மயிலாடுதுறை மகேஷ் – இளவரசி சாதி மறுப்பு மணவிழா

நாகை மாவட்டக் கழகச் செயலாளர் தெ.மகேஷ் – செ. இளவரசி ஜாதி மறுப்பு மணவிழா 19.8.2012 ஞாயிறு காலை 9 மணியளவில் மயிலாடுதுறை விமலாம்பிகை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணவிழாவை நடத்தி வைத்தார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மண்டல அமைப்பாளர் இளையராசா, பத்திரிகையாளர் சுகுணா திவாகர், ரஷித்கான் வாழ்த்துரை வழங்கினர். கழக ஏட்டுக்கு மணமகன் ரூ.2000 நன்கொடையும், மாவட்டக் கழத்துக்கு ரூ.15000 மதிப்புள்ள புதிய ஒலிபெருக்கி கருவியையும் வழங்கினார். ‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்கும் தோழர் கவி எழுதிய ‘தமிழ்த் தேசத் தந்தை பெரியார்’ எனும் நூல் மணவிழா பரிசாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.

 

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற மணவிழாக்கள்

21.8.2012 செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் மருத்துவர் பழ. பாலகிருஷ்ணன் மகன் மருத்துவர் பா.பாவேந்தன் – சா. மேகலா இணையரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

23.8.2012 வியாழக்கிழமை அன்று காலை 8 மணிக்கு, காஞ்சிபுரம் ஜவுளிக்கடை வியாபாரிகள் திருமண மண்டபத்தில், த. பாலசுதர்சன் – கு.சந்தியா ஆகியோரது வாழ்க்கை இணை ஏற்பு விழா, திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம் அற்புதம் மாள் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத் தூர் மணி வாழ்க்கை ஒப்பந்தத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

பெரியார் முழக்கம் 30082012 இதழ்

You may also like...