Tagged: பேய்

‘பேய்’ எனும் ‘மூடநம்பிக்கை’

‘பேய்’ எனும் ‘மூடநம்பிக்கை’

ஒரிசா பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மாநிலம். மயூர்மஞ்ச் மாவட்டத் தில் பழங்குடி மக்களிடையே பேய், பிசாசு, சூன்ய நம்பிக்கைகள் தலை விரித்தாடுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் ‘பேய் பிடித்தவள்’, ‘சூன்யக்காரி’ என்று அறிவித்து 47 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் பழங்குடி மக்களிடையே இந்த மூட நம்பிக்கை களுக்கு எதிராக பகுத்தறிவாளர்களைக் கொண்டு பகுத்தறிவு பிரச்சாரம் செய்து வருகிறது. ‘சூன்யக்காரி’ தங்கள் பகுதியில் வாழ்வதால் பல தீங்குகள் வருவதாக மக்கள் நம்புகிறார்கள். தமிழ்நாட்டிலும் பல கிராமங்களில் இதே போன்ற மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக வாழ் நாள் முழுதும் பேராடியவர் மறைந்த டாக்டர் கோவூர். இலங்கையைச் சார்ந்த மனநல மருத்துவர். பேய், பில்லி, சூன்யம், ஆவி மோசடிகளை அம்பலப்படுத்தியவர். சென்னையில் பல முறை மூடநம்பிக்கைக்கு எதிரான பரப்புரைகளை செய்தவர். ‘மந்திர வாதி’களால் ஏமாற்றப்பட்டு, பிறகு தன்னிடம் மனநல சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் கதைகளை அவர் பதிவு செய்திருக்...

பின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்…!

பின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்…!

(பேய், பயம் என்பது ஒரு மனநோய். நினைத்ததைப் போன்றே பேசி, நடிக்கும் மனநோய்க்குப் பெயர்‘குளோசொலேலியா’. மனநல மருத்துவர் டாக்டர் கோவூர் சிகிச்சை அளித்த ஒரு பேய் பிடித்தவரின் கதை இது)   காலி ரிச்மண்ட் கல்லூரியில் கோவூர் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண் டிருந்த காலம். 1946ஆம் ஆண்டு பல்கலைக் கழக நுழைவுக்காகப் பயின்று கொண்டிருந்த சில மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விசேட வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார் கோவூர்.மே மாதத்தில் ஒரு சனிக்கிழமை வகுப்பு முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஜயசிங்கா என்ற மாணவன் கோவூரிடம் வந்தான். ‘என்ன விஷயம்’ என்று கேட்டார். தன் தந்தை ஒரு அரசாங்க அதிகாரி என்றும், அவரிடம் கடமை புரியம் ஒரு பியூன் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துபோன கர்ப்பிணியான ஒரு மீனவப் பெண்ணின் ஆவியால் பீடிக்கப்பட்டு அந்தப் பெண்ணைப் போன்றே பிதற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறினான். தன் வீட்டுக்கு இரு வீடுகள் தள்ளியே அந்தப் பியூனின் வீடு இருப்பதாகவும்...

படித்தவர்களை ஏன் ‘பேய்’ பிடிப்பதில்லை?

பேய், பிசாசு உண்மையா? அறிவியல் ரீதியான ஒரு அலசல். பேய், பிசாசு, ஆவிகளை அச்சத்தால் மக்கள் நம்புகிறார்கள். பூசாரிகளைக் கொண்டு அவற்றை விரட்ட முயல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், விபத்தால் இறந்தவர்கள் ஆகியோரே பேயாக, ஆவியாக உலவுவதாகப் பொதுவாக நம்பப்படுகிறது. விபத்தால் அல்லது உணவுக்காக கொல்லப்படும் ஆடுகள், கோழிகள், மாடுகள் போன்ற பிராணிகள் ‘ஆவியாக, பேயாக’ உலவுவதாகப் பொதுவாக யாரும் அதேபோல் நம்புவதில்லை. கொல்லப்படும் தாவரங்கள் பேயாக, ஆவியாக உலவுவதாக யாரும் நம்புவதில்லை. இந்தப் பேய், பிசாசு, ஆவிகள் யாரை தொந்தரவு செய்கின்றன தெரியுமா? படித்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை, அய்.பி.எஸ். அதிகாரிகளை, மருத்துவர்களை, பொதுவாக படித்த ஆண்களை தொந்தரவு செய்வதில்லை. அதேபோல் பார்ப்பன ஆண்களையும் பெண்களையும் தொந்தரவு செய்வதில்லை. இன்று வரை இவர்களையெல்லாம் ஏன் பேய், பிசாசு, ஆவிகள் தொந்தரவு செய்யவில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதே “பேய், பிசாசு, ஆவிகள், கிராமப்புற மக்களை அதிலும் படிப்பு...

தொலைக்காட்சியில் சோதிடத்துக்கு தடை: கருநாடக முதல்வர் வலியுறுத்துகிறார்

தொலைக்காட்சியில் சோதிடத்துக்கு தடை: கருநாடக முதல்வர் வலியுறுத்துகிறார்

office 2010 key windows 7 key sale windows 10 home-key windows 10 education windows 10 pro key office 2016 key windows 10 key office 2013 key windows 7 key  Buy Windows 7  |  Sale Windows 7 Ultimate Keys   |  Windows 10 Home Key Sale  |  windows 8.1 key sale  |  Windows 10 Product Key Sale  |  Microsoft Office 2016 Serial Keys  |  Windows 7 Professional Download ISO  |  MS Office 2016 Key For Activation Latest Full Free Download  |  How to download and install the Microsoft Office 2016   |  Windows 10 Product Key [UPDATED]  |  Windows 7 Ultimate ISO download  |  Legit Windows 7 Product Key Online Store, PayPal...

அச்சமே – ‘பேய்’ நம்பிக்கை!

அச்சமே – ‘பேய்’ நம்பிக்கை!

“பேய் இருக்கா, இல்லையா?” “நம்பலாமா? நம்பப்படாதா?” என்று ரஜினியையே கலவரப்படுத்தும் கேள்வியை வடிவேலு கேட்கும் காட்சி பிரபலமானது. நம்மில் சிலரும் இந்தக் கேள்வியுடன் அருகில் இருப்பவர்களைப் பதற வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதே சமயம், கொடூர முகப் பேய், வெள்ளுடை தரித்த ஆவிகளைத் திரைப்படங்களில் கண்டு பயந்து மகிழ்வதிலும் பலருக்கு ஆர்வம் அதிகம். தமிழில் அதீத ஒப்பனையுடன் நடிகர், நடிகைகள் ‘ரொமான்டிக் லுக்’ விடும் காதல் படங்களைத் தவிர்த்துவிட்டு, பேய்ப்படம் என்று அறிவிக்கப்பட்ட படங்களைக் கணக்கிட்டாலே ஒரு நூறை நெருங்கும். ‘யார்’, ‘மை டியர் லிஸா’, ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘13-ம் நம்பர் வீடு’, ‘வா அருகில் வா’ போன்ற படங்கள் பேய்களைப் பிரபலமாக்கியவை. சமீபத்தில், ‘யாவரும் நலம்’, ‘பீட்சா’ போன்ற படங்களும் சிறப்பாக எடுக்கப்பட்டவை. மிகச் சமீபமாக ‘யாமிருக்க பயமே’ என்ற திரைப்படம் பேயுடன் நகைச்சுவை கலந்த கதையைக் கொண்டு எதிர்பாராத வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை நாயகன் கிருஷ்ணாவே...