Author: admin

0

தொடரும் இனப்படுகொலைக்கு… தமிழீழம் ஒன்றே தீர்வு – இன எழுச்சிக் கருத்தரங்கம்

9-8-2015 ஞாயிறு, மாலை 5-30 மணிக்கு, தமிழீழ விடுதலைக்கான மாணவர்-இளைஞர் கூட்டியக்கத்தின் சார்பாக ” தொடரும் இனப்படுகொலைக்கு …… தமிழீழம் ஒன்றே தீர்வு” எனும் முழக்கத்தை முன்வைத்து, இன எழுச்சிக் கருத்தரங்கம்,சேலம் விஜயராகவாச்சாரி நினைவு அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் இளைஞர் இயக்கத்தின் தலைவர் ஜெகதீஷ் தலைமை ஏற்றார். தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீர.பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் பல்வேறு மாணவர் இயக்கங்களின் பிரதிநிதிகள் உரையாற்றினர். சேலம் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன், கோவை வழக்கறிஞர் ப.சு. சிவசாமித் தமிழன், நோர்வே முனைவர் விஜய் அசோகன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை. கு. இராமகிருட்டிணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

0

சேலம் (கிழக்கு) மாவட்டக் கலந்துரையாடல்

சேலத்தை அடுத்த கருப்பூரில் உள்ள மாவட்டத் தலைவர் தோழர் க. சக்திவேல் அவர்களின் பண்ணை இல்லத்தில் 5-8-2015 பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற்றது

0

பெரம்பலூர் மாவட்டக் கலந்துரையாடல்

7-8-2015 அன்று, பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் அக்ரி ஆறுமுகம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது

0

நாமக்கல் மாவட்டக் கலந்துரையாடல்

திருச்செங்கோடு, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனக் கட்டிடத்தில் நாமக்கல் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 6-8-15 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அசார்சமாக – அசட்டையாக, அக்கறையில்லாமல், ஈடுபாடின்றி அபஜயமடைய – தோல்வியடைய ஆத்ம ஸ்துதி – தற்புகழ்ச்சி உபத்ரவித்து – தொல்லை கொடுத்து கர்ண பரம்பரை – செவி வழி ( செய்தி ) கால பரியந்தம் – காலம் வரை குசினிக்காரன் – சமையல்காரன் குதிரை தேய்தல் – குதிரை உடலைத் தேய்த்து அழுக்கு அகற்றி பளபளப்பாக்குதல் சமராதனை – பார்ப்பனர்க்கு விருந்திடல், பிராமண போஜனம் சலீஸாக – மலிவாக சாச்வத – நிரந்தரமான, நித்தியம், திடம், மோட்சம் சைன்யம் – படை தற்பித்து – பயிற்சி தாத்பிரியமான – விளக்கம், நோக்கம், பாராட்டு திரவிய சகாயம் – பொருள் உதவி திரவிய அபேiக்ஷ – பண ஆசை , பொருள் ஆசை திரிகரண சுத்தியாக – மனம், மொழி, மெய் ( மனோ வாக்கு காயம்) ஆகிய மூன்று பொறிகளுக்கு உண்மை யாக, தூய்மையாக திருஷ்டாந்தம் – எடுத்துக்காட்டு தூஷணை...

அய்யங்காரின் பார்ப்பனப் பிரசாரம் 0

அய்யங்காரின் பார்ப்பனப் பிரசாரம்

ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார், ஸ்ரீமான்கள் முத்துரங்க முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார் ஆகிய இருவரையும் பார்ப்பனரல்லாதார் என்கிற பெயருக்காக கூட இழுத்துக் கொண்டு தென்னாட்டில் பார்ப்பனப் பிரசாரம் செய்து வருவதும், அவ்விரு கனவான்களை ஏவிவிட்டு பார்ப்பனரல் லாதாருக்கு விரோதமாகப் பேசும்படி செய்து வருவதும் பத்திரிகையில் பார்த்திருக்கலாம். ஆனாலும் அவர்கள் போகிற இடங்களில் ஜனங்கள் கேள்விகள் கேட்க ஆசைப்படுவது இந்தக் காலத்தில் மிகவும் சகஜமானது என்பதும் யாவருக்கும் தெரியும். பிரசாரத்திற்குப் போகிறவர்கள் கூடுமானவரையிலா வது நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது நியாயமான பிரசாரர்களின் கடமை. அப்படிக்கில்லாமல் கேள்வி கேட்கிறவர்களை அடக்கி விடவும், அவர்களைத் தொந்தரவு செய்ய ஆள்களைத் தயார் செய்து ஏவி விடுவதும், அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொள்ள முடியுமேயல்லாமல் பிரசாரம் கோரிய பலனைத் தருவது கஷ்டமான காரியம் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இதுவரையில் பார்ப்பன பத்திரிகைகளில் வந்த சேதிகளைக் கொண்டே பார்ப்போமானால் ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் கோஷ்டிகளான ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, எம்....

கோவை மகாநாடும் பார்ப்பனரல்லாதார் கடமையும் 0

கோவை மகாநாடும் பார்ப்பனரல்லாதார் கடமையும்

கோவையில் அடுத்த வாரம் கூடப்போகும் பார்ப்பனரல்லாதார் விசேஷ மகாநாட்டைப்பற்றி இதுவரை குடி அரசு 4, 5 தலையங்கம் எழுதி ஆகிவிட்டது. மாயவரம் மகாநாடு நடந்தது முதல் விசேஷமாய் கோவை மகாநாட்டைப் பற்றியே எங்கும் பேச்சாய் இருக்கிறது. இம்மகாநாட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு புது உணர்ச்சி ஏற்படக்கூடும் என்பது நமது அபிப்பி ராயம். ஆன போதிலும் இம் மகாநாடு சம்பந்தமாய் தலைவர்கள் என்போ ருக்கு பெருத்த பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் யாரும் மறந்து விடக் கூடாது. ஏனெனில் பொது மக்களின் கவனத்தை இம்மகாநாடு பெரிதும் இழுத்துக் கொண்டிருப்பதுடன் இம்மகாநாட்டின் முடிவை பார்ப்பன ரல்லாதார் மாத்திரம் அல்லாமல் பார்ப்பனரும் சர்க்காரும் வெகு ஆவலாய் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இம்மகாநாட்டில் ஒரு கட்டுப்பாடானதும் எல்லோரையும் கட்டுப்படுத்தக் கூடியதுமான ஒரு திட்டத்தை ஏற்படுத்த முடிய வில்லையானால் பிறகு பார்ப்பனரல்லாதார் அரசியலிலும் சமூக இயலிலும் முன்னேறும் காலம் சமீபத்தில் இல்லையென்றே தீர்மானித்துவிட வேண்டியதுதான். பார்ப்பனரல்லாத சமூகப் பிரமுகர்கள் என்போர் இவ்விஷயமாய் இனி...

திராவிடர் கழகம் கோவிற்பட்டி                                18 – வது ஆண்டு நிறைவு விழா 0

திராவிடர் கழகம் கோவிற்பட்டி 18 – வது ஆண்டு நிறைவு விழா

தலைமை முன்னுரை      அன்பர்களே! நமது நண்பரும் அரசியல் தலைவருமான திருவாளர் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் என்னைப்பற்றி சொல்லியவைகள் யாவும் என்னிடம் உள்ள அன்பினால் அல்லாது அவ்வளவு உண்மை யென்று தாங்கள் நம்பிவிடக்கூடாதென்று தங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். என்னை அவர் தலைவர் என்று சொன்னதற்கு ஆக நான் மிகுதியும் வெட்கப்படு கிறேன். அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராயிருந்து நடத்திய பெரும் கிளர்ச்சி யின் போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக் கொண்டிருந்தேன். அவரையும் அவர் போன்றாரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன். அன்றியும் நான் சிவஞான யோகிகள் வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திர வாக்கியங்களுக்கும் நான் ஒரு சிறிதும் பொருத்த முடையவன் அல்லன். ஆகிலும் அப்பத்திரத்தில் எனது கொள்கைகளை புகழ்ந் திருக்கும் விஷயங்களைப் பொருத்தவரை அக்கொள்கைக்கு அதை ஒரு நற்சாக்ஷிப் பத்திரமாக எடுத்துக் கொண்டு அதற்காக எனது நன்றியை செலுத்துகின்றேன். இத்திராவிட சங்கம்...

