Author: admin

பிராமணரல்லாதார் காங்கிரஸ் 0

பிராமணரல்லாதார் காங்கிரஸ்

சென்னை மாகாணத்தில் உள்ள பிராமணரல்லாதார் இயக்கம், தமிழ் நாட்டுப் பிராமணர்களால் சென்சார் வைத்து, வெளி மாகாணங்களுக்குப் போகாமலிருக்கும்படி தடுத்து வந்த பலத்த சூட்சிகளையும் தாண்டிக்கொண்டு இப்போது இந்தியா முழுவதுமே பரவி வருகிறது. அகில இந்தியா பிராமண ரல்லாத காங்கிரசுக்கு இது இரண்டாவது வருஷம். தேசீயக் காங்கிரஸ் ஆதியில் கூட்டப்பட்ட காலத்தில் அதற்கு இந்தியா முழுவதுக்குமாக 75 பேர்கள்தான் பிரதிநிதிகளாக வந்திருந்தார்கள். அது நாளுக்கு நாள் அடைய வேண்டிய வளர்ச்சியை அடைந்து மகாத்மா காலத்தில் 5000-கணக்கான பிரதிநிதிகளை அடைந்து, எவ்வளவு மேல் போக வேண்டுமோ அவ்வளவும் போய் இப்போது இறங்கு முகத்தில் இருக்கிறது. இது இவ்விதமிருக்க, இந்தியா முழுவதுக்குமே பிராமணரல்லாதார் மகாநாடு ஆரம்பித்து இரண்டு வருஷம்தான் ஆகிறது. ஆரம்ப முதல் வரு ஷத்தில், ஆதி தேசீயக் காங்கிரஸ் போல் பத்துக் கணக்காய் பிரதிநிதிகள் இல்லாமல், நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பெல்காமில் கூடினார்கள். இரண் டாம் வருஷத்தில் அம்ரோடி என்னும் அமராவதியில் 5000 பிரதிநிதிகள் பதிவு...

நமக்கு மாறுதல் ஏன்? 0

நமக்கு மாறுதல் ஏன்?

இந்தியாவிலுள்ள மற்றெல்லாக் கட்சிகளைக் காட்டிலும் ஜஸ்டிஸ் கட்சி தான் தேசீயக் கொள்கைகளை அதிகமாகக் கொண்டுள்ளதென்பதே எனது நீண்ட கால அபிப்பிராயம். இத்தகைய பரந்த நோக்கமில்லாததும் குறுகிய நோக்கமுடையதுமான வேறெந்த ஒரு கட்சியுடனாவது ஜஸ்டிஸ் கட்சி சேருவதானது, ஆறானது கடலில் பாய வேண்டியது போய் கடலானது ஆற்றில் பாய்வதை ஒத்திருக் கிறது. காங்கிரஸால் மக்களுக்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை யென்று கண்ட பிறகுதான் காலஞ் சென்ற நம் தலைவர்கள் ஜஸ்டிஸ் இயக்கத் தைக் கண்டார்கள். சமய சமுதாய அரசியல் விஷயங்களில், காங்கிரசானது கடந்த ஐம்பது வருஷங்களாய்ச் செய்து முடிக்காத காரியங்களை யெல்லாம் நமது ஜஸ்டிஸ் இயக்கமானது நடந்த பத்தாண்டுகளில் எவ்வளவோ முன்னேற்றத்தைச் செய்து காட்டி யிருக்கிறது. அப்படியிருக்க இப்பொழுது காங்கிரசில் சேருவதாய் நம்மியக்கக் கர்த்தாக்களில் ஆணையை காங்கிரசில் எப்பொழுது சேர்ந்தோமோ அப்பொழுதே நம் கட்சியும் மறையத் தலைப்பட்டு விடுமென்று நான் பயப்படுகிறேன். இந்நாட்டில் உண்மையான சுயராஜ்யம் நிலவுமென்றும், ஆகிய இத்தகைய உத்தமக் கொள்கைகளையுடைய...

தேசிய காங்கிரஸ் 0

தேசிய காங்கிரஸ்

இவ்வருடம் கான்பூரில் இந்தியாவின் விடுதலைக்கு உழைக்கும் சபையென்னும், இந்திய தேசிய மகாநாடாகிய காங்கிரஸ், கான்பூரில் கூடிக் கலைந்தது. இந்தியாவின் விடுதலைக்கும், இந்தியரின் சுயமரியாதைக்கும், அரசாங்கத்தை கொஞ்சமும் எதிர்பாராமலும், அவர்களின் அரசியல் மாய்கை களை உபயோகப்படுத்திக் கொள்ளாமலும், அவர்களோடு விலகியிருந்து நிர்மாணத்திட்டத்தை நிறைவேற்றி வைப்பதன் மூலமாகவே தியாகத்திற்கும் கஷ்ட நஷ்டத்திற்கும், துணிவுகொண்டு உழைப்பதுதான் உண்மையான சுயராஜ்ய மார்க்கம் என்கிற உறுதியைக் கொண்ட கூட்டத்தார், இவ்வாண்டு கான்பூர் காங்கிரஸில் சரிவரக் கலந்து கொள்ளவேயில்லை. மகாத்மா காந்தியும் தான் தனியாக நின்று நடத்துவதாய் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கதர் ஸ்தாபனமாகிய நூல் நூற்கும் சங்கத்தை ஏதாவது ஒழித்து விடுவார்களோ எனப் பயந்து அதைக் காப்பாற்றிக் கொள்ளும் வரை கூட இருந்து விட்டு, மற்றவைகளில் அவரும் கலந்து கொள்ளாமல் காங்கிரஸ் மகாநாட்டுக்குக்கூட வராமல், மெல்ல நழுவி விட்டார். காக்கிநாடாவில் ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் “இன்னும் இரண்டு வருடத்தில் இந்த காங்கிரஸானது பழயபடி பேச்சை விற்றுப் பிழைக்கும் வக்கீல் கூட்டத்தார்...

ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் 0

ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார்

ஸ்ரீமான். இராஜகோபாலாச்சாரியார் வெளியிட்ட அறிக்கைகளில், முதலில் காங்கிரஸ் தற்காலம் பொது ஜனங்களுக்குச் சேவை செய்ய எவ்விதத் திட்டத்தையும் உடைத்தாயிருக்கவில்லை என்றும், காங்கிரசிற்கு இப்போ திருக்கும் மதிப்பெல்லாம், அது சென்ற நான்கு, ஐந்து வருடங்களாக தேசத் துக்கு அநுகூலமான திட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு அதற்காகப் பல தலைவர்களும், தொண்டர்களும் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் ஏற்றுக்கொண்டு பெரிய தியாகங்களையும் செய்து திட்டங்களை நிறைவேற் றப் பிரயத்தனப்பட்டதன் பலனாய் காங்கிரசுக்கு ஏற்பட்ட மதிப்பை வைத்துக் கொண்டு, காங்கிரசின் மூலமாய் பொது ஜனங்களுக்கு நன்மை உண்டாகும் படியான எவ்விதத் திட்டமும் அதில் இல்லாமல், பழைய நிலையின் வாசனை யையே ஆதாரமாக வைத்துக் கொண்டு, காங்கிரஸ், காங்கிரசென்று சிலர் சொல்லி வருகிறார்கள். இப்படியே காங்கிரஸ் இருக்குமேயானால், இனிக் கொஞ்சக் காலத்தில் காங்கிரஸ் மதிப்பே போய்விடும் என்றும் எழுதிவிட்டு, காங்கிரஸிற்கு பூரண மது விலக்கையாவது திட்டமாய் வைத்து அதை ஓட்டர்களுக்கு எடுத்துச் சொல்லி ஓட்டுப் பெற்று சட்டசபைக்குப் போய் ஒரே வருடத்தில்...

புறப்பாடு வரி  – சித்திரபுத்திரன் 0

புறப்பாடு வரி – சித்திரபுத்திரன்

சென்ற வாரத்திற்கு முந்திய ‘குடி அரசு’ இதழில் நாடக வரியைப் பற்றி எழுதியிருந்ததைக் கவனித்த அன்பர்கள் மனம் வருத்தப்படாதிருக்க முடியாது. அவ்வருத்தம் மறைவதற்குள் மற்றொரு வரி தலை விரித்தாடி விட்டது. அஃதாவது ஈரோடு நகரசபை வைத்தியர் அவர்கள் வேறு ஊருக்கு மாற்றமாகிப் போவதை உத்தேசித்து இவ்வூர் அதிகார வர்க்கமும் பிரபுக் கூட்டமும் மற்றொரு வரியை ஜனங்கள் தலையில் சுமத்தினார்கள். இச்சிறிய ஓர் காரியத்திற்காக இந்நகரத்தில் சுமார் ஐநூறு ரூபாய் வரை வசூல் செய்யப் பட்டிருப்பதாக அறிகிறோம். காரியத்தின் யோக்கியதையையும் அவசியத் தையும் அறிந்து மனப்பூர்வமாய் பொருள் உதவிய கனவான்கள் வெகு சிலரே இருப்பர். ஏனையோர் பிரபுத்துவத்திற்கும் அதிகார வர்க்கத்திற்கும் பயந்து உதவியவர்களே என்பதில் ஐயமில்லை. நாடக வரி வசூலான காலத்தில் நாமும் நாடகத்திற்குச் சென்றி ருந்தோம். நமது சமீபத்தில் ஒரு பக்கம் ஒரு வியாபாரியும் மற்றோர் பக்கம் கிராம அதிகாரி ஒருவரும் வீற்றிருந்தனர். வியாபாரி நம்மை நோக்கி தாங்க ளும் வந்துவிட்டீர்களே,...

