடம் பட்டிருக்கும் கடன்களையெல்லாம் (கேன்சில்) செல்லுபடி யற்றதாக ஆக்கி விடுவது, அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்து விடுவது. சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளை யெல்லாம் மாற்றி இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், குடியானவர்கள், சரீர வேலைக்காரர்கள் என்பவர்களுடைய நேரடியான ஆட்சிக்கு கொண்டு வருவது. தொழில் செய்பவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்பதுடன், அவர்களுடைய வாழ்க்கை நிலை உயர்த் தப்படுவது....

வேண்டுகோள்

வேண்டுகோள்

நமது மாகாணத்தில் ஆங்காங்குள்ள சுயமரியாதை சங்கத்தார்களும் மற்றும் அதன் லக்ஷியத்தையே லக்ஷியமாய்க் கொண்டு நடைபெற்று வரும் சங்கத்தார்களும் தங்கள் தங்கள் சங்கத்தின் ஊர் பேர், நிர்வாகஸ்தர்கள் பெயர், அங்கத்தினர் கள் எண்ணிக்கை முதலியவைகளைக் குறித்த விபரம் ஒன்று உடனே தெரிவிக்க வேண்டுகிறோம்.  ஏனெனில் துண்டு பிரசுரங்களையும், சிறு புத்தக வெளியீடுகளையும் அப்போதைக்கப்போது அனுப்பி வரவும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளவும், சங்கங்களைக் குறித்து ஒரு சிறு புத்தகம் வெளியிடவும் வேண்டியிருப்பதால் அதன் விபரங்களை  உடனே அனுப்பக் கோருகின்றோம். உடனே சீக்கிரத்தில் புதியதாய் ஏற் படுத்தக் கூடியதையும் ஏற்படுத்தி விபரம் தெரிவிக்க விரும்புகின்றோம். குடி அரசு – வேண்டுகோள் – 01.01.1933

வேலைத்திட்டக் கூட்ட முடிவு

வேலைத்திட்டக் கூட்ட முடிவு

சென்ற வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தபடி சுயமரியாதை இயக்க வேலைத்திட்டக் கூட்டம் ஈரோட்டில் தோழர் ஈ.வெ.ரா. வீட்டில் நடைபெற்ற விபரமும் அதன் முடிவும் சுயமரியாதை இயக்க லட்சியம், வேலைத்திட்டக் கூட்ட நடவடிக்கை மற்றொரு பக்கத்தில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. அக்கூட்டத்திற்கு எதிர்பார்த்ததற்கு மேலாகவே பல ஊர்களில் இருந்தும்  சுமார் இருனூறு  தோழர்கள் வரை விஜயம் செய்து இருந்தார்கள். பல தோழர்கள் தாங்கள் வர முடியாத அசௌகரியத்திற்கு வருந்தி தந்தியும் கடிதங்களும் எழுதி இருந்தார்கள். என்றாலும் கூட்டத்தின் முடிவை ஏற்று, தங்களால் கூடியவரை கலந்து உழைப்பதாகத் தெரிவித்துக் கொண்டார்கள். கூட்டமானது இரண்டு நாளில் நான்கு தடவை கூடி சுமார் 20 மணி நேரம் நடந்தது. பல விஷயங்களைப் பற்றியும் பலமான வாக்கு வாதங்களும் நடந்தது என்றாலும் முடிவில் ஏகமனதாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன, முதலாவது சுயமரியாதை இயக்கத்தின் லக்ஷியம் என்பது.  அதாவது சென்றவாரக் குடியரசில் “சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான கொள்கை” என்ற தலைப்பில் பிரசுரித்த விஷயமாகும். இது...

The Aims and ideals of the                 Self-Respect Party of South India.

The Aims and ideals of the                 Self-Respect Party of South India.

    The attainment of complete independence from the British and other forms of capitalist Governments. The cancellation of all national debts. Public ownership of Railways, Banks, Shipping and other transport services waters and lands etc., Public ownership without compensation of all agricultural lands, forests, and estates. Cancellation of all private debts and other obligations incurred by the workers and peasants. Changing of all Native States into one common Indian Federation under the rule of the workers and peasants of India. Improving the life of the workers and peasants of the land by securing for them, more than 7 hours...