Category: பெரியார் முழக்கம் 2014

ஆசிரியருக்குக் கடிதம்: “டேவிட் ‘பஸ்ல’ இருக்கான்டா!”

ஆசிரியருக்குக் கடிதம்: “டேவிட் ‘பஸ்ல’ இருக்கான்டா!”

7.5.14 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழில் “உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை” கட்டுரை கண்டேன். இது சம்பந்தமான கடந்தகால நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1961-1962 ஆண்டுகளில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசுப் பணியாற்றி வந்தேன். பட்டுக்கோட்டை சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை. ஒருமுறை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தஞ்சை செல்ல பஸ் ஏறினேன். பஸ் புறப்பட்ட அடுத்த நிறுத்தத்தில் பேருந்தில் இருந்த மூன்று பார்ப்பனர்கள், கண்டக்டரிடம் பேருந்தை நிறுத்திச் சொல்லி தமது பூணூலையும் மேலாடையை யும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘டேவிட் பஸ்சுல இருக்காண்டா’ என்று சத்தம் போட்டு சொல்லிக் கெண்டு பேருந்தைவிட்டு இறங்கி தலைதெறிக்க ஓடியதைப் பார்த்தேன். அணைக்காடு சுயமரியாதை வீரர் டேவிட் கண்ணில் பட்டால் பார்ப்பனர்களின் பூணூல் தப்பாது என்பதை உணர்ந்தேன். பார்ப்பனர்கள் நம் மீது குதிரை சவாரி செய்யலாம் என்ற மதவாத திமிர் போக்கை மாற்றிக் கொண்டு மனிதனாக மாறவேண்டும். இப்போது ஆட்சி அதிகாரத்தை நம்பி ஆட்டம் போட்டால்...

அச்சமே – ‘பேய்’ நம்பிக்கை!

அச்சமே – ‘பேய்’ நம்பிக்கை!

“பேய் இருக்கா, இல்லையா?” “நம்பலாமா? நம்பப்படாதா?” என்று ரஜினியையே கலவரப்படுத்தும் கேள்வியை வடிவேலு கேட்கும் காட்சி பிரபலமானது. நம்மில் சிலரும் இந்தக் கேள்வியுடன் அருகில் இருப்பவர்களைப் பதற வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதே சமயம், கொடூர முகப் பேய், வெள்ளுடை தரித்த ஆவிகளைத் திரைப்படங்களில் கண்டு பயந்து மகிழ்வதிலும் பலருக்கு ஆர்வம் அதிகம். தமிழில் அதீத ஒப்பனையுடன் நடிகர், நடிகைகள் ‘ரொமான்டிக் லுக்’ விடும் காதல் படங்களைத் தவிர்த்துவிட்டு, பேய்ப்படம் என்று அறிவிக்கப்பட்ட படங்களைக் கணக்கிட்டாலே ஒரு நூறை நெருங்கும். ‘யார்’, ‘மை டியர் லிஸா’, ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘13-ம் நம்பர் வீடு’, ‘வா அருகில் வா’ போன்ற படங்கள் பேய்களைப் பிரபலமாக்கியவை. சமீபத்தில், ‘யாவரும் நலம்’, ‘பீட்சா’ போன்ற படங்களும் சிறப்பாக எடுக்கப்பட்டவை. மிகச் சமீபமாக ‘யாமிருக்க பயமே’ என்ற திரைப்படம் பேயுடன் நகைச்சுவை கலந்த கதையைக் கொண்டு எதிர்பாராத வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை நாயகன் கிருஷ்ணாவே...

தலையங்கம்: பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்!

தலையங்கம்: பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்!

மறைந்த பெரியார் சாக்ரடீஸ் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடந்தபோது (30.5.2014) கவிஞர் அறிவுமதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். பெரியார் கொள்கைகளுக்கு நெருக்கடி உருவாகியுள்ள அரசியல் சூழலில், பெரியார் இயக்கங்கள், தங்களுக்குள் இணைந்து செயல்படவேண்டும் என்றும், அதற்கான முன்முயற்சியை திராவிடர் கழகத் தலைவரே எடுக்க வேண்டும் என்பதே கவிஞர் அறிவுமதியின் கோரிக்கை. தொடர்ந்து பேசிய நடிகர் சத்தியராஜ் அவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமது உரையில் பேசியதை ‘விடுதலை’ நாளேடு கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருக்கிறது. “இங்கே கவிஞர் அறிவுமதி அவர்களும் நமது இனமுரசு சத்யராஜ் அவர்களும் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். அது பற்றி நான் கருத்து சொல்லவில்லை என்றால், என்ன நாம் எடுத்து வைத்த கோரிக்கைக்கு ஆசிரியர் (கி.வீரமணி) பதில் சொல்லாமல் போய்விட்டாரே என்று கருதிட இடம் கொடுக்கக் கூடாதல்லவா? பெரியார்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

பொற் கோயிலுக்குள் இராணுவம் நுழைந்து 700 பேர் வரைக் கொன்றுக் குவித்த 30 ஆம் நினைவு நாளன்று பொற்கோயிலில் இரு சீக்கிய பிரிவினர், வாள், ஈட்டியுடன் மோதிக் கொண்டனர்.              – செய்தி இப்படித்தான் அன்றைக்கு இராணுவம் நுழைந்த போதும் நடந்தது என்பதை செயல்முறையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் போல! கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம்; 4 அமைச்சர்களிடம் மோடி ஒப்படைத்தார்.  – செய்தி முதலில் ‘பாவம்’ செய்த பக்தர்கள் ‘பாவத்தை’ கங்கையில் தொலைப்பதற்கு தடை போடுங்க! அதுவரை கங்கை “பாவங்களின்” நதியாகத்தான் இருக்கும்; தூய்மையாகாது. போரில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த ராஜபக்சே நியமித்துள்ள விசாரணைக் குழுவிடம், 18,590 புகார் மனுக்கள் வந்துள்ளன.      – செய்தி அப்புறம், இந்த மனுக்களும் காணாமல் போகும்; அதைக் கண்டுபிடிக்க ராஜபக்சே மற்றொரு குழு போடுவார். இந்திய வெளியுறவுத் துறை அதையும் வரவேற்று அறிக்கை விடும். அட, போங்கப்பா! “கற்பழிப்பு” குற்றவாளிகளை கடவுளால் மட்டுமே தடுக்க...

கரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை

கரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை

ஊர்தோறும் சென்று மக்களை சந்தித்து கழகத்தின் செயல்பாடுகளை விளக்கிடும் துண்டறிக்கைகளை வழங்கி பெரியார் கொள்கைகளை விளக்கிடும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. கழகத்தின் பரப்புரைக்காக வாங்கப்பட்டுள்ள ‘வேனில்’ தோழர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். வாகனத்திலேயே உணவுப் பொருள்களை எடுத்துப்போய் ஆங்காங்கே உணவு தயாரித்து சாப்பிட்டு, வாகனத்திலேயே தங்கி, தொடர்ந்து தோழர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகிறார்கள். கழகப் பொருளாளர் இரத்தின சாமி, இந்த இயக்கத்துக்கு தலைமை யேற்று திட்டமிட்டு வழி நடத்தி வருகிறார். சந்திக்கும் மக்களிடம் ரூ.10 மட்டுமே நன்கொடையாக வாங்கும் இந்தத் திட்டத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் நன்கொடை வழங்குவதோடு கழக வெளியீடுகளையும் வாங்கி வருகிறார்கள். வெற்றி நடைபோடும் மக்க சந்திப்பு திட்டம் பற்றிய செய்தி தொகுப்பு: மே 22, 2014 : திராவிடர் விடுதலைக் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கத்தை, கரூரில் 22.5.2014 காலை 11 மணிக்கு மூத்த பெரியார் தொண்டர்...

பேரறிவாளன் மனம் திறக்கிறார்!

பேரறிவாளன் மனம் திறக்கிறார்!

வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தூக்குத் தண்டனை ரத்து, தமிழக அரசின் விடுதலை முயற்சி, தன் தாய் அற்புதம்மாளின் போராட்டம் பற்றி பல கேள்விகளுக்கு வழக்கறிஞர் மூலம் விடை அளிக்கிறார். அரசியல் சாசன அமர்விற்கு உங்கள் விடுதலை வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் என்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? அரசியல் சாசன அமர்வில் நீதியரசர்கள் யார் யார் பங்கு பெறப் போகிறார்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருப்பினும் தற்போது அமைந்துள்ள புதிய மத்திய அரசு இதில் எவ்வகையான நிலைப்பாடு எடுக்க உள்ளது என்பதையே நான் மிக ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். காரணம் தண்டனை குறைப்பு அதிகாரம் என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என நன்கு தெரிந்திருந்தும் அரசியல் காரணங்களுக்காக சென்ற காங்கிரசு மத்திய அரசு தமிழக அரசின் முடிவை எதிர்த்தது – வழக்கு தொடுத்தது. தற்போது அமைந்துள்ள புதிய மத்திய அரசு மாநில உரிமைகளை மதிக்கிற அரசாக...

