பெண்கள் வீட்டுக்குள்
இருக்கவேண்டுமாம்! பாய் பரமாநந்தரின் பிற்போக்கு அமிர்தசரசில் பாய்பரமானந்தர் தலைமையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் இந்து மகாசபை மகாநாட்டிற்குத் தலைமைவகித்த, பொங்கி உத்தமர் பேசும்போது “”அரசியல் அடிமைத்தனத்தைப்போல சமூக அடிமைத் தனத்தையும் நான் எதிர்க்கிறேன். முக்கியமாகப் பெண்களுக்கும், தாழ்த்தப் பட்டோருக்கும் சுதந்தரம் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். இந்து மகாசபையின் நிரந்தரத் தலைவரான பாய்பரமானந்தர் இக்கொள்கையை மறுத்து “”இந்துப் பெண்களை காலிகள் துராக்கிரகம் செய்து அவமானப்படுத்துகின்றனர். இந்து சகோதரர்கள் தங்கள் சகோதரி களின் மானத்தையும் சரீரத்தையும் காப்பாற்றும்படி போதிய பலம் பெறுகிறவரையில் அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து கல்வியில்லாம லிருப்பது நலம்” என்று கூறியிருக்கிறார். பரமாநந்தருடைய இத்தகைய பிற்போக்கான அபிப்பிராயத்தினால் இன்னும் எத்தனை யுகம் சென்றாலும் இந்து சமூகம் முன்னேற்றம் அடைய முடியுமா? என்று கேட்கின்றோம். இந்தக் கொள்கையைப் பின்பற்றுகிற எந்தச் சமூகமாவது அபிவிருத்தியடையுமா? இந்து சமூகத்தில் ஒரு பாதியாக இருக்கின்ற பெண் சமூகம், எப்பொழுதும் ஆண்மக்களால் காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலேயே ...