Category: குடி அரசு 1932

ஈ. வெ. ராமசாமியின் ஈஜிப்ட் கடிதம் 0

ஈ. வெ. ராமசாமியின் ஈஜிப்ட் கடிதம்

  “நாங்கள் பார்த்த கப்பல்” சூயஸ் துறைமுகத்தில் ஒரு பெரிய கப்பலை 29 – 12 – 31 தேதியில் நாங்கள் பார்த்தோம். அதன் பெயர் “எம்பரஸ் ஆப் பிரிட்டன்” (நுஅயீசநளள டிக க்ஷசவையin) நேற்றைக்கு முந்திய தினம் கனடியன் பசிபிக் ரெயில்வே கம்பெனி யாரால், அக்கப்பலின் மேல் தளத்தில் ஒரு விருந்து கொடுக்கப் பட்டது. அது சமயம் மேன்மை தங்கிய பிரதம மந்திரி அவர்களும் மேன்மை தங்கிய ஹை கமிசனர் அவர்களும் பிரதம விருந்தினராயிருந்தனர். மேற்படி கப்பலைப் பற்றிய சில ருசிகரமான விவரங்கள் கீழ்வருமாறு. உலக அதிசயக் கப்பல் உலகத்திலே அதிசயமானாதும், பெரியதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கே பெருமை தரக் கூடியதுமான, கனடியன் பசிபிக் போக்குவரவுக் கப்பலான  “எம்பரஸ் ஆப் பிரிட்டன்”என்ற இந்தக் கப்பலைத் தவிர வேறு ஒன்றையும் கூற முடியாது. பிரிட்டிஷார் கடல் வியாபாரத்தில் மிகவும் கியாதி வாய்ந்தவர் கள் என்ற பரம்பரை புகழை இந்த அதி உந்நத கப்பல் ...

பெண் போலீஸ் 0

பெண் போலீஸ்

இந்திய சரித்திரத்திலேயே இதுவரை கேட்டிராத ஒரு புதிய சம்பவம், பரீக்ஷhர்த்தமாக இவ்வாண்டிலிருந்து ஆரம்பிக்கப்படப் போகிறது. அதாவது பெண்கள் போலீஸ் உத்தியோகத்துக்குச் சேர்க்கப்படப் போகின்றார்க ளென்பதே. “போலீஸ் உத்தியோகத்தில் சேர விரும்பும் பெண்கள் தங்கள் விண்ணப்பங்களை உடனே அனுப்பலாம். இலவச உடுப்பும், ஜாகையும் அளிக்கப்படும்” என்று போலீஸ் தலைமை சூப்பரெண்டெண்ட் அவர்களால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறதென டெல்லியிலிருந்து 20-1-32 ² வெளியான ஒரு பிரஸ் செய்தி கூறுகிறது. இது உண்மையானால் சர்க்காரின் செய்கையை மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம். இந்த நற்செய்தி பெண்கள் உலகத்தில் ஒரு புதிய உணர்ச்சி யையும், பெண்கள் முற்போக்கில் ஆர்வமும் கொண்ட சீர்திருத்த உலகிற்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் உண்டாக்குமென்பதில் சிறிதும் ஐயமில்லை. மற்றும் பெண்கள் மனத்தில் பெரும் கவலையும், பொறுப்பும் ஏற்பட்டிருக்குமென்பது திண்ணம். ஆனால் பெண்கள் ஆண்களுக்கு எவ்வகையிலும் அடங்கிய வர்கள், அடிமைகள், பேதைகள், பிள்ளைபெறும் இயந்திரங்கள் என இதுவரை மதம், கடவுள், சாஸ்திரம், புராணம், பழக்க வழக்கங்கள் இவை...

திரு. வல்லத்தரசு 0

திரு. வல்லத்தரசு

புதுக்கோட்டையில் பிரபல வக்கீலாகவும், சமதர்ம வாதியாகவும், பாமர மக்களின் மூடப் பழக்க வழக்கங்களை யொழித்து அவர்களைப் பார்ப்பனர் களிடம் ஏமாறாமலிருக்கும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கமுடையவ ராகவும் இருந்த திரு. முத்துசாமி வல்லத்தரசு பி. ஏ., பி. எல்., அவர்களைத் தமிழுலகம் நன்றாய் அறியும். சென்ற வருஷத்தில் புதுக்கோட்டையில் முனிசிபல் வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக நடந்ததாகச் சொல்லப்படும் கலகத்தை முன்னிட்டு இதுவரையிலும் அவரைக் கைது செய்து வைத்திருந்தார்கள்.  ஆனால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சமஸ்தானத்தில் உள்ள பிரபலமானவர்களும், வெளியூர்களில் உள்ள சில பிரமுகர்களும் பலமான கிளர்ச்சி செய்து கொண்டு வந்தார்கள். இதன் பயனாக புதுக்கோட்டை அரசாங்கத்தாரும் அவரை விடுதலை செய்ததோடு மட்டும் அல்லாமல் இனி சமஸ்தானத்திற்குள்ளேயே வசிக்கக் கூடாதென, சமஸ்தானத்திற்கு வெளியிற் கொண்டு வந்துவிட்டு விட்டார்கள். நாட்டின் பொது ஜனங்களால் மதிக்கப்படுகின்ற ஒருவரை உண்மை யிலேயே அரசாங்கதின் நன்மைக்காக உழைக்கப் பாத்தியமுடைய ஒருவரை இவ்வாறு வெளியேற்றுவதற்குக் காரணம் பார்ப்பன...