மந்திரிகளின் நியமனம் 0

மந்திரிகளின் நியமனம்

ஜஸ்டிஸ் கக்ஷி மந்திரி பதவியில் இருந்த காலத்தில் யாருக்காவது ஸ்தல ஸ்தாபனங்களில் நியமனம் செய்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நமது பார்ப்பனர்கள் ஒவ்வொரு பொய்க் கதையைக் கட்டி பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தூஷித்துக் கொண்டு பாமர மக்களுக்கு அவ்வியக்கத்தினிடம் அருவருப்புண்டாகும்படி எவ்வளவோ சூழ்ச்சிகளெல்லாம் செய்து கொண்டு வந்தது பொது ஜனங்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் அம்மாதிரி நியமனங்கள் பார்ப்பனர்களுக்காவது அக்கோஷ்டியைச் சேர்ந்த பார்ப்பன ரல்லாதாருக்காவது கிடைத்துவிட்டால் அதைப்பற்றி வெளியிலே பேசாமல் ரகசியமாக அனுபவித்துக் கொண்டு வந்ததும் யாவரும் அறிந்தது. உதாரணமாக ஸ்ரீமான் ஸி.வி. வெங்கட்டரமண ஐயங்காருக்கு கோயம் புத்தூர் ஜில்லா போர்டுக்கு நியமனம் செய்த காலத்தில் இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையாவது பேசவே இல்லை. அதே சமயத்தில் சென்னை முனிசிபாலி டிக்கு ஸ்ரீமான் தணிகாசலம் செட்டியாரை அதே மந்திரிகள் நியமனம் செய்த காலத்தில் கொல்லை வழிப் பிரவேசமென்று எழுதியிருந்தார்கள். அதற்குச் சமாதானமாகத் தேர்தலில் தோற்றவர்களை நியமனம் செய்வதுதான் கொல்லை வழிப் பிரவேசமே யொழிய தேர்தலுக்கு நின்று...

மலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள் 0

மலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள்

சேலம் ஜில்லா போர்டு தலைமைப் பதவிக்கு திருவாளர் எல்லப்ப செட்டியார் அவர்கள் வரக்கூடாதென்பதாக சேலத்திலுள்ள சில பார்ப்பனர் களும், அவர்களது தயவில் முன்னுக்கு வரலாமென்று கருதி அவர்களது வாலைப் பிடித்துக் கொண்டு திரியும் சில பார்ப்பனரல்லாதார்களும் ஒன்று கூடி சுயமரியாதைக்கு பங்கமுண்டுபண்ணும் கூட்டத்திற்கு அனுதாபம் காட்டி வருகிற மந்திரியைப் பிடித்துக் கசக்கி என்னென்னமோ சூழ்ச்சிகளெல்லாம் செய்து பார்த்தும் வேண்டும் என்றே மனச்சாட்சிக்கு விரோதமான எத்தனை யோ அக்கிரமமான உத்திரவுகளைப் போடச் செய்தும் கடைசியாக கனம் மந்திரி சுப்பராயனுடைய அக்கிரமங்களையும் ஜெயித்து திருவாளர் எல்லப்ப செட்டியாருடைய (தலைவர்) தேர்தல் சர்க்காரால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது. பார்ப்பனர்களால் செய்யப்பட்ட இவ்வளவு சூழ்ச்சிகளாலும் கனம் சுப்பராயனின் மந்திரி தன்மை, மானங்கெட்டு நாடு சிரிக்க ஏற்பட்டதுதானே தவிர பார்ப்பனர்களுக்காவது திரு எல்லப்ப செட்டியாருக்காவது ஒரு வித நஷ்டமும் ஏற்பட்டுவிடவில்லை. நமது நாட்டு சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான வருடங்கள் தொட்டு நாளது வரையில் யாராவது ஒரு பார்ப்பனரல்லாதார் எந்தப் பார்ப்பனருடைய...

ஸ்ரீமான் ஜோசப்பின் குட்டிக்கரணம் 0

ஸ்ரீமான் ஜோசப்பின் குட்டிக்கரணம்

சென்னை அரசாங்கத்தில் கிருஸ்தவர் என்கிற சலுகையின் பேரில் ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியாருக்கு மந்திரிப் பதவி கிடைத்ததிலிருந்து ஸ்ரீமான் நமது ஜோசப்புக்கு நாக்கில் தண்ணீர் சொட்ட ஆரம்பித்து விட்டது. அதோடு மாத்திரமல்லாமல் அந்த மந்திரிப் பதவி பார்ப்பனர்கள் மூலமாகத் தான் விற்கப்படுகிறதென்கிற தீர்மானமும் ஏற்பட்டு விட்டது. அதோடு கூட அம்மந்திரிப் பதவிக்கு பார்ப்பனர்களுக்குக் கொடுக்க வேண்டிய விலை “ஜஸ்டிஸ்” கட்சியைத் திட்டி பார்ப்பனரல்லாதாரைக் காட்டிக் கொடுக்க வேண்டியதுதான் என்கிற முடிவும் அவருக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது. சமீபத்தில் மதுரையில் பேசினதும் ஸ்ரீ சத்தியமூர்த்தியைப் புகழ்ந்ததும் மற்றும் அவர் தெரிவித்த அபிப்பிராயமும், ஸ்ரீமான் ஜோசப்பின் புதிய பிறப்பைக் காட்டுகிறது. ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை ஒரு மனிதர் புகழ் வாரானால் அம்மனிதருடைய யோக்கியதை இன்னதென்று நாம் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. உதாரணமாக “மலம் நல்ல வாசனையாயிருக்கிறது என்று ஒருவர் சொல்லுவாரானால் அவர் மூக்கின் யோக்கியதையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?” என்ற பழமொழி ஒன்றுண்டு. அதுபோலவே ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் யோக்கியப்...

சேலம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் 0

சேலம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்

முதன் மந்திரியால் மூன்று முறை நிறுத்தப்பட்டது சேலம் ஜில்லா போர்டு மெம்பர் திரு. ராஜமாணிக்கம் பண்டாரம் முதல் பேர் சென்னை கவர்னரின் அந்தரங்க காரியதரிசிக்கு அனுப்பிய தந்திச் செய்தி , ஜில்லா போர்டு தலைவராயிருந்த திரு போல்க்ஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்தவுடனே லோக்கல் போர்டு ஆக்டு 17-வது பிரிவின்படி மார்ச் 31 ² வேறு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒரு கூட்டம் கூட்டும்படி தீமானிக்கப்பட்டது. திருபோல்ஸின் ராஜிநாமாவை ஒப்புக்கொண்ட பிறகு அந்தக் கூட்டத்தில் தானே மறு தலைவர் தேர்தலையும் நடத்தவேண்டுமென்று மந்திரி உத்தரவு கொடுத்தார். அந்த உத்தரவுபடி திரு போல்சின் ராஜிநாமாவை ஒப்புக்கொண்ட கூட்டத்திலேயே ராவ்பகதூர் எல்லப்பசெட்டியார் ஏகமனதாக எல்லோராலும் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். ஆனால் தேர்தல் முடிவை 6-வாரம் வரை கெஜட்டில் பிரசுரம் செய்யாமல் மந்திரி நிறுத்தி வைத்தார். மே15 தேதி திரு எல்லப்ப செட்டியார் தேர்தலை ரத்து செய்து உடனே வேறு தேர்தல் நடத்தவேண்டுமென...

