கழகம் புகார் எதிரொலி ஜாதிச் சங்க வாகனங்கள் பறிமுதல்
தீரன் சின்னமலை அவர்கள் நினைவுநாள் என்ற பெயரில் ஜாதிச் சங்கங்கள் நடத்தும் நிகழ்வுகளில் ஆணவப் படுகொலையை ஆதரித்தும், ஜாதிக் கலவரத்தை தூண்டுவதும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பியும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவதை தடுத்திடவும் மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல காவல்துறை அய்.ஜி அவர்களிடம் கோவை மாவட்டக் கழகம் சார்பில் ஆகஸ்ட்-1 அன்று மதியம் 12 மணி அளவில் மனு அளிக்கப்பட்டது. மனு கொடுத்ததன் எதிரொலியாக காவல்துறையால் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 220 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 13082026