ஜாதி மகாநாடுகள் 0

ஜாதி மகாநாடுகள்

நமது நாட்டில் சிறிது அரசியல் உரிமை கிடைத்ததன் பலனாகவும், அரசியல் கிளர்ச்சிகள் கொஞ்சம் அதிகப்பட்டதன் பலனாகவும், கல்வி, அரசாங்க உத்தியோகம், ஸ்தல ஸ்தாபன பதவிகள் முதலியவைகளில் முன்னேறாமல் இருந்த ஒவ்வொரு ஜாதியினரும் விழித்துக் கொண்டனர். கல்வி, பட்டம், பதவி முதலியவைகளில் முன்னேறி இருக்கும் வகுப்பாரைக் கண்டு தாமும் அவர்களைப் போல் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் வகுப்பு மகாநாடுகள் கூட்டவும் தங்களுக்குரிய பங்கைக் கொடுக்க வேண்டு மென்று அரசாங்கத்தைக் கேட்கவும் ஆரம்பித்தனர். பல வகுப்புகள்- அதாவது பல ஜாதிகள் உள்ள ஒரு தேசத்தில் அதிகாரம், பட்டம், பதவி முதலியவைகளில் எல்லா வகுப்புகளுக்கும் சம பங்கு இருக்க வேண்டும் என்று கேட்பதும் அதற்காகப் போராடுவதும் நியாயமேயாகும். இந்தக் காரணங்களுக்காக நமது நாட்டில் வகுப்பு மகாநாடுகள் கூட ஆரம்பித்த காலத்தில், எல்லாவற்றிலும் முன்னேற்றமடைந்து தேசத்தில் ஆதிக்கம் பெற்று மற்ற வகுப்புகளை எல்லாம் தாழ்ந்த வகுப்புகளாக வைத்து தமது வகுப்பை மாத்திரம் உயர்ந்த வகுப்பாக வைத்துக்...

சுயராஜ்யம்! சுயராஜ்யம்!! 0

சுயராஜ்யம்! சுயராஜ்யம்!!

இப்பொழுது நமது நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வெள்ளைக் காரர்களைத் துரத்தி விட்டு இந்நாட்டின் அரசாட்சியை நாமே ஆள வேண்டும் என்று தேசீயவாதிகள் ஜனங்களிடம் கிளர்ச்சி செய்து அவர்களைத் தூண்டி வருகிறார்கள். இதற்காக சட்டமறுப்பு, வரிகொடாமை முதலிய இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களாகவும், தீண் டாத வகுப்பினர்களாகவும் உள்ள சுமார் 7 கோடி மக்கள் இந்துக்களின் ஆட்சியை விட வெள்ளைக்காரர்களின்  ஆட்சியையே – அதாவது அவர் களின் பாதுகாப்பையே விரும்புகின்றனர். இவ்வாறு இவர்கள் விரும்புவது நியாயமானதே என்பதும் இதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை என்பதுமே நமது அபிப்பிராயமாகும். நமது நாட்டிற்கு வெள்ளைக்கார ஆட்சி வருவதற்கு முன் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்துக்களுடைய ராஜ்யபாரம்தான் இருந்து வந்தது. அக்காலத்தில் அதாவது அந்தப் பல ஆயிரம் ஆண்டுகளிலும் தீண்டத்தகாத வகுப்பினர்களெல்லாம், தீண்டத்தகா தவராகவும்! தெருவில் நடக்கத்தகாதவராகவும், கண்ணால் பார்க்கத்தகாத வராகவும், சண்டாளராகவும், அடிமைகளாகவும், சுகாதாரமற்ற சதுப்புநிலங் களில் வசிக்கின்றவர்களாகவும், உண்ண உணவில்லாதவராகவும் உடுக்க...