அரசியல் பார்ப்பனர்களின் யோக்கியதை 0

அரசியல் பார்ப்பனர்களின் யோக்கியதை

சத்தியம் என்பது அவர்கள் பெரியோர் தேடிவைத்த சொத்து சென்ற வாரம் தூத்துக்குடியில் நடந்த பார்ப்பனப்பிரசாரத்தில் ஸ்ரீமான்கள் ஆ.மு. ஆச்சாரியார் பல உபன்யாசங்கள் செய்தாராம். அவர்கள் (³ ஆச்சாரியார்) பேசும்போது வரதராஜுலு நாயுடு ஒரு போக்கிரி என்றும் தான் ஒருநாளும் பார்ப்பனப்பிள்ளை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்துவிட்டால் பல நாள் பட்டினி கிடப்பேன் என்று சொல்ல வில்லை என்றும் உறுதி கூறினாராம். பார்ப்பனர்களுக்கு பொய் சொல்வ தென்றால் அது அவர்களுடைய வேதபாராயணம் செய்வதுபோலும். “ஏக தலைவர்” ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பொய்யிக்கு அளவே இல்லை என்பதற்கு ஆதாரமாக சென்ற தேர்தலுக்கு ஆள்கள் சேர்க்கும் முறையில் ஸ்ரீமான்கள் நரசிம்மராஜு ராமலிங்கம் செட்டியார் இன்னும் மற்றவர்களும் ஆந்திர தேசத்துப் பத்திரிக்கைகளும் வண்டி வண்டியாய் ருஜு செய்தன. ஆனால் ஸ்ரீமான் அய்யங்காரோ தோள் மேல் தொண்ணூரு அடி அடித்தாலும் துடைத்துவிட்டால் ஒன்றும் சோதிக்காது என்று சொல்வதுபோல் அத்தனையும் ஜீரணம் செய்துகொண்டு இனியும் “தலைவராகவே” விளங்குகிறார். ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளின்...

0

கழகத்தின் புதிய இணையதளம் dvkperiyar.com

நமது இயக்கத்தின் இணைதளம் dvkperiyar.com செயல்பட தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் தலைமை கழகத்தின் அறிக்கை, ‘புரட்சி பெரியார் முழக்கத்தின் தலையங்கம், சிறப்பு கட்டுரை, மற்றும் குடிஅரசு செய்தி, ஏதேனும் ஒன்று முகப்பு பக்கத்தில் வாராவாரம் தகவல் உள்ளீடு செய்யப்படும் செயற்களம் பகுதியில் அந்தந்த மாவட்ட செய்திகள் மற்றும் நிகழ்வுகள் அட்டவணை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செய்திகள் மற்றும் நடைபெற உள்ள நிகழ்வுகளை மற்றவர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த dvkperiyar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் புகைப்படங்களில் ஏதேனும் ஒன்று landscape இருப்பது சிறப்பு. மேலும் காணொளிகள் ஏதேனும் இருந்தால் youtube ஏற்றி உரலி (link) அனுப்பவும். எந்த மாவட்டத்தின் கீழ் செய்தி வரவேண்டும் என்பதையும் தெரியப்படுத்தினால் உள்ளீடு செய்ய உதவியாக இருக்கும். கழக மின்னூல்கள், குடிஅரசு மின்னூல்கள் மற்றும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மின்னூல்கள் வரும் நாட்களில் இணையத்திலேயே முழுதுமாக ஏற்றப்படும். குடிஅரசு யூனிக்கோடாகவும் படிக்க, காணொளிகள் மற்றும் பாடல்கள் ஏற்றவும் பணிகள் நடைபெற்று வருகிறது....

0

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத் தலைவர் அறிவித்த மாவட்டப் பொறுப்பாளர்கள். ஈரோடு (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர் – சென்னிமலை செல்லப்பன்; மாவட்ட செயலாளர் – கு. சண்முக பிரியன்; மாவட்ட அமைப்பாளர்கள் – சென்னிமலை செல்வராசு, மரவபாளையம் குமார், மாநகர செயலாளர் – சிவானந்தம், மாநகர தலைவர் – திருமுருகன், மாநகர துணைத் தலைவர் – சத்தியராசு; பெருமாள்மலை கிளை தலைவர் – ராசன்னா; சித்தோடு கிளை தலைவர் – சத்தியராசு. மாவட்ட பொருளாளர் – மணகாட்டூர் கிருஷ்ணமூர்த்தி; மாவட்ட செய்தி தொடர்பாளர் – ஆசிரியர் மோகன்ராசு; மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் – அறிவுக்கன்பன், இனியன் பத்மநாபன், சென்னிமலை கோபிநாத். ஈரோடு மாவட்டப் (வடக்கு) பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர் – நாத்திகசோதி; மாவட்ட அமைப்பாளர் – ம. நிவாசு; மாவட்ட செயலாளர் – ந. வேணுகோபால். கோபி ஒன்றிய செயலாளர் – நா. அருளானந்தம்; நம்பியூர் ஒன்றிய...

கழகத் தலைவர்-பொதுச்செயலாளர் பங்கேற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் 0

கழகத் தலைவர்-பொதுச்செயலாளர் பங்கேற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்ற மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் ஜூலை 29ஆம் தேதி முதல் ஈரோட்டிலிருந்து தொடங்கின. ஈரோடு ரெசிடென்சி அரங்கில் பகல் 11 மணியளவில் கடவுள் ஆத்மா மறுப்புடன் கூட்டம் தொடங்கியது. மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தைச் சார்ந்த வே.சு. மணியம், தமிழகத்தில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஈரோடு பெரியார் நினைவிடத்தைப் பார்வையிட வந்த அவர், கழகத் தலைவர் கொளத்தூர் மணியை சந்தித்துப் பேசிய பிறகு, மாவட்டக் கழகக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மலேசியாவில் கழகப் பணிகளை விளக்கி, சற்று நேரம் உரையாற்றி விடைபெற்றார். கலந்துரை யாடலில் கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, மாவட்ட செயலாளர் சண்முகப் பிரியன், மாவட்டத் தலைவர் செல்லப்பன், அமைப்பாளர் குமார், செல்வராஜ், மாணவர் விஜயரத்தினம், கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி, நகரத் தலைவர் திருமுருகன், இராசன்னா, சுகுணா, கோபிநாத், இசைக்கதிர், சித்தோடு எழில், ஆதரவாளர் முருசேன், நடராசன், மோகன்ராஜ்,...

கச்சிதமாகப் பொருந்துகிறார் கலாம்! 0

கச்சிதமாகப் பொருந்துகிறார் கலாம்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஜூலை 27ஆம் தேதி ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு சாய்ந்துவிட்டார். வேறு எந்த குடியரசுத் தலைவருக்கும் மக்களிடம் கிடைத்திடாத அனுதாபமும் இரங்கல் உணர்ச்சியும் கலாம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. அரசு அமைப்புகளும் ஊடகங்களும் முழுமையான அர்ப்பணிப்புடன் தங்கள் துயரங்களை வெளிப்படுத்தின. கிராமம், நகரம் வேறுபாடின்றி தமிழகம் முழுதும் கலாமுக்கு அஞ்சலி பதாகைகள் கண்ணீர் செலுத்தின. இது ஒரு வித்தியாசமான நிகழ்வுதான். பல அரசியல் தலைவர்களின் மரணங்களை தமிழகம் சந்தித்திருக்கிறது. செய்தி வந்தவுடனேயே தொண்டர்களில் சிலர் வன்முறைகளைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். கடைகளை அடைக்கச் சொல்லி தாக்குதல் நடக்கும்; பேருந்துகள் கல்வீச்சுகளுக்கு உள்ளாகும்; மூட மறுக்கும் கடைகள் சூறையாடப்படும்; தமிழ் நாட்டின் இந்த ‘அரசியல் கலாச்சாரம்’ அப்துல் கலாமின் மரணத்தில் விடைபெற்றுக் கொண்டது. அனைத்துமே அமைதியாக நடந்து முடிந்தன. கடைகளை தாமாகவே முன்வந்து மூடி,...

