Category: பெரியார் முழக்கம் 2012

சுயமரியாதை இஞ்சினைப் பலப்படுத்தி…

சுயமரியாதை இஞ்சினைப் பலப்படுத்தி…

சுயமரியாதை என்கின்ற ஒரு இஞ்சினைப் பலப்படுத்தி, சரியாக ஓடத்தகுந்த சக்தியை உண்டாக்கி வைத்துவிட்டால், பிறகு எந்த எந்திரத்தைக் கொண்டு வந்து அதோடு இணைத்துத் தோல் பட்டையை மாட்டிவிட்டாலும் அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை என்றே சொல்லு கின்றோம். மற்றபடி, எல்லா உணர்ச்சிகளையுமவிட சுயமரியாதை உணர்ச்சியே மேலானதும் மதிக்கத் தக்கதுமாகும் என்பதின் தத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த இயக்கத்தில் உண்மையான சந்தேகமே தோன்ற இடமிருக்காது. அது இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன் போராடத் தோன்றியதாகத் தோன்றலாம். இதுவே அல்ல அதன் இலட்சியம்.  ஒரு இயந்திரத்தைச் சுழற்றும்போது முதலில் சுற்றும் சிறு வேகம்போல், இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது; மற்றபடி பின்னால் அது உலகத்தையே ஒன்றுபடுத்த உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின்  போதுதான் அதன் உண்மை சக்தியும் பெருமையும வெளியாகும். பெரியார்...

சமூகத்தை ஆட்டிப் படைத்த மனுதர்மம்!

சமூகத்தை ஆட்டிப் படைத்த மனுதர்மம்!

வைசியர்கள் சூத்திரர்கள் சண்டாளர்கள் ஆகியோர் இடங்கை, வலங்கை என  இரு பெரும் பிரிவுகளாகப் மோதினர் தோழர் அருணன் எழுதிய ‘தமிழகத்தில் – சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு’ நூலி லிருந்து. புராதன பொதுவுடமைச் சமுதாயமானது தனது உள் பலவீனத்தால் சிதைந்தபோது உலகில் அடிமைச் சமுதாய அமைப்பு எழுந்தது. இந்தியாவிலும் எழுந்தது. இங்கே வர்ணாஸ்ரமம் என்கிற வடிவத்தில் அது எழுந்தது. மனிதர்களை பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிறப்பின் அடிப்படையில் நால் வருணங்களாகப் பிரிக்கிற அந்த அமைப்பில் சூத்திரர்களின் நிலை கிட்டத்தட்ட அடிமை நிலை யாகவே இருந்தது என்றால், இந்த நால் வருணத்திற்கு அப்பாற்பட்ட சண்டாளர்கள் என்பவர்களின் நிலையோ அடிமை நிலையேதான். கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கூறப்படுகிற “மனு ஸ்மிருதி” என்கிற மனு நீதி இப்படிக் கூறுகிறது – “சூத்திரர்களுக்கு கடவுள் விடுத்துள்ள ஒரே வேலை பிராமணர், ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினருக்கும்...

வடமொழியை வளர்த்த சோழர்கள்

வடமொழியை வளர்த்த சோழர்கள்

ராஜ ராஜ சோழனின் பெருமை பேசுவோருக்கு பதிலடி தந்து துரை. இளமுருகு எழுதிய நூல் ‘ராஜ ராஜ சோழனின் மறுபக்கம்’. ராஜராஜன் பார்ப்பன மேலாண்மையை உயர்த்திப் பிடித்ததை ஆதாரங்களுடன் விளக்கு கிறது. நூலிலிருந்து… ஆகஸ்டு 9 இதழ் தொடர்ச்சி… கல்வியிலும் வடமொழிக்கே முழு உரிமை, தமிழுக்கு என்று ஒரு கல்விச் சாலை அமைத்ததாகக் கல்வெட்டுச் சான்று கிடையாது. ஆனால் முழுவதும் வடமொழி இலக்கணம், புராணங்கள், சிவ தருமம், சோம சித்தாந்தம், ராமானுச பாடியம், பிரபாகரின் மீமாம்சம், வியாகரணம் ஆகியவற்றை மட்டும் கற்பிக்க வடஆற்காடு கப்பலூர், செங்கற்பட்டு மாவட்டத்தில் ஆணியூர் (ஆனூர்) தென்னாற் காட்டில் இராசஇராச சதுர்வேதி மங்கலம் என்னும் எண்ணாயிரம், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எழுதும் கை நோகும், நினைக்க மனம் நோகும். இந்தச் சோழர்கள் பார்ப்பனரை அடக்கி வைத்தவர்கள் என்று முனைவர்கள் சொல்லு கிறார்கள். என்ன கொடுமை இது! படித்தவன் சூது வாது செய்யக் கூடாது என்ற பாரதியின்...

