பிராமணரல்லாதார் காங்கிரஸ்
சென்னை மாகாணத்தில் உள்ள பிராமணரல்லாதார் இயக்கம், தமிழ் நாட்டுப் பிராமணர்களால் சென்சார் வைத்து, வெளி மாகாணங்களுக்குப் போகாமலிருக்கும்படி தடுத்து வந்த பலத்த சூட்சிகளையும் தாண்டிக்கொண்டு இப்போது இந்தியா முழுவதுமே பரவி வருகிறது. அகில இந்தியா பிராமண ரல்லாத காங்கிரசுக்கு இது இரண்டாவது வருஷம். தேசீயக் காங்கிரஸ் ஆதியில் கூட்டப்பட்ட காலத்தில் அதற்கு இந்தியா முழுவதுக்குமாக 75 பேர்கள்தான் பிரதிநிதிகளாக வந்திருந்தார்கள். அது நாளுக்கு நாள் அடைய வேண்டிய வளர்ச்சியை அடைந்து மகாத்மா காலத்தில் 5000-கணக்கான பிரதிநிதிகளை அடைந்து, எவ்வளவு மேல் போக வேண்டுமோ அவ்வளவும் போய் இப்போது இறங்கு முகத்தில் இருக்கிறது. இது இவ்விதமிருக்க, இந்தியா முழுவதுக்குமே பிராமணரல்லாதார் மகாநாடு ஆரம்பித்து இரண்டு வருஷம்தான் ஆகிறது. ஆரம்ப முதல் வரு ஷத்தில், ஆதி தேசீயக் காங்கிரஸ் போல் பத்துக் கணக்காய் பிரதிநிதிகள் இல்லாமல், நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பெல்காமில் கூடினார்கள். இரண் டாம் வருஷத்தில் அம்ரோடி என்னும் அமராவதியில் 5000 பிரதிநிதிகள் பதிவு...