தமிழ்நாடு 0

தமிழ்நாடு

ஒத்துழையா இயக்கம் காந்தியடிகளால் இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் தமிழ்நாடுதான் அவ்வியக்கத்திற்கு முதன்முதலாக ஆதரவளித்தது. எண்ணிக்கைக்குக் கிடைக்காத ஏதோ சிலர் தேச முன்னேற் றத்திற்கல்லாது வேறு பல காரணங்களைக் கொண்டு பின் வாங்கியிருந்த போழ்தினும் தமிழ்மக்கள் சாதி, வகுப்பு வித்தியாசமின்றி ஒத்துழையாமை யின் திட்டங்களில் உடல், பொருள், ஆவி மூன்றையும் சிறிதும் மதியாது தியாகமே கடவுள், தியாகமே வீட்டைப் பெறுவிப்பது, தியாகமே உலகம் என நினைத்து எல்லாவற்றையும் துறந்த துறவிகள் போன்று தொண்டாற்றி வந்ததை உலகம் நன்கு அறியும். பெருந்தலைவர்களெனப்படுவோராகிய தாஸர், நேரு, அலி சோதரர், லஜபதிராய், அஜ்மல்கான் முதலிய பெரியோர் களெல்லாம் ஒத்துழையாமைக்கு மாறுதலாக நின்ற காலத்திலும் வணங்கா முடி மன்னனாய் நின்று ஒத்துழையாமையின் தத்துவத்தை அழியவிடாமல் நிலையிலிருத்திவந்ததும் உலகம் அறிந்ததே. அந்நிலையிலிருந்த தமிழ்நாடு, சாதி இருமாப்பிலும், சாதிச்சண்டையிலும், பட்ட வேட்டையிலும், ஓட்டு வேட்டையிலும், உத்தியோக வேட்டையிலும் ஆழ்ந்து கிடக்கக் காரணம் யாது? அதுகாலை தலைமையாக நின்றவர்கள் இதுகாலை மறைந்து...

வைக்கம் சத்தியாக்கிரகம் 0

வைக்கம் சத்தியாக்கிரகம்

திருவாங்கூர் அரசாங்கத்தார் வைக்கம் சத்தியாக்கிரகத்தை விரை வில் முடித்துவிட ஆவலாய் இருப்பதாகத் தெரிய வருகிறது. அதாவது அச் சம°தானத்துத் திவானான ஸ்ரீமான் ஆர்.கிருஷ்ணபிள்ளையவர்களை சம°தானத்து மகாராணி அவர்கள் வைக்கம் சத்தியாக்கிரக சம்பந்தமாக தமது அபிப்பிராயமென்னவென்று கேட்டிருப்பதாகவும், அதற்குத் திவான் அவர்கள் கீழ்க்கண்ட பதில் பகர்ந்திருப்பதாவும் அறிகிறோம். “இவ்விவகாரத்திலுள்ள ரோடுகளை சாதிமத வித்தியாசமில்லாமல் எல்லாப் பிரஜைகளும் உபயோகப்படுத்திக் கொள்ளும்படி விட்டுவிட வேண்டியதென்று யான் அபிப்பிராயப்படுகிறேன். அம்மாதிரி செய்வதை சம°தான அரசாங்கத்தார் எப்பொழுதுமே எதிர்க்கவில்லை. இந்த உரிமை யை சிலர் பலாத்காரத்தினால் அடைய முயற்சி செய்ததால் கலகம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியே அரசாங்கத்தார் தடை உத்தரவு போட்டனர். இந்த உரிமையை அவர்களுக்கு கொடுக்கக்கூடாதென்று ஸநாதன இந்துமதம் கூறவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள இந்துக்களல்லாதவர்கள் அந்த ர°தாக்களின் வழியாக நடக்கச் சம்மதம் கொடுத்திருக்கின்றபொழுது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்க மறுப்பதில் கொஞ்சமும் ஒழுங்கிருப்பதாகக் காணப்படவில்லை. கூடிய விரைவில் ஒரு அரச விளம்பரத்தின் மூலம்...

கதர் 0

கதர்

நாலாவது தீர்மானம் கதரைப் பற்றியது. நமது ஜனங்களுக்குக் கதருக்கும், தேசவிடுதலையாகிய சுயராஜ்யத்திற்கும் என்ன சம்பந்த மென்பதே தெரியாது. சுயராஜ்ய மென்றால் என்ன என்பதைப் பற்றி நமக்குள் பெரிய அபிப்பிராய பேதமாயிருக்கிறது. நம்மில் படித்தவர்கள் சுயராஜ்ய மானது நம்மை ஆள்வோர்களால் சீமையிலிருந்து அனுப்பப்படுமெனக் கருதுகிறார்கள். நம்மை ஆளுகிறவர்கள் யாரென்பதை நாம் நன்றாய் கவனிக்க வேண்டும். அநேகர் போலீசாரும் கலெக்டரும்தான் நம்மை ஆளுகிறவர்களென்று கருதுகிறார்கள். சிலர் கவர்னரும், நிர்வாகசபை மெம் பர்களும், மந்திரிகளுமென்று கருதுகிறார்கள். வேறுசிலர் வைஸிராயும், பார்லிமெண்டும், இந்திய மந்திரியுமென்று கருதுகிறார்கள். இவர்களில் யாரும், சுதாவாய் நம்மை ஆளுகிறதில்லை, பின்னையாரென்று கேட்பீர்கள்; ஐரோப்பாவிலுள்ள வர்த்தகக் கூட்டத்தார் அரசாட்சி என்கிற பெயரால் நம் நாட்டில் செய்யும் வர்த்தகத்தைத்தான் நாம் அரசாங்கம் என்று கருதி வருகிறோம். ஒரு வியாபாரி எப்படி அயலூரிலுள்ள தன்னுடைய வியாபாரத்திற்குத் தன்னூரிலிருந்து ஒரு ஏஜண்டை அனுப்பிக் காரியம் பார்க்கச் செய்கிறானோ, அதுபோலவே ஐரோப்பிய வியாபாரிகள் இந்திய வியாபாரத்திற்கு வைஸிராய் என்ற பெயரால்...

காரைக்குடி ஜில்லா முதலாவது  அரசியல்  மகாநாடு 0

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு

சகோதரர்களே ! நமது மகாநாடானது இவ்விரண்டு நாளாக அதிக உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் நடைபெற்று முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் செய்த உதவிக்கு நான் உங்களுக்கு மிகவும் வந்தனம் செலுத்துகிறேன். இனி என்னு டைய முடிவுரையை மிக ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆவலைத் திருப்தி செய்யத்தகுந்ததாக யான் விசேஷமாக ஒன்றும் சொல்லப் போவதில்லை. இன்று முடிவு பெற்ற தீர்மானங்களைப் பற்றியே சில வார்த்தைகள் சொல்லி இக்கூட்டத்தைக் கலைப்பதற்கு நீங்கள் எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும். முதலாவது தீர்மானம் நமது பெரியார் சென்னை ஸ்ரீமான் பி.தியாக ராயரின் மரணத்திற்கு அனுதாபம் காட்டிச் செய்த தீர்மானமாகும். அதைப் பற்றி உங்களுக்கு அதிகமாய் யான் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய தன்னலத் தியாகத்தையும், அவர் தமது சமூகத்திற்காகச் செய்த தொண்டையும் போற்றாதாரில்லை. அவருடைய ராஜீய அபிப்பிராயங்களில் நமக்கும் அவருக்கும் வடகோடி தென்கோடி யென வித்தியாசமிருந்த போதிலும், வரவர அவர்களும் சுயராஜ்யம் அவசியமென்றும், சீக்கிரத்தில் வேண்டுமென்கிற நிலைமையில் வந்துவிட்டார்கள்....

