கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க திருவல்லிக்கேணி பகுதித் தோழர்கள் முடிவு

திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி பகுதிக் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.11.2023 வியாழன் மாலை 6 மணிக்கு வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் தோழர் இராஜேசு தலைமையில் நடைபெற்றது..

கூட்டத்தில் கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு 500 சந்தா திரட்டுவது எனவும், வருகிற 2024ம் ஆண்டிற்கான பொங்கல் விழா சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, பகுதிச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட பகுதிக் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

You may also like...