சர்வம் பார்ப்பன மயம் ஜகத்

 

தாழ்த்தப்பட்ட மக்களுடைய குறைபாடுகளை கவனித்து சீர்திருத்தம் செய்து முன்னேற்றம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட லேபர் கமிஷனர் வேலையை ஒரு பார்ப்பனருக்குக் கொடுத்து அதில் பார்ப்பனீயம் புகுத்தப்படுவதோடு அந்த இலாக்காவும் பார்ப்பனமய மாக்கப்படுகிறது.

இப்போது போதாக்குறைக்கு சென்னை இன்ஸ்பெக்டர் ஆப் லோக்கல் போர்டாக தோழர் எஸ்.ரங்கநாதம் ஐ.சி.எஸ். அவர்களை நியமித்திருக்கிறார்கள். இவர் எவ்வளவு பிடிவாதப் பார்ப்பன ஆதிக்கக்காரர் என்பது தோழர் தேவர் விஷயத்தில் நடந்து கொண்டதிலிருந்தும் மற்றும் அவரது கலெக்டர் உத்தியோகத்தில் இருந்தும் மக்கள் நன்றாய் உணர்வார்கள். இம்மாதிரி பெரிய பெரிய பயனுள்ள அதிகார ஆதிக்கமுள்ள உத்தியோகங்களுக்கெல்லாம் பார்ப்பனர்களே நியமிக்கப்படுகிறார்கள்.

இதற்குப் பெயர்தான் ஜனநாயகம் போலும். இதுதான் ராமராஜ்யம் போலும். இதுதான் “இப்போது நடப்பது நம்ப ஆட்சி” போலும்.

நடந்தது நடக்கட்டும். இன்னும் என்னென்ன நடக்குமோ நடக்கட்டும். அதிக முறுக்கேறினால் அறுந்துபோகும் என்கின்ற ஆப்த வாக்கியம் மெய்யாகுமா பொய்யாகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு – 04.09.1938

You may also like...