இந்துக்களின் கொடிய வழக்கம் 0

இந்துக்களின் கொடிய வழக்கம்

இம்மாதம் வெளியான ‘மாடர்ன் ரிவ்யு’ எனும் மாதச் சஞ்சிகையில் கோரமான ஒரு பெண் கொலையைப் பற்றிக் கீழ்காணும் விவரங்கள் காணப் படுகின்றன. அவை வருமாறு ;- “பத்துவயதுள்ள லீலாவதியெனும் பெயருள்ள தனது மனைவியைக் கொன்றதாக ஜோகேந்திரநாத்கான் என்பவன் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிபதி பேஜ் என்பவரால் மரணதண்டனை விதிக்கப்பட்டான். இப்பெண்ணின் பெற்றோர் கல்கத்தாவிலுள்ள சங்கரிதோலா சந்தில் மிட்டாய்க்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இப்பெண் ணுக்கும், ஜோகேந்திரநாத் கானுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் மணம் நடந்தது. பெண், பெற்றோர் வீட்டிலேயே இருந்துவந்தாள். மனைவியைத் தன்னூருக்கு அழைத்துச்செல்லக் கணவன் சென்ற பிப்ரவரி µ 9 ² மாமனார் வீட்டுக்கு வந்தான். அடுத்த ஐந்து நாட்களும் சுபதினமல்லவென்று கூறி சின்னாட் கழித்து மனைவியை அழைத்துச் செல்லும்படி பெண்ணின் பெற்றோர் விரும்பினார்கள். அதற்கிசைந்து அவன் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்தான். முதல் இரண்டுநாள் இரவிலும் புருஷனும் மனைவியும் ஒரே அறையில் படுக்கை கொண்டனர். மூன்றாம் நாளிரவு, புருஷனுடன் ஒரே அறையில் உறங்கப்...

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு 0

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு

சகோதரிகளே ! சகோதரர்களே ! காரைக்குடி ஜில்லா முதலாவது ராஜீய மகாநாட்டுக்கு அக்கிராசனம் வகிக்கும் கவுரவத்தை எனக்களித்ததற்கு உங்களுக்கு நான் மனப்பூர்வமான வந்தனத்தைச் செலுத்துகிறேன். அல்லாமலும் இந்த தனவைசிய நாட்டில் நடந்த – அதாவது பள்ளத்தூர் மகாநாட்டுக்கும், தேவகோட்டையில் நடந்த திருவாடானை தாலுகா மகாநாட்டிற்கும் அக்கிராசனம் வகிக்கும் கவுரவங் களையும் எனக்கே அளித்திருந்து, மறுபடியும் நடக்கும் இந்த மகாநாட்டு அக்கிராசன கவுரவத்தையும் எனக்கே அளித்திருப்பதைக் கொண்டு என்னிடம் தங்களுக்கு இருக்கும் அன்பைப்பற்றி நான் பெருமை பாராட்டிக் கொள்ளாமலிருக்க முடியவில்லை. தேசத்தில் ஒற்றுமைக் கெட்டு, ஊக்கம் குன்றி, விடுதலை மறந்து, சுயநலம் மேலிட்டு தலைவிரித்தாடும் இந்தச் சந்தர்ப்பங்களில் மகாநாடுகள் நடத்துவது மிகவும் கஷ்டமான காரியம். அதிலும் செல்வந்தர்களும், கஷ்டமென்பதே இன்னதென்றறியக்கூடாத சீமான்களும் நிறைந்துள்ள இப்பேர்ப்பட்ட குபேர பட்டணங்களில் மகாநாடுகள் நடத்த நண்பர்கள் ஏற்படுவதும், அப்படி ஏதாவது ஒன்று இரண்டு தேசபக்தர்கள் நடத்தினாலும் பொதுஜனங்கள் அதில் கலந்து மகாநாட்டைப் பலனுண்டாக்கும்படி யாக்கு வதும் மிகவும்...

* திருச்சியில் 29.1.25 ² கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானம் 0

* திருச்சியில் 29.1.25 ² கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானம்

இந்திய சமூக வாழ்க்கையில் பிறப்பினால் எவருக்கும் ஏற்ற தாழ்வு ஏற்படுத்தக் கூடாதென்றும் இக்கொள்கையை தேசீய இயக்கத்தில் ஈடு பட்ட ஸ்தாபனங்கள் அவசியம் அனுஷ்டிக்க வேண்டுமென்றும் தீர்மானிக் கப் பட்டது. இக்கொள்கையை சேரன்மாதேவி குருகுலத்தில் அனுஷ்டானத் தில் கொண்டுவரவேண்டிய முயற்சிகளைச் செய்ய கீழ்கண்ட சப் கமிட்டியை இக்கமிட்டியார் ஏற்படுத்துகிறார்கள், ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ஈரோடு. எஸ். ராமநாதன், மாயவரம். அ. வெ. தியாகராஜா, தேவகோட்டை குடி அரசு – 17.05.1925 – பக்கம்.11

திருச்சி தீர்மானம் 0

திருச்சி தீர்மானம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருச்சியில் கூடிச்செய்த ‘பிறப்பினால் மனிதர்களில் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது’ என்ற *தீர்மானத்தைப் பற்றியும் அதைக் குறித்துச் சிலர் செய்த ராஜீனாமாவைப்பற்றியும், “நவசக்தி” பத்திரிகையில் மேற்படி தீர்மானத்தைப்பற்றி எழுதியிருந்த தலையங்கத் தைப்பற்றியும், இவ்வாரம் நமது பத்திரிகையில் வெளியிடவேண்டி எச்சரிக்கை என்ற தலைப்பின் கீழ் ஓர் குறிப்பு எழுதிவைத்திருந்தோம். ஆனால், நேற்று பத்திரிகைகளில் டாக்டர் வரதராஜுலு நாயுடு கல்கத்தா வினின்றும் அனுப்பிய தந்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் சமூகவாழ் விலும், குருகுலத்திலும் (மனிதர்கள் தங்களுக்குள்) பிறப்பினால் வித்தியாசம் பாராட்டக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் நிறைவேற்றிய தீர் மானத்தையும், அதன்மேல் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் எழுப்பிய ஆட்சேபனைகளையும் காந்தியடிகள் நன்கு பார்த்து அத்தீர்மானம் ஒழுங்கா னதுதானென்றும் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அக்கமிட்டி அதிகாரமுள்ள தென்றும் சொல்லியதாகக் கண்டிருக்கிறது. இதைவிட நமது குறிப்பு இவர்களின் மனமாற்றத்திற்கு அதிக உதவிசெய்யாதெனக் கருதி நமது குறிப்பை நிறுத்திக் கொண்டோம். குடி அரசு – குறிப்புரை –...

ஈரோட்டில் நாடக வரி 0

ஈரோட்டில் நாடக வரி

கடந்த இரண்டு நாட்களிலும் ஈரோடு அதிகார வர்க்க உலகில் ஒரே பரபரப்பு. எல்லாம் ஓட்டமும் நடையுந்தான் ! மேலதிகாரி முதல் அடியிலுள்ள தோட்டி வரையிலும் வெயிலென்று பாராமலும், வியர்வை ஒழுகுவதைக் கவனியாமலும், ஓடித் திரிந்த வண்ணமாகவே இருந்தனர். ஈரோட்டில் இடிதான் விழுந்துவிட்டதோ? பெரும் புயல்காற்று கொடுமைகள் பல இழைத்ததோ? என்ன விபத்து நிகழ்ந்ததோ? என்று நேயர்கள் ஐயுற வேண்டும். நமது அதிகாரிகளின் மனப்பான்மையை அறிந்தோர் இங்ஙனம் நினையார். ஒரு நாடகக் கூட்டத்தார் எமது அதிகார தெய்வங்களை இவ்வளவு ஆட்டமும் ஆட்டிவைத்துவிட்டனர் ! நாடக புருஷர்கள் யாரென்று எண்ணு கிறீர்கள்? சென்னை செக்ரெடேரியட் ஊழியர்களே! இவ்வூர் நாடக சாலை யில் நேற்றிரவு ‘புத்ரோத்ம ராமன்’ என்ற நாடகம் நடத்தினார்கள். மாப் பிள்ளைகளைப்போல் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். மயிலாப்பூரில் நிருவப்பட்டிருக்கும் ‘இராமகிருஷ்ண மாணவர்’ இல்லத்திற்குப் பொருள் சேர்க்கவே இந்நாடகம் நடைபெற்றதாம் ! அநுமதிச்சீட்டு (டிக்கட்) ஒன்றின் ‘விலை’ ரூபா பத்துதான் !! ஒரு நாடகக்...

நமது அரசியல் நிலை  III 0

நமது அரசியல் நிலை III

காந்தியடிகள் இந்திய அரசியல் உலகில் தலையிடுவதற்கு முன்னர் மேனாட்டு அரசியல் முறைபற்றி நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி நடை பெற்று வந்தது. மேனாட்டு அரசியல் நூல்களைக் கற்று அந்நாட்டு இராஜ தந்திரத்தில் மோகங்கொண்ட படித்த வகுப்பினர்களே நமது நாட்டின் அரசி யல் துறையில் உழைத்து வந்தனர். ஆங்கில ஆட்சியில் நமது நாட்டின் பல வளங்களும் அழிந்து போயிற்று என்ற உண்மையை உணர்ந்தவர்கள் தாம். எனினும் நமது நாட்டின் விடுதலை ஆங்கிலர்களின் உள்ளங் கைக்குள் அடங்கிக்கிடக்கிறதென்ற கொள்கையுடையராய் உழைத்து வந்தனர். தன்னம் பிக்கையும், தன் கையே தனக்குதவி என்ற சீரிய எண்ணமும் இலராய் ஆங்கிலர்களின் புன்சிரிப்பிலேயே தவழ்ந்து தேச விடுதலை வேண்டி நின்றனர். சுயராஜ்யம் ஆங்கிலர் கொடுக்க நாம் பெற வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்குள் மிக்கு இருந்தது. படித்த வகுப்பினர் ஆண்டுக்கு ஒரு முறை கூடும் கூட்டமே காங்கிர° மகாசபையாக விளங்கி வந்தது. ஆங்கில அரசாங்கத்தாருக்கு “எமக்கு இன்ன குறை உளது,...