சமஸ்கிருத சனியன் 0

சமஸ்கிருத சனியன்

– தேசீயத் துரோகி தேசீயத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்கு பயன்படாத பழய காரியங்களில் ஆசை யுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசீயத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம். சென்னை மாகாணத்தில் கல்வியிலாக்காவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனை களில் “சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும்” என்பதும் ஒரு யோசனை யாகும். உண்மையிலேயே “தேச மக்கள் கல்வியினால் அறிவு பெற வேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெற வேண்டும்” என்று விரும்பு கின்ற வர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும்...

பகிஷ்கார யோசனை 0

பகிஷ்கார யோசனை

  காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்திருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ளதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில், போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம். இந்தப் பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம். தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங்களுக்குக் காங்கிரஸ் காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை. இந்த வியாக்கியானம் கூறவும் இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்ய வும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற் காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப்...

மீண்டும் தொல்லை 0

மீண்டும் தொல்லை

இது வரையிலும் தேசம் அடைந்து வந்த கஷ்டம் நீங்குவதற்கு ஒரு மார்க்கமும் ஏற்படாமல் இருந்துவரும் இச்சமயத்தில் மறுபடியும் தேசத் திற்குப் பலவகையிலும், கஷ்டங்களும், நஷ்டங்களும் உண்டாக்கக் கூடிய சந்தர்ப்பம் வந்து விட்டது பற்றி நாம் மிகவும் வருத்தமடைகின்றோம். சென்ற வருஷத்தில் திரு. காந்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உப்புச் சத்தியாக் கிரகத்தினால் உண்டான துன்பம் இன்னும் நீங்கினபாடில்லை. இந்த நிலையில் மறுபடியும் காங்கிரஸ், பகிஷ்கார இயக்கத்தையும் வரிகொடாமை, வாரங் கொடாமை முதலியவைகளையும் ஆரம்பித்ததைக் கண்டு, அரசாங்கத்தாரும் அதிமும்முரமாக அடக்குமுறைகளை ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இம்மாதிரி காங்கிரஸ் போர் தொடுக்க ஆரம்பித்ததற்கும், அரசாங்கத்தார் அடக்குமுறையைக் கையாளவும், அவசரச் சட்டங்களை ஏற்படுத்துவதற்கு முன் வந்ததற்கும் இருவர் கூறும் காரணங்களையும் நாம் விட்டு விடுகின்றோம். உண்மையில், காங்கிரஸ் எதற்காக மீண்டும் இத்தகைய போராட்டம் தொடங்க வேண்டும், அப்படிப்பட்ட நெருக்கடி என்ன வந்து விட்டது? என்பதைப் பற்றி மாத்திரம் இப்பொழுது நாம் கவனிப்போம். சென்ற வருஷம் நடைபெற்ற உப்புப்...

காலஞ்சென்ற மாணிக்க நாயக்கர் 0

காலஞ்சென்ற மாணிக்க நாயக்கர்

பெருந்தமிழறிஞரும், ரிட்டயரான சூப்பிரின்டென்டிங் இஞ்சினீயரும் சிவபுரி ஜமீன்தாரருமான திரு. பா. வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் காலஞ் சென்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். இவர் தமிழ்மொழியில் சிறந்த ஆராய்ச்சியுள்ளவராகவும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் ஊக்க முடையவராகவும் இருந்தார். இவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழ் மொழிக்கு நன்மையும், பார்ப்பனரல்லாதாருக்கு நன்மையும் உண்டாயிருக்கக் கூடும். இந்த நன்மைகளை நமது மக்கள் அடைவதற்கில்லாமல் திடீரென்று மாரடைப்பு வியாதியால் இறந்தது பெரும் நஷ்டமேயாகும். இவரை இழந்து வருத்தமடையும் அவர் மனைவி மார்களுக்கும், பெண்களுக்கும், சகோதரர் முதலிய உறவினர்களுக்கும் நமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 03.01.1932