‘மனு சாஸ்திர’ நூலுக்கு விளம்பரம்!

‘மனு சாஸ்திர’ நூலுக்கு விளம்பரம்!

பார்ப்பன பாசிச கருத்தாக்கமான மனுசாஸ்திரத்தை இப்போதும் புதிய புதிய பதிப்புகளாக அச்சிட்டு பார்ப்பனர்கள் பரப்பி வருகிறார்கள். ‘சூத்திர’ இழிவுகளை நிலைநிறுத்தும் இந்த மனுசாஸ்திரத்தை பெருமைப்படுத்தி, ‘துக்ளக்’ ஏடு மதிப்புரைகள் எழுதி வருவதை ஏற்கனவே வெளியிட்டோம். இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு ஏடான ‘உங்கள் நூலகம்’ மாத இதழில் (ஆகஸ்ட்) மனுதர்ம நூலுக்கு வெளி வந்துள்ள விளம்பரம்: மனுதர்மத்தை பெருமைப்படுத்தி பார்ப்பனர்கள் எழுதுவதும், அதற்கு விளம்பரம் தந்து புதிய பதிப்புகளை வெளியிடுவதும் வெளிப்படையாகவே அரங்கேறி வருகிறது. நாட்டின் பெரும்பான்மையான பார்ப்பனரல்லாத மக்களை பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்; அடிமைகள்; விலைக்கு வாங்கப்பட்டவர்கள் என்று அச்சிட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழன் “சொரணையற்று” குறட்டைவிட்டுத் தூங்குகிறான்!   பெரியார் முழக்கம் 23082012 இதழ்

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும் தமிழக மின்சாரம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும் தமிழக மின்சாரம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

கூடங்குளம் அணுஉலையை எதிர்ப்பது ஏன்? எனும் தலைப்பில் விளக்கப் பொதுக் கூட்டம் 25.3.2012 மாலை 6.45 மணிக்குப் புதுச்சேரி பெரியார் திடலில் (சிங்காரவேலர் சிலையருகில்) நடைபெற்றது. பெருந்திரளாகப் பொது மக்களும் இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்திற்கு  புதுச்சேரி கழக அமைப்பாளர் தந்தைப் பிரியன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். சமர்பா குமரனின் இன எழுச்சிப் பாடல்களுடன் கூட்டம் துவங்கியது. துணைத் தலைவர் வீராசாமி நன்றியுரை வழங்கினார். கூட்டம் இரவு பதினொரு மணி வரை நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றுகையில் – “உலக நாடுகளெல்லாம் இந்தியாவை ஒரு குப்பைத் தொட்டி போலத்தான் நடத்தி வந்திருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது வெடி பொருளாகப் பயன்படுத்தி மிஞ்சிப் போன, மண்ணைக் கெடுக்கின்ற வேதிப் பொருள்களையெல்லாம் உரமாக மாற்றி எம்.எஸ்.சாமிநாதன் என்கின்ற பார்ப்பனனை வைத்து இந்தியாவில் பிரபலப்படுத்தினர். ஆஸ்பெஸ்டாஸ் அதிகமாகக் கொண்ட கப்பலைப் பிரான்சு நாட்டில் உடைத்தால்...

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ அமைப்புக் கூட்டங்கள் எழுச்சி நடை

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ அமைப்புக் கூட்டங்கள் எழுச்சி நடை

‘திராவிடர் விடுதலைக் கழக’ம் தொடங்கியவுடன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மண்டலம் வாரியாக கழக அமைப்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். தோழர்கள் பெரும் எண்ணிக்கையில் உற்சாகத்துடன் கூட்டங்களில் பங்கேற்று வரு கின்றனர். ஆக. 12 ஆம் தேதி அமைப்பு தொடங்கியவுடன், ஆக. 17 ஆம் தேதி நெல்லையிலும், ஆகஸ்ட் 18 இல் காலை திண்டுக்கல்லி லும்  மாலை திருச்சியிலும் மண்டல அமைப்புக் கூட்டங்கள் நடந்தன. மாவட்டக் கழகம், ஒன்றிய கழகத்துக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். 17.8.2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு, பாளையங் கோட்டை ஆதி திராவிடர் மகாசன சங்க கட்டிடத்தில், திராவிடர் விடுதலைக் கழக நெல்லை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. மாநில பரப்புரை செய லாளர் பால். பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நெல்லை மண்டல அமைப்புச் செய லாளர் குமார் வரவேற்புரையாற்றி னார். கழகத் தலைவர் கொளத்தூர்...