உச்சநீதிமன்றத்தில் ‘மநுசாஸ்திர’ சுலோகம் 0

உச்சநீதிமன்றத்தில் ‘மநுசாஸ்திர’ சுலோகம்

மேமன் கருணை மநுவை தள்ளுபடி செய்த நீதிபதிகளில் ஒருவரான அனில் தவே, தூக்குத் தண்டனையை நியாயப்படுத்திட ‘மனுதர்மத்தை’ சமஸ்கிருத மொழியில் எடுத்துக் காட்டினார். “அரசன் சரியாக விசாரணை நடத்தினால், அவனிடத்தில் கருத்த மேனியும், சிவந்த கண்களும் கொண்ட பாவத்தைப் போக்குகிற தண்டம் எனும் தெய்வத் தன்மையுடைய புருஷன் பிறக்கிறான். ஆதலால் அத்தகைய அரசனிடத்தில் மக்கள் துன்பமடைய மாட்டார்கள்.” – (மனு அத்.7 : சுலோகம் 25) இதே நீதிபதிதான் நான் சர்வாதிகாரி ஆனால் கீதையை தேசிய நூல் ஆக்குவேன் என்று சொன்னவர் ஆவார். பதவி விலகிய அதிகாரி “யாகூப் மேமன் கருணை மனுக்களை தள்ளுபடி செய்து விசாரணை நடத்தியது உச்சநீதிமன்றத்தின் இருண்ட காலம். நீதி நெறி முறைகள் கைவிடப்பட்டன” என்று எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தின் துணைப் பதிவாளர் முனைவர் அனுப் சுரேந்திர நாத், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஜூலை 30ஆம் தேதி நள்ளிரவில் அவசர அவசரமாக கருணை மனுவை விசாரித்தபோது சுரேந்திர...

பார்ப்பன அயோக்கியத்தனம் 0

பார்ப்பன அயோக்கியத்தனம்

‘அகில இந்திய பிராமண சம்மேளனம்’ என்பதாகப் பேர் கொண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஒரு மூலைக் கிராமத்தில் வக்கீல் பார்ப்பனர், உத்தியோகப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், காப்பிக்கடைப் பார்ப்பனர், தூதுவப் பார்ப்பனர் ஆகிய பலதிறப்பட்ட சுமார் 100 உருப்படிகள் கூட்டம் கூடி ஒன்று சேர்ந்து “அகில இந்தியப் பிராமண சம்மேளனம்” என்பதாகப் பேர் வைத்துக் கொண்டு பல தீர்மானங்கள் செய்து இதை இந்தியாவில் உள்ள இந்துக்கள் என்று சொல்லப்படும் இருபத்தைந்து கோடி மக்களுக்குக் கட்டுப்பட்டதாக கருதும்படி சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். அங்கு நடந்த தீர்மானங்களையும் மகாநாட்டின் வரவேற்பு அக்கிராசனர் மகாநாட்டின் தலைவர் ஆகியவர்கள் பிரசங்கங்களும் படித்துப் பார்த்தால் உண்மையான கலப்பற்ற பார்ப்பனரல்லாதார்களின் இரத்தம் கொதிக்காமல் இருக்கவே முடியாது. அவ்விருவர் பிரசங்கத்திலும் ஒற்றுமையாகக் காணப்படும் விஷயங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது இத் தேசத்தில் இந்துக்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்றும், க்ஷத்திரியரும், வைசியரும் கிடையாது என்றும் பேசியிருக்கிறார்கள். க்ஷத்திரி யரும்,...

கோவையில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

கோவையில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு

கோவையில் சென்னை மாகாண பார்ப்பனரல்லாதார் விசேஷ மகாநாடு ஜுலை மாதம் 2, 3 தேதிகளில் அதாவது ஆனி மாதம் 18, 19 தேதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்துவதாய் முடிவாகத் தீர்மானிக்கப்பட்டு விட்டது. கோவை ஜில்லா மகாநாடாக கூட்டுவதாயிருந்த இந்த மகாநாடு காங்சிரசில் உள்ள சில பார்ப்பனரல்லாதாரின் உணர்ச்சியை அனுசரித்து மாகாண விசேஷ மகாநாடாகக் கூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதோடு கூட, காங்கிரஸ் பார்ப்பனர்கள் தேசத்தின் பெயரால், காங்கிரஸ் என்கிற ஸ்தாபனத்தைக் கைக்கொண்டு அதன் மூலம் பார்ப்பனரல்லாதார்க்கு செய்து வரும் கெடுதியையும், தேசத்தின் விடுதலையைக் காட்டிக்கொடுத்து தேசத் துரோகம் செய்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள செய்துவரும் சூக்ஷியையும் அறிந்து ஒன்றா காங்கிரசினது யோக்கியதையை வெளியிலெடுத்துச் சொல்லி பாமர மக்களை அக்காங்கிரஸ் படுகுழி மோசத் தில் இருந்து தப்புவிக்க வழிதேட வேண்டும். அல்லது காங்கிரஸைக் கைப் பற்றி அதிலுள்ள அயோக்கியர்களையும், சுயநலக்காரரையும் வெளியாக்கி காங்கிரசின் மூலம் தேசத்திற்கு உண்மையான விடுதலையும், சுயமரியாதை...

ஸ்ரீனிவாசய்யங்கார் பணத்தின் மகிமை 0

ஸ்ரீனிவாசய்யங்கார் பணத்தின் மகிமை

சென்ற வாரம் தூத்துக்குடியில் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் சிஷ்யர் களில் ஒருவரான ஒரு குப்புசாமி முதலியார் அவர்கள் தூத்துக்குடியில் “காங்கிரஸ்” (பார்ப்பன) பிரசாரம் செய்யும் போது ஒரு கூட்டத்தில் ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கரும் தானும் ஒரே கள்ளுக்கடையில் கள்ளுக்குடித் தோம் என்றும் தனக்கு சீனிவாசய்யங்கார் சிலவுக்குக் கொடுக்கிறார் என்றும் மற்றும் பலவிதமாய் பெண்டு பிள்ளைகளைக் குறித்தும் வேடிக்கையாகப் பிரசங்கம் செய்தார் என்றும் அக்கூட்டத்தில் உள்ள பார்ப்பனர்கள் குலுங்கி குலுங்கி நகைத்தார்கள் என்றும் ஸ்ரீனிவாசய்யங்கார் கக்ஷியாரை ஆதரிப் பதாக சொல்லிக்கொள்ளும் சில பார்ப்பனரல்லாதார்கள் கூட இதைப்பற்றி வருத்தப்பட்டார்கள் என்றும் ஸ்ரீமான் வெ. நாராயணன் என்பவர் தூத்துக்குடி யில் சில கனவான்கள் முன்னிலையில் நமக்குச் சொன்னார். இது உண்மை யானால் ஸ்ரீ. ஸ்ரீனிவாசய்யங்காரின் பணத்தின் மகிமையே மகிமை. குடி அரசு – செய்தி விளக்கம் – 12.06.1927

நாகையில் வெறுக்கத்தக்க சேதி 0

நாகையில் வெறுக்கத்தக்க சேதி

நாகையில் நமது சகோதரர்களில் சிலர் அதாவது ஜனாப் அப்துல் அமீத்கான், ஜனாப் தங்க மீரான் சாயபு, ஸ்ரீமான் கிருபாநிதி முதலியவர்கள் பிரசாரம் செய்ய வந்த காலையில் கூட்டத்தில் சிலர் மிக இழி தன்மையாய் நடந்து கொண்டதாக பத்திரிகையில் காணப்படுகிறது. (அதாவது கூட்டத்தில் பாதரiக்ஷ எறியப்பட்டதாம்). அது வாஸ்தவமானால் நாகையில் உள்ள எனதன்பான தொழிலாளர் சகோதரர்களும், நாகையில் உள்ள பார்ப்பன ரல்லாத பிரமுகர்களுக்கும் கூட அவமானகரமான காரியமென்றே சொல்லுவோம். இவ்விழித் தகைமை ஆன காரியத்தினால் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு வந்த நன்மை என்ன? பொது வாழ்வில் யாவருடைய குற்றத் தையும் ஆண்மையுடன் கண்டிக்க யாவருக்கும் உரிமை உண்டு. இம் மாதிரியான காரியங்களினால் மிகவும் சமூகத்திற்கே அவமானத்தை விளைவிக்கத் தக்கதாகவும் நடந்து கொண்டதற்கும் அக்கூட்டத்தில் நமது பெயரும் நமது பத்திரிகையின் பெயரும் அடிபட்டுக் கொண்டு இம்மாதிரி நடந்ததற்கும் நாம் மிகுதியும் வெட்கமடைகிறோம். பார்ப்பன சூழ்ச்சியின் பயன் என்னவாய் முடிகிறது. பார்ப்பன வஞ்சக புரோசீஜர் கோட் ஆகிய...

