Category: குடி அரசு 1931

வட்ட மேஜை முடிவு 0

வட்ட மேஜை முடிவு

1920-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அரசியல் சீர்திருத்தம் வழங்கின போது அதிலும் முன்னேற்றமான சீர்திருத்தம் வழங்கும் விஷயத்தில் “ஒரு 10 வருஷ­காலம் பொறுத்து பிரிட்டிஷ் பார்லி மெண்டினால் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அதை இந்தியாவுக்கு அனுப்பி அதன் மூலம் இந்தியரின் தேவையையும் தகுதியையும் விசாரித்தறிந்து அதற்குத்தகுந்ததான அரசியல் முன்னேற்றம் வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தபடியே 1929ல் ஒரு கமிட்டியை அதாவது சைமன் கமிட்டியை இந்தியாவுக்கு அனுப்பினார்கள். அந்தப்படி அனுப்பப்பட்ட கமிட்டியை காங்கிரஸ் என்னும் பெயரால் ஒரு கூட்டம் பகிஷ்காரம் செய்த தாய் காண்பித்தாலும் மற்றபடி இந்தியாவிலுள்ள எல்லாப் பொது ஸ்தாபனங் களும், சமூக சமய ஸ்தாபனங்களும், மேலும் இந்திய ஜனப்பிரதிநிதி களடங்கிய ஸ்தலஸ்தாபனங்களாகிய தாலூகா, ஜில்லா போர்டு, முனிசிபா லிட்டி முதலியவைகளும், அரசியல் நிர்வாக ஸ்தாபனங் களாகிய மாகாண சட்டசபை, இந்தியா சட்டசபையாகிய ஸ்தாபனங்களும் பெரிதும் வரவேற்று உபசரித்து தங்கள் குறைகளையும் கஷ்டங்களையும் தேவைகளையும் எடுத்துச் சொல்லி மேற்கொண்டு அளிக்கப்படும் சுதந்திரங் களை நிர்வகிக்கும்...

சென்னை பச்சையப்பன் கலாசாலையில் சொற்பொழிவு 0

சென்னை பச்சையப்பன் கலாசாலையில் சொற்பொழிவு

தலைவர் அவர்களே! இளைஞர்களே ! சகோதரர்களே! 2 மணி நேரத் திற்கு முன் தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப் பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட்டார். இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப்பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி ஆதலால் திடீரென்று என்ன பேசுவதெனவும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன். யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன். ஆனாலும் இதைப்பற்றிய என்னுடைய பழய சங்கதிகளையே இந்தத் தலைப்பின் கீழ் சொல்லப்போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாண வர்களும், இளைஞர்களுமாயிருப்பதால் நான் சொல்லுவதை திடீரென்று நம்பி விடாதீர்கள். நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரி வித்துக் கொள்ளுகிறேன். நண்பர்களே! சமூக சீர்திருத்தம் என்றால் எந்த சமூகம்? என்பதும் சமயக்கொள்கை என்றால் எந்த சமயம்? என்பதும் முதலில் முடிவு கட்டிக் கொள்வது இங்கு...

காதல் 0

காதல்

அன்பு, ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத்தவிர வேறு ஒரு பொருளை கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமை யாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அநாவசியமாய் ஆண் பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து காதலுக்காக என்று இன்பமில்லாமல், திருப்தி இல்லாமல் தொல்லைபடுத்தப்பட்டு வரப்படு கின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும். ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங் களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், பொருளற்ற தன்மையும், உண்மையற்ற...