நாகம்மையார் மறைவும், கிறிஸ்துவ திருமணமும் – பெரியார் வரலாற்று நூலில் பிழையான தகவல்கள் (தா.செ. மணி)

நாகம்மையார் மறைவும், கிறிஸ்துவ திருமணமும் – பெரியார் வரலாற்று நூலில் பிழையான தகவல்கள் (தா.செ. மணி)

திராவிடர் கழகம் வெளியிட்டு வரும் ‘தமிழர் தலைவர்’ பெரியார் வரலாற்று நூலில் திரிக்கப்பட்ட பிழைகளை நேர் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இக்கட்டுரை வெளியிடப் படுகிறது. பெரியாரின் வாழ்வில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாக, நாகம்மையார் மறைவுக்கு (11-5-1933) அடுத்த நாள் திருச்சியில் 144 தடையை மீறி, இரு கிறிஸ்துவர்களுக்கு சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தார் என்பது ஒன்றாகும். திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ எனும் 1939 ஆம் ஆண்டு வரையிலான வாழ்க்கை வரலாற்று நூலிலும் “11-5-1933 இல் நாகம்மையார் காலஞ்சென்றார். 12-5-1933 இல் ஈ.வெ.ரா திருச்சி சென்று அங்கு ஒரு கிறிஸ்துவ விவாகத்தை 144 வது செக்ஷனை மீறி நடத்தி வைத்து அரஸ்டு செய்யப்பட்டார். பிறகு, சர்க்காரால் இந்த வழக்கு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றியே தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” இரு பதிப்புகளிலும்...

திருவாரூர் தங்கராசு படத்திறப்பு

திருவாரூர் தங்கராசு படத்திறப்பு

சென்னை திருவான்மியூர் ‘குத்தூசி குருசாமி-குருவிக்கரம்பை வேலு சுயமரியாதைப் பேரவை’ சார்பில், 16.3.2014 ஞாயிறு அன்று திருவாரூர் கே.தங்கராசு படம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை மரு.அ.சவுந்திர பாண்டியன் தலைமை வகித்தார். புதுகை க. இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். திருவாரூர் தங்கராசு படத்தை திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும், திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை படத்தை இனமானக் கவிஞர் செ.வை.ர. சிகாமணியும் திறந்து வைத்து உரை நிகழ்த்தினர். ‘அறிவின் வழி’ மாத இதழ் ஆசிரியர் கவிஞர் குடந்தையார் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 19062014 இதழ்

அன்புமணி மீதான வழக்கு என்ன?

அன்புமணி மீதான வழக்கு என்ன?

அன்புமணி மீதான சி.பி.ஐ. வழக்குகள் குறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம். “அவர் மீது முதல் வழக்கு, ம.பி. மாநிலம் இந்தூரில் பதிவு செய்யப்பட்டது. இங்கு கடந்த 2007 ஆம் ஆண்டு ‘இன்டெக்° மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்ற பெயரில் சுரேஷ் சிங் என்பவர் புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கினார். 2008-2009 ஆம் கல்வியாண்டில் இந்தக் கல்லூரி எம்.பி.பி.எ°. இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக, இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பித்து. இந்திய மருத்துவக் கவுன்சில் குழு அங்கு சென்று ஆய்வு செய்து, ‘கூடுதல் மாணவர்களை சேர்க்கத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை’ என அறிக்கை கொடுத்துவிட்டது. பின்னர் சுரேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதன் பேரில் நீதிமன்றமே ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய, அந்தக் குழுவும் முதல் குழுவைப் போலவே அறிக்கை தாக்கல் செய்தது. இதன் பிறகுதான் சுரேஷ் சிங், அன்புமணியின் இலாகாவை நாடியிருக்கிறார். மத்திய சுகாதாரத்...

தலையங்கம் : தடை போட வேண்டுமாம்!

தலையங்கம் : தடை போட வேண்டுமாம்!

மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஒரு விசித்திர வழக்கை சந்தித்திருக்கிறது. ‘பிராமணர்’களை எதிர்த்தும் அவதூறூகவும் பேசி வரும் தி.க. தலைவர் கி.வீரமணி, தந்தை பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் “பிராமணருக்கு” எதிராகப் பேச தடைவிதிக்க உத்தரவிடவேண்டும் என்பது வழக்கு. வழக்கைத் தொடர்ந்தவர் சிவகாசியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற வழக்கறிஞர். விசாரித்த நீதிபதிகள் வி.இராம சுப்பிரமணியன், வி.எம். வேலுமணி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். “விமர்சனம் என்பது கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி கருத்துரிமைக்கு அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது. சரியான விமர்சனங்களை வரவேற்க வேண்டும். விமர்சனம் முறையற்றதாக நியாயமற்றதாக இருக்குமானால், ஒன்று அதை புறக்கணிக்கலாம். மற்றொன்று சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரலாம். விமர்சனம் எல்லை மீறினால் புத்தர் காட்டிய வழியில் அமைதி காக்கலாம். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சகமனிதர்களை தனது வைப்பாட்டி மக்கள், சூத்திரர்கள்...

கோவையில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது

கோவையில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது

இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு இயக்கம், ஜூன் 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் கோவை காந்திபுரத்தில் தொடங்கியது. கழகப் பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட தலைவர் நேரு உள்ளிட்ட 20 தோழர்கள் இயக்கத்தில் பங்கேற்றனர். கோவை நகரம் முழுதும் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கி, கழக நூல்களை விற்பனை செய்து வருகின்றனர். கழகத்தின் முயற்சியை பொது மக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்று வருகிறார்கள். ஒவ்வொருவரிடமும் 10 ரூபாய் என்று நன்கொடை திரட்டப்படுகிறது. 100 ரூபாய் நன்கொடை தருவோருக்கு 20 ரூபாய்க்கான நூல்கள் வழங்கப்படுகின்றன. ஜூலை 4 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் தொடருகிறது. 4 ஆம் தேதி மேட்டுப் பாளையத்தில் நிறைவு பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. 15.6.2014 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களை உக்கடம்பகுதியில் சந்தித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தார். அன்று மாலை கோவையில் நடந்த மறைந்த நடிகர் மணிவண்ணன் நூல்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

திருவண்ணாமலையில் “உலக நன்மைக்காக” ஜெபம்-பூஜை நடத்திய சாமியார்கள், தங்களுக்கு நிலம், காப்பகம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.         – ‘தமிழ் இந்து’ செய்தி உலக நன்மையை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்; எங்கள் கோரிக்கைகளை அரசுதான் கவனிக்க வேண்டும் என்கிறார்கள். சாமியார்களுக்குக்கூட பகுத்தறிவு வந்துடுச்சு! கூடங்குளம் அணுமின் நிலைய பராமரிப்புப் பணியின்போது ஆறு ஊழியர்கள் படுகாயம் அடைந்ததற்கு வால்வு பழுதடைந்ததே காரணம் என்று கூறுவது தவறு. ஊழியர்கள் சரியாகக் கையாளாமல் போனதே காரணம். – அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் மனிதர்களுக்கு ஆபத்துன்னா, அது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால், எந்திரங்கள் பாதுகாப்பா இருக்குதுன்னு சொல்லவர்றீங்க…. நல்ல மனசு! வங்கிகளில் பெருமுதலாளிகள் வாங்கிய ரூ.2.40 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்படவில்லை. 10 ஆண்டுகளில் வராத கடனாக தள்ளுபடி செய்யப் பட்டது ரூ.2 லட்சம் கோடி. – வங்கி ஊழியர் சங்கம் தகவல் உஷ்… சத்தமாய் பேசாதீங்க… பெரு முதலாளிகள் காதுல விழுந்தா...

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வரை பாராட்டுகிறோம் பிரதமர் மோடியை சந்தித்து இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும், அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிய தமிழக முதல்வரை பாராட்டுவதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர், செய்தியாளர் களிடம் கூறியது: சிதம்பரம் அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கு 92 ஆவது அரசாணையின்படி பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்க சட்ட வரையறை உள்ளது. ஆனால், இவற்றை கல்வி நிர்வாகங்கள் பின்பற்றுவதில்லை. மேலும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இவற்றை உரிய திருத்தங்களோடு செயல்படுத்த வேண்டும். பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி மேலாண்மை...