“வரதராஜுலுவின் அறிக்கை” ராமசாமியின் சமாதானம் -II 0

“வரதராஜுலுவின் அறிக்கை” ராமசாமியின் சமாதானம் -II

மேல்கண்ட தலையங்கமிட்டு சென்ற வாரம் நான் எழுதிய விஷயங் களுக்கு மறுபடியும் 6-6-27 தேதி “தமிழ்நாடு” பத்திரிகையில் பதில் எழுதுமுகத்தான் சில விஷயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அப்பதிலின் தன்மையைப் பற்றி விவகரிக்கு முன்பாக அப்பத்திரிகை ஏதாவது ஒரு சமாதானம் எழுத முன்வந்ததற்காக அதைப் பாராட்டுவதுடன் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இதுவரை ஒரு பத்திரிகையாவது காங்கி ரசைப் பற்றி இவ்வளவு நாளாக நான் எழுதிக்கொண்டு வந்த விஷயங் களுக்கு பதில் என்பதாக ஒரு வரி கூட எழுத முன்வராமல் வழக்கம் போல் தங்கள் தங்கள் “தேசாபிமானப் பிரசாரத்தை” நடத்திக்கொண்டும் பார்ப்பன ரல்லாதார் இயக்கத்தை வைது கொண்டுமே வந்திருக்கின்றன. ஆனால் காரைக்குடி “ஊழியன்” பத்திரிகை கூட ஒரு சமயத்தில் நம்மைப்பற்றி “சுயமரியாதைப் பிரசாரம் செய்வது தேசத்திற்கு ஆபத்து” என்று மாத்திரம் எழுதிற்றே அல்லாமல் காங்கிரசைப் பற்றி நாம் எழுதியதற்கு பதில் ஒன்றும் எழுதவில்லை. “தமிழ்நாடு” துணிந்து எழுத முன் வந்து விட்டதால் இனி ஒரு சமயம்...

“சத்தியாக்கிரகம்” 0

“சத்தியாக்கிரகம்”

ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !! ஜாக்கிரதை !!! நமது நாட்டில் இப்போது சில தொண்டர்களுக்கு வயிற்றுப் பாட்டிற்கு வேறு மார்க்கமில்லாததால் ஊராரை ஏமாற்றவேண்டி “சத்தியாக்கிரகம்”, “சத்தியாக்கிரகம்” என்று சொல்லி அவர்கள் வயிறு வளர்க்கப் பார்க்கிறார்கள். சத்தியாக்கிரகம் என்பதை விளையாட்டுப் பிள்ளைகள் மண்ணுக் கொழிக்கும் வேலை போல நினைத்துக் கொண்டு அதன் யோக்கியதையைக் கெடுக்கும் விஷயத்தில் நம் நாட்டுத் தொண்டர் என்போர்களில் சிலருக்கு வெகு துணிவு ஏற்பட்டு விட்டது. சத்தியாக்கிரகம் செய்யும் முன் சத்தியாக்கிரகம் செய்யவேண்டிய அவசியம் இன்னது என்பதையும் வெளிப்படுத்தி அதற்கு நாட்டினரின் சம்மதி பெற்று சத்தியாக்கிரக விஷயத்திற்கு செல்வாக்கு உண்டாக்கி அதற்குத் தக்க யோக்கியதை உள்ளவர்களால் துவங்கப் படவேண்டிய காரியம். சத்தியாக்கிரகம் செய்வது பெட்ரோல் எண்ணைக்குப் பக்கத்தில் நெருப்பு புழங்கப்படுவதில் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமோ அதுபோல சத்தியாக்கிரகமெனும் நெருப்பை உபயோகிக்க வேண்டியது. தவறினால் தோல்வி ஏற்படுவது மாத்திரம் அல்லாமல் குறிப் பிட்ட லக்ஷியத்திற்கு அழிவு ஏற்படும் என்றே சொல்லுவோம்....

ஈரோடு முனிசிபாலிட்டி 0

ஈரோடு முனிசிபாலிட்டி

ஈரோடு முனிசிபல் சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் மீட்டிங்கு கூட்டிய விதத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதி இருந்தோம். அதாவது சில கவுன்சிலர்கள் முனிசிபாலிடியில் இருப்பதால் ஸ்ரீமான் முதலியாரின் நன்மைக்கும் மற்றும் சில காரியங்கள் செய்வதற்கும் தடையாய் இருப்பதாகக் கருதி அவர்களை நீக்கிவிட வேண்டி ஒரு மீட்டிங்கை ஒரு நாள் 5 1/2 மணிக்குக் கூட்டி 5 மணிக்கே தான் ஆபீசுக்கு வந்து கோரம் இல்லை என்பதாக மீட்டிங்கை ஒத்தி வைத்துவிட்டு வேறு யாரும் வந்து மீட்டிங்கு நடத்தாமல் இருக்கும் பொருட்டு காவலாக தாம் வெளியில் வந்து நின்று கொண்டு இருந்ததும் கவுன்சிலர்கள் வந்து சண்டை போட்டதுமான விஷயங் களைப் பற்றி ஒரு நிரூபர் எழுதியதை சென்ற வாரம் எழுதி ஒரு குறிப்பும் போட்டிருந்தோம். இப்போது அதற்கேற்றாற்போலவே இவ்வாரம் ஒரு அவசர மீட்டிங்கு போட்டு ஒரு கவுன்சிலரை மூன்று மீட்டிங்குகளுக்கு வராததால் அவர் நீக்கப்பட்டு விட்டதாக தானே ஏற்பாடு செய்து...

மித்திரன் நிரூபரின் அயோக்கியத்தனம் 0

மித்திரன் நிரூபரின் அயோக்கியத்தனம்

நமது பத்திரிகாலயத்தில் ஒரு பார்ப்பனர் சூழ்ச்சியால் இரண்டு அச்சுக் கோர்ப்போர்கள் திடீரென்று சொல்லாமல் நின்று விட்டதற்குக் காரணமாக கோவையில் இருந்து மித்திரன் நிரூபர் ஒருவர் மிகவும் அயோக் கியத்தனமான ஒரு நிரூபத்தை மித்திரனுக்கு அனுப்பி இருக்கிறார். அதாவது ஒரு விஷயத்தை நாம் அச்சுக் கோர்க்கும்படி சொன்னதாகவும் அதை அச்சுக் கோர்ப்போர் கோர்க்க மறுத்து வேலை நிறுத்தம் செய்துவிட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இது மிகவும் அல்ப ஜாதித்தனம் என்றே சொல்லுவோம். எல்லா பத்திரிகை நிரூபர்களுக்கும் மானம், வெட்கம், சுத்த ரத்தோட்டம் முதலிய தன்மைகள் குறைந்தது கொஞ்சமாவது இருப்பதாகக் காண்கிறோம். நமது சுதேசமித்திரன் நிரூபர்களுக்கு மாத்திரம் பெரும்பாலும் இக்குணங்கள் காணப்படுவதே இல்லை. இதன் காரணமும் நமக்குத் தெரிவதில்லை. மித்திரனுக்காவது மனிதத் தன்மையும் யோக்கியப் பொறுப்பும் இருந்தால் அச்சுக் கோர்ப்போர் கோர்க்க மறுத்தது என்ன விஷயம் என்றாவது அல்லது வேறு சமாதானமாவது எழுதுவான் என்று நினைக்கிறோம். நமது பத்திரிகை பதிப்பகத்தில் உள்ள அச்சுக் கோர்ப்போரை கலைக்க...