களக்காடு ஐக்கிய முஸ்லீம் ஆண்டு விழா இந்திய பொருளாதாரம் 0

களக்காடு ஐக்கிய முஸ்லீம் ஆண்டு விழா இந்திய பொருளாதாரம்

தலைவர் அவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!! இன்று நான் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன். ஆனாலும் மிக்க களைப்போடு வந்திருக்கிறேன். சரியாக 24 மணி நேரம் ரயிலில் பிரயாணம் செய்துவிட்டு 10, 15 மைல் மோட்டாரிலும் வந்திருக் கிறேன். ஆனதால் இன்றைய விசயத்தைப் பற்றி நான் சரி வரப் பேச முடியா தென்றே கருதுகிறேன். அன்றியும் அதிக நேரமும் பேசமுடியா தென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நிகழ்ச்சிக் குறிப்பில் எனக்கு இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம் “இந்திய பொருளாதாரம்” என்பதாகும். இது என்னைக் கேட்டுப் போட்ட தல்ல என்றாலும் எந்தத் தலைப்பினாலும் என்னுடைய சங்கதி ஏதோ அதைத் தான் சொல்லுவது என் குணம் என்பது நீங்களும் தலைவரும் அறிந்ததே யாகும். ஆனாலும் பொருளாதாரம் என்னும் தலைப்பும் மிக்க நல்ல தலைப்பேயாகும். இதன் மூலம் எனது சங்கதியை சொல்ல முடியா விட்டால் பின் எதின் மூலம் நான் சொல்லக்கூடும்? ஆனால் எனக்கிருக்கும் கஷ்ட மெல்லாம்...

மௌலானா முகமதலி 0

மௌலானா முகமதலி

மௌலானா முகம்மதலி அவர்கள் லண்டனில் காலமாய் விட்டதைக் கேட்டு வருந்தாதார் யாருமே இருக்கமாட்டார்கள். அவர் ஒரு உண்மையான வீரர். தனக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாய் வெளியில் சொல்லுபவர் களில் அவரும் ஒருவர். ஏழைமக்களை ஏமாற்றி பணக்காரர்களும் படித்த வர்களும் அனுபவிக்கும் போக்கியமாகிய சுயராஜ்யம் அவருக்கு எப்போ துமே பிடிக்காது. தேசீயப் பிரபலத்துக்காக தனது சமூக நலனை விட்டுக் கொடுக்கும் கொலைபாதகத்தனம் அவரிடம் கிடையவே கிடையாது. தான் சாகப்போவது உறுதி யென்று தெரிந்தே சீமைக்குப் போய் தனது கட்சித் தொண்டை ஆற்றிவிட்டு சாகத் துணிந்தவர். அவர் சீமைக்குப் போகாமல் இந்தியாவில் இருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் செத்திருக்கமாட்டார். அவர் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது சொன்ன ஒரு வாக்கியம் நமக்கு நன்றாய் ஞாபகம் இருக்கின்றது. அதாவது, “நேற்று இருந்தவர்கள் இன்றைக்கு இல்லாமல் போவதைச் சிலர் ஆச்சரியமாய் கருதுகிறார்கள். ஆனால் நானோ, நேற்று இருந்தவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களே! என்பதை ஒரு ஆச்சரியமாய்க் கருதுகிறேன்” என்று சொன்னார். சாவது அதுவும்...

ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நிர்வாக உத்தியோகஸ்தர் 0

ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நிர்வாக உத்தியோகஸ்தர்

இன்று நமது நாட்டில் நடைபெற்று வரும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகங் கள் சிறிதாவது நாணைய லட்சியத்தின் பேரிலோ, நாகரீக மக்களைக் கொண்ட நாடு என்ற தத்துவத் தன்மையிலோ நடைபெறுவதாகச் சொல்ல முடியாது என்பதே நமது அபிப்பிராயம். சில இடங்களில் நாகரீகமாயும் நாணையமாயும் நடக்கின்றது, நடந்தது, நடக்கலாம் என்பதையும் மறுக்கவில்லை. ஆனால் பெருவாரி யாக 100க்கு 75க்கு மேலாக நடைபெறும் நிர்வாகங்கள் பெரிதும் மோசனமானவைகளே யாகும். இதற்கு முழு பொறுப்பும் அவ்வவ்விடத் திய மக்கள் பேரிலேயோ, அல்லது ஸ்தாபன அங்கத்தினர்கள் மீதிலேயோ மாத்திரம் போடத்தகுந்தது அல்லவென்றும் சொல்லுவோம். இன்னமும் வெளிப்படையாய்ச் சொல்ல வேண்டுமானால் அநாகரீகமும் ஒழுக்கக் குறைவானதுமான ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களுக்குப் பெரிதும் அந்த இலாகா மாற்றப்பட்ட இலாகாவாக இருப் பதும், ஸ்தல ஸ்தாபனங்களே மந்திரிப் பதவிக்கு படிகளாய் இருப்பதும், ஸ்தல ஸ்தாபனங்களே மந்திரிகளைக் காப்பாற்றத்தக்க ஆதரவுகளாய் இருப்பது மான ஒரு முறை முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம். மற்றும்...

இருகூர் திராவிட முன்னேற்ற சங்கம் முதலாவதாண்டு விழா 0

இருகூர் திராவிட முன்னேற்ற சங்கம் முதலாவதாண்டு விழா

ஜாதிக்கொடுமை, உயர்வு தாழ்வு ஒழிய, கடவுள் நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும், வினை, விதி நம்பிக்கையையும் அடியோடு ஒழிக்க வேண்டும். சகோதரர்களே! சகோதரிகளே!! உங்கள் சங்க ஆண்டு விழாவில், சங்க சம்மந்தமாகவும் மற்றும் உங்கள் முன்னேற்ற விஷயமாகவும் பெரியோர்களான ராவ்சாகிப் ராமச் சந்திரம் செட்டியார், சின்னப்பாவு, சுப்பையா ஆகியவர்கள் பேசியது கேட்டி ருந்தீர்கள். உங்களது குறைகளை யெல்லாம் எடுத்துக்காட்டினார்கள். உங்களைத் தெருவில் நடக்கவிடாததைப் பற்றியும், உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவிடாமல் தடுத்து கலகம் செய்ததைப்பற்றியும், உங்கள் பிள்ளைகள் படிப்பதனால் இந்த ஊர் உயர்ந்த ஜாதியார்கள் என்பவர் கள் தங்கள் பிள்ளைகளை நிறுத்திக் கொண்டதைப் பற்றியும், மற்றும் ராமநாத புரம் ஜில்லாவில் ஆதிதிராவிட சமூகத்தை மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப்பற்றியும் இங்கு பேசியவர்கள் எடுத்துச் சொன்னதை கேள்க்க எனக்கு மிக மிக ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்புதாரிகள் என்பதைப்பற்றி யோசித்துப் பார்க்கையில் உங்களை இக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்ல வென்றும் நீங்களும்...

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பற்றி    சுயமரியாதைத் தலைவர்                                                             திரு. சௌந்திரபாண்டியன் அபிப்பிராயம் 0

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பற்றி சுயமரியாதைத் தலைவர் திரு. சௌந்திரபாண்டியன் அபிப்பிராயம்

