Tagged: கொளத்தூர் மணி

கோவையில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது

கோவையில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது

இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு இயக்கம், ஜூன் 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் கோவை காந்திபுரத்தில் தொடங்கியது. கழகப் பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட தலைவர் நேரு உள்ளிட்ட 20 தோழர்கள் இயக்கத்தில் பங்கேற்றனர். கோவை நகரம் முழுதும் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கி, கழக நூல்களை விற்பனை செய்து வருகின்றனர். கழகத்தின் முயற்சியை பொது மக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்று வருகிறார்கள். ஒவ்வொருவரிடமும் 10 ரூபாய் என்று நன்கொடை திரட்டப்படுகிறது. 100 ரூபாய் நன்கொடை தருவோருக்கு 20 ரூபாய்க்கான நூல்கள் வழங்கப்படுகின்றன. ஜூலை 4 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் தொடருகிறது. 4 ஆம் தேதி மேட்டுப் பாளையத்தில் நிறைவு பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. 15.6.2014 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களை உக்கடம்பகுதியில் சந்தித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தார். அன்று மாலை கோவையில் நடந்த மறைந்த நடிகர் மணிவண்ணன் நூல்...

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வரை பாராட்டுகிறோம் பிரதமர் மோடியை சந்தித்து இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும், அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிய தமிழக முதல்வரை பாராட்டுவதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர், செய்தியாளர் களிடம் கூறியது: சிதம்பரம் அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கு 92 ஆவது அரசாணையின்படி பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்க சட்ட வரையறை உள்ளது. ஆனால், இவற்றை கல்வி நிர்வாகங்கள் பின்பற்றுவதில்லை. மேலும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இவற்றை உரிய திருத்தங்களோடு செயல்படுத்த வேண்டும். பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி மேலாண்மை...

இலங்கையில் தமிழின படுகொலை கண்காட்சி – திருச்சியில் திரையிடல்

தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு ! கழக தலைவர் பங்கேற்கிறார் ! இலங்கையில் தமிழின படுகொலை கண்காட்சி – திரையிடல். இலங்கை கடற்படையின் கொடுமையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் – புகைப்பட காட்சி. நாள் : 24.10.2015 சனிக்கிழமை காலை 10.மணி. இடம் :ரவி அரங்கம்,சத்திரம் பேருந்து நிலையம் திருச்சி. தலைமை : ”தோழர் பேரா.சரஸ்வதி”, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம். முன்னிலை : ”தோழர் கொளத்தூர் மணி”, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். வரவேற்பு : தோழர் ஜோதி நரசிம்மன். திறப்பவர் : ஓவியர் வீரசந்தானம். சிறப்புரை : ஜிவாஹிருல்லா,சட்டமன்ற உறுப்பினர். திரையிடல் சின்னப்பா தமிழர். மற்றும் தோழமை அமைப்புகள்.

பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் – கிருஷ்ணகிரி இராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் கூட்டம் இராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் 29.09.2015 மாலை 5 மணிக்கு நடைபெற்றது பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாக தோழர் மதிமாறன் கலந்துகொண்டு உரையாற்றினார் தோழர் கொளத்தூர் மணி சிறப்பரை ஆற்றினார்

கொட்டும் மழையில் ஜாதிக்கெதிரான பொதுக்கூட்டம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” “இளையதலைமுறைக்கு வேலைவேண்டும்” என்கிற தலைப்பில் 27-09-2015,ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. தோழர் துரை.தாமோதரன் அவர்களின்”மந்திரமா-தந்திரமா”நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. தொடர்ந்து திராவிடர் கலைக்குழுவின் நாடகங்கள் அரங்கேறியது. நமது கலைக்குழுவின் பகுத்தறிவு நாடகங்கள் பகுதியில் நல்ல வரவேற்பைப்பெற்றன. கூட்டத்தற்கு நகரசெயலாளர் தோழர் வெங்கட் தலைமையேற்றார். மாவட்டத்தலைவர் சாமிநாநன்,மாவட்ட செயலாளர் சரவணன்,மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் நீண்டதொரு சிறப்புரையை நிகழ்த்தினார்கள். இறுதியாக தோழர் ப.செல்வம் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது. கொட்டும் மழையிலும் மக்கள் இறுதிவரை கூட்டத்தை கேட்டது குறிப்பிடத்தக்கது

0

சென்னையில் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா

சென்னையில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா,கொடியேற்றுதல் நிகழ்சிகள். கழக தோழர்களுடன் இராயப்பேட்டை பத்ரி படிப்பகத்தில் சிலைக்கு மாலை அணிவித்து பிறகு ஊர்வலமாக அண்ணா சாலை, தியாகராய நகர், ஜப்ரகான் பேட்டை, ஆலந்தூர், பெசண்ட் நகர் வண்ணாந்துறை ஆகிய இடங்களில்..