தட்டிப் பேச ஆளில்லாவிட்டால்  தம்பி சண்டப் பிரசண்டன் தொழிலாளர் மத்தியில் ஓட்டுப் பிரசாரம்  	– சித்திரபுத்திரன் 0

தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் தொழிலாளர் மத்தியில் ஓட்டுப் பிரசாரம் – சித்திரபுத்திரன்

சென்னை எம்.எஸ்.எம். ரயில்வே தொழிலாளர் கூட்டத்தில் ஸ்ரீமான் எம். கே. ஆச்சாரியார் அருமையான மாயப்பிரசங்கம் ஒன்று செய்தார். அப்பொழுது அவர் சொல்லியுள்ளவைகளில் முக்கியமானது இரண்டு விஷயம். அதாவது, “உங்களுக்கு அரசாங்க சட்டசபைகளில் பிரதிநிதித்து வம் கிடையாது. அது கிடைக்கிற வரையில் எங்களை அங்கீகரிக்க வேண் டும்” என்று பேசியிருக்கிறார். ஸ்ரீமான் எம். கே. ஆச்சாரியார் ஒரு பிராமணர், அதோடு அளவுக்கு மிஞ்சிய வருணாசிரம தர்மி. ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமணரல்லாத குழந்தை ஒருவேளை பார்த்து விட்டால் ஒரு மாதத்திற்கு உண்ணாவிரதமிருப்பேன் என்று சொன்னவர். அல்லாமலும், பிராமணன் அயோக்கியனாயிருந்தாலும், ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் கூலிக்காரனாயிருந்தாலும், குஷ்டரோகியாயிருந் தாலும் அவன் பிறவியிலேயே உயர்ந்தவன். மற்றவன் சூத்திரன் ஒரு யோக்கியனானாலும் சுயமரியாதை உள்ளவனானாலும் அவன் தாசி மகன்; அடிமை; அவன் பிறவியிலேயே பிராமணனுக்கு வேலை செய்யப் பிறந்த வன் என்று சொல்லும் வருணாசிரம சபைக்குத் தலைவர் . இவர் 100- க்கு 99 பேர்...

இந்து மகாசபை 0

இந்து மகாசபை

இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகி விட்டால் நமது சர்க்காருக்கு எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிக சங்கடம் நமது பிராமணர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏனெனில் சிறு வகுப்பாயுள்ளவர்கள் வாழ வேண்டுமானால் பெருவகுப்பாய் உள்ளவர்களை ஒருவருக்கொருவர் உதைத்துக் கொள்ளும்படி செய்து பிரித்து வைத்தால்தான் முடியும் என்பது ஒரு பழமொழி. அப்பழமொழிக்கிணங்கவே சர்க்காராரும் பிரித்தாள பல தந்திரங்கள் செய்து அதில் வெற்றிபெற்று வருகிறார்கள். அதுபோலவே நமது பிராமணர்களும் பிராமணரல்லாதாரை அடக்கியாள அவர்களுக்குள் பிரிவி னையுண்டாக்கி ஒருவருக்கொருவர் துவேஷமும் பொறாமையும் நிரந்தர மாய்க் கொள்ளும்படி பல தந்திரங்கள் ஆதியிலிருந்தே செய்து வந்திருக் கிறார்கள். அவைகளின் குறிப்புதான் இன்றைய தினம் இந்தியாவைக் காட்டிக் கொடுக்கும் வர்ணாசிரமமும் பஞ்சமர் என்னும் ஜாதியும். இதை மகாத்மா எப்படியாவது ஒழித்து விடுதலை சம்பாதிக்கலாம் என்று எண்ணியவுடன், நமது பிராமணர்கள் புது தந்திரம் ஒன்று செய்திருக் கிறார்கள். அதுதான் “இந்து மகாசபை”. அது இந்துக்களை மாத்திரம் நிரந்தர மாய்ப் பிரித்து வைப்பதோடல்லாமல் இந்து முஸ்லீம் ஒற்றுமையும்...

கோயமுத்தூரில் பஞ்ச நிவாரண வேலையும்                                        ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும் 0

கோயமுத்தூரில் பஞ்ச நிவாரண வேலையும் ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும்

கோயமுத்தூரில் பஞ்ச நிவாரண வேலைக்காக ரூ. 2102-8-0 செலவாகி யிருக்கிறது. கிராமத்து ஜனங்கள் இந்தப் பணம் ஸ்ரீமான் வெங்கிட்ட ரமணய் யங்கார் தான் கையிலிருந்து செலவு செய்ததாக நினைக்கும்படி பல தந்திரங் கள் செய்ததோடு சில காங்கிரஸ் தொண்டர்கள் என்போரும் ஸ்ரீமான் ஐயங் கார் பின் சென்று ஓட்டு வாங்க, பஞ்சப்படி போட்ட ஐயங்கார் என்று அவருக் குப் பெயர் வாங்கிக் கொடுத்து கிராமத்து ஜனங்களை ஏமாற்றியிருக்கிறார் கள். இதன் இரகசியம் என்ன வென்றால் பஞ்ச நிவாரண வேலைக்காக பொது ஜனங்களிடமிருந்து வசூலாகி வந்த பணத்தை ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய் யங்கார் தூக்கி ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காரிடம் கொடுத்து, செலவு செய்யும்படி சொல்லியிருக்கிறார். அந்தப் பணத்தை வாங்கி, தான் செலவு செய்ததாக அவர் நடித்திருக்கிறார். இந்த நடிப்புக்கு காங்கிரஸ் தொண்டர்கள் திரைப்பிடித்து இருக்கிறார்கள். இவ்வளவுதான் இரகசியம். இதை 3-5-26 ² “சுதேசமித்திரன்” பத்திரிகையிலேயே பார்க்கலாம். குடி அரசு – செய்தி விளக்கம் – 09.05.1926

எங்கும் இராமசாமி நாயக்கர்                           பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு 0

எங்கும் இராமசாமி நாயக்கர் பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு

சென்னை மாகாணப் பிராமணர்கள் சென்னையில் மாத்திரம்தான் பிராமணர் – பிராமணரல்லாதார் வித்தியாசமும் ‘வகுப்புத் துவேஷமும்’ ஏற்பட்டிருப்பதாகவும், அதை ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் வளர்த்து வருவதாகவும், அவர் பேச்சை எவரும் கேட்கக் கூடாது என்றும், அவர் சொல்லுவதை எவரும் நம்பக்கூடாது என்றும், அவர் பேரில் பல குற்றங் களைக் கற்பித்து பிராமணர்களும், பிராமணப் பத்திரிகைகளும், அவர்களைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் போன்ற வர்களும், அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு எழுதும் – பேசும் சிப்பந்தி கோடிகளும் அவர்கள் தயவால் பதவிபெற நினைக்கும் சில சுயகாரியப் புலிகளும் சதா காலமும் கையொடிய, தொண்டை கிழிய எழுதியும்,பேசியும் வருகிறார்கள். இப்பொழுது மத்திய மாகாணத்திலும் (மஹாராஷ்ட்டிர மாகாணத்தில்) பம்பாய் மாகாணத்திலும் பிராமணரல்லாதார் மகாநாடுகள் என்றும் “வகுப்புத் துவேஷங்கள்” வளர்ந்து வருகிறது. பஞ்சாபிலும் கல்கத்தாவிலும் இந்து முஸ்லீம் சச்சரவுகள் இல்லாவிட்டால் அங்கும் பிராமணர்- பிராமண ரல்லாதார் “வகுப்புத் துவேஷங்கள்” வளரும். ஆதலால் இராமசாமி நாயக்கர்...