நன்கொடை

நன்கொடை

சேலம் மாவட்டம் கொளத்தூர் நகரக் கழகத் தலைவர் மாது மகன் பிரபாகரன் – சங்கீதா இணையரின் மகன் ச.பி. அகிலனின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக ஏட்டிற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். பெரியார் முழக்கம் 30082012 இதழ்

மயிலாடுதுறை மகேஷ் – இளவரசி சாதி மறுப்பு மணவிழா

மயிலாடுதுறை மகேஷ் – இளவரசி சாதி மறுப்பு மணவிழா

நாகை மாவட்டக் கழகச் செயலாளர் தெ.மகேஷ் – செ. இளவரசி ஜாதி மறுப்பு மணவிழா 19.8.2012 ஞாயிறு காலை 9 மணியளவில் மயிலாடுதுறை விமலாம்பிகை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணவிழாவை நடத்தி வைத்தார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மண்டல அமைப்பாளர் இளையராசா, பத்திரிகையாளர் சுகுணா திவாகர், ரஷித்கான் வாழ்த்துரை வழங்கினர். கழக ஏட்டுக்கு மணமகன் ரூ.2000 நன்கொடையும், மாவட்டக் கழத்துக்கு ரூ.15000 மதிப்புள்ள புதிய ஒலிபெருக்கி கருவியையும் வழங்கினார். ‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்கும் தோழர் கவி எழுதிய ‘தமிழ்த் தேசத் தந்தை பெரியார்’ எனும் நூல் மணவிழா பரிசாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.   கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற மணவிழாக்கள் 21.8.2012 செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் மருத்துவர் பழ. பாலகிருஷ்ணன் மகன் மருத்துவர் பா.பாவேந்தன் – சா. மேகலா இணையரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி...

என்னை “மகாத்மா”வாக்கி விடாதீர்கள்!

என்னை “மகாத்மா”வாக்கி விடாதீர்கள்!

நண்பர்களே, முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ளுகிறேன். அதாவது சாப்பாட்டு ஜாகைக்குப் போகும் வழியில் என்னைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும் சுவர்களில் கண்டபடியெல்லாம் எழுதியிருந்தது. மற்றும் சிலரைப் பற்றியெல்லாம் எழுதி இருந்தது. நண்பர்களே என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதுவும் என் மனப்பூர்த்தியாய்ச் சொல்லுகிறேன். என்னவென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ, தெய்வத் தன்மைப் பொருந்தியவர் என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ கூப்பிடுவதைவிட, கருதுவதைவிட என்னை அயோக்கியன் என்றும் திருடன் என்றும், முட்டாள் என்றும் சுயநலக்காரன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும் மற்றும் இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது என்று கருதுகிறேன். ஏனெனில், எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும் தெய்வத் தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்று மூட ஜனங்கள் சொல்லிக் கொள்ளவோ, எனது படத்தைப் பூஜையில் வைத்துப்...

ஜாதி ஒழிப்புப் போராளி  இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்

ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்

ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளான 11.9.12 செவ்வாய் அன்று பிற்பகல் 2 மணியளவில் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வீரவணக்க – ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. கழகத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் க. துரைசாமி தலைமையில் மாநில பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர், தாமரைக் கண்ணன் மண்டல அமைப்புச் செயலாளர்கள், தென் மாவட்டங்களின் பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்க உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஒன்றுகூடி அங்கிருந்து பரமக்குடிக்குப் பயணமாக உள்ளனர். வீரவணக்க நிகழ்வில்  பங்கேற்க விரும்பும் தோழர்கள் 11.9.12 செவ்வாய் காலை சரியாக 10 மணிக்கு செம்பட்டிக்கு வருமாறு அழைக்கிறோம். மற்ற மாவட்டப் பொறுப்பாளர்கள் தத்தம் மாவட்டங்களில் ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை, ஜாதி ஒழிப்பு உறுதி மொழியேற்று பொதுக் கூட்டங்களாக நடத்துமாறு கேட்டுக்...

