காங்கிரசு கட்டுப்பாடு

சட்டசபை தேர்தல் காலாவதியை சர்க்கார் ஒத்திப் போட்டு விட்டதி னால் காங்கிரசுக்காரர்கள் தங்களது சுயமரியாதையையும் அதிருப்தியையும் காட்டுவதற்கு அறிகுறியாய் இனிமேல் கூடப்படப் போகும் சட்டசபை மீட்டிங்குகளுக்கு மறு தேர்தல் வரை யாரும் போகக் கூடாது என்று எல்லா இந்திய காங்கிரசு கமிட்டியார் திரு.காந்தியவர்கள் யோசனைபடி தீர்மானம் செய்து எல்லா மாகாணங்களுக்கும் சார்வு செய்தாய் விட்டது. அதை எல்லோரும் ஒப்புக் கொண்டதாகவும் பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டது. ஆனால், சென்னை மாகாண தமிழ் நாட்டு காங்கிரஸ்காரர்களான பார்ப்பனர்கள் அக்கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட முடியாதென்றும் தாங்கள் எல்லா இந்திய காங்கிரஸ் கட்டளையை மீறி சட்டசபைக்குப் போகப் போவதாகவும் இரகசியமாய் தீர்மானித்து இருக்கின்றார்கள். காங்கிரஸ் சட்டசபைக்கு போகும்படி கட்டளை இட்டால் வெகு பக்தியாய் அக்கட்ட ளையை நிறைவேற்றுவார்கள். வேண்டாமென்றால் கட்டுப்பாட்டை மீறுவார்கள். நமது பார்ப்பனர்களின் காங்கிரஸ் பக்தி நமது ஆஞ்சநேய ஆழ்வாருக்குக் கூட கிடையாதென்றே சொல்லலாம்.

குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு – 16.06.1929

You may also like...

Leave a Reply