சுயராஜ்யக் கட்சியார்             கார்ப்பொரேஷனில் செய்த வேலை 0

சுயராஜ்யக் கட்சியார் கார்ப்பொரேஷனில் செய்த வேலை

சுயராஜ்யக் கட்சியார் என்கிற பிராமணர்கள் சென்னைக் கார்ப்பொ ரேஷனைக் கைப்பற்ற ஆட்களை நிறுத்தி ஸ்ரீமான் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரை சுவாதீனம் செய்து கொண்டு மூலைமுடுக்கெல்லாம் ஜஸ்டீஸ் கட்சியாரை வைது பிரசங்கம் செய்த காலத்தில் தாங்கள் மிகுதியும் யோக்கியர் கள் என்றும், ஜஸ்டீஸ் கட்சியார் தேசத் துரோகிகள் என்றும், கார்ப்பொரேஷ னுக்குத் தாங்கள் மெம்பர்களானால் ஜனங்களுக்கு அதிக அனுகூலம் செய்வோம் என்றும், வரிகளைக் குறைப்போம் என்றும் பொய் மூட்டைகளை அளந்தார்கள். இப்பொய் மூட்டைகளை ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியா ரும் தலையில் தூக்கிக்கொண்டு போய் ஓட்டர்கள் வீட்டில் கொட்டினார். இப் பொய்யர்கள் வெற்றியடைந்து கார்ப்பொரேஷன் மெம்பர்களான பிறகு அவர்கள் யோக்கியதை என்ன என்பதை சென்னை வியாபாரிகள் சங்கத் தாரால் செய்த தீர்மானங்களிலிருந்தே பொது ஜனங்கள் அறிந்து கொள்ள லாம். அதாவது:- “வியாபார சுணக்கத்தால் வியாபாரம் நடப்பதே கஷ்டமாயிருக்கும் போது வியாபாரிகளின் தொழில் வரியைக் கார்ப்பொரேஷன் கவுன்சிலர்கள் 100-க்கு 25 வீதம் அதிகமாக உயர்த்தியதை...

பாரதத் தாயின் துயரம் 0

பாரதத் தாயின் துயரம்

– சித்திரபுத்திரன் ஏ காங்கிரசே! நீ என்று ஒழிகிறாயோ அன்றுதான் நான் விடுதலை அடைவேன். நீ இப்போது பாரதத் தாயாகிய என்னை மீளா நரகத்திலாழ்த்தி விட்டாய். என் மக்களில் பெரும்பாலோரை அயோக்கியர்களாக்கி விட்டாய். யோக்கியமான மக்களை குறைத்து விட்டாய். நீ இல்லாமலிருந்தால் இப் போது தலைவர்கள் தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனேக அயோக்கியர்கள் என் சார்பாய் பேசி வயிறு வளர்க்க முடியுமா? நீ இல்லா விட்டால் எனது அருமைப் புத்திரனான காந்தி மகான் எனக்காகச் செய்த தவமும் தியாகமும் ஆத்ம சக்திப் பிரயோகமும் பலனற்றுப் போகுமா? நீ இல்லா விட்டால் உன்னுடைய உபத்திரவம் இல்லாவிட்டால் எனது அருமை மகன் மகாத்மா மூலையில் உட்காரமுடியுமா? நீ இல்லாவிட்டால் பம்பாயில் கூடிப் பேசிய அயோக்கியர்களும் சுயநலக்காரரும் துரோகிகளும் “ஜனப் பிரதிநிதிகள்” ஆவார்களா? என் பெயரைச் சொல்லி என்னைக் காட்டி கொடுத்து மாதம் 1 – க்கு 1000, 2000, 3000, 4000, 5000,...

ஒத்தக்காசுச் செட்டியார் பிராமணத் தந்திரத்தின் தோல்வி 0

ஒத்தக்காசுச் செட்டியார் பிராமணத் தந்திரத்தின் தோல்வி

பனகால் ராஜா மந்திரியாயிருந்து மாதம் ரூ. 4333 – 5 – 4 சம்பளம் வாங்குவதில் பொறாமை கொண்ட சில பிராமணர் பனகால் ராஜா கட்சியிலி ருந்தே ஆசாபங்கமடைந்த ஸ்ரீமான். ஓ. கந்தசாமி செட்டியார் என்கிற ஒருவரைப் பிடித்து பனகால் ராஜாவின் மீது ஏவிவிட்டு, திரை மறைவிலி ருந்து சூஸ்திரக் கயிராட்டி வந்தார்கள். அளவுக்கு மிஞ்சி கயிற்றை ஆட்டின தன் பலனாய்க் கயிறு அறுந்துபோய் ஸ்ரீமான் செட்டியாரின் தலை உடைந்து நிரந்தரமான வடு இருக்கும் படியாய் ஒரு பெரிய தளும்பு ஏற்பட்டுவிட்டது. விஷயமென்ன? பனகால் ராஜாவை ஸ்ரீமான் செட்டியார் ஒரு கூட்டத்தில் இகழ்ச்சி யாய்ப் பேசினார்; மற்றொரு கூட்டத்தில் ஸ்ரீமான் செட்டியாரை பனகால் ராஜா இகழ்ச்சியாய்ப் பேசினார் . இது அரசியல் உலகில் சாதாரணமாய் நடக்கிற விஷயங்கள்தான். அநாவசியமாய் இந்த சம்பவத்தில் பிராமணர்கள் புகுந்து செட்டியாருக்கு ஏதோ பெரிய மானநஷ்டம் வந்துவிட்டதாகவும், அதற்காக சில பிராமணர்கள் பரிதாபப்பட்டு ஸ்ரீமான் செட்டியாருக்கு ஏதோ...

சபர்மதி ராஜியின் முறிவு 0

சபர்மதி ராஜியின் முறிவு

சுயராஜ்யக் கட்சியாருக்கும் பரஸ்பர ஒத்துழைப்பாளர்களுக்கும் வெளிப்படையாய் உள்ள வித்தியாசமெல்லாம் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தியோகங்களை ஏற்றுக்கொள்வ தென்பது முன்னவருக்கும், கவர்ன்மெண்டார் எவ்வளவு இணங்கி வருகிறார்களோ அவ்வளவுக்குத் தகுந்தபடி 1,000, 5,000 சம்பளமுள்ள உத்தி யோகங்களை ஏற்றுக் கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்துக் கொள்வ தென்பது பின்னவருடையதுமான வெளிப்படை கொள்கைகளாகும். இந்தக் கொள்கைக்கும் மிதவாதம், ஜஸ்டீஸ், பெசண்டம்மையார் ஆகியோர்களு டைய கட்சிக் கொள்கைக்கும் யாதொரு விதமான வித்தியாசமும் வெளிப் படையாகவுமில்லை, இரகசியமாகவுமில்லை. சுயராஜ்யக் கட்சிக்கும் மேற் கண்ட மற்ற கட்சிகளுக்கும் அந்தரங்கத்தில் யாதொரு விதமான வித்தியாச முமில்லை. சுயராஜ்யக் கட்சி “சாத்தமுதில் மல அமுது விழுந்து விட்டது, வடிகட்டினாப் போல் வாறு” என்பது போல் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் உத்தியோகம் ஏற்றுக் கொள்வதென்று சொல்லுவது, ஓட்டர்களை ஏமாற்றுவதற்கு தமிழ்நாட்டு ஐயங்கார் கோஷ்டிகள் செய்த சூழ்ச்சியே யல்லாமல் வேறல்ல. ஏனென்றால் அவர்கள் தமிழ்நாட்டில் ஜஸ்டீஸ் கட்சி யாரைப் போலவும், மிதவாதக்...

குட்டு வெளியாய் விட்டது 0

குட்டு வெளியாய் விட்டது

பார்ப்பன சுயராஜ்யக் கட்சியின் மோசத்தை வெளியிட உடனே சம்பள பிரேரணையை எதிர்க்க வேண்டும் என்று நமது “ குடி அரசு” கூறிற்று, சட்டசபையில் மைனாரடி கட்சியார் எதிர்க்கக்கூடாதென்கிறார்கள். மந்திரி சம்பள விஷயத்தைப் பற்றி ஆலோசித்த அநேக கூட்டங்கள் சீனிவாசய்யங் கார் பங்களாவில் கூடியது யாவும் அந்தரங்கம் வெளியிட முடியாது என்றார்கள். முடிவில் சம்பளப் பிரேரபணையின் பொழுது வெளியே போய் விட்டார்கள். இவையாவும் சுத்த புரட்டென்றும் மந்திரி கட்சியை கைவிட்டு விடாதீர்கள் என்று நேருவும், சீனிவாசய்யங்காரும் தந்தி கொடுத்தார் களென்பதையும், அண்டப்புளுகர் திரு. சத்தியமூர்த்திக்கு மாதா மாதம் சம்பளம் மந்திரிகளால் கொடுக்கபடுகிறதென்றும் “குடி அரசு” அக்காலத் திலேயே கூறியிருக்கிறது. இவைகளை யாரும் மருக்கவில்லை. இச்சம் பவத்தை யொட்டி எண்ணற்ற, அர்த்தமற்ற அறிக்கைகள் வெளிவந்தது. நேற்றைய ஐயங்கார், ஐயர் சண்டையில் குட்டு வெளியாயின. சத்தியமூர்த்தியிடமிருந்து டெல்லியில் கிடைத்த தந்தியை சினிவாசய் யங்கார் எனக்கு காட்டி அதன்படி நடக்கவேண்டுமென்றும் கூறினார். எங்கள் மாகாணக் கமிட்டி தடுத்திருப்பதால்...