பெரியாருக்கு எதிரான ‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு விளக்கம்-மறுப்பு

பெரியாருக்கு எதிரான ‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு விளக்கம்-மறுப்பு

கொஞ்ச காலமாகவே பெரியார் மீது பல்வகை திறனாய்வுக் கணைகள் தொடர்ந்து வீசப்பட்டு வருகின்றன. தூற்றுதலாக இல்லாமல் திறனாய்வாக வந்தால் வரவேற்க வேண்டியது தான்; திறனாய்வு உள்நோக்கமின்றி வந்தால் வரவேற்க வேண்டியது தான்; உள்நோக்கத்தோடு வந்தாலும் ஆதாரத்தோடு இருந்தால் வரவேற்கவேண்டியது தான். என்ன காரணத்தாலோ, பெரியாருக்குத் தமிழ்ச் சமூகம் அளித்து வந்துள்ள இடத்திலிருந்து அவரைப் பலவந்தமாக, தந்திரமாக, சூழ்ச்சியாக…எப்படியாவது இறக்கிட வேண்டுமென பலர் முயற்சியாய் முயற்சிக் கின்றனர்; பலபட எழுதுகின்றனர். அவற்றில் ஒன்றாக, “தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழில் 2014 மே -15 இதழில் ஒரு பதிவினைப் படித்தேன்; தோழர் பெ.மணியரசன், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 19-04-2014 அன்று நடந்த 5ஆவது உலகத் தமிழ்ப் பொது மாநாட்டில் ஆற்றிய உரையே அது. அவ்வுரையில் தோழர் மணியரசன் மூன்று செய்திகளை முன்வைக்கிறார். “1916ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தொடங்கிய ‘தனித் தமிழ் இயக்கம்’ தமிழர் வாழ்வியல், சடங்குகள் ஆகியவற்றிலிருந்து சம°கிருதத்தையும், ஆரியப் புரோகிதர்களையும்...

செயலவை நிகழ்வுகள்

செயலவை நிகழ்வுகள்

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 21.6.2014 சனிக் கிழமை 11 மணியளவில் கோவை அண்ணாமலை ஓட்டல் அரங்கில் கூடியது. செயலவைத் தலைவர் துரைசாமி தலைமையேற்றார். கோவை கழகத் தோழியர் ராஜாமணி, கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூற, மாநகர மாவட்டச் செயலாளர் தோழர் நேருதா° வரவேற்புரையாற்றிட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரை யாற்றினார். மாறி வரும் அரசியல் சூழலில் பெரியாரியலை முன்னெடுப்பதில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளை விளக்கி, ஒரு மணி நேரம் பேசினார். கழகத்தின் நிதிநிலை மற்றும் மக்கள் சந்திப்பு இயக்கம் குறித்து பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி விரிவாக விளக்கினார். உரையாற்றிய தோழர்கள்: மண்டல செய லாளர்கள் சேலம்-சக்தி வேலு, மதுரை-இராவணன், நெல்லை-குமார், தஞ்சை-இளையராசா, கோவை-விஜியன், ஈரோடு-இராம இளங்கோவன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்து உரை யாற்றினார். 2 மணி வரை கூட்டம் நீடித்தது. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 3 மணிக்கு...

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணை

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணை

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு ஆட்சி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது. “ஜாதி மறுப்புத் திருமணங்கள் தேசத்தின் நலனைக் காப்பதாகும். காரணம், ஜாதி மறுப்புத் திருமணங்களே. ஜாதி அமைப்பை அழிக்கக் கூடியவை” என்று கூறிய உச்சநீதிமன்றம், உ.பி. மாநில ஆட்சிக்கு நிரந்தரமான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் வெவ்வேறு ஜாதி மதங்களுக்குள் திருமணம் செய்து கொள்வார்களேயானால், அவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தருவதும், அச்சுறுத்தலிலிருந்து தடுப்பதும் ஆட்சியாளர்கள், காவல்துறையின் கடமை என்று உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியிருந்தது. லதாசிங் என்ற பெண், உ.பி. அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஒரு இணையர், மேற்குறிப்பிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினர். கடந்த...

தலையங்கம் : இருக்கின்றாய், இதயமாக!

தலையங்கம் : இருக்கின்றாய், இதயமாக!

இதயத்தின் துடிப்புக்கு ஜாதி கிடையாது, மதம் கிடையாது, ஆண்-பெண் பாகுபாடு கிடையாது. தேசம்-மொழிகளையும் கடந்து நிற்கிறது. இந்த உடலின் இயக்கம்; மனித உடலும், உடல் இயக்கமும் வெளிப் படுத்தும் ஒரே அடையாளம் மனிதர்கள் என்ற ஒன்றை மட்டும்தான். 27 வயதே நிறைந்த இளைஞன் லோகநாதன் சாலை விபத்துக்குள்ளாகி அவரது மூளையின் இயக்கம் மரணித்துவிட்ட நிலையில் இதயம் மட்டும் உயிர்ப்புடன் துடித்தது. அதே நேரத்தில் அடையாறு தனியார் மருத்துவமனை ஒன்றில் இதயப் பாதிப்புக்கு உள்ளான மும்பையைச் சார்ந்த அலோவி என்ற 27 வயது பெண்ணுக்கு மாற்று  இருதயம் ஒன்று கிடைத்துவிட்டால் உயிர் பிழைத்துவிட முடியும்! மரணத்தைத்தழுவிவிட்ட தனது மகனின் இருதயம் வேறு ஒரு உடலில் துடித்துக் கொண்டிருக்குமானால் – அன்பு மகனின் மறக்க முடியாத நிலைத்த நினைவாக இருக்குமல்லவா? அப்படி ஒரு அறிவார்ந்த முடிவுக்கு வந்தார் அந்தத் தாய். அவர் அரசு மருத்துவமனையில் செவிலியர். பெருமைக்குரிய அவரது பெயர் இராஜலட்சுமி. துடிக்கும் இருதயத்தை...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

எந்த அரசாலும் எல்லாப் பிரச் சினைகளையும் தீர்த்து வைத்திட முடியாது. அதை இந்தப் புதிய அரசும் விரைவில் உணரத் தான் போகிறது. – ப. சிதம்பரம் அரசு ரகசியங்களையெல்லாம் இப்படி அம்பலப்படுத்தினா அது தேசத் துரோகமாயிடாதா சார்? அடக்கி வாசிங்க! காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அந்த அரசுடனேயே சேர்ந்து வெளியேறிட வேண்டும். – அமைச்சர் வெங்கய்யா நாயுடு நியாயமான பேச்சு. விருந்தினர் மாளிகை களை அடுத்து வரும் பயணிகளுக்கும் வழிவிட வேண்டும். ஏதோ விலைக்கு வாங்கின மாதிரி, குத்தகை எடுத்துக்க முடியாது! முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல், அரசு வீட்டைக் காலி செய்து, வாடகை வீட்டில் குடி யேறினார். மாத வாடகை ரூ.16 இலட்சம். – செய்தி அடேங்கப்பா… இப்படி சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத ஏழைப் பங்காளர்கள் காங்கிரசில் அமைச் சர்களாக இருந்திருக் கிறார்கள் என்ற செய்தி புல்லரிக்குது, போங்க! கங்கையில் முழுக்குப் போட்டால், புற்று நோய் வரும் ஆபத்து....

காஞ்சி மூத்த சங்கராச்சாரி கூறுகிறார்: ‘ராமன்’ நடத்தியது மநுதர்ம ஆட்சி 0

காஞ்சி மூத்த சங்கராச்சாரி கூறுகிறார்: ‘ராமன்’ நடத்தியது மநுதர்ம ஆட்சி

அயோத்தியில் ‘ராமன்’ கோயில் கட்ட வேண்டும் என்று பார்ப்பன சக்திகளும், சங்பரிவாரங்களும் பா.ஜ.க. ஆட்சியும், ஏன் துடிக்கின்றன? ‘ராமன்’ மநுதர்மப்படி ஆட்சி நடத்தியதுதான் இதற்குக் காரணம். இதை இறந்துபோன காஞ்சி மூத்த பார்ப்பன சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியே கூறியுள்ளதை ‘தமிழ் இந்து’ நாளேடு அதன் ஆன்மிகப் பகுதியில் ஜூன் 26, 2014இல் வெளியிட்டிருக்கிறது. அந்தப் பகுதி இதோ: “ராமராஜ்யம் ஏற்பட வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தவரின் வாரிசுகள் இப்போது ஜனநாயகம் சிருஷ்டி செய்து கொண்டிருக்கிறார்கள். ராமர் புதுசாக ராஜநீதி எதுவும் செய்து ராஜ்யபாரம் நடத்தவில்லை. தன் அபிப்பிராயம், தன் கார்யம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க சாஸ்திரத்தைப் பார்த்து, பூர்வீகர்களின் வழியைப் பார்த்து அந்தப்படியே பண்ணினவா ஒருவருண்டு என்றால் அது ராமசந்திர மூர்த்திதான். மநு நாடாண்ட காலம் முதலாக தசரத சக்ரவர்த்தி வரை எந்த தர்மசா°த்ர ஆட்சி முறை நடந்ததோ அதையேதான் ராமரும் பின்பற்றி நடத்திக் காட்டினார்” – என்கிறார்,...