தலைநகரும் பிடிபட்டது 0

தலைநகரும் பிடிபட்டது

ஒரு நாட்டு மக்களைச் சீர்திருத்த வேண்டுமானால் – அவர்களிட முள்ள மூடப்பழக்கவழக்கங்களை ஒழிக்க வேண்டுமானால் – அவர் களிடமுள்ள சாதிசமய பேதங்களை ஒழித்து சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழச் செய்ய வேண்டுமானால் தைரியமாக அவர்களிடம் குடி கொண்டி ருக்கும் குற்றங்களை எடுத்துக்காட்ட வேண்டும் – இவ்வாறு தேச மக்களிடம் படிந்து கிடக்கும் குற்றங்களை அவர்களுடைய எதிர்ப்பையும், வெறுப்பை யும் எதிர்பாராமல் எடுத்துக்காட்டுவதன் மூலந்தான் அவர்களைச் சீர்திருத்தஞ் செய்ய முடியும். தேசத்தின் நன்மைக்கு மக்களுடைய சீர்த்திருத்தத்திற்கு எந்தெந்தக் காரியங்களை ஒழிக்க வேண்டும், எந்தெந்தக் காரியங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்னும் விஷயங்களைப் பகுத்தறிவுடன் ஆராய்ந்துத் தன் மனத்திற்கு பட்டதை தைரியமாக ஜன சமூகத்திற்கு எடுத்துக் கூறும் தலைவர்களால்தான் – இயக்கங்களால்தான் எந்த தேசமும் முன்னேற்ற மடைய முடியும். இவ்வாறில்லாமல், மக்களுடைய பழக்க வழக்கங்களுக்கு அவர் களுடைய பழய கொள்கைகளுக்கு விரோதமான அபிப்பிராயங்களை வெளி யிட்டால் பொதுஜனங்கள் நம்மை எதிர்ப்பார்கள்; அவர்களிடம் நாம் தலைவர்களாக விளங்கமுடியாது; பொதுஜனங்களால்...

இரட்டைவாக்குரிமையை உறுதியாக ஆதரித்த குடி அரசு 0

இரட்டைவாக்குரிமையை உறுதியாக ஆதரித்த குடி அரசு

உடல்நலமில்லாத பெரியார் நீண்ட ஓய்வு எடுக்கவேண்டுமென்று மருத்துவர்கள் கூறிய ஆலோசனையை புறக்கணித்து பெரியார் மேலைநாடு பயணத்தை மேற்கொண்டார். ஈஜிப்ட், க்ரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங் கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், ப்ரான்ஸ், போர்ச்சுகல் நாடுகளில் சுமார் ஒரு வருடம் பெரியார் பயணம் செய்தார். பயணம் முடித்து கொழும்பு வழியாக தமிழகம் திரும்பிய காலகட்டம் இது. இலங்கையில் பல பகுதிகளுக்கும் சென்று தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக பயணத்தில் நீண்ட காலத்தைச் செலவிட்ட சோவியத் நாட்டின் சோசலிசக் கொள்கைகள் பெரியாரை மிகவும் ஈர்த்திருந் ததை அவரது உரைகள் வெளிப்படுத்தின. நமது நாட்டில் மக்கள் ஓரணியில் திரளாமல் தடுப்பதற்கு கடவுள், மதம்,  சாதி, தலைவிதி, கர்மபலன் போன்ற நம்பிக்கைகளே காரணம் என்றார் பெரியார். இங்கிலாந்தில் மாபெரும் தொழிலாளர் பேரணியில் பிரிட்டன் தொழிற் கட்சித் தலைவர் லாம்ஸ் பெரி முன்னிலையில் பெரியார் ஆற்றிய உரை; பெயருக்கு முன்னால் தோழர் என்றே விளியுங்கள் என்று பெரியார்...

தலைவிரித்தாடிய சாதிவெறி

தலைவிரித்தாடிய சாதிவெறி

பெரியார் ஐரோப்பிய பயணம் மேற்கொண்ட இக்காலகட்டத்தில் அவர் இல்லாத நிலையிலும் குடி அரசும் சுயமரியாதை இயக்கமும் தளராமல் எழுச்சிநடை போட்டன. என்.சிவராஜ் சட்டமன்ற உறுப்பினராகவும் வழக்கறிஞராகவும் இருந்தும் கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த காரணத்தால் சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் உறுப்பினராக மறுக்கப்பட்டார். குடி அரசு கண்டித்தது. பால்ய விவாகத்தைத் தடைசெய்யும் சாரதா தடைச்சட்டம் அமுலுக்கு வந்தபிறகும் கூட அந்த சட்டம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று தனது மகளான சிறுமிக்கு திருமணம் செய்கிறார் ஒரு தந்தை. மாவட்ட நீதிமன்றம் அவரைத் தண்டிக்கிறது. கல்கத்தா உயர்நீதிமன்றமோ அவரை விடுதலை செய்கிறது. இந்து, முகமதிய குடும்பங்களில் நடைபெறும் காரியங் களை இங்கிலாந்து சட்டங்களே தடுக்கமுடியாது என்று 1780, 1797 ஆம் ஆண்டுகளில் கிழக்கிந்தியக் கம்பெனி இயற்றிய சட்டத்தை உயர்நீதிமன்றம் எடுத்துக்காட்டியது. அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்று குடி அரசு குரல் கொடுத்தது. தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிந்தால் அவர்கள் மார்புகள் அறுக்கப்படும். வெள்ளை வேட்டி...