அய்யங்கார் தர்மம்  -சித்திரபுத்திரன் 0

அய்யங்கார் தர்மம் -சித்திரபுத்திரன்

கோவை ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் தர்மத்தின் இரகசியம் ‘குடி அரசில்’ வெளியானதினால் ஸ்ரீமான் ஐயங்கார் முதல் பல பிராமணர் களுக்கும், அவரது தர்மத்தில் பங்கு கொண்ட – கொள்ள இருக்கும் சில பிராமணரல்லாத பத்திராதிபர்கள், பிரசாரகர்கள் என்போருக்கும் ஆத்திரங் கிளம்பிவிட்டது. தர்மத்தைப் பற்றி நமக்கு பொறாமையா? யார் தர்மம் செய்வ தாயிருந்தாலும், அது என்ன தர்மமாயிருந்தாலும், பொதுவாக உண்மைத் தர்மம் என்றாலே அதை வரவேற்பார்களே தவிர எவரும் அதை வெறுக்க மாட்டார்கள். ஆனால் பொது ஜனங்களை ஏமாற்றச் செய்யும் ஒரு சூழ்ச்சிக்கு தர்மம் என்று பெயர் கொடுப்பதனால் அறிவுள்ளவன் – யோக்கியன் பொது ஜனங்கள் ஏமாறும்படி பார்த்துக் கொண்டிருக்கவே மாட்டான். அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பவன் கோழையும் சுயநலவாதியுமே ஆவான். கோவை ஜில்லாவில் உண்மையான தர்மம் செய்த பிரபுக்களில்லா மலில்லை. உதாரணமாக கோவைக்கடுத்த பீளமேடு என்னும் ஊரில் ஸ்ரீமான் கள் பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு அன் சன்ஸ் என்கிற பிரபல நாயுடு கன வான்கள்...

சட்ட கோர்ட்  பத்திராதிபருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷனை 0

சட்ட கோர்ட் பத்திராதிபருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷனை

குடியானவன்: அய்யா, பத்திராதிபரே! சில வக்கீல்கள் இரண்டு கக்ஷியிலும் பீஸ் வாங்கு கிறார்களாமே, இது வாஸ்தவமா? பத்திராதிபர் : ஏன் ? அதனால் என்ன தப்பிதம். ஒரு கக்ஷியில் பீஸ் வாங்கும்போது இரண்டு கக்ஷியில் வாங்கினாலென்ன? மூன்று கக்ஷியில் வாங்குகிற வக்கீல்கள் கூட இருக்கிறார்கள். அதனால் என்ன தப்பு? குடியானவன்: மூன்று கக்ஷியென்றால் என்ன? எனக்கு தெரியவில்லையே. பத்திராதிபர்: இது தெரியாதா? வாதி, பிரதிவாதி, சாட்சி ஆகிய மூன்று கட்சி. குடியானவன்: சாட்சி எதற்காகக் கொடுப்பார்? பத்திராதிபர்: சாட்சி திருடி இருப்பார், ஜெயிலுக்குப் போயிருப்பார், கடன்காரராயிருப்பார், பொய் சாட்சி சொல்லியிருப்பார், அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொடுத்திருப்பார், இந்த வக்கீலைப்பற்றி ஏதாவது பேசி யிருப்பார். இவைகளையெல்லாம் கட்சிக்காரர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு பப்ளிக் கோர்ட்டில் அவமானப்படுத்தாமல் இருப்பதற்காக சாட்சி களும் வக்கீலுக்குப் பணம் கொடுப்பதுண்டு. குடியானவன்: இப்படி இரண்டு மூன்று பேரிடம் பணம் வாங்கினால் அது யோக்கியமாகுமா? பத்திராதிபர்: ஏன்? ஒருவனிடம் வாங்குவது...

ஐயங்காருக்கு அமெரிக்கா மாதின்  நற்சாக்ஷி பத்திரம் 0

ஐயங்காருக்கு அமெரிக்கா மாதின் நற்சாக்ஷி பத்திரம்

ஸ்ரீ.ளு.சீனிவாசஐயங்காருடையவும் அவர்தம் சிஷ்ய கோஷ்டிகளு டையவும், மோசத்தைப் பற்றியும் அவர்களது தேசத்துரோகம் நாணயமற்ற தனம் பார்ப்பனரல்லாதாரிடம் துவேஷம் திறமையின்மை ஆகியதுகளைப் பற்றியும் நாம் பன்முரை எடுத்துக் காட்டி இருக்கிறோம். அதற்கு அனுசரனை யாக அநேக சாக்ஷிகளும் குவிய ஆரம்பித்த இக்காலத்தில் ஐயங்கார் கூறும் ஒரே பதில் யாதெனில் “ நான் பலர்களுக்கு கொடுத்து வந்த பணத்தை நிருத்தி விட்டேன் அதற்குத்தான் இவ்விதம் கூருகிறார்கள். அதை நம்பாதீர்கள்” என்கிறார். ஆனால் இன்று ஐயங்கார் யோக்கியதையைப் பற்றி, ஓர் அமெ ரிக்கா மாது சொல்வதற்கென்ன சொல்கிறார். மிஸ். கிரேஸ் ஹட்சின்ஸ் என்ற அமெரிக்கா மாது எழுதுவதாவது, “மகாத்மா காந்தி அரசியல் விஷயங் களிலே தலையிடுவதில்லை. அவர் சமய இயக்கத்தையே நடத்திவருகிறார். இந்தியா உயர்ந்த வாழ்வை பெறவேண்டுமானால் அது அங்குள்ள 7000 கிராமங்களின் வாயிலாகவே முடியும்” ………………………………………….. “ இந்தியன் நேஷனல் காங்கிரஸுக்குத் தலைமை வகித்தவர் ளு. சீனிவாச ஐயங்கார் என்ப வர், நடுத்தரமான யோக்கியதை...

காந்தியின் மகிமை இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷனை 0

காந்தியின் மகிமை இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷனை

சாமுண்டி: ஏ, அண்ணே மதுரை வீரா! எல்லோரும் காந்தியை மகாத்மா, மகாத்மா என்று கூப்பிடுகிறார்களே, அவர்கிட்ட ஏதாவது மகிமை இருக் கிறதா? மதுரைவீரன்: மகிமை என்றால் என்ன ? சாமுண்டி: மகிமை என்றால் தெரியாதா? சித்து விளையாட்டு. கல்லை கற்கண்டு செய்கிறது; சாணியை சந்தனம் செய்கிறது; கள்ளை பன்னீராக்குவது. இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கள்தான். மதுரைவீரன்: அடேயப்பா! இதுதானா சித்து என்கிறது! இதெல்லாம் அவருடைய சிஷ்யப் பிள்ளைகள் செய்துவிடுவார்கள். அதிலும் தமிழ் நாட்டிலிருக் கும் குட்டி மகாத்மாக்கள் இப்பொழுது கூட செய்து வருகிறார்கள். இது ஒரு அதிசயமா? சாமுண்டி: அதிசயம் சொல்லுகிறேன் கேளு. சேலம் ஸ்ரீமான் ஆதிநாராயணச் செட்டியாருக்கு வடஆர்க்காடு ஜில்லாவிலே சட்டசபை மெம்பராயிருக் கிறது. இது எப்படிப்பட்ட சித்து பார்த்தாயா? அப்புறம் சென்னைக் கார்பொரேஷனைப் பாரு – பார்த்தாயா? இன்னம் கேளு; இதுகளைவிட ஒரு பெரிய சித்து விளையாட்டு காட்டுகிறேன் பார். ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாருக்கு இந்தியா சட்டசபை மெம்பராயிருக்கிறது....