பிரிட்டிஷ் ஆட்சியின் மனித நேயமும்  பார்ப்பன ஆட்சியின் ‘மனுதர்மமும்’

பிரிட்டிஷ் ஆட்சியின் மனித நேயமும் பார்ப்பன ஆட்சியின் ‘மனுதர்மமும்’

பிரிட்டிஷ் ஆட்சி காட்டிய கவலையைக்கூட இந்திய “சுதந்திர” ஆட்சி தூக்குத் தண்டனைக் கைதிகளிடம் காட்ட முன்வரவில்லை. கிரிமினல் குற்றங்களில் தூக்குத் தண்டனைக்குள்ளாவோர் பெரும்பாலும் பார்ப்பனரல்லாத ‘சூத்திரர்களும்’, ‘பஞ்சமர்களும்’ தான் என்பதால் மனுதர்மப் பார்வை யுடனே  இந்திய பார்ப்பன ஆட்சி செயல்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலமான 1937 ஆம் ஆண்டில் நடந்த ஒரு வழக்கைக் குறிப்பிட வேண்டும். அப்போது கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. ‘அத்தப்பா கவுண்டன்’ என்பவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்துக்கு அப்பீல் விசாரணை வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு தூக்குத் தண்டனை வழங்கலாம் என்று கீழ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்க முடியாது என்று மற்றொரு  நீதிமன்றம், விளக்கம் கூறி, தூக்குத் தண்டனையை நிறுத்தியது. ஒப்புதல் வாக்கு மூலத்தையே சாட்சியமாக ஏற்றுக் கொண்டால், அது, குற்றவாளிக்கு தண்டனையை...

திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் இல்ல மணவிழா

திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் இல்ல மணவிழா

26.8.2012 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு திருச்சி தெற்கு காட்டூர் அ.பா. சிவந்தி ஆதித்தனார் சமுதாயக் கூடத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் ஆரோக்கியசாமி மகள் ஆ. தமிழரசி – எஸ். ஆரோக்கிய அன்னதங்க ராஜா இணையினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் துரை தாமோதரன், ‘மந்திரமல்ல தந்திரமே!’ என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கழகத் தலைவருடன் மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன் மற்றும் திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 30082012 இதழ்

மின் நெருக்கடி: திருச்சியில் சமூக தணிக்கை மாநாடு

மின் நெருக்கடி: திருச்சியில் சமூக தணிக்கை மாநாடு

25.8.2012 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி புத்தூர் நாலு ரோடு அருகில் உள்ள சண்முகா திருமண அரங்கில், “தமிழக மின் நெருக்கடி சமூக தணிக்கை மாநாடு” நடைபெற்றது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடை பெற்ற இந்த மாநாட்டை வழக்கறிஞர் ஜோ. கென்னடி ஒருங்கிணைத்தார். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங் கிணைப்பாளரும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருமான கொளத்தூர்மணி தலைமையேற்று இந்த மாநாட்டை துவக்கி வைத்தார். வழக்கறிஞர் த. பானுமதி வரவேற் புரையாற்றினார். கண குறிஞ்சி, மீ.த. பாண்டியன், அரங்க. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தம் நான்கு தலைப்புகளின் கீழ் நான்கு அமர்வுகளாக நடைபெற்றது. முதல் அமர்விற்கு வழக்கறிஞர் மார்ட்டின் தலைமையேற்க, “இந்திய மின்சார துறையின் கொள்கைகளின் பரிணாமம்” என்ற தலைப்பில் உழவர் தாளாண்மை இயக்கத் தலைவர் பொறிஞர் கோ. திருநாவுக்கரசு...

கே.ஜி. வலசு பகுதியில் சாதி ஆதிக்கவாதிகள் மிரட்டலை முறியடித்து கழகக் கூட்டம்

கே.ஜி. வலசு பகுதியில் சாதி ஆதிக்கவாதிகள் மிரட்டலை முறியடித்து கழகக் கூட்டம்

ஆதிக்க சக்திகளின் கடுமையான எதிர்ப்பு களுக்கும் வதந்திகளுக்கும் மத்தியில் ஏராளமான பொது மக்கள் திரளுடன் நடைபெற்றது பெரியாரியல் பொதுக் கூட்டம். 4.8.2012 சனிக் கிழமை மாலை 6 மணிக்கு, ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கே.ஜி. வலசு பகுதியில், ஈரோடு பகுத்தறிவாளர் பேரவை சார்பாக பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக மற்ற கட்சிகள் பொதுக் கூட்டம் நடைபெறும் இடமான கே.ஜி. வலசு நால்ரோடு பகுதியை தேர்வு செய்த நமது தோழர்கள், காவல் நிலையத்தில் தெரிவித்துவிட்டு கூட்டத்திற்கான விளம்பரங்களையும் செய்திருந்தனர். ஆனால், இந்த இயக்கத்தை இப்பகுதியில் காலூன்ற விட்டால் தமது மேலாதிக்க தன்மை போய்விடும் என்று கருதிய, அப்பகுதியிலுள்ள ஜாதி ஆதிக்கவாதிகள் சிலர், கூட்டம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, காவல் நிலையத்தில்  கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. நமது தோழர்களும் மாற்று இடத்தில் அங்கிருந்து சற்று தொலைவிலுள்ள மதுரை வீரன் கோவில்...

