தலைநகரில் தமிழர் நீதி ஆர்ப்பாட்டம்

ஆகஸ்டு 30 – இந்த நாள், சர்வதேச காணாமல் போனவர்கள் நாள்’ என உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களின் உலகு தழுவிய போராட்டத்தில் தமிழகத் தமிழர்களாகிய நாமும் தோழமை கொள்வோம்!

ஆயிரக்கணக்கில் நம் மக்களை காணாமல் போனவர்களாக தொலைத்து நிற்கிறோம் என்ற உண்மையை இந்த நாளில் நினைவில் நிறுத்துவோம்!

சர்வதேச காணாமல் போனவர்கள் நாளை முன்னிட்டு…

ஆகஸ்டு 31 திங்கள் காலை 10 மணியளவில் சென்னை அடையார் காந்தி நகர், ஐ.நா.வின் யுனிசெஃப் அலுவலகம் எதிரில் தமிழர் நீதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆர்ப்பாட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பங்கேற்கின்றார்கள்.

பெரியார் முழக்கம் 27082015 இதழ்

You may also like...

Leave a Reply