செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் போல் சேலம் மாநாட்டுத் தீர்மானங்களும் வெற்றி பெறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
கழக மாநில மாநாட்டில் (ஏப்.30) இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைஅமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் கடந்த இதழ் தொடர்ச்சி. பெரியாரின் தொண்டினை படம்பிடிக்கும் வரிகள்! தந்தை பெரியாரின் தொண்டினைப் பற்றி ஒருவர் எழுதியிருந்ததைப் படித்தேன். “அவரின் கையெழுத்து நன்றாக இருக்காது, ஆனால் நாம் அழகாக எழுதினோம். அவரின் பேச்சு கொச்சையாக இருந்தது, ஆனால் நாம் அழகுத் தமிழில் பேசினோம். அவர் பள்ளிக்கூடம் கூட தாண்டவில்லை, ஆனால் நாம் பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் பெற்றோம். அவர் உடை கைலியும் சட்டையுமாய் இருந்தது. ஆனால் நாம் கோட்சூட் அணிந்தோம். தந்தையே உன்னை போற்றுகிறோம், தலைநிமிர்ந்து வாழ்த்துகிறோம்.” பெரியாரையும் அவர் ஆற்றிய தொண்டினையும் சிறப்பாக படம்பிடிக்கும் வரிகள் இவை. ஒவ்வொரு கூட்டத்திலும் பேசத் தொடங்கும் போது, பெரியார் இப்படி சொல்கிறார். “என்னுடைய கருத்துக்களையும் என்னுடைய அனுபவங்களையும் உங்களுக்குச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. இதனைப் போன்றே, நான் சொல்லுகின்ற கருத்துக் களை சிந்தித்துப்...