“ஸ்தலஸ்தாபன சட்டத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மான விதி மிகவும் அவசியமாய் இருக்க வேண்டிய தொன்றாகும். அதை நான் நல்ல நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான அம்சமென்று கருதுவதோடு அதை எந்தக் காரணம் பற்றியும் எடுத்து விடக்கூடாது என்று கருதுகின்றேன். அதோடு ஒவ்வொரு ஜில்லா போர்டுக்கும் ஒவ்வொரு நிர்வாக அதிகாரி (எக்ஸ் கூட்டிங் ஆபீசர்) இருக்க வேண்டுமென்று எனக்கும் இச்சட்டம் செய்யும் பொழுது தோன்றியது போலவே இப்பொழுதும் தோன்றுகிறது. அவ்விதம் செய்யப்படுமானால் போர்டின் தலைவர்களுக்கு இப் பொழுது ஏற்படும் அநேக இயற்கைக் கஷ்டங்களும், தொல்லைகளும் நீங்கி தாக்ஷண்ணியமில்லாமல் தனது கடமையைச் செய்ய இடமுண்டாகும். ஆகையால் சர்க்கார் இந்த ஏற்பாட்டைச் சீக்கிரம் அதாவது அடுத்த வரு ஷத்திலாவது செய்வார்களென்று நம்புகிறேன்” என்றும் தனது நிர்வாகத்தில் தனக்கும், மெம்பர்களுக்கும் நடந்து வந்த சம்மந்தத்தைப்பற்றி அவர் சொல்லும்போது, “இந்த இருபத்தைந்து மாத காலத்தில் றாமநாதபுரம் ஜில்லா போர்ட் நிர்வாக நடவடிக்கைகளில் இது வரையும் ஒரே ஒரு விஷயம். அதாவது...

“சண்டமாருதம்”     ஆசிரியர் அ. பொன்னம்பலனார் 0

“சண்டமாருதம்” ஆசிரியர் அ. பொன்னம்பலனார்

கோட்டையூரிலிருந்து வெளிவரும் “சண்டமாருதம்” என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் முதல் இதழ் வரப்பெற்றோம். இது சுயமரியாதைத் தொண்டர் பூவாளூர் அ.பொன்னம்பலனார் அவர்களால் எழுதப்பட்டு வெளி யிடுவதாகும். இதன் கொள்கை அதன் பெயருக்கேற்ப சுயமரியாதைக் கொள்கைக்கு எதிரான எதையும் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்து அடிப்பதே யாகும். அதன் ஆசிரியரான திரு. அ. பொன்னலம்ப னாரைப்பற்றி நாம் சுயமரியாதை உலகத்திற்கு அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அவர் முதலில் ஒரு பெரிய சைவ சித்தாந்த அழுக்கு மூட்டையாய் இருந்தவர். என்னேரமும் அடிக்கடி விபூதி பூசிக்கொண்டு ருத்திராக்ஷ மாலை பூண்டு தேவார திருவாசக, ராமலிங்கசாமி முதலாகிய பாடல்களை கண்களில் நீர் ஒழுகத் தேம்பித்தேம்பி அழுதுகொண்டு இசை யோடு பாடிப்பாடி சைவப் பிரசாரம் செய்தவர் – பூவாழூர் சைவசித்தாந்த கழகத்தின் முக்கிய பண்டிதர் களில் ஒருவராய் இருந்தவர். அப்படிப் பட்டவர் சுயமரியாதையில் திரும்பி “சண்டமாருதம்” போல் எதிரிகளைத் தாக்கி சுயமரியாதையைப் பரப்ப ஆசை கொண்டே “சண்டமாருதம்” என்ற பத்திரிகையின்...

“புதுவை முரசு” 0

“புதுவை முரசு”

“புதுவை முரசு” என்னும் வாரப்பத்திரிகை ஒன்று புதுவை (புதுச் சேரி)யில் இருந்து சில மாதங்களாக வெளிவருவது யாவருக்கும் தெரிந்த தாகும். அப்பத்திரிகை ஆரம்பித்ததின் னோக்கமே சுயமரியாதைக் கொள்கை களைப் பறப்பவேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே துவக்கப் பட்டதாகும். அப்பத்திரிக்கைக்கு இப்போது திரு.எஸ். குருசாமி பி.ஏ., அவர்கள் ஆசிரியராய் இருக்கச் சம்மதித்து இருக்கின்றார். திரு. குருசாமியைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம், அவர் பல நாள் குடி அரசு ஆபீசி லும், ரிவோல்ட் பத்திரிகை பிரசுரத்தில் முக்கியஸ்தராகவும் இருந்து வந்தவர். சுயமரியாதை இயக்க கொள்கைகள் முழுவதும் நன்றாய் உணர்ந்தவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் போதிