Tagged: ஜாதி வெறியர்கள்

ஈரோட்டில் ஜாதி வெறி ‘சித்திரவதை முகாம்’

நவீனா ஒரு பொறியியல் கல்லூரி மாணவி; கொங்கு வேளாளர் சமூகத்தில் பிறந்தவர். பெரியண்ணன் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றுபவர்; நாடார் சமூகத்தில் பிறந்தவர், இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், திருமணத்தில் முடிகிறது. 2016 மே மாதத்தில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட அவர்கள் இருவரும் அதோடு மனநிறைவடையாமல் சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியத் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை அணுகி தங்கள் திருமணத்தை, பெரியாரின் சுயமரியாதைத் திருமணமாய் நடத்திக் கொள்ள தாங்கள் விரும்புவதாகக் கூறியுள்ளனர். மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கொளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஈசுவரன் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அத்திருமணமும் மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 11-7-2016 அன்று பதிவும் செய்யப்பட்டுள்ளது. திருமணம் பதிவு செய்த பின்னர் இருவரும், பெரியண்ணனின் சகோதரியின் ஊரான ஈரோடு மாவட்டம் தொட்டிபாளையத்தில் தங்கி தங்கள் இல்லற வாழ்வைத் தொடங்கினர். ஜாதி மாறி நடந்த திருமணத்தைச் சகித்துக்கொள்ள முடியாத தன்னை ஜாதியின் காப்பாளனாகக் கருதிக்கொள்ளும்...

ஜாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை !

வாட்ஸ்அப் ஊடகம் மூலம் செங்குட்டுவன் வாண்டையார் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தூண்டிவிட்டு கலவரத்தை உண்டாக்கும் தீய நோக்கத்தோடும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து,சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து ஜாதி மோதலை உருவாக்கும் முயற்சியாக பேசி வருவதற்காக அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில்கடந்த 23.03.2016 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. ஜாதிவெறியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டதை அடுத்து சென்னை மாவட்டக் கழக செயலாளர் தோழர் உமாபதி மற்றும் கழகத் தோழர் செந்தில் FDL ஆகியோருக்கு ஜாதி வெறியர்கள் அலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். வாட்ஸ் அப் கால், ஸ்கைப்,நெட்கால் வாயிலாக எளிதில் கண்டுபிடிக்க இயலாத வகையில் மறைந்திருந்து கோழைத்தனமாக ஆபாசமாக பேசுவதுதான் இந்த ஜாதி வெறியர்களின் வீரம் போலும்?இதுபோல் ஆபாசமாகவும்,கொலை மிரட்டல்...

ஜாதி வெறியர்களுக்கு எதிராக கழகம் புகார் மனு சென்னை 23032016

வாட்ஸ் அப் வழியாக சட்டவிரோதமாக ஜாதி வெறியைத் தூண்டி, கலவரத்தை உண்டாக்கும் நோக்கோடு ‘தலித் மக்களை தனிமை படுத்த வேண்டும் , அவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க கூடாது , வேலை கொடுக்க கூடாது , சோற்றுக்கு வழியில்லாமல் மாற்றி நடு தெருவில் நிறுத்த வேண்டும்’ என்று பேசியுள்ள M.R.செங்குட்டுவன் வாண்டையார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன்,தலைமைச் செயலவை உறுப்பினர் தோழர் அய்யனார்,மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி,மாவட்ட தலைவர் தோழர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் தோழர் பிரகாசு,தோழர் செந்தில் FDL,தோழர் செந்தில் உள்ளிட்ட தோழர்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று 23.03.2016 மாலை 03.30 மணியளவில் புகார் மனு அளித்துள்ளனர்.