வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் !

வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் !

கலந்துரையாடல் கூட்டம் 25.02.2018 ஞாயிற்றுகிழமையன்று மாலை 6.00 மணியளவில் பெரம்பூரில் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட செயலாளர் தோழர் இரா. செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தோழர் ஏசு குமார் முன்னிலை வகிக்க, தோழர்கள் நா.பாஸ்கர், நாகேந்திரன் , ராஜீ, சங்கீதா, சங்கவி , தினேஷ், இரமேசு, பிரசாந்த், மோகன்ராஜ், சதிசு, சரவணன், தீபக், இளவரசன், சாரதி, செல்வம் என அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு அவரவர் கருத்துகளை முன் வைக்க, அத்தனையும் ஆலோசிக்கப் பட்டது.

வரும் நாட்களில் வடசென்னை மாவட்ட திவிக செயல்பாடுகள் குறித்து தோழர்களின் கருத்தை கவனத்தில் ஏற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

வரும் ஏப்ரலில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

துண்டறிக்கைக்கு பதிலாக டாக்டர் அம்பேத்கரின் சட்டங்களால் நாம் பெறும் பலன்களை சிறு புத்தகமாக ( பதினாறு பக்கத்திற்குள்) பத்தாயிரம் பிரதிகள் தயாரித்து மக்களிடம் , கல்லூரி மாணவர்களிடமும் பிரச்சாரமாக கொண்டு சேர்ப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொதுக் கூட்டத்திற்கான அவசியம், ஆகும் செலவு , கூட்ட பணிகள் பிரித்தல், கடை வசூல் பொறுப்பாளர், பிரச்சார முறை, சிறப்பு அழைப்பாளர்கள் போன்ற முக்கிய விசயங்கள் கலந்தாலோசிக்கப் பட்டது.

அதன் தொடர்ச்சியாய் வட சென்னையில் தெருமுனை கூட்டங்கள், கருத்தரங்குகள், பிரச்சார பயணம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துக் கொண்ட தோழர்களுக்கு, தோழர் நா. பாஸ்கர் நன்றிகள் கூறி கூட்டத்தை முடித்து வைத்தார் .

திராவிடர் விடுதலைக் கழகம்
வட சென்னை மாவட்டம்
80561 03917

Image may contain: 7 people, people smiling, people sitting

You may also like...