தலையங்கம் – இளவரசனை பலி கொண்ட ஜாதி வெறி 0

தலையங்கம் – இளவரசனை பலி கொண்ட ஜாதி வெறி

ஜூலை 4, வரலாற்றில் ஜாதியத்தின் கோர முகம் தலைவெறித்தாடிய நாள்! வன்னிய சமூகத்தைச் சார்ந்த திவ்யாவும், தலித் சமூகத்தைச் சார்ந்த இளவரசனும் ஜாதி கடந்து காதலித்தக் “குற்றத்துக்காக” ஜாதி வெறியர்களால் தண்டிக்கப்பட்டு, இளைஞன் இளவரசன் தனது வாழ்க்கையை ரயிலில் விழுந்து முடித்துக் கொண்ட நாள்! இளவரசன் மரணத்துக்குத் தூண்டியது – ஜாதி வெறியைக் கட்டமைத்து அரசியலில் குளிர்காய முனையும் ஒரு கூட்டம்! நீதிமன்றம் வரை பிரச்சினையை கொண்டுச் சென்று இளம் காதலர்களைப் பிரித்து அந்த சோகத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கூத்தாடியது இந்த ஜாதி வெறிக் கும்பல். இந்தக் கொடுமை தொடர்கிறது. தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு, படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் தலித் பெண்கள். முதல் தலைமுறையாக இவர்கள் படிக்கத் தொடங்குவதும், சுயமரியாதையோடு வாழ விரும்புவதும் ஜாதி ஆதிக்கக் கும்பலுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. தேர்தலுக்குப் பிறகு, பா.ம.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக கடலூர் மாவட்டம் வடக்கு மாங்குடி கிராமத்தில் வாழ்ந்த தலித் மக்கள் தாக்கப்பட்டு, இருவர்...

ஜூலை 10: மத்திய தேர்வாணையம் முன் முற்றுகைப் போராட்டம் ஏன்? 0

ஜூலை 10: மத்திய தேர்வாணையம் முன் முற்றுகைப் போராட்டம் ஏன்?

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைக் குழுமம் எனப்படும் ளுவயகக ளுநடநஉவiடிn ஊடிஅஅளைளiடிn மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பும் இந்திய அரசின் சட்டப்பூர்வ மத்திய அரசு நிறுவனமாகும். இக்குழுமம் 145 க்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கு பல கட்ட தேர்வுகளை நடத்தி ஊழியர்களை பணியமர்த்துகிறது. 2006 வரை மண்டல அளவிலேயே இப் பணியமர்த்தும் நடவடிக்கைகளை இக் குழுமம் மேற்கொண்டு வந்தது. (இந்திய அளவில் 7 மண்டலங்களாக இக்குழுமம் செயல்பட்டு வருகிறது ). இதனால் அனைத்து மாநில மக்களுக்கும் அந்தந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகள் மத்திய அரசின் துறைகளில் கிடைத்து வந்தது. 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த இத் தேர்வுகள் அகில இந்திய அளவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் அகில இந்திய அளவில் இத்தேர்வுகள் நடத்தப் பட வேண்டும் என கூறியிருந்தாலும்கூட 50 சதவீதப் பணியிடங்களையாவது மண்டல அளவில் நியமிக்க மத்திய...

இதுதான் கெயில் நிறுவனம்! 0

இதுதான் கெயில் நிறுவனம்!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் நிறுவனம், தனியார் மின் உற்பத்தி நிறுவனத் துக்குக் குழாய் வழியாக கொண்டு சென்ற எரிவாயு வெடித்து, 19 பேர் உயிரிழந்துவிட்டனர். எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுவை குழாய் மூலம் கொண்டு செல்வதில் மிகுந்த கவனமும் பராமரிப்பும் தேவை. ஆனால், வழமையான அதிகாரிகள் அலட்சியம்தான் மனித உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது. இத்தகைய ஆபத்தான திட்டங்களை மக்கள் எதிர்த்துப் போராடினால் வளர்ச்சியை விரும்பாதவர்கள், வெளிநாட்டுப் பணம் பெறும் தொண்டு நிறுவனங்களால் தூண்டி விடப்படுகிறவர்கள் என்று குற்றம் சாட்டும் ஆட்சிகள், இந்த சாவுக்கு என்ன பதிலை கூறப் போகின்றன? தமிழ்நாட்டில் மக்கள் எதிர்ப்பால் இந்த ஆபத்தான திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது சரியான முடிவு என்பதை இந்த விபத்து உறுதிப்படுத்தியிருக்கிறது. ‘கூடங்குளம்’ திட்டத்தை நியாயப்படுத்தும் ஆட்சியும், அதிகார வர்க்கமும் இந்த ஆபத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா? மவுலிவாக்கம் அவலம்! சென்னை மவுலிவாக்கத்தில் ஏரிக்கரை மீது எழுப்பப்பட்ட 11 அடுக்கு மாடிக்...

தேசியப் பாதுகாப்புச் சட்டம் தகர்ந்தது 8 மாத சிறைவாசத்துக்குப் பிறகு கழகத் தோழர்கள் விடுதலை: உற்சாக வரவேற்பு 0

தேசியப் பாதுகாப்புச் சட்டம் தகர்ந்தது 8 மாத சிறைவாசத்துக்குப் பிறகு கழகத் தோழர்கள் விடுதலை: உற்சாக வரவேற்பு

இராஜபக்சே, கொழும்பில் முன்னின்று நடத்திய நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்று நாடு முழுதும் எதிர்ப்புகள், போராட்டங்கள் நடந்தன. அப்போது சென்னை மயிலாப்பூர், மந்தை வெளியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான அஞ்சலகம் மீது வெடி பொருள் வீசியதாக கழகத் தோழர்கள் உமாபதி, இராவணன், மனோகரன், மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், தமிழக அரசு, தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ற அடக்குமுறைச் சட்டத்தை ஏவியது. 2013, அக்டோபர் 29 ஆம் தேதி கைது செய்யப் பட்ட தோழர்கள் புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கழக வழக்கறிஞர் திருமூர்த்தி, துரை.அருண் ஆகியோர் வழக்கிற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இறுதியாக 2014, ஜூன் 24 ஆம் தேதி நீதிபதி வி.தனபாலன், எம்.சொக்க லிங்கம் முன்...

கழகப் பரப்புரைக்கு ஈரோடு மாவட்டக் கழகம் ஊர்தி வாங்கியது 0

கழகப் பரப்புரைக்கு ஈரோடு மாவட்டக் கழகம் ஊர்தி வாங்கியது

கழகத்தின் பரப்புரைக்கு ஈரோடு மாவட்டக் கழகம் மற்றொரு ஊர்தியை வழங்கியுள்ளது. இது கழகத்துக்கான இரண்டாவது ஊர்தி, புதிய ஊர்தியாகும். இது குறித்து ஈரோடு மண்டல செயலாளர் இரா. இளங்கோவன் தந்துள்ள செய்தி: “நமது பிரச்சார உத்திகளை இன்றைய காலத்திற்குகேற்ப மாற்றி அமைத்திட வேண்டிய அவசியமான சூழலில் உள்ளோம். ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்திட வேண்டுமானால் குறைந்தது ரூ..20,000/- வரை தற்போது செலவா கின்றது. நமது தோழர்கள் ஒரு பொதுக் கூட்டம் நடத்தினால் மீண்டும் அடுத்தக் கூட்டம் நடத்துவதற்கு 6 மாதம் அல்லது ஒரு வருடம் ஆகின்றது. தோழர்களும் பொருளாதாரப் பற்றாக்குறையால் சோர்ந்து போகின்றனர். வெறுமனே பொதுக் கூட்டம் போட்டு ஒலி பெருக்கி மூலம் மணிக்கணக்கில் பேசினாலும் பொது மக்கள் விரும்பி அக் கூட்டத்தை முழுமையாகக் கேட்பதில்லை. ஆகவே, நமது பிரச்சாரங்களை வீடியோவாக, படங்கள் மூலமாக, சாதி ஒழிப்பு, உலகம் தோன்றிய வரலாறு, உயிர்கள் உருவான வரலாறு, மூடநம்பிக்கை ஒழிப்புப்...

கச்சத்தீவுக்கு ஒப்பந்தம் என்று ஒன்று இல்லை 0

கச்சத்தீவுக்கு ஒப்பந்தம் என்று ஒன்று இல்லை

தற்போதைய அரசு ஆவணங்களின்படி, இந்தியா-இலங்கைக்கு இடையில் கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை. அதே நேரத்தில், இரு நாடுகளுக்கான கடல் நீர் எல்லை தொடர்பாக மட்டும் ஒப்பந்தம் உள்ளது. கோவையைச் சார்ந்த ஒருவர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியுறவு அமைச்சகத்திட மிருந்து பெற்ற பதிலில் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடல் நீர் எல்லை தொடர்பான வரையறையிலும், இரு நாடுகளுக் கிடையே எந்தவிதமான அரசு முத்திரையோ நாடாளுமன்ற அனு மதியோ அரசு அதிகாரிகளின் கையெழுத்தோ இல்லை. எனவே வெறும் வெற்றுத் தாளைக் காட்டி ஒப்பந்தம் என்று மத்திய வெளி யுறவுத் துறை பார்ப்பன அதிகார வர்க்கம் ஏமாற்றி வருகிறது. அந்த அடிப்படையில்தான் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமை இல்லை என்று காங்கிர° ஆட்சி, நீதிமன்றத்தில் கூறியது. இப்போது பா.ஜ.க. ஆட்சியும் இதே கருத்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உறுதிப்படுத்தியுள்ளது....