நமது அரசியல் நிலை II 0

நமது அரசியல் நிலை II

இரு கரையும் புரண்டோடும் வெள்ளப்பெருக்கு இடைமறித்துப் பலமாகத் தடுக்கப்படின், பின்னால் எதிர்த்துத் தாக்கி இருமருங்கிலும் உடைப் பெடுத்து நாலா பக்கங்களிலும் ஓடிச்சென்று சிதறுண்டு போதல் இயற்கை. அதுபோன்று இந்திய மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து நின்ற மாபெரும் இயக்கமாகிய ஒத்துழையாமை இயக்கம் இடையில் ஒடுக்கப்பட்டவுடன், தேச விடுதலை யொன்றிலேயே குறிக்கொண்டு நின்ற மக்கள் மனம் வேற்றுமை யுற்று மிகச் சிறுசிறு விஷயங்களில் தம் மனத்தைச் செலுத்துவராயினர். சில ஆண்டுகளுக்கு முன்னர் துரும்பென மதித்து உதறித் தள்ளியெறிந்த பட்டங்களிலும், பதவிகளிலும், அதிகாரங்களிலும் மீண்டும் மக்கள் மனம் வைப்பாராயினர். பொதுநல எண்ணம் குறைந்தது; தன்நலம் தலைதூக்கி நிற்க ஆரம்பித்துவிட்டது. சாதிப்பற்று என்ற மாயையில் மக்கள் அழுந்துவா ராயினர். ‘எனது கடமை’, ‘எனது கடமை’ என்றதற்குப் பதிலாக ‘எனது உரிமை’, ‘எனது உரிமை’ என்ற முழக்கம் எங்கும் கேட்கிறது. ஒவ்வொரு சாதியினரும் தமது சாதியின் உரிமைகளுக்காகப் போராட முனைந்து நிற்கின்றனர். ஒவ்வொரு சாதியினரும் தமது முன்னேற்றத்திற்காக முற்பட்டு...

ஒரே திட்டம் 0

ஒரே திட்டம்

காந்தியடிகள் சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தை அங்கீகரித்துவிட்டார் என்று கூறுவது உண்மைக்கு மாறுபட்டதாகும் என்று சென்ற வாரம் எழுதி னோம். சித்தகாங்கில் மகாத்மா கூறிய அருள்மொழிகள் நமது கூற்றை உறுதிப் படுத்துகின்றன. அவை பின்வருமாறு :- “போருக்கு என்றும் சளைக்காத ஒரு சாதியாரோடு நாம் சண்டை யிடுகிறோம். அந்த ஜாதியார் பணிந்துபோவதென்றால் இன்னதென்று அறியார்கள். இராஜதந்திர முறைகளைக் கையாண்டு நாம் எவ்வளவுதான் முயன்றாலும் அவர்களை நாம் இந்தியாவைவிட்டு ஓட்டிவிடமுடியாது. நமது வெற்றிக்குச் சாதனமாக நான் தேசத்தார் முன் வைத்திருப்பது ஒரே திட்டந்தான். அஃது இராட்டையேயாகும்.’’ அரசியல் கிளர்ச்சி முறைகளில் காந்தியடிகளுக்கு எள்ளளவும் நம்பிக்கையில்லையென்பது இதிலிருந்துதெள்ளிதின்விளங்குகின்றதன்றோ? குடி அரசு – துணைத் தலையங்கம் – 17.05.1925

அஞ்சுதல் ஒழிக 0

அஞ்சுதல் ஒழிக

அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கதர் அணிய அஞ்சுவதைப் பற்றி ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் “நெஞ்சு பொறுக்குதிலையே” என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள அரிய கட்டுரையை மற்றொரு பத்தியில் பிரசுரித்திருக்கிறோம். மற்றவர்களைவிட உத்தியோகஸ்தர்களே இராட் டையை ஆதரிக்கப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏழை எளிய வர்கள் உள்படப் பொது ஜனங்கள் கொடுக்கும் வரிப்பணத்திலிருந்து தான் இவர்கள் ஊதியம் பெறுகின்றனர். ஆகவே, ஏழை எளியவர்களுக்கு உணவளித்துக் காக்க வல்லதான இராட்டையை ஆதரித்தல் இவர்கள் கடனன்றோ? ஸ்ரீமான் ஆச்சாரியார் எடுத்துக்காட்டுகின்ற வண்ணம் இவர்கள் கதரணிய பயப்படுபவதற்குச் சிறிதும் ஆதாரமில்லை. ஆதாரம் ஓரளவு இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், ஆடை அணியும் விஷயத்தில்கூட நமது சுதந்திரத்தைப் பறிகொடுத்தல் பேதமையேயாகும். உத்தியோகஸ்தர்கள் அஞ்சி அஞ்சிச் சாவதொழிந்து தமது கடனாற்ற முன்வருவார்களாக. குடி அரசு – துணைத் தலையங்கம் – 17.05.1925

பூச்சாண்டி 0

பூச்சாண்டி

“பூச்சாண்டி வந்து பிடித்துக்கொள்வான்” என்றுகூறி அறியாத தாய்மார் குழந்தைகளைப் பயமுறுத்துவதுண்டு. அரசியல்திருத்தமென்னும் பூச்சாண்டி வரப்போவதாக நம்மையும் தற்போது அச்சுறுத்தி வருகிறார்கள். தாஸ் – பர்க்கென்ஹெட் சமிக்ஞைகளின் கருத்து இஃதேயென்று சிலர் ஊகிக்கின்றனர். அரைகுறைச் சீர்திருத்தத்தை அங்கீகரிக்க வேண்டாமென்று அன்னிபெசன்ட் அம்மையார் எச்சரிக்கை செய்கிறார். அரசியல் திருத்தம் அதிகமாக அளிக்கப் பட்டேயாகவேண்டுமென்றும், ஆனால் ஆங்கிலோ இந்தியரின் உரிமைகளைப் புறக்கணித்து விடக்கூடாதென்றும் கர்னல் கிட்னி கழறுகிறார். மன்னர் பெருமானே இவ்வாண்டினிறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்து விசேஷ உரிமைகள் வழங்கப்போகிறாரென்பது மற்றும் சிலரின் நம்பிக்கை. எம்மைப் பொறுத்தவரையில், இவர்களின் ஊகம் மெய்யாகி அரசியல் திருத்தம் வழங்கப்பட்டால் நாம் ஒரு சிறிதும் வியப்புறோம். வேற்றுமையும், தளர்ச்சியும் நாட்டில் நிலவி நிற்கும் இவ்வேளையில் சொற்ப சீர்திருத்தங்கள் வழங்கி நம்மைச் சரிப்படுத்தி விடலாம் என்று பிரிட்டிஷார் கருதுவது இயல்பே. ஆனால், அவைகளை ஏற்றுக்கொண்டு பாரத மக்கள் மீண்டுமொரு முறை ஏமாந்துபோவார்களா? குடி அரசு – துணைத் தலையங்கம் – 17.05.1925

கருங்கல்பாளையம் வாசகசாலை 0

கருங்கல்பாளையம் வாசகசாலை

ஈரோட்டின் ஒருபகுதியாகிய கருங்கல்பாளையத்தில் சென்ற சில காலமாக நடைபெற்றுவரும் வாசகசாலையின் ஒன்பதாவது ஆண்டு நிறைவிழா நேற்றயதினம் இனிது நடந்தேறியது. நமது அருந்தலைவர் ஸ்ரீமான் சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் இவ்வைபவத்தின் அவைத் தலைமையை ஏற்று நடத்தியது இவ்வாசக சாலையின் பாக்கியமென்றே கூறுவோம். ஸ்ரீமான் ஆச்சாரியாரின் தலைமையில் அறிஞர் இருவர் அரிய சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். கருங்கல்பாளையம் வாசிகள் நேற்றைய தினம் காட்டிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஆண்டு முழுதும் தொடர்ந்து காட்டினார்களாயின் இவ்வாசக சாலை அண்மையில் பெரிதும் முன்னேற்ற மடைந்து விடுமென்று திட்டமாகக் கூறலாம். இத்தகைய வாசக சாலைகளின் அவசியத்தைப்பற்றி நாம் விரிவாகக் கூறவேண்டுவதில்லை. உலகில் மேம்பாடுற்று விளங்கும் நாடுகளில் வாசக சாலைகள் மிகுதியும் வளர்ச்சிபெற்றிருக்கின்றன. லட்சக்கணக்கான புத்தகங்க ளையும், ஆயிரக்கணக்கான அங்கத்தினரையுங் கொண்ட வாசகசாலைகளை மேனாடுகளில் ஒவ்வொரு சிறு நகரத்திலும் காணலாம். இலவச புத்தகாலயங் களும், பத்திரிகைக் கூடங்களும் எண்ணிறந்தன. அரசாங்கத்தாரும், பொது ஜனங்களும் தாராளமாக நன்கொடைகள் வழங்கி இவ்வாசகசாலைகளைப் போற்றி வளர்த்து வருகின்றனர். ஆனால்...

“ நூல் வலை” 0

“ நூல் வலை”

மகாராஷ்டிரர்கள் “நூல்வலை”யில் வீழாமல் தப்ப உறுதி கொண்ட தன் பொருட்டு அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவதாக மகாராஷ்டிர மாகாண மகாநாட்டில் தலைமை வகித்த ஸ்ரீமான் தேசமுகர் கூறினாராம். சட்டசபை யென்னும் மாயவலையில் சிக்குண்டவர்களுக்கு மகாத்மா அருளிய “பக்தி வலை” யின் பெருமை எவ்வாறு புலனாகும்? ஆகவே இவ்வாறு இவர்களிக் கூத்தாடுவதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் சுயராஜ்யக் கட்சியினர் பெல்காம் ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைக்கும் நேர்மையைப் பற்றி மட்டும் இங்கு சிறிது ஆராய்வோம். சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தைப் பற்றி ஒத்துழையாதோர் சற்றே வாயைத் திறந்து “இம்” என்றால் போதும்; உடனே “குடி முழுகிற்று” “ஒற்றுமை குலைந்தது” என்று கூக்குரல் கிளம்புகிறது. ஆனால் மகாராஷ்டிர சுயராஜ்யக் கட்சியினரோ தங்கள் மாகாண மகாநாட் டில் நூல் சந்தா ஒழிய வேண்டுமென்று பகிரங்கமாகத் தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறார்கள். காந்தியடிகளைக் காங்கிரஸை விட்டு விரட்டி விடுவதே இவர்கள் நோக்கமென்பதை அக்கிராஸனர் தமது உரையில் தெளிவாகக் கூறிவிட்டார். லோகமான்யர் பிறந்த மகாராஷ்டிரம் இந்நிலைக்கோ...

இயந்திரமும் கை இராட்டினமும் 0

இயந்திரமும் கை இராட்டினமும்

நூல் நூற்கும் விஷயத்தில் விசை இயந்திரத்திற்கும் கை இராட்டினத் துக்குமுள்ள தார தம்மியத்தை நமது நாட்டாரில் சிலர் நன்கு அறிந்து கொள்ளவில்லையென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இராட்டை சுற்றுவதினால் நமக்கு வேண்டிய அளவு நூல் உற்பத்தி செய்வது கஷ்ட மென்றும், போதுமான கூலியும் இதில் கிடைக்காதென்றும், இயந்திரத்தினால் அதிக நூல் உற்பத்தி செய்யக்கூடுமென்றும், கூலிக்காரர்களுக்கு அதிகக் கூலி கிடைப்பதுடன், முதலாளிகளுக்கும் நல்ல லாபம் வருகிறதென்றும் இவர்கள் சொல்லுகிறார்கள். நமது நாட்டின் கொடிய வறுமைக்கு முக்கிய காரணம் மேற்சொன்ன இயந்திரங்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இயந்திரப் பெருக்கினால் ஒருசில கூலிகளும் தனிப்பட்ட முதலாளிகள் சிலரும், பிறநாட்டு இயந்திர வியாபாரிகளுந்தான் பிழைக்க முடியுமே தவிர ஜனங்கள் பிழைக்க முடியாது. நமது ஏழை நாட்டில் வேலையில்லாமல் கஷ்டப்படுவோர் எத்தனையோ பேர் குறைந்த அளவு கூலியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இவர்களெல்லோருக்கும் இயந்திர ஆலைகளில் வேலை கொடுக்க முடியாது. ஒவ்வொரு தொழிலிலும் இம்மாதிரியே அநேகம் பேருடைய கூலியை இயந்திரங்கள் விழுங்கி விடுகின்றன....

ஸ்ரீமான் பி. தியாகராய செட்டியாரின் மரணம் 0

ஸ்ரீமான் பி. தியாகராய செட்டியாரின் மரணம்

பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தின் தலைவராக விளங்கிவந்த ஸ்ரீமான் பி. தியாகராய செட்டியார் அவர்கள் 28.4 .25 ² இரவு 9.45 மணிக்கு இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகெய்திய செய்தியைக் கேள்வி யுற்று நாம் பெரிதும் வருந்துகின்றோம். இச்செய்தி தமிழ்மக்கள் அனைவரை யும் பெருந்துக்கத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமின்று. அவரது இடது கன்னத்தில் முளைத்த ஒரு சிறு கொப்புளமே அவரது ஆவியைக் கொள்ளை கொண்ட கூற்றுவன்! என்னே மனிதர்தம் வாழ்நாளின் நிலை! அரசியல் உலகில் எமக்கும் அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை வடதுருவம், தென் துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும். எனினும், அப்பெரியாரின் அருங் குணங்களையும், அளவில்லா தேசபக்தியையும், ஆற்றலையும் நாம் போற்று கிறோம். ஒரு நாள் சென்னைக் கடற்கரையில் இவரது அரசியல் கொள்கை களை வெகு தீவிரமாகக் கண்டித்துப் பேசின ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களை மறுநாள் காலையில் சென்னைத் தெருவில் சந்தித்த போது; ஸ்ரீமான் முதலியாரை விளித்து “நண்பனே! நேற்று கடற்கரையில் நீ...

நமது பத்திரிகாலயத் திறப்பு விழா ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின் சொற்பொழிவு 0

நமது பத்திரிகாலயத் திறப்பு விழா ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின் சொற்பொழிவு

மெய்யன்பர்களே ! உலகில் நடைபெறும் நிகழ்ச்சி முறைகளைப் பலருக்குத் தெரிவிப்ப தற்கும், நல் உணர்ச்சியை மக்களிடையெழுப்புதற்கும் பத்திரிகைகள் இன்றியமையாதன; கிராமாந்திரங்களில் விஷயம் யாதொன்றும் தெரிந்து கொள்ள இயலாதவர்கள் பத்திரிகைகளினால் வியாபாரம், அரசாங்க முறை, தற்கால நிலை முதலியவைகளைத் தெரிந்து கொள்வார்கள்; பல பெரியார் களின் கருத்தை அறிந்து கொள்வார்கள். வியாபாரம், விவசாயம் முதலிய ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பத்திரிகையிருத்தல் அவசியமாகும். பல ஜனங்களுக்குப் பிரயோஜனமாகும். விஷயங்கள் பலவற்றிற்குப் பல பத்திரிகைகள் அவசியம். ஸ்ரீமான் நாயக்கரால் ஆரம்பிக்கப்படுகின்ற இக் ‘குடி அரசு’ பத்திரிகையின் தன்மையைக் கவனித்தால் மிகுந்த ஆராய்ச்சி யுடன் ஆரம்பிக்கப்போகும் ஒரு பத்திரிகையாகக் காணப்படுகின்றது. ஸ்ரீமான் நாயக்கரவர்கள் பேசியதிலிருந்து பல நாள் யோசித்து ஆரம்பிக்கப் படும் பத்திரிகை என்று தோன்றுகிறபடியால் முன்யோஜனையுடன் இறங்குப வர்கள் என்றும் பின் வாங்காது தைரியமாய் நிலைபெற்று நிற்பார்கள் என்பது உறுதி. மிகுந்த செல்வாக்கையுடைய ஸ்ரீமான் நாயக்கர் அவர்கள் நடத்தும் இப்பத்திரிகை உங்களுக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மிகுந்த...

நமது பத்திரிகாலயத் திறப்புவிழா 0

நமது பத்திரிகாலயத் திறப்புவிழா

சகோதரர்களே! நானும் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளை* அவர்களும் இப் பத்திரிகை நடத்துவதைப்பற்றி பலநாள் ஆழ்ந்து யோசித்து இப்பொழுதுதான் நடத்தத் துணிந்தோம். இப்பத்திரிகையை ஆரம்பிக்கும் நோக்கம்: தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடையுணர்த்துவதற்கேயாம். ஏனைய பத்திரிகைகள் பலவிருந்தும், அவைகள் தங்களது மனசாட்சிக்குத் தோன்றிய உண்மையான அபிப்பிராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவை களைப் போலல்லாமல் பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்பதே எமது நோக்கம். இப் பத்திரிகாலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்றப் பத்திரிகைகளிடமுள்ள குறை யாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன். குடி அரசு – சொற்பொழிவு – 02.05.1925

“குடி அரசு” 0

“குடி அரசு”

தாய்த்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்றளவு ஆற்றிவரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம். ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனே நடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்தற்குரியார். இவ்வருங் குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் ‘என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற பெரியார் வாக்கை கடை பிடித்தே ……………………. வலிமையால் இப்பத்திரிகை நீண்டகாலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத்தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிதுமுடையோம். இஃதோர் பத்திரிகை யுகமாகும். நமது தமிழ் நாட்டில் நாளடைவில் பத்திரிகைகளின் தொகை பெருகிக்கொண்டே வருகிறது. இதுகாறும் எத் துணையோ பத்திரிகைகள் தோன்றின ; அவைகளுள் சிறிதுகாலம் நின்று மறைந்தொழிந்தன சில; நின்று நிலவுகின்றன பல. பத்திரிகைகள் பல...