செயல்களம் நோக்கி ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ சென்னை – புதுச்சேரியில் தோழர்களின் எழுச்சி

செயல்களம் நோக்கி ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ சென்னை – புதுச்சேரியில் தோழர்களின் எழுச்சி

22.8.2012 புதன் கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில் அன்பு தனசேகரன் இல்ல மாடியில், சென்னை, காஞ்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. தோழர் குகன், கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்பைச் சொல்ல, சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகரன் வரவேற் புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், வழக்கறிஞர் வீ. இளங்கோவன் ஆகியோர் உரை யாற்றினர். அமைப்பை அடுத்தக் கட்டத்திற்கு முன்னோக்கி நகர்த்தல், கழகப் பரப்புரைகளை மக்களிடம் சேர்க்கும் பணிகள் குறித்து, கழகத் தோழர்கள் தங்கள் ஆலோசனைகளை தெரி வித்தனர். கீழ்க்கண்டவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். சென்னை மாவட்டம்: தலைவர் – ஞா. டார்வின் தாசன்; செயலாளர் – இரா. உமாபதி அமைப்பாளர் – க.சுகுமார்; பொருளாளர் – வேழவேந்தன்; துணைச் செயலாளர்...

மனித உரிமைக்கு குரல் கொடுத்த நீதிபதிகள்

மனித உரிமைக்கு குரல் கொடுத்த நீதிபதிகள்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கையெழுத்திட்டு தனித்தனியாக கடிதங்கள் எழுதியுள்ள நீதிபதிகள்: பி.பி. சாவந்த் (உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி) எ.பி.ஷா (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) டிபிலால் நஸ்கி (ஒரிசா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) ஆர்.கே. மிஸ்ரா (பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி; கோவா மனித உரிமை ஆணையத்தின் தலைவர்) ஹோஸ்பெட் சுரேஸ் (பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி) பன்சன்த் ஜெயின் (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி) பிரபா சீனிவாசன் (சென்னை உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) கே.பி. சிவசுப்ரமணியன் (சென்னை உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) பி.சி. ஜெயின் (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) எஸ்.என். பார்கவா (சிக்கிம் உயர்நீதிமன்ற முன்னாள்  தலைமை நீதிபதி, அசாம் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர்) பி.ஜி. கோல்சே பட்டீல் (பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) இரன்வீர் சாய் வர்மா (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) பி.ஏ. கான் (ஜம்மு காஷ்மீர்...

உச்சநீதிமன்றம் ஒப்புதல் 9 ஆண்டுகளாக சட்ட விரோதமாக தூக்கு

உச்சநீதிமன்றம் ஒப்புதல் 9 ஆண்டுகளாக சட்ட விரோதமாக தூக்கு

தூக்குத் தண்டனை ஒழிப்பு இயக்கத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தவறான குற்றச்சாட்டு களின் அடிப்படையில் ஒருவரை சாகடித்துவிடும் ஆபத்துகள் நிறைந்த தண்டனை என்பதை உலகம் முழுதும் மனித உரிமையாளர்கள் வற்புறுத்தி வரு கிறார்கள். இதே கருத்தை இப்போது இந்தியாவில் நீதிபதிகளாக இருந்தவர்களும் சுட்டிக்காட்ட முன் வந்துள்ளதோடு, குடியரசுத் தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கும், கடிதம் எழுதியுள்ளனர். இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 2012 ஜூலை 25 ஆம் தேதி 14 முன்னாள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கையெழுத்திட்டு தனித்தனியாக எழுதியுள்ள முறையீட்டு கடிதங்களில் தற்போது, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 13 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்துவதற்கு குடியரசுத் தலைவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை (அரசியல் சட்டத்தின் 72வது பிரிவு) பயன்படுத்த முன்வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதில் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, உச்சநீதி மன்றமே தவறான தீர்ப்புகள் அடிப்படையில்...

தூக்குத் தண்டனை; சில தகவல்கள்

தூக்குத் தண்டனை; சில தகவல்கள்

உலகம் முழுதும் அனைத்து நாடுகளும் மரண தண்டனையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று, 2007, 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் அய்.நா.வின் பொதுச் சபை தீர்மானம் வலியுறுத்தியது. நடப்பு ஆண்டிலும் இதே போன்ற தீர்மானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு அய்.நா. முதலில் இத் தீர்மானத்தைக் கொண்டுவந்தபோது 104 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 54 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 29 நாடுகள் விலகி நின்றன. அடுத்த ஆண்டில் மேலும் 2 நாடுகள் கூடுதலாக வாக்களித்தன. எதிர்க்கும் நாடுகள் எண்ணிக்கை 54லிருந்து 46 ஆக குறைந்தது. விலகி நின்ற நாடுகள் 34 ஆக உயர்ந்தது. மீண்டும் 2010 இல் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வந்தபோது, 109 நாடுகள் ஆதரவாகவும், 41 நாடுகள் எதிர்ப்பாகவும் ஓட்டளித்தன. 36 நாடுகள் வாக்கெடுப்பில் பங்களிக்காமல் விலகி நின்றன. 1945 இல் அய்.நா. சபை உருவானபோது 8 நாடுகள் மட்டுமே தூக்குத் தண்டனையை முழுமையாக ஒழித்திருந்தன....

