வேண்டுகோள்

நமது மாகாணத்தில் ஆங்காங்குள்ள சுயமரியாதை சங்கத்தார்களும் மற்றும் அதன் லக்ஷியத்தையே லக்ஷியமாய்க் கொண்டு நடைபெற்று வரும் சங்கத்தார்களும் தங்கள் தங்கள் சங்கத்தின் ஊர் பேர், நிர்வாகஸ்தர்கள் பெயர், அங்கத்தினர் கள் எண்ணிக்கை முதலியவைகளைக் குறித்த விபரம் ஒன்று உடனே தெரிவிக்க வேண்டுகிறோம்.  ஏனெனில் துண்டு பிரசுரங்களையும், சிறு புத்தக வெளியீடுகளையும் அப்போதைக்கப்போது அனுப்பி வரவும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளவும், சங்கங்களைக் குறித்து ஒரு சிறு புத்தகம் வெளியிடவும் வேண்டியிருப்பதால் அதன் விபரங்களை  உடனே அனுப்பக் கோருகின்றோம். உடனே சீக்கிரத்தில் புதியதாய் ஏற் படுத்தக் கூடியதையும் ஏற்படுத்தி விபரம் தெரிவிக்க விரும்புகின்றோம்.

குடி அரசு – வேண்டுகோள் – 01.01.1933

You may also like...