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு, அரசு ஊழியர்கள் மீது கடந்தகால குற்றங்களுக்காக நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. – உச்சநீதிமன்றம் தீர்ப்பு இதேபோல் பதவியை இழந்த அமைச்சர்கள் மீது ஊழல் குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க முடியாது என்று தீர்ப்பு கூறி விட்டால், இந்தியாவில் அரசியல் சண்டைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்! அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் போன்ற முக்கிய பிரமுகர்களான ‘வி.அய்.பி.’களுக்கு வழங்கப்படும் சிறப்புப் பாதுகாப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும். – உள்துறை அமைச்சகம். அவர்கள் ‘வி.அய்.பி.’க்கள்தான் என்பதற்கு இருந்த ஒரே அடையாளத்தையும் இப்படிப் பறித்தால் எப்படி? சீன எல்லைப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்க மத்திய அரசு திட்டம். – ‘தினமலர்’ செய்தி அதேபோல், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா எல்லைப் பகுதியிலுள்ள மக்களுக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவது பற்றியும் பரிசிலிப்பது நல்லது! பேய், பில்லி, சூன்யம் விரட்டுவதாகக் கூறி திருநெல்வேலி யில் ஒரு முதியவரின் தலையில் 3 அங்குல...

தலையங்கம் தேன் கூட்டைக் கலைக்கிறார்கள்! 0

தலையங்கம் தேன் கூட்டைக் கலைக்கிறார்கள்!

மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து இந்தி மொழித் திணிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது பா.ஜ.க. ஆட்சி. பிரதமர் இந்திமொழியை மட்டுமே தனது பேச்சு மொழியாகப் பயன்படுத்துவார் என்று முதல் அறிவிப்பு வந்தது. அது அவரது உரிமை. ஆனாலும்கூட குஜராத்தை தாய்மொழியாகக் கொண்ட அவர், இந்தியை ஏன் பேச்சு மொழியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவதாக, சமூக வலைதளங்களில் மத்திய அரசு அதிகாரிகள் கருத்துக்களை வெளியிடும்போது, இந்தி மொழிக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று மோடி ஆட்சி அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தபோது இந்தி பேசும் மாநிலங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு என்று சமாதானம் கூறினார்கள். ஆங்கிலத்தின் இணைப்பு மொழிக்கான பயன்பாட்டை, படிப்படியாக அகற்றிட வேண்டும் என்பதே இதற்கான உள்நோக்கம் என்பது எவராலும் புரிந்து கொள்ளக்கூடியதே யாகும். இப்போது தமிழ்நாட்டில் ‘தினத்தந்தி’ நாளேட்டில் (8.7.2014) மத்திய இரயில்வே துறை, இந்தி மொழியில் மட்டுமே ஒரு விளம்பரத்தைச் செய்துள்ளது. அந்த விளம்பரம் இரயில்வே...

சங்கராச்சாரி – சீரடி சாய்பாபா பக்தர்கள் நேரடி மோதல்! 0

சங்கராச்சாரி – சீரடி சாய்பாபா பக்தர்கள் நேரடி மோதல்!

துவாரகா பீட பார்ப்பன சங்கராச்சாரி-சுவருப்பானந்தா சரசுவதி, சீரடி சாய்பாபாவை இந்துக்கள் வழிபடக் கூடாது என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால், சாய்பாபா பக்தர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். சீரடி சாய்பாபாவை ‘இந்துக்கள்’ தங்கள் கடவுளாக நாடு முழுதும் கோயில் கட்டி வழிபடுவதோடு ஏழைகளுக்கு உணவளிப்பது போன்ற சேவை களையும் செய்து வருகின்றனர். 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீரடி சாய்பாபா – பிறப்பால் ஒரு முஸ்லீம். ஆனாலும் முஸ்லீம் மதத்தைவிட்டு விலகியவர்; சீரடி சாய்பாபா ஒரு கடவுள் இல்லை என்றும், இந்து கோயில்களில் அவர் படங்களை அகற்ற வேண்டும் என்றும் வாரணாசியில் இந்த சங்கராச்சாரி கூறியவுடன், சங்கராச்சாரி சீடர்கள் வாரணாசி தெருவில் இறங்கி, சாய்பாபாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதற்கு பதிலடியாக சாய்பாபாவை வழிபடும் இந்துக்கள், துவாரகா பீட சங்கராச்சாரி உருவ பொம்மைகளை எரித்தனர். சாய் பாபா பக்தர்கள், சங்கராச்சாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அதைக் கண்டித்து பயங்கர ஆயுதங்களுடன் திரியும் ‘சாதுக்கள்’...

கொடைக்கானலில் நடந்த குழந்தைகள் பழகு-மகிழ்வு முகாம் 0

கொடைக்கானலில் நடந்த குழந்தைகள் பழகு-மகிழ்வு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பாக 2014 மே மாதம் 15.5.2014 முதல் 19.5.2014 முடிய 5 நாள்கள் கொடைக் கானலில் 8 முதல் 18 வயது குழந்தைகளுக்கான பழகு மகிழ்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 68 குழந்தைகள் கலந்து கொண்டனர். பதினைந் திற்கும் மேற்பட்ட அறிவியல் மன்ற உறுப் பினர்கள் கலந்து கொண்டு நெறிப்படுத்தினர். 15.5.2014 : தொடக்க நாள் நிகழ்வாக முற்பகல் அறிமுக வகுப்பு நடந்தது. குழந்தைகள் தங்களின் சுய விவரங்களையும், திறமைகள், பலம், பலவீனம் ஆகியன குறித்தும் சுவையாக பகிர்ந்து கொண்டனர். இவ்வகுப்பினை நீலாவதி நெறிப்படுத்தினார். பிற்பகல் படைப் பாற்றல் வகுப்பு நடந்தது. பல்வேறு தலைப்பு களில் கதை, கவிதை, நாடகம், பேச்சு, பாடல், ஓவியம், தனி நபர் நடிப்பு ஆகிய திறமைகளை குழந்தைகள் வெளிப்படுத்தினர். வகுப்பறை வன்முறைகள் குறித்தும், எப்படிப்பட்ட வகுப்பறை, எப்படிப்பட்ட ஆசிரியர், தங்களுக்கு வேண்டும் என்பதும் குழந்தை களால் நடித்துக்...

சுகாதார மய்யம் அமைக்க நிலம் வழங்கியவர்: அய்யா வைத்திலிங்கம் நினைவலைகள் 0

சுகாதார மய்யம் அமைக்க நிலம் வழங்கியவர்: அய்யா வைத்திலிங்கம் நினைவலைகள்

விழா மேடையில் அய்யா வைத்தி லிங்கம் ஏற்புரையாற்றும்போது, தான் வாழ்ந்துவரும் அழகியநாயகிபுரத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக நிலம் கொடுத்ததைப் பற்றிக் கூறினார். கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரத்தின் ஊரான நாட்டுச்சாலை தான் இவரது சொந்த ஊர். கவிஞரின் அண்ணன் கணபதியும் இவரும் மிக நெருங்கிய நண்பர் களாக இருந்துள்ளனர். அவரது வழிகாட் டலில்தான் இவர் சிங்கப்பூர் சென்றிருக் கிறார். அப்போது கடவுச் சீட்டு எடுக்கும் போது அதிக நாள் பணியாற்றலாம் என்று கூறி, நான்காண்டுகள் வயதைக் குறைத்துக் காட்ட 11-4-1918 என்று தனது பிறந்த நாளை மாற்றிப் பதிந்த கதையையும் இவர் நகைச் சுவை பொங்கக் கூறுவதுண்டு. நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு இல்லாதிருந்த நிலையில் அவரை பலர் கேலி பேசியதையும், அவமானப்படுத்தியதையும் எடுத்துரைத்தார். ஒரு திருமண வீட்டில் அவரைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் மொய் எழுதத் தொடங்கியபோது குழந்தைப் பேறு இல்லாதவன் திருமண மொய் எழுதக்கூடாது என்று மொய்...

தலையங்கம் – தனியார் மயமாகும் தொடர்வண்டித் துறை! 0

தலையங்கம் – தனியார் மயமாகும் தொடர்வண்டித் துறை!

உலகின் பொதுத் துறை நிறுவனங்களிலேயே மிகப் பெரியது இந்திய தொடர்வண்டித் துறை. ஒவ்வொரு நாளும் 2 கோடியே 30 இலட்சம் மக்கள் பயணிக்கும் இந்தத் துறையின் அடிப்படை நோக்கமே, ஏழை எளிய மக்களுக்கான சேவை என்பதுதான். ஆனால், இந்த அடிப்படை நோக்கத்தையே மாற்றி வசதிப் படைத்த பணக்காரர்களுக்கும், இந்தி பேசும் மாநிலங்களுக்குமான துறையாக (ஞசடி சுவைஉh-ஞசடி ழiனேi) மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டு மோடி ஆட்சியின் தொடர்வண்டித் துறைக்கான நிதிநிலை அறக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு பயணிகள் கட்டணத்தில் 14.2 சதவீதமும், சரக்குக் கட்டணத்தில் 6.5 சதவீதமும் உயர்த்திவிட்டார்கள். இப்போது பயணிகள் கட்டணத்தை அவ்வப்போது உயர்ந்து கொண்டிருக்கும் எரிபொருள் விலையோடு இணைத்து விட்டார்கள். இனி, எரிபொருள் விலை உயரும் போதெல்லாம் பயணிகள் கட்டணங்களும் உயரும். “உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். மந்திரம் ‘பிராமணர்’களுக்குக் கட்டுப்பட்டது” என்ற ‘வேத’ சுலோகத்தைப்போல் “கட்டண உயர்வு,...