குடி அரசு தோற்றம் கொண்ட காலம் 0

குடி அரசு தோற்றம் கொண்ட காலம்

1925 மே மாதம் டிசம்பர் வரை எட்டு மாதங்கள் அந்த இதழ் பதிவு செய்துள்ள பெரியாரின் எழுத்தும் பேச்சும் அடங்கிய தொகுப்புதான் உங்கள் கரங்களில் தவழ்கிறது. இதே போன்று ஒரு தொகுதியை 2003 ஆம் ஆண்டிலேயே பெரியார் திராவிடர் கழகம் சேலத்தில் நடத்திய தமிழர் வழி பாட்டுரிமை மாநாட்டில் வெளியிட்டதைக் குறிப்பிட விரும்புகிறோம். பெரியாரின் எழுத்து பேச்சுக்களை காலவரிசைப்படி தொகுத்து வெளிச் சத்துக்குக் கொண்டுவந்து விட வேண்டும் என்ற எமது பெரும் வேட்கையில் எழுந்த முதல் முயற்சி என்றே கூறலாம். தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் 1926 ஆம் ஆண்டு குடி அரசு பதிவுசெய்த பெரியாரின் எழுத்து, பேச்சுகளை இரண்டு தொகுதிகளாக வெளிக்கொண்டு வந்தோம். அதன் பிறகே மற்றொரு புதிய சிந்தனைக்கு வந்தோம். ஒவ்வொரு ஆண்டாக அவ்வப்போது தொகுதி களை வெளியிடுவதை விட ஒரு காலகட்டத்தை நிர்ணயித்து பெரியாரின் எழுத்துப் பேச்சுகளைத் தொகுத்து காலவரிசைப்படி ஒரே நேரத்தில் வெளி யிடலாம் என்பது...

முதற் பதிப்பின் வெளியீட்டாளர்  உரை 0

முதற் பதிப்பின் வெளியீட்டாளர் உரை

1925 மே திங்களில் பெரியார் ‘குடி அரசு’ இதழை தனது நண்பர் ஈரோடு வா.மு.தங்கப்பெருமாள்பிள்ளையையும் ஆசிரியராக உடன் இணைத்துக்கொண்டு தொடங்குகிறார். உடல் நலம் சீர்கெட்ட வா.மு.த 19.7.1925 இதழுடன் விலகிட பெரியார் மட்டுமே தொடர்ந்து நடத்துகிறார். 2.5.1925 இல் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளைக்கொண்டு ‘குடி அரசு’ இதழை வெளியிட்ட பெரியார், சோவியத் புரட்சி நாளான நவம்பர் 7 ஆம் நாளைத் தேர்ந்தெடுத்து 1928 இல், ‘ரிவோல்ட்’ ( சுநஎடிடவ ) என்ற ஆங்கில வார ஏட்டைத் தொடங்கி 55 இதழ்கள் வரையும் வெளி யிட்டுள்ளார். 20.11.1933 இல் ‘புரட்சி’ என்ற வார ஏட்டைத் தொடங்கி சிறிது காலம் நடத்தியுள்ளார். அதன்பின் 15.3.1934 இல்‘பகுத்தறிவு’ என்ற நாளேட் டைத் தொடங்கி இரண்டு மாத காலத்தில் நிறுத்தி, அதையே தொடர்ந்து வார ஏடாகவும் 1.5.1935 முதல் மாத ஏடாகவும் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நடத்தியுள்ளார். 1.6.1935 இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும்...

வெளிவந்துள்ள இதழ்கள் 0

வெளிவந்துள்ள இதழ்கள்

(அ) குடி அரசு (வார இதழ்) மாலை – 1 02.05.1925 (மாலை 1 – மலர் 1 ) முதல் 25.04.1926 மாலை 1 – மலர் 48) முடிய 48 வாரம் மட்டுமே இதழ் வெளிவந்துள்ளது. 1. 04.10.1925 இல் வெளிவரவேண்டிய இதழ் அச்சுக்கூடம் மாற்றியக் காரணத்தால் வெளிவரவில்லை. 2. 21.02.1926 இல் வெளிவரவேண்டிய இதழ் அச்சு இயந்திரம் ஒடிந்து போனதால் வெளிவரவில்லை. 3. 04.04.1926 மற்றும் 11.04.1926 ஆகிய நாள்களில் வெளிவரவேண்டிய இதழ்கள் புதிய அச்சுக்கூடம் ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட கால நீட்டத் தால் வெளிவரவில்லை. மாலை – 2 02.05.1926 (மாலை 2 – மலர் 1 ) முதல் 24.04.1927 (மாலை 2 -மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது. மாலை – 3 01.05.1927 (மாலை 3 – மலர் 1 ) முதல் 22.04.1928 (மாலை 3- மலர்...

தலையங்கப் பக்கம் மாற்றங்கள் 0

தலையங்கப் பக்கம் மாற்றங்கள்

தொடக்கத்தில் தலையங்கங்கள் இதழ்களின் நடுப்பக்கத்தில் வெளிவந் துள்ளன. 10.02.1935 (மாலை 9 – மலர் 27) முதல் 09.06.1935 (மாலை 9 – மலர் 44) முடிய உள்ள குடி அரசு இதழ்களில் மூன்றாம் பக்கத்தில் தலையங்கங்கள் வெளி வந்துள்ளன. 02.05.1925 (மாலை 1 – மலர் 1) முதல் இதழ் தலையங்கப் பக்கத்தில் கை இராட்டினமும் பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும். வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின் (குறள்) என்ற மூன்று குறட்பாக்களும் இடம் பெற்றுள்ளன. 23.08.1925 இதழி லிருந்து குறள்கள் எடுக்கப்பட்டு கை இராட்டினத்துடன் அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி அரும்பசி யெவற்கும் ஆற்றி மனத்துளே பேதா பேதம் வஞ்சம் பொய் களவு சூது சினத்தையும் தவிர்ப்பா யாகில் செய்தவம் வேறொன் றுண்டோ உனக்கிது உறுதியான உபதேசம் ஆகும் தானே. என்ற...

குடி அரசு : ஆசிரியர், பதிப்பாளர் மாற்றங்கள் 0

குடி அரசு : ஆசிரியர், பதிப்பாளர் மாற்றங்கள்

‘குடி அரசு’ முதல் இதழின் ஆசிரியர்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வா.மு.தங்கப்பெருமாள் பிள்ளை ஆகியோர்ஆவர். 07.06.1925 இதழில் வா.மு.தங்கப்பெருமாள் பிள்ளையின் ‘சாதி’ப் பட்டம் நீங்குகிறது. 26.07.1925 இதழிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மட்டுமே ஆசிரியராகிறார். 25.12.1927 இதழிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பெயரிலுள்ள ‘சாதி’ப்பட்டம் நீங்குகிறது. 1931 இல் பெரியார் உலகப்பயணம் மேற்கொண்டதால் 01.11.1931 முதல் சாமி. சிதம்பரனார் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார். பயணம் முடிந்து ஈரோடு திரும்பும் வரையில் அப்பொறுப்பில் இருக்கிறார். 29.11.1931 குடி அரசு முதல் 19.11.1933 குடி அரசு வரை அட்டையில் ஆசிரியர் பெயர் இல்லாமல் இதழ் வெளிவருகிறது. 19.11.1933 இதழோடு இதழ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் 13.01.1935 முதல் வெளிவரத் தொடங்குகிறது. அப்போது ஆசிரியர் ஈ.வெ.கிருஷ்ணசாமி. 25.12.1938 வரை அவரே ஆசிரியராக நீடிக்கிறார். முதல் இதழின் பதிப்பாளரான க. அப்பையா 20.09.1925 இதழ்வரை பதிப்பாளராக இருக்கிறார். 27.09.1925 முதல் ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் 18.04.1926 முதல் சா. ராமசாமி நாயக்கரும் பிறகு...