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ நடத்திய செங்கொடி நினைவு நாள்

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ நடத்திய செங்கொடி நினைவு நாள்

தலைநகர் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் செங்கொடி நினைவேந்தல் பொதுக் கூட்டம் ஆக.26 அன்று மாலை சேத்துப்பட்டு வைத்தியநாதன் வீதியில் எழுச்சியுடன் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெறும் முதல் பொதுக் கூட்டமும் இதுவேயாகும். கூட்ட மேடைக்கு அருகே செங்கொடி நினைவுத் தூண் ஏற்கனவே கழக சார்பில் நிறுவப்பட்டிருந்தது. சென்னை மாவட்டக் கழகத் துணை செயலாளர்  ஆ.வ. வேலு தலைமையில் கு. வெங்கடேசன் வரவேற்புரையுடன் கூட்டம் தொடங்கியது. நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தமிழக மக்கள் உரிமைக் கழக வழக்கறிஞர் பா. புகழேந்தி, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தியும், தூக்குத் தண்டனையை ஒழிக்குமாறு வலியுறுத்தியும் பேசினர். நிகழ்வில் தோழர் செங்கொடிக்கு கூட்டத்தினர் அகவணக்கம் செலுத்தினர்....

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின்   பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்

தலைநகர் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் 134வது தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 17.9.2012 திங்கள் மாலை 6 மணிக்கு இராயப்பேட்டை வி.எம். தெரு, இலாயிட்ஸ் சாலை சந்திப்பில் நடைபெறுகிறது. ச. சரவணன் தலைமையிலும், ப.கணேசன், கோ. தமிழரசன் முன்னிலையிலும், கி. இளைய சிம்மன் வரவேற்புரையிலும் நிகழ்ச்சி நடைபெறும். திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்,  இயக்குனர் மணிவண்ணன், வி.சி.க. கருத்தியல் பரப்புரைச் செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் உரையாற்றுகின்றனர். கி. முருகன் நன்றியுரை யாற்றுகிறார். தேனிசை செல்லப்பா இசை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. நிறைவில் மு. கலைவாணன் குழுவினர் வழங்கும் பேரறிஞர் அண்ணாவின் எழுத்தோவியமான ‘சந்திர மோகன்’ பொம்மலாட்ட நாடகம் நிகழ்கிறது. காலை 7.30 தொடங்கி 9 மணி வரை தோழர்கள் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பர். 10 கிளைக் கழகங்களில் கழகத்தின் பெயர்ப் பலகைகள் திறக்கப்படுகின்றன. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக்...

கீழ்த்தரமான மக்கள் தன்மை

கீழ்த்தரமான மக்கள் தன்மை

எந்த அடிப்படை உண்மைகளும் இல்லாமல் தனி நபர்களை குறி வைத்து பரப்பப்படும் அவதூறுகள் பற்றி தந்தை பெரியார் எழுதிய அறிக்கை இது: “சுமார் 70 வருடங்களுக்கு முன் திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் ஈரோடு – கரூர் டிவிஷனில் அசிஸ்டென்ட் இன்ஜினியராக நிய மிக்கப்பட்டபோது, ஒரு ஓவர்ஸீ யரிடம் வேலை கற்க அமர்த்தப் பட்டார். பிறகு அவர் அஸிஸ்டென்ட் இன்ஜினியர் வேலை ஏற்றுக் கொண் டார். அப்போது அந்த ஓவர்ஸீயர் மாணிக்க நாயக்கரின் கீழ் வேலை பார்க்க வேண்டியவரானார். இவரின் நடத்தையை மாணிக்க நாயக்கர் வேலை பழகும்போது தெரிந்து இருந்ததினால், சந்தேகப்பட்ட ஒரு காரியத்தில் கண்டித்தார். இது அந்த ஓவர்ஸீயருக்குப் பிடிக்கவில்லை. ‘நம்மிடம் வேலை பழகின பையன் நம்மைக் கண்டிக்கிறானே!’ என்று கருதி மாணிக்க நாயக்கருக்குப் புத்தி சொல்லுகிற மாதிரி, ‘நீங்கள் சிறு வயது; உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார். உடனே மாணிக்க நாயக்கர். ‘என்...