கடவுள்-மத மறுப்புக் கொள்கைகளுடன் நூறு ஆண்டைக் கடந்து வாழும்  பெரியார் தொண்டருக்கு பாராட்டு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டுரை 0

கடவுள்-மத மறுப்புக் கொள்கைகளுடன் நூறு ஆண்டைக் கடந்து வாழும் பெரியார் தொண்டருக்கு பாராட்டு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டுரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேதுபாவா சத்திரம் ஒன்றிய அமைப்பின் தலைவர் அழகியநாயகபுரம் ப.அ. வைத்தியலிங்கம், அவர் நூறு வயதை நிறைவு செய்துள்ளார். அய்யா வைத்தியலிங்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: நூற்றாண்டு நிறைவு விழா காணும் விழா நாயகர், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேதுபாவா சத்திரம் ஒன்றியத் தலைவர் அய்யா அழகிய நாயகிபுரம் ப.அ.வைத்திய லிங்கம் அவர்களே! அவரது வாழ்விணையர் காசியம்மாள் அவர்களே! பூரிப்போடும் பெருமிதத்தோடும் இவர் களுடைய நூற்றாண்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கும் அன்பிற்குரிய அம்மா மேகலை அவர்களே! இளையரசி அவர்களே! கோமதிஅவர்களே! அவரது அன்பு மகன் கலைநேசன்அவர்களே! அவர்கள் குடும்பத்தார்களே! இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிற உறவினர்களே! நண்பர்களே! தோழர்களே! உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் பெருமிதத்தோடு கலந்து கொண்டிருப் பதற்கான காரணத்தை பலரும் பகிர்ந்து கொண்டிருக் கிறார்கள். குறிப்பாக, பெரியார்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

நாட்டில் நிதிநிலை மோசமாகி விட்டது; வரி விதிப்பின் மூலம் தான் ஓரளவு சரி செய்ய முடியும். – நிதியமைச்சர் அருண் ஜெட்லி வணிகவரி, வருமான வரி அலு வலகங்களைப்போல் “மோச மான நிதிநிலையை சரிப்படுத் தும் வரி” அலுவலகங்களையும் நிரந்தரமாக தொடங்கிடுங்க…! குற்ற வழக்குகளில் ஆளுநர் களை விசாரிக்கும் உரிமை நீதி மன்றங்களுக்குக் கிடையாது. – ஆளுநர் ஷீலா தீட்சத் ஏன், சுற்றி வளைச்சுப் பேசுறீங்க மேடம்… செய்த ஊழல்களுக்கு வழங்கப்பட்ட கவுரவம்தான் கவர்னர் பதவின்னு போட்டு உடைக்க வேண்டியதுதானே? நாடாளுமன்றத்தில் விலை வாசி உயர்வு பற்றி நடந்த விவாதத் தின்போது ராகுல் காந்தி தூங்கியதாக பா.ஜ.க. புகார். – செய்தி கூச்சல், குழப்பம் இல்லாம அமைதியாக தூங்குவதற்குக் கூட நாடாளுமன்றத்தில் ‘ஜன நாயகத்துக்கு’ நேரம் கிடைக் குதே; அதுக்காக பெருமைப் படுங்க… ட போலி என் கவுன்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு பா.ஜ.க. தலைவர் பதவி. -செய்தி அதுக்காக...

வன்கொடுமை சட்டத்துக்கு ஆதரவாக கழக சார்பில் மனுதாக்கல் 0

வன்கொடுமை சட்டத்துக்கு ஆதரவாக கழக சார்பில் மனுதாக்கல்

பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்புக் கவசமாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கம் செய்யக் கோரி ‘வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை’ என்ற பெயரில் செயல்படும் பா.ம.க. ஆதரவு அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வழக்கறிஞர் பாலு, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதே போல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய அமைப்பு களும் வராகி என்பவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். தலைமை நீதிபதி அக்னி ஹோத்ரி, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரிக் கிறது. ‘வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை’ சார்பில் வழக்கறிஞர் விஜயன் வாதாடுகிறார். பெரியார் முழக்கம் 24072014 இதழ்

தலையங்கம் – சமஸ்கிருத வாரம்! 0

தலையங்கம் – சமஸ்கிருத வாரம்!

‘சமஸ்கிருத வாரம்’ கடைபிடிக்க வேண்டும் என்று மோடி ஆட்சியில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியிருப்பது, சி.பி.எஸ்.ஈ. போன்ற மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தமிழக அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கும்தான். பல்வேறு அரசியல் கட்சிகள் இதை எதிர்த்திருப்பதோடு, தமிழக முதல்வரும் எதிர்த்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி ஒன்றைத் தவிர, அநேகமாக அனைத்துக் கட்சிகளும் இந்தத் திணிப்புக்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும்! சமஸ்கிருதம்  – ஒரு மொழி மட்டுமல்ல; அது, பார்ப்பன மேலாதிக்கத்தின் குறியீடும் ஆகும். மோடியின் பா.ஜ.க. ஆட்சி, பார்ப்பனப் பண்பாடே இந்தியப் பண்பாடு என்ற கொள்கைப் பார்வையோடு இந்த முயற்சிகளில் இறங்கி யிருப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே ‘சமஸ்கிருதத்தை’ பேசுவதாக 2001 மக்கள் தொகை அறிக்கையில் பதிவு செய்திருப்போர் 14,135 பேர் மட்டுமே. இதுவும்கூட 1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 49,736 ஆக இருந்து...

மத்திய அரசு அலுவலகங்களில் குவியும் வடவர் ஆதிக்கம்! தேர்வாணையம் முற்றுகை; கைது 0

மத்திய அரசு அலுவலகங்களில் குவியும் வடவர் ஆதிக்கம்! தேர்வாணையம் முற்றுகை; கைது

தமிழகத்தில் மத்திய அரசுத் துறைகளான வருமான வரித் துறை, சுங்கத் துறை, கலால் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உ.பி., பீகார் போன்ற வடமாநிலத்தவர் ஆதிக்கம் பெருகி வருகிறது. தமிழ்நாடு உள்பட தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 90 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் வடமாநிலங்களைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த தேர்வு முறைகள் 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு உச்சநீதிமன்றத் தீர்ப்பால் அகில இந்தியத் தேர்வுகளாக மாற்றப்பட்டதுதான் காரணம். இந்தத் தீர்ப்பில்கூட 50 சதவீத இடங்களை மண்டல அளவில் தேர்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தும், நடுவண் ஆட்சி அதை ஏற்காமல், அகில இந்திய அளவிலேயே நடத்தியது. அகில இந்திய தேர்வு முறை காரணமாக – லக்னோ, பாட்னாவிலுள்ள தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்கள் ஊழல் முறைகேடுகளைச் செய்து கையூட்டாக பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

பள்ளிகளில் ‘சமஸ்கிருத வாரம்’ கொண்டாட வலியுறுத்தும் மோடி ஆட்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு. – செய்தி அதேபோல், கல்யாணம், கரு மாதி, அர்ச்சனை என்று 365 நாள்களும் சமஸ்கிருத நாளா கவே, காதைத் துளைக்கிறதே, அதையும் சேர்த்து இந்த கட்சிகள் எதிர்க்கக் கூடாதா? திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உடம்பில் சட்டை இல்லாமல் பூணூலுடன் சாமி தரிசனம் செய்தார். – செய்தி இது ‘ஆன்மிகக் கிளப்’புகளுக் கான ‘டாப்லெஸ்’ (மேலாடை யில்லாத) கலாச்சாரம்; இதில் தலையிடும் அதிகாரம் உச்சநீதி மன்றத் துக்கே கிடையாது. மூச்… ‘மங்கள்யான்’ செயற்கைக் கோள் – திட்டமிட்டப்படி செப் டம்பர் 24இல் செவ்வாய் கிரகத்தை அடையும். – விஞ்ஞானி மயில்சாமி அச்சச்சோ… மங்கள்யானுக்கு செவ்வாய் தோஷம் புடுச்சிடுமே! உடனே பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தாகணும், ஓய்! 298 பேருடன் பறந்த மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? மர்மம் நீடிக்கிறது....

நாளேடுகள் வெளியிடும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு தமிழகத்தில் முதல் ‘ஆலயப் பிரவேசம்’ நடத்தியது யார்? 0

நாளேடுகள் வெளியிடும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு தமிழகத்தில் முதல் ‘ஆலயப் பிரவேசம்’ நடத்தியது யார்?

