திருச்சியில் மன்மோகன் சிங்குக்கு கழகத்தினர் கறுப்புக் கொடி

2.8.2013 அன்று காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமையில் திருச்சி மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன், மாவட்டச் செய லாளர் கந்தவேல் குமார், மாவட்ட அமைப்பாளர் குணராஜ், திருவாரூர் மாவட்டச் செயலாளர் காளிதாஸ், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் நல்லிக்கோட்டை முருகன், நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன், தோழர்கள் பழனி, பொன்னுசாமி, முருகாநந்தம், மணி, குமரேசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து  கொண்டு கைதா யினர். 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

 

பெரியார் முழக்கம் 22082013 இதழ்

You may also like...