சத்தியாக்கிரகம்

சத்தியாகிரகம் என்பது பற்றி 3, 4 வாரங்களுக்கு முன் ஒரு சிறு குறிப்பு எழுதி இருந்தோம். அதைப் பார்த்து பலர் வருத்தப்பட்டார்கள். மற்ற பத்திரி கைகாரர்கள் யாரும் அதை கொஞ்சமும் கவனிக்காமல் சத்தியாக்கிரகம் சத்தியாக்கிரகம் என்பதாக பெரும் தலைப்பு இட்டு எழுதிவந்தார்கள். நாகபுரி ஆயுத சத்தியாக்கிரகம் ஸ்ரீ அவாரி ஜயிலுக்கு போனதும் நிறுத்தப்பட்டுப் போய்விட்டது. அதன் பலனாய் நமது நாட்டு சத்தியாக்கிரகப் பேச்சும் நிறுத்தப்பட்டுப் போய் விட்டது. இம்மாதிரி பொறுப்பில்லாமல் நடக்கும் காரியங்களால் நமது நாட்டுக்கு வரும் கெடுதிகளை பலர் உணர்வதில்லை. தொண்டர்கள் என்போர்களின் நிலைதான் இப்படி என்றாலும் பத்திராதி பர்களின் யோக்கியதை இதைவிட மோசமானதாயிருப்பதோடு இப்பேர்பட்ட பொறுப்பற்ற சங்கதியை அனுமதிப்பதற்கு அனுகூலமாகவே இருந்து வருகிறது. இனியாவது தங்கள் கடனை உணர்வார்களாக.

குடி அரசு – குறிப்புரை – 10.07.1927

You may also like...

Leave a Reply