தமிழ்நாட்டில் முதன்முதல் தாழ்த்தப்பட் டோரை கோயிலுக்குள் அழைத்துச் சென்று போராடியவர் மதுரை வைத்தியநாத அய்யர் என்று உண்மைக்கு மாறான ஒரு வரலாற்றை சில நாளேடுகள் பதிவு செய்து வருகின்றன. கடந்த ஜூலை 8 ஆம் தேதி ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த நாள் என்று ‘தினத்தந்தி’ ஒரு கட்டுரை வெளி யிட்டது. இதே தவற்றை ‘தினமணி’யும் தொடர்ந்து செய்து வருகிறது. இதை மறுத்து முதன்முதலாக கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியது சுயமரியாதை இயக்கம் தான் என்ற வரலாற்றை ஆதாரங்களுடன் விளக்கி, மேட்டூர் கழகத் தோழர் மே.கா. கிட்டு, ‘தினத்தந்தி’ நாளேட்டுக்கு எழுதினார். ‘தினத்தந்தி’ வெளியிடாத அந்தக் கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. கடந்த 08.07.2014 அன்று ‘தினத்தந்தி’யில் வி.கே. ஸ்தாணுநாதன் அவர்களால் எழுதப்பட்ட “ஆலய பிரவேசம் நிகழ்ந்த நாள்” கட்டுரையை வெளியிட் டிருந்தீர்கள். அதில், “1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்...

பார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள் – பழ.நெடுமாறன் 0

பார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள் – பழ.நெடுமாறன்

இராஜஇராஜசோழன், இராஜேந்திர சோழன் போன்ற சோழ மன்னர்கள், தங்கள் தமிழ்ப் பெயர்களை வடமொழியில் மாற்றிக் கொண்ட தோடு, பார்ப்பனியத்தை பரப்புவதில் முனைந்து செயல்பட்ட வரலாற்றை பழ.நெடுமாறன் தனது நூலில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். தமிழகத்தில் மலர்ந்த பக்தி இயக்கம் பல காலகட்டங்களில் இந்தியாவின் பிற மாநிலங் களுக்குப் பரவியது என்னும் கருத்தை பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், அறிஞர் சுநீத் குமார் சாட்டர்ஜி போன்றோர் வெளியிட்டுள்ளனர். ஆனால், காலப்போக்கில் வர்ணாசிரம தர்மமும் வைதீக தர்மமும் படிப்படியாகத் தமிழகத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கின. பிற்காலச் சோழர் காலத்தில் வர்ணாசிரம தர்மம் மிக இறுக்கமாகப் பேணப்பட்டது என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பல்லவர் காலத்தில் தொடங்கி பிற்காலச் சோழர் காலம் வரை தமிழ்நாட்டில் ஏராளமான கற் கோவில்கள் எழுப்பப்பட்டன. அவற்றின் வெளிப்பா டுகளாக அரசர்களாலும் அவர்களின் குடும்பத்தின ராலும் அரசு அதிகாரிகளாலும் பார்ப்பனர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. வடநாட்டிலிருந்து ஏராளமான பார்ப்பனர்கள் வரவழைக்கப்பட்டு சதுர்வேதி மங்கலங்களில் குடிவைக்கப்பட்டனர். அவர்களுக்குக்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி யிடும். – ஞான தேசிகன் அப்படியானால் ப. சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன் அணிகளுடன்கூட கூட்டணி கிடையாதா? தமிழ்நாட்டில் ‘தீண்டாமை’ என்பது எல்லாம் அறவே கிடை யாது. – தந்தி டி.வி.யில் மருத்துவர் இராமதாசு ஓ, அதுக்காகத்தான் ‘திராவிட கட்சிகள்’ தமிழகத்தை நாச மாக்கிவிட்டன என்கிறீர் களா? புரியுது! புரியுது! இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணை நடத்த – அய்.நா. நியமித்த குழு இந்தியா வருவதற்கு மோடி ஆட்சி ‘விசா’ மறுப்பு. – செய்தி ஸ்ரீராமபிரான் நடத்திய யுத்தத்துக்குப் பிறகு, இலங்கை யில் எந்தப் போரும் நடந்தது இல்லை. இதுவே எங்க வெளிநாட்டு ‘இந்துத்துவா’ கொள்கை! புரிஞ்சுக்குங்க. ஜாதியமைப்பு மிகச் சிறப்பானது; அதற்கு எதிராக எந்த புகாரும் பழங்காலங் களில் வந்ததே இல்லை. – வரலாற்று ஆய்வுக் கழகத் தலைவர் சுதர்சன் ராவ் மோடிஜி, இப்படி ஒரு ஆசாமியை எந்தக் காட்டி லிருந்து பிடிச்சுட்டு...

ஒரே காலத்தில் தமிழகம் தழுவி – திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வரும் 4 பரப்புரை இயக்கங்கள் 0

ஒரே காலத்தில் தமிழகம் தழுவி – திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வரும் 4 பரப்புரை இயக்கங்கள்

தமிழின உரிமை மீட்பு தொடர் கூட்டங்கள்; அகமணமுறை எதிர்ப்பு வாகனப் பரப்புரைப் பயணம்; மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கிராமம்தோறும் வாகனப் பரப்புரைப் பயணம், மக்கள் சந்திப்பு இயக்கம் என்று ஒரே நேரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பல்வேறு பகுதிகளில் பரப்புரை இயக்கங்களை நடத்தி வருகிறது. 50க்கும் மேற்பட்ட கழகச் செயல் வீரர்கள் இந்தத் தொடர் பரப்புரை இயக்கத்தில் தொடர்ந்து பங்கேற்று களப்பணியாற்றி வருகிறார்கள். திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை செயலவைத் தீர்மானங்களை விளக்கும் பரப்புரைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக ஜூலை 15 – பழனி, ஜூலை 16 – காரைக் குடி, ஜூலை 18 – நெல்லை மாவட்டம், பாவூர் சத்திரத்திலும் நடந்தது. இரண்டாம் கட்ட பரப்புரைப் பயணம் ஜூலை 23 ஆம் தேதி மன்னார்குடியிலும், ஜூலை 24 – மயிலாடுதுறை யிலும், ஜூலை 26 -சின்ன சேலத்திலும் நடந்தது. மூன்றாம் கட்டப் பயணம் 30 ஆம் தேதி...

தலையங்கம் – சுப்ரமணியசாமிகள்! 0

தலையங்கம் – சுப்ரமணியசாமிகள்!

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் போட்டுத் தந்த துரோகப் பாதையில் வீரியத்துடன் நடைபோடுகிறது, பா.ஜ.க. ஆட்சி. அய்.நா.வால் போர்க் குற்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இலங்கை அதிபர் இராஜபக்சே, மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்சி மனு போடுகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களால் இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட மனித உரிமையாளர்கள் குழு இந்தியாவுக்கு வருவதற்கு ‘விசா’ வழங்க மறுத்து விட்டார்கள். ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறீலங்காவுடன் இணைந்து வெளிப்படையாக செயல்படும் சுப்ரமணியசாமி என்ற பார்ப்பனர், பா.ஜ.க.வின் ‘செயல் உத்திக் குழு’ தலைவர் பதவிக்கு முடிசூட்டப்பட்டுள்ளார். பதவி கிடைத்தவுடன் இலங்கைக்குப் போய் இராஜபக்சேயையும் அவரது தம்பி, கோத்தபய இராஜபக்சேயையும் சந்தித்து இலங்கை அரசுக்கு ஆதரவாக வேகம் வேகமாக காய்களை நகர்த்தக் தொடங்கிவிட்டார்....

கழகக் கூட்டத்தைத் தடுக்க வந்த  இந்து முன்னணி மிரட்டல்கள் முறியடிப்பு – பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பு –  தமிழக மத்திய அரசுப் பணிகளில் வடவர்கள் ஆதிக்கம் பற்றி ஊர்தோறும் விளக்கம் – எழுச்சியான மாவட்ட கலந்துரையாடல்கள் கழகக் கூட்டங்களின் எழுச்சி 0

கழகக் கூட்டத்தைத் தடுக்க வந்த இந்து முன்னணி மிரட்டல்கள் முறியடிப்பு – பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பு – தமிழக மத்திய அரசுப் பணிகளில் வடவர்கள் ஆதிக்கம் பற்றி ஊர்தோறும் விளக்கம் – எழுச்சியான மாவட்ட கலந்துரையாடல்கள் கழகக் கூட்டங்களின் எழுச்சி

திராவிடர் விடுதலைக் கழகம் – கோவை செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை விளக்கிடும் பொதுக் கூட்டங்கள், தமிழகம் முழுதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் : ஜூலை 30 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டக் கழக சார்பில் கூடுவாஞ்சேரி அரசு பயணியர் மாளிகையில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாலை 4 மணியளவில் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்களாக தோழர்களுடன் கலந்து ஆலோசித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்க்கண்ட தோழர்களை அறிவித்தார். மாவட்டத் தலைவர் செங்குட்டுவன், மாவட்ட செயலாளர் தினேஷ், மாவட்ட அமைப்பாளர் தெள் அமிழ்து, துணைத் தலைவர் ராஜ் குமார், துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தொடர்ந்து...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

ஸ்காட்லாந்தில் நடக்கும் காமன் வெல்த் போட்டிக்குச் சென்ற இந்திய அதிகாரி ‘செக்ஸ்’ புகாரில் கைது. – செய்தி ‘காமன் வெல்த்’ நாடுகளுக்கான போட்டியை ‘காமன்’ போட்டி யாக நினைத்து விட்டார்போல. சத்தீஸ்கர் மாநிலத்தில் 60 ஊராட்சி களில் இந்து மத வழிபாடுகளைத் தவிர, வேறு மத வழிபாடுகள் நடத்த அரசு தடை. – செய்தி அப்ப…! ‘இந்து ராஜ்யம்’ அமைந்து விட்ட இந்த 60 ஊராட்சிகளிலும் இனி வறுமை இல்லை. வளம் கொழிக்கும் ‘தர்மம்’ செழிக்கும்னு சொல்லுங்க. வகுப்புக் கலவரங்களை ஒடுக்க, 2002இல் குஜராத்தில் மோடி பின்பற்றிய நடைமுறைகளையே நாடு முழுதும் விரிவாக்க வேண்டும். – பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.ஜி. ரவி இஸ்லாமியர் இனப் படுகொலைக்கு ‘குஜராத் நடைமுறை’ன்னு பெயர் மாற்றம் செஞ்சுட்டீங்களா? திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 1800 கிலோ தங்கம் ‘ஸ்டேட் பாங்ங் ஆப் இந்தியா’ வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டது. – செய்தி...