குடி அரசு : தோற்றத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் 0

குடி அரசு : தோற்றத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்

பெரும்புரட்சிக்கு வித்திட்ட பெரியாரின் ‘குடி அரசு’ தொடக்க காலங் களில் பச்சை நிற அட்டையுடனே வெளிவந்தது. எனவே பச்சை அட்டைக் ‘குடி அரசு’ என்ற செல்லப் பெயரையும் வாசகர்கள் சூட்டினர். ‘குடி அரசு’ ‘கொங்கு நாடு’ எனும் பெயர்களில் பெரியார் 19.01.1923 லேயே பத்திரிக் கைக்கான பதிவை செய்துள்ளார் என்றாலும் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து 02.05.1925 அன்றுதான் முதல் இதழ் வெளிவந்தது. ( 2-5-25 சனிக்கிழமை. இனி ஞாயிறுதோறும் வெளிவரும் -அட்டை ) தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதழ் வெளிவருகிறது. ஆண்டின் முதல் இதழ், ஆசிரியர் பெயர் மாற்றம் பெற்றவை, மாற்றம் பெற்ற முகப்பு அட்டைகள் அந்தந்தத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ‘மாலை’ என்றும், இதழுக்கு ‘மலர்’ என்றும் பெயர் சூட்டப் பட்டிருக்கிறது. முதல் பக்க அட்டையில் பாரதியார் பாடல் வரியுடன் தான் இதழ் தொடங்கியது. “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்” “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற...

குடி அரசு : எதிர்நீச்சல் பயணம் 0

குடி அரசு : எதிர்நீச்சல் பயணம்

1922 ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கோவை சிறையில் பெரியார் அடைக்கப்பட்டபோது, அவரும் அவருடன் சிறையில் உடனிருந்த ஈரோடு கருங்கல்பாளையம் வழக்கறிஞர் தங்கபெருமாள் பிள்ளையும் இணைந்து சிந்தித்த திட்டத்தின் விளைச்சல்தான் ‘ குடி அரசு.’ சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், 1923 ஆம் ஆண்டிலேயே ‘ குடி அரசை’ பதிவுசெய்த பெரியார், 02.05.1925 ஈரோட்டில் ஞானியார் அடிகளைக் கொண்டு வெளியிட்டார். ஞாயிறுதோறும் ஓரணா விலையில் வெளிவரத் தொடங்கியது குடி அரசு. முதலில் அட்டையில் பாரதத் தாய், இராட்டை சுற்றும் காந்தியார், நெசவு செய்யும் பெண், உழவு செய்யும் விவசாயி, சுத்தி யால் அடிக்கும் தொழிலாளி, மூட்டை சுமக்கும் பாட்டாளி படங்களோடும், ‘எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர் இனம்,’ ‘ சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி பாடல்களோடும் குடி அரசு வெளிவரத் தொடங்கியது. தொடக்கக் காலங்களில் வார இதழின் 12 பக்கங்களையும் தாமே எழுதி வந்ததாய் பெரியார் குறிப்பிடுகிறார். ( குடி...

குடி அரசு : ஒரு பார்வை 0

குடி அரசு : ஒரு பார்வை

முதலில். . . . . . 1925 – 1938 காலகட்டம் வரை பெரியாரின் எழுத்துகளையும் பேச்சு களையும் குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களிலிருந்து தொகுத்திடும் பணியில் பின்பற்றிய நெறிமுறைகளை விளக்கிட விரும்புகிறோம். பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் எந்த மாற்றமும் இன்றி வெளியிடுவதில் அல்லது அப்படியே வெளியிடுவதில் முழுமையான கவனமும் கவலையும் செலுத்தினோம். பெரியாரின் எழுத்துகள் குறித்து திருநெல்வேலியில் 28.11.1927 இல் நடைபெற்ற மாவட்ட சுயமரியாதை சங்க மாநாட்டில், மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய தமிழறிஞர் இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் பேசியதையும் அதற்கு பெரியார் தந்த பதிலையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம். “ குடி அரசுக்கு இன்றிருக்கும் யோக்கியதை உங்கட்க்குத் தெரியும். அதில் மக்கள் மனதை கவரத்தக்க அளவுகடந்த சக்தி இருப்பதற்குக் காரணம் அழகான ஆராய்ச்சியா? தமிழா? இல்லை. பின்? அவர் உள்ளக்கிடக்கிலுள்ளதை அப்படியே எடுத்துச் சொல்லுவது, அதுவும் மிகச்சாதாரண தமிழிலேயே தான் இருக்கிறது....

காலவரிசைத் தொகுப்பு : காலத்தின் தேவை 0

காலவரிசைத் தொகுப்பு : காலத்தின் தேவை

வரலாறு என்பது ஆட்சியாளர்களின் காலவரிசைப் பட்டியல் அல்ல; அதைவிட ஆழமானது. வரலாறு என்பது மனித வாழ்வு பற்றியது; மனித சமூகத்தின் வாழ்வியக்கம் பற்றியது; வேறு மொழியில் சொல்ல வேண்டு மானால், சமூக மாற்றங்களின் தொகுப்பே வரலாறு. வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் சமுதாயமானது புராதனப் பொதுவுடைமை, அடிமை உடைமை, நில பிரபுத்துவம், முதலாளித்துவம், சோஷலிசம் என்ற படிநிலைகளில் மாற்றம் பெறுவதாக சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்தியச் சமுதாயமானது இப்படிப்பட்ட படி நிலைகளை கடந்து வந்தது என்பதை வரலாற்றுச் சான்றுகள் அடிப்படையில் நிர்ணயிக்க இயலாது என்று மார்க்ஸிய வரலாற்று ஆசிரியர் டி.டி.கோசாம்பி கூறுகிறார். இதைத்தான் காரல் மார்க்சும், “ இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் அம் சத்தில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் மிகத் தொல் பழங்காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை அதன் சமுதாய நிலை மாற்றமின்றி தேக்க நிலையில் இருந்து வந்துள்ளது” என்று கூறினார். ( கூhந க்ஷசவைiளா...

கூட்டுழைப்பின் விளைச்சல் 0

கூட்டுழைப்பின் விளைச்சல்

1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடு தமிழக வரலாற்றுப் போக் கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கை யும் சமூகப்புரட்சிப் பார்வையில் புரிந்து கொள்ளவும்; பெரி யாரின் பொதுவாழ்வில் நிகழ்ந்த இயங்கியல் மாற்றங்களையும், கொள்கை, வேலைத்திட்ட வளர்ச்சிப் போக்குகளையும் வெளிப் படுத்தவுமான மிகச்சிறந்த ஆவணமாகும். பெரியார் காங்கிரசில் பணியாற்றிய கால கட்டம் நெடு கிலும் தொய்வின்றி வலியுறுத்தி வந்த வகுப்புரிமை கோரிக்கை கள் சூழ்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்ததன் உச்சமாய் 1925 நவம்பர் 21, 22 நாள்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கட்சி விதிகளுக்கு இணங்க உரிய எண்ணிக்கை உறுப்பினர்களுக் கும் மேலதிகமாய் ஒப்புதல் பெற்று முன் வைத்த வகுப்புரிமைத் தீர்மானம் விவாதத்துக்குக்கூட எடுத்துக்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டதால் தன் நண்பர்களுடன் வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். சுயமரியாதை இயக்கம் சுடர்விட்டுப் பரவி காட்டாற்று வெள்ளம்போல் சமுதாயக் கசடுகளை அடித்துச் சிதைத்தவாறு முழு...

0

ஈரோடு தெற்கு மாவட்டக் கலந்துரையாடல்

29-7-2015 அன்று ஈரோடு ( தெற்கு ) மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் முன்னிலையிலும் ஈரோடு ரீஜென்சி விடுதியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மன்னையில் கனல்மதியின் கவிதை நூல் அறிமுகம் 0

மன்னையில் கனல்மதியின் கவிதை நூல் அறிமுகம்

கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கில் 8ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி கனல்மதி எழுதிய ‘இப்படிக்கு மழை’ கவிதை நூல் அறிமுகம் நடந்தது. திருப்பூரில் அரசுப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வி படிக்கும் கனல் மதி, கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் கழகப் பொறுப்பாளர் முகில்ராசு, அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி ஆகியோரின் மகள் ஆவார். நூல் அறிமுக நிகழ்வு எழுத்தாளர் மருதம் சோதி தலைமையில் நடந்தது. மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி. ஜெகவர்சாதிக் நூலை வெளியிட, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தோழர் சேதுராமன் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் பசு. கவுதமன் நூல் திறனாய்வு செய்தார். கவிதைகளை எழுதிய மாணவி கனல்மதி ஏற்புரை வழங்கினார். பெரியார் முழக்கம் 30072015 இதழ்

பேராசிரியர் கல்விமணி வலியுறுத்தல் சிறப்பு கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும் 0

பேராசிரியர் கல்விமணி வலியுறுத்தல் சிறப்பு கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்

நாட்டில் சிறப்பு கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை உடனடியாக கைவிட வேண்டும் என மன்னார்குடியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி புரட்சி நாள் கருத்தரங்கமாக நடைபெற்றது. கருத்தரங்கில் காமராஜர் படத்தை, முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவாராஜமாணிக்கம் திறந்து வைத்து பேசினார். அதுபோல் பெரியார் படத்தை, தஞ்சை தமிழ்பல்கலைக்கழக பேராசிரியர் வெற்றி செல்வன், அம்பேத்கர் படத்தை, திருவாரூர் கவுன்சிலர் வரதராஜன் ஆகியோர் திறந்து வைத்து பேசினார்கள். தொடர்ந்து, ‘தமிழக பள்ளி-கல்வி பிரச்சனைகளும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் பிரபா கல்விமணி பேசினார். அப்போது, “மத்திய மாநில அரசுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும் அனைத்திந்திய அளவில் நடைபெறும் அனைத்து நுழைவுத்தேர்வுகளிலும், தமிழிலும் கேள்வித்தாள் அளிக்கப்படவேண்டும். மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கும் ஐஐடி மற்றும்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

