ஓர் மறுப்பு

திருப்பூரில் பார்ப்பனரல்லாதார் நபரால் கூட்டப்போகும் ஒரு போலி மகாநாட்டிற்கு எதிரிடையாய் ஒரு மகாநாடு கூட்டப் போவதாகவும் அதற்கு ஸ்ரீமான்கள் ஷண்முகம் செட்டியார், ரத்தினசபாபதி முதலியார், வரதராஜுலு நாயுடு, ராமசாமி நாயக்கர் முதலியோர்கள் வரப்போவதாகவும், பார்ப்பன பத்திரிகைகளில் வெளியாய் இருக்கிறது. இது கொஞ்சமும் ஆதாரமற்றது. இதற்கு மறுப்பு அசோசியேட் பிரஸ் பிரதிநிதியிடம் நேரில் தெரிவித்தும் பத்திரிகைகளில் வெளியாகவில்லை. நம்மை பொருத்தவரை அப்பேர்பட்ட மகாநாடு கூட்டுவதைப் பற்றி கொஞ்சம் கூடக் கருதவில்லை என்றும் கூட்ட லாமா என்று பலர் யோசனை கேட்பதற்குங்கூட அவசியமில்லை என்று தெரிவித்திருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

குடி அரசு – மறுப்புரை – 14.08.1927

You may also like...

Leave a Reply