வினாக்கள்… விடைகள்…!

‘மாட்டுக்கறி விருந்து’ நடத்துவது வேலை இல்லாதவர்கள் நடத்தும் போராட்டம். – அமைச்சர் பொன் இராதாகிருட்டிணன்
உண்மைதான்! மாட்டுக்கறிக்கு தடை போட்டதால் அம்மாநிலங்களில் அதன் காரணமாக வேலை இழந்தவர்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்திய வானொலியில் சமஸ்கிருதத்தில் செய்திகளை மீண்டும் ஒலி பரப்பலாம். – ஜெர்மனியில் மோடி
அந்த செய்தியை கோயில் கர்ப்பகிரகத்தில் கொண்டு போய் ஒலி பரப்புங்க. ‘கடவுளுக்கு’ மட்டும்தான் அது புரியும்!

அட்சய திருதியை நாளில் தங்க விற்பனையில் கலப்படம் அதிகம் நடக்கிறது. – நுகர்வோர் சங்கம்
அன்றைய தினம் கலப்பட தங்கம் வாங்குவதே – அய்தீகம்ன்னு அறிவிச்சுடலாம். அப்போதும் கூட்டம் முண்டியடிக்கும்.

காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு (பார்ப்பனர்களுக்கு) தனி நகரம் உருவாக்கி, தனி குடியிருப்பு அமைக்கப்படும். – காஷ்மீர் அரசு முடிவு
அங்கே பண்டிட்டுகளே தெரு கூட்டுவார்கள்; அவர்களே சாக்கடை அள்ளுவார்கள்!

கிரெடிட் கார்டு மோசடி: அமெரிக்காவில் இந்து சாமியாருக்கு 27 வருட சிறை. – செய்தி
அமெரிக்காகாரன் இந்து ‘துவேஷி’ன்னு காட்டிட்டான்; உடனே தூதரக உறவை முறிச்சு, சாமியார மீட்டுட்டு வாங்க.

மதமாற்ற தடைச் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.- சட்ட அமைச்சகம்
அதனால் என்ன? ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அந்த அதிகாரத்தை வழங்கி, அவசர சட்டம் போடுங்க. குடியரசுத் தலைவர் உடனே ஒப்புதல் தருவார்.

பெரியார் சிலையில் உள்ள ‘கடவுள் இல்லை’ என்ற வாசகத்தை நாங்களே அழிப்போம். – எச். ராஜா
‘கடவுள் இல்லை’ என்பதால் மனிதர்களாகிய நாங்கள் தான் அதை அழிக்க வேண்டியிருக்கிறது என்று இதன் மூலம் ஒப்புதல் தருகிறது இந்த வெட்கம் கெட்ட பூணூல் கும்பல்.

பெரியார் முழக்கம் 23042015 இதழ்

You may also like...

Leave a Reply