ஏற்காடு தனியார் பள்ளியில் சிங்கள மாணவர்களுக்கு பயிற்சித் தருவதை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம்

ஏற்காடு தனியார் பள்ளியில் சிங்கள மாணவர்களுக்கு பயிற்சித் தருவதை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம்

29.8.2012 அன்று ஏற்காடு மான்போர்ட் தனியார் பள்ளியில் சிங்கள மாணவர்கள் 22பேருக்கு மட்டைப் பந்து பயிற்சிக் கொடுக்கப்பட்ட செயதியறிந்து, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் அ. பெருமாள் தலைமையில், ஏற்காடு தோழர்கள் 15 பேரும், சேலம் நகரத் தோழர்கள் இரா. டேவிட் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் இணைந்து பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையறிந்து சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏற்காடு விடுதலை சிறுத்தைக் கட்சித் தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர். பள்ளி தாளாளர் வாக்கிஷ் என்பவரிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சிங்கள மாணவர்களை உடனே வெளியேற்றக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். காவல் துறையின் சமாதானத்தை ஏற்க மறுத்து பள்ளி தாளாளர் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவித்தார். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என தோழர்களிடம் உறுதியளித்தப் பின்பு தோழர்கள் கலைந்து சென்றனர். பெரியார் முழக்கம் 06092012 இதழ்

தமிழக முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் உருக்கமான கடிதம்

தமிழக முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் உருக்கமான கடிதம்

தமிழக சிறைகளில் தொடர்ந்து 13 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக்கு உரிய தகுதி பெற்ற சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என்று அனைத்து முஸ்லீம்கள் அமைப்பு முதல்வருக்கு (ஜமா அத்துல் உலக மாசபை) வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதம் விவரம்: தமிழகத்தில் மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று சிறப்பான முறையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்களுடன், எங்கள் சமூகத்தின் சார்பாக ஒரு முக்கிய கோரிக்கையை உங்கள் முன் வைத்திட விரும்புகின்றோம். முந்தைய தி.மு.க. அரசு சிறைக் கைதிகள் பொது மன்னிப்பு விடுதலையின்போது முஸ்லிம் சிறைக் கைதிகள் விஷயத்தில் குறிப்பாக அரியானா மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் (உய சூடி,30.2005) வழங்கிய உத்தரவு வழிகாட்டுதலை புறந்தள்ளி பாரபட்சமான முறையில் நடந்து கொண்டது. தமிழக அரசு பொது மன்னிப்பு விடுதலையில் தகுதியற்ற வழக்குகள் எவையெல்லாம் என்பதனை அரசாணை எண். 1762/87 இல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள நிலையில் இவ்வரசாணையில்...

திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்தல் 13 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!

திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்தல் 13 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!

‘சேவ் தமிழ்’ அமைப்பின் சார்பில் சிறையில்நீண்ட காலம் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளின் நியாயமான விடுதலைக்கான உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும், செப்டம்பர் முதல் தேதி சென்னை லயோலா கல்லூரி ‘பிஎட்’ அரங்கில் நடந்த கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். “தமிழ்நாட்டில் பெரியாரின் திராவிடர் இயக்கம், திராவிடர் என்ற குடையின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளான பார்ப்பனரல்லாதார், இஸ்லாமியர்கள், தலித் மக்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒடுக்கும் சக்தியான பார்ப்பனர்களை தனிமைப்படுத்தி, இந்த மக்களின் விடுதலைக்கும், உரிமைக்குமான இயக்கத்தை முன்னெடுத்தார். அதன் விளைவாக ஏனைய வடமாநிலங்களில் மிக மோசமாக கட்டமைக்கப்பட்டதைப் போன்ற குறுகிய இஸ்லாமிய வெறுப்பு தமிழகத்தில், முளை விடும் வாய்ப்புகள் தடுக்கப்பட்டன. மதத்தால் வேறுபட்ட இஸ்லாமியர்களை திராவிடர்களாக, சகோதரர் களாக தமிழகம் அரவணைத்தது. ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவாக்கப்பட வேண்டிய இந்த ஒற்றுமையைக் குலைக்க பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் திட்டமிட்டு மேற்கொள்ளும்...