‘வாஸ்து’ நம்பிக்கையால் டெல்லியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் 70 எம்.பி.க்கள் குடியேறவில்லை – செய்திவிடாதீங்க… டெல்லிக்குப் போகும் விமானத்துலயும் வாஸ்துப்படி இருக்கை கேளுங்க! இல்லாவிடில் டில்லிக்கும் போகாதீங்க! தில்லை நடராசன் கோபுரத்தை மறைத்து கட்டிடம் கட்டுகிறார்கள், தீட்சதர்கள். – செய்திகோபுரத்தை இடிச்சுட்டு ‘பிளாட்’ போட்டுக்கூட விப்பாங்க; அதுக்கெல்லாம் உச்சநீதிமன்றத்துல சு.சாமி அதிகாரம் வாங்கிக் கொடுத்திருக்காரு! கோயில்களில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வது ஆகமத்துக்கு எதிரானது. – இந்து அமைப்புகள் எதிர்ப்புசூரிய பகவானையும் ‘சூத்திரர்’ பட்டியலில் சேர்த்துட்டேளா? திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக ரீதியாக எடுக்கும் முடிவுகளால் ‘புரோக்கர்’களுக்குத் தான் பயன். – ‘தினமலர்’ விடுங்கய்யா… ஏழுமலையான் புரோக்கர்களான அர்ச்சகர்கள் மட்டும்தான் காலம்காலமாய் பயனடைய வேண்டுமா என்ன? அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம். – செய்திமண்சோறு உண்டார்; மண்ணில் உருண்டார்; ‘மந்திரி’யும் இழந்தார்! கடவுள் பெயர்களை வணிக நிறுவனங்கள் வர்த்தகத்துக்குப் பயன்படுத்த தடை இல்லை. – டெல்லி உயர்நீதிமன்றம்வர்த்தகத்துக்குப் பயன்படுத்தலாம்; வர்த்தக மோசடிக்கும்...

75ஆம் பிறந்த நாளில் கழகம் வழங்கியது பெரியார் பெருந்தொண்டர் சதாசிவத்துக்கு “பெரியாரியல் பேரொளி விருது” 0

75ஆம் பிறந்த நாளில் கழகம் வழங்கியது பெரியார் பெருந்தொண்டர் சதாசிவத்துக்கு “பெரியாரியல் பேரொளி விருது”

பெரியாரியல் கொள்கைகளை கிராமம் கிராமமாக சென்று பரப்பும் பணியை தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்துவருபவரும், ஏராளமான பெரியாரியல் பரப்புரையாளர்களை உருவாக்கியவருமான தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் (வளவன்) அவர்களுக்கு 24-7-2015ஆம் நாள் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகும். பேச்சின்போக்கில் இதை அறிந்துகொண்ட மேட்டூர் நகரக் கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்தநாள் விழா எடுக்க முடிவுசெய்து கழகத் தலைமையிடம் அனுமதி கோரினர். கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் கலந்துபேசி அவரது நீண்டகால பெரியாரியல் பரப்புரைப் பணிகளைக் கருத்தில் கொண்டு அவ்விழாவை நடத்த அனுமதித்ததோடு, அவருக்கு “பெரியாரியல் பேரொளி ” என்ற விருதினை அளிக்கவும் ஆலோசனைக் கூறினர். அதையடுத்து 24-7-2015 வெள்ளியன்று மேட்டூர் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அவ்விழாவை எடுத்தனர். அது விழா என்ற அளவோடு முடிந்துவிடாமல் அதை ஒரு பயிலரங்கமாகவும் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ இட ஒதுக்கீட்டின் நியாயங்கள்’ என்ற தலைப்பில் ஒரு...

கிருஷ்ணகிரியில் கழகத் தலைவர் பங்கேற்ற காமராசர் விழா 0

கிருஷ்ணகிரியில் கழகத் தலைவர் பங்கேற்ற காமராசர் விழா

கிருஷ்ணகிரி, நுகர்வோர் சேவை மையம் நடத்திய கல்விக்கண் தந்த கர்மவீரர் காமராசரின் 113 வது பிறந்த நாள் விழா கல்வி விழிப்புணர்வு விழாவாக நடைபெற்றது. இவ்விழாவை ஒட்டி கிருஷ்ணகிரியில் 21.07.2015 செவ்வாய் மாலை 6 மணியளவில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நுகர்வோர் பொதுச்சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ராஜேஷ் ஜெயராமன் தலைமை தாங்கினார். இந்த விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். உரையில் காமராசருக்கும் பெரியாருக்குமான உறவு, கல்விப் பெருக்கத்துக்கு ஆற்றிய பணிகள், பசுவதை தடை குறித்து அவரது எதிர்ப்பால் அவர்மீது இந்து மதவெறி அமைப்பினரின் தாக்குதல் ஆகியவற்றை விளக்கிப் பேசினார். விழாவின் தொடக்கத்தில் புதுவை அதிர்வுக் கலைகுழுவின் பறையிசை, கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பல்வேறு அரசியல் அமைப்புச் சேர்ந்தவர்களும், இலக்கிய அமைப்பினரும் உரையாற்றினர். முன்னதாக கிருட்டிணகிரியில் கழகத் தலைவர் பங்கேற்ற காமராசர் விழா கிருஷ்ணகிரி கொத்தபேட்டா...

தண்டனையைக் குறைக்க கழகம் கோரிக்கை 0

தண்டனையைக் குறைக்க கழகம் கோரிக்கை

“யாகூப் மேமனின் மரணதண்டனையை கருணை அடிப்படையில் இரத்து செய்து தண்டனை குறைப்பு வழங்க வேண்டும்” என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது. “மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முதன்மையான குற்றவாளிகள் இருவர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்ட நிலையில், குற்றவாளியின் தம்பியான யாகூப் மேமன் தானாக முன் வந்து தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டார். அவ்வாறு தன் மீது குற்றம் இல்லை என தானாகவே முன் வந்தவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் தூக்கு கயிற்றின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போது மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும் யாகூப் மேமனை தூக்கிலிடப் போவதாக அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல. உலகம் முழுவதும் மரணதண்டனைக்கு எதிராக அனைத்து மனித உரிமை ஆர்வலர்களும் குரல் எழுப்பிக் கொண்டுள்ள நிலையிலும், பல நாடுகள் மரணதண்டனையை இரத்து செய்துவிட்ட நிலையிலும் மனித நேயமுள்ள நாகரீக சமுதாயத்தை நோக்கி உலக நாடுகள் சென்று கொண்டிருக்கும் இந்தச்சூழலில் இந்தியாவில் இப்படி...

தூக்குத் தண்டனையை நீக்குக 0

தூக்குத் தண்டனையை நீக்குக

இந்தியாவில் தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பச்சன்சிங் வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு, பெரும்பான்மை அடிப்படையில் தூக்குத் தண்டனைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 30ஆம் தேதி தூக்கிலிடுவதற்கு பம்பாய் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாக்கூப் மேமனுக்கு தேதி குறித்த நிலையில் தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ், பதவி ஓய்வுக்குப் பிறகு தூக்குத் தண்டனைக்கு எதிராக கருத்துகளை வலியுறுத்தி வருகிறார். தற்போது யாக்கூப் மேமன் பிரச்சினையில் தூக்குத் தண்டனைக்கு எதிராக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு நீதிபதி தூக்குத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றம் என்று கருதுவதால் மட்டுமே தூக்குத் தண்டனை விதித்திடக் கூடாது என்று கூறியுள்ள முன்னாள் உச்சநீதிமன்ற...

நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட மேமன் 0

நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட மேமன்

“1994 ஜூலை மாதம், தனது பெற்றோர், மனைவி மற்றும் 40 நாள் ‘கைக்குழந்தை’யோடு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்மந்தமில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக ‘சரண்’ அடைந்தவர் தான் யாகூப் மேமன். ” பாபர் மசூதியை இடித்த கையோடு, தொடர்ந்து 3 மாதங்களாக முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், 12-03-1993 அன்று மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தது இந்திய அரசு. தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட பலர் மீது, புலனாய்வுத் துறையினரின் பார்வை விழுந்துக் கொண்டிருந்த வேளையில் ‘ஆடிட்டர்’ யாகூப் மேமன்மூலம் குண்டு வெடிப்புக்கான பணபரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாககூறி, யாகூப் மேமன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. தன் மீதான ‘கறை’யை துடைக்கும் பொருட்டு, 1994 ஜூலை மாதம், தனது பெற்றோர், மனைவி மற்றும் 40 நாள் ‘கைக் குழந்தை’யோடு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்மந்தமில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக ‘சரண்’ அடைந்தவர்தான் யாகூப் மேமன்....