சேலம் தென்ஆற்காடு ஜில்லாக்கள்

சேலம் ஜில்லாவிலும் தென்னாற்காடு ஜில்லாவிலும் மகாநாடு விஷயமாக எவ்வித பிரஸ்தாபமும் காணப்படுவதில்லை. பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுப் பேச்சை ஆரம்பித்தால் ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்களின் பதவி போய்விடுமோ என்னமோ என்று பயப்படுவதாகக் காணப்படுகின்றது. தமிழ்நாடுகளில் இப்படி பயந்து கொண்டு மதில் மேல் பூனையாய் இருந்த காரணத்திற்காகவே பல பிரமுகர்களுக்கு இருந்த பதவி கூட போய்விட்டதாக நாம் அனுபவத்தில் அறிந்து வருகின்றோம். ஆதலால் பதவியை சதா சர்வகாலம் கட்டிக்கொண்டு அழாமல் தாங்கள் எந்த முத்தி ரையில் இந்த பதவிகளுக்கு வந்தோம் என்பதைக் கவனித்து சற்று கண் விழித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.

குடி அரசு – செய்தி விளக்கம் – 27.11.1927

You may also like...

Leave a Reply