பேரிகையில் தோழர் பழனிக்கு நினைவேந்தல் கூட்டம்

பேரிகையில் தோழர் பழனிக்கு நினைவேந்தல் கூட்டம்

27.8.2012 திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேரிகையில், படுகொலை செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட கழக அமைப்பாளர் பழனி நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்திற்கு, பேரிகை ஒன்றிய அமைப்பாளர் முருகேசு தலைமையேற்றார். கிருஷ்ணப்பா, பாஸ்கர் ஆகியோர் தளி எம்.எல்.ஏ. (சி.பி.ஐ.) இராமச்சந்திரனின் அடக்குமுறைகளை விளக்கும் விதமாக பாடல்களை (தெலுங்கில்) பாடினர். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கழகத் தலைவர் தமது உரையில் – “இந்த நாட்டில் கம்யூனிசம் பரவாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதற்கு ஒரு கட்சி இருக்கிறது. அதுதான் கம்யூனிஸ்ட் கட்சி  என்று பெரியார் சொல்லியுள்ளார். பெரியார் சொன்னது வேடிக்கைக்காக அல்ல என்பதை நிரூபிக்கும்படி தற்போது சி.பி.ஐ. நடந்து கொள்கிறது என்று சி.பி.ஐ. கட்சியின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பேசினார். சி.பி.ஐ. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (மக்கள் விடுதலை) விந்தைவேந்தன், பெங்களூர்...

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள்

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள்

மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த தோழர் செங்கொடியின் முதலாம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி 28.8.2012 செவ்வாய் கிழமை அன்று காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. அன்று காலை 8 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் மன்ற கொடியினை ஏற்றி வைத்தார். காலை 10 மணிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. வந்திருந்து நினைவுச் சுடரையேற்றி நினைவேந்தல் உரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் அஞ்சலி செலுத்திச் சென்றனர். மாலை 6 மணிக்கு நினைவேந்தல் பொதுக் கூட்டம் பறை ஆட்ட நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காஞ்சி மக்கள் மன்றப் பொறுப்பாளர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து சிறுவர்களின் நடனம், கவிதை, இடையிடையே உரை என்று நடைபெற்றது. ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உரையாற்றி முடிந்ததும் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. எனவே கூட்டம் தடைபட்டது. திராவிடர்...

தலையங்கம் மோடியை அம்பலமாக்கும் தீர்ப்பு

தலையங்கம் மோடியை அம்பலமாக்கும் தீர்ப்பு

குஜராத்தில் மோடி ஆட்சியில் 2002 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமியர் இனப் படுகொலையில் ‘நரோடா பாட்டியா’ என்ற அகமதாபாத் புறநகர் பகுதியில் 97 இஸ்லாமியர்கள் உயிருடன் நெருப்பில் போட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மை யோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். இதில் உண்மையான குற்றவாளிகளை மறைத்து கண்துடைப்புக்காக வழக்குகளைப் பதிவு செய்தது மோடி ஆட்சி. உச்சநீதிமன்றம் தலையிட்டு, முன்னாள் மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு 32 குற்றவாளிகளை அடையாளம் கண்டது. அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த அகமதாபாத் சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். ஜோட்ஸ்னா யாக்னிக் என்ற பெண் நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு, பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப் படுகொலையை முன்னின்று நடத்திய மோடி அமைச்சரவையில் இடம் பெற்றவரும், அவருக்கு மிக நெருக்கமானவர்...

திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் திருப்பூர்-ஈரோடு-கரூர் மாவட்டங்களில் எழுச்சி

திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் திருப்பூர்-ஈரோடு-கரூர் மாவட்டங்களில் எழுச்சி

29.8.2012 புதன் மாலை 6 மணிக்கு திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், துரை சாமி இல்லத்தில் நடைபெற்றது. முகில்ராசு வரவேற் புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன், மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் துரைசாமி, மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விசயன் ஆகியோர் உரையாற்றினர். பெரியார் முழக்கம் ஏட்டிற்கான 180 சந்தாக்களை பொதுச் செயலாளரிடம் வழங்கினர். விரைவில் ஒரு ஆயிரம் சந்தாக்கள் வசூலித்து தருவதாக அறிவித்துள்ளனர். இறுதியாக கீழ்க்கண்ட தோழர்கள் பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டத் தலைவர் : சு. துரைசாமி, செயலாளர் – சு. அகிலன், பொருளாளர் – இரவிச் சந்திரன், அமைப்பாளர் – கிளாக்குளம் கு. செந்தில், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் – செந்தில் குமார், தமிழ்நாடு அறிவியல் மன்றம் அமைப்பாளர் – மடத்துக்குளம் மோகன். சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழக...

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே! தமிழர் இல்லந்தோறும் விழா எடுப்போம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா-இந்துத்துவ உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் ‘சோதிடப் புரட்டு’ நூலை எழுதிய கனடா வாழ் சிந்தனையாளர் நக்கீரன். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ’ ஆண்டிலிருந்து தான் தொடங்க...