நான்கு கட்டங்களாக நடந்த 16 கழகக் கூட்டங்கள் 0

நான்கு கட்டங்களாக நடந்த 16 கழகக் கூட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் கோவை செயலவையில் நிறைவேற்றிய தமிழர் உரிமை பறிப்புகள் பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்புக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானங்களை விளக்கி நாடு முழுதும் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், பரப்புரைச் செயலாளர், செயலவைத் தலைவர், மாணவரணி பொறுப்பாளர் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். முதல்கட்டமாக ஜூலை 15 ஆம் தேதி பழனி யிலும், 16 ஆம் தேதி காரைக்குடியிலும், ஜூலை 18 ஆம் தேதி நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரத் திலும் நடைபெற்றது. இரண்டாம் சுற்றுப்பயணம் ஜூலை 23இல் மன்னார்குடியிலும், 24 ஆம் தேதி மயிலாடு துறையிலும், ஜூலை 26 ஆம் தேதி சின்ன சேலத்தி லும் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. மூன்றாவது கட்டமாக ஜூலை 30 ஆம் தேதி காஞ்சி மாவட்டம் கூடுவாஞ்சேரியிலும், ஜூலை 31 ஆம் தேதி சென்னை ஓட்டேரியிலும், ஆக°டு முதல் தேதி வேலூரிலும், ஆக°டு 2 ஆம் தேதி...

தலையங்கம் ‘வேதகாலம்’ திரும்புகிறது! 0

தலையங்கம் ‘வேதகாலம்’ திரும்புகிறது!

மோடியின் ஆட்சி நாட்டை மீண்டும் வேத காலத்துக்கு அழைத்துச் செல்ல உறுதி ஏற்றிருப்பதாகவே தெரிகிறது. ஒன்றன்பின் ஒன்றாக அதற்கான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 14,135 பார்ப்பனர்கள் மட்டுமே தாய்மொழியாகப் பதிவு செய்துள்ள சமஸ்கிருதத்தை இந்தியாவின் அனைத்து மாநில சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளிலும் வார விழாக்களாகக் கொண்டாடி போட்டிகள் நடத்தி அனைத்து மொழிகளுக்குமே ‘சமஸ்கிருதமே தாய்’ என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மனித வளத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து ஓம் பிரகாஜ் என்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த ஜூன் 6, 2014இல் நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில், தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ‘சமஸ்கிருத மேம்பாட்டுச் சட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதா, மத்திய, மாநில அரசுப் பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப்பாடமாக்குவதோடு, செயல்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு...

ஆளே இல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் சமஸ்கிருதம் 0

ஆளே இல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் சமஸ்கிருதம்

1921 ஆம் ஆண்டில் இந்தியா முழுதும் சமஸ்கிருதம் பேசியோர் 356. அதில் 315 பேர் தமிழ்நாட்டில் மட்டும் இருந்தார்கள். தமிழ்நாடு பார்ப்பனர்களின் ஆதிக்கக் கோட்டையாக இருந்தது என்பதற்கு இது உதாரணம். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமஸ்கிருதம்  பேசத்  தெரிந்தவர் ஒருவர்கூட இல்லை. இது பெரியார் இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள், மத்திய பிரதேசத்துக்கு அப்பால் உள்ள கிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத் மாநிலங்களிலும் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சமஸ்கிருதம் பேசுவோர் ஒருவர்கூட இல்லை. 1981இல் 6106 நபர்களாக இருந்தவர்கள், 1991இல் 49,376 நபர்களாக அதிகரித்து, 2001இல் 14,135 நபர்களாகக் குறைந்தனர். இதிலிருந்தே பதிவுகள் உண்மையானவை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். “இது கணக்கெடுப்பில் நிகழ்ந்த கோளாறுகள் அல்ல. அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, அவ்வப் போது தங்கள் ‘மொழி அடையாளத்தை’ மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையே காட்டுகிறது,...

விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி பொதுக் கூட்ட உரிமையை மறுக்கக் கூடாது காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 0

விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி பொதுக் கூட்ட உரிமையை மறுக்கக் கூடாது காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி திராவிடா விடுதலைக் கழகக் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து, பொதுக் கூட்டத்துக்கு அனுமதிக்க உத்தரவிட்டது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுதும் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜூலை 15இல் தொடங்கி இதுவரை 15 பொதுக் கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன. அடுத்தக் கட்டமாக 16 ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையத் திலிருந்து பொதுக் கூட்டங்கள் தொடங்க உள்ள நிலையில் மேட்டுப்பாளையம் காவல்துறை கூட்டத்துக்கு அனுமதி தராமல் காலதாமதம் செய்து வந்தது. கடைசி நேரத்தில் கூட்டத்துக்கு அனுமதியை மறுத்துவிட்டால், கூட்டத்தைத் தடைப்படுத்திவிட லாம் என்று காவல்துறை திட்ட மிட்டது. இதைப் புரிந்து கொண்டு, கழகத் தோழர்கள் எச்சரிக்கையுடன் கூட்டத்துக்கு அனுமதி தருவதை உறுதி செய்யக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்தனர். கோவை வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் மேட்டுப் பாளையம் இராமச்சந்திரன், இந்த...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலிருந்து கூண்டோடு வெளியேற்றம். – செய்தி சட்டசபைக்குள் இவர்கள் கூண்டுக் குள்தான் வைக்கப்பட்டிருந் தார்களா, சொல்லவேயில்லை! மோடி அலையால்தான் பா.ஜ.க. வெற்றி என்று பா.ஜ.க. கூறுவது தவறு. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால் தான் பா.ஜ.க. வெற்றி பெற்றது. – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆக, பா.ஜ.க.வின் ‘இந்துத்துவா’ கொள்கையை ஏற்று, மக்கள் வெற்றி பெற வைக்கவில்லை என்ற உண்மையை, இரண்டு பேருமே ஒப்புக் கொள்றீங்க! உச்சநீதிமன்ற தீர்ப்பையேற்று, 900 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட மகாராஷ்டிரா மாநிலம் பண்டரிபுரம் கோயிலில் பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சார்ந்த இரண்டு பெண்களை அர்ச்சகர்களாக நியமித்தது கோயில் நிர்வாகம். – செய்தி அனைத்துக் கோயில்களும் பண்டரிபுரங்களாக மாறட்டும் என வாழ்த்துவோம்! ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்த் திருவிழாவை யொட்டி மாவட்ட நிர்வாகம், விழாப் பகுதியில் தற்காலிக டாஸ்மாக் கடை திறப்பு. – ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ செய்தி அதுல என்னங்க தப்பு? பகவான் பவனி வரும்...

கிடைத்தது பிணை 0

கிடைத்தது பிணை

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நரோடியா பாட்டியாவில் 97 முஸ்லிம்கள் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்டு 28 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர், மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னி. இரண்டு ஆண்டுகாலம்கூட தொடர்ச்சியாக சிறையில் இல்லாத அவரை, இப்போது குஜராத் உயர்நீதிமன்றம், பிணையில் விடுதலை செய்துவிட்டது. ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்துக்காக தண்டிக்கப்பட் டோருக்கு 25 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு பரோல்கூட கிடைக்காது. 97 முஸ்லிம்களை கொலை செய்தவர்கள் என்றால் பிணையில் விடுதலையே கிடைத்து விடும். இதுவே ‘பாரதத்தின் நீதி’! உலகிலேயே… உ.பி.யில் பா.ஜ.க. ஓட்டு வங்கியை உருவாக்க மோடியால் கட்சிப் பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்டவர் அமீத்ஷா! அவர் கட்சிப் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. 65 பேர் கொல்லப்பட்டனர். 68 பேர் படுகாயம டைந்தனர். இதில் சொந்த வீடு, வாசல்களை இழந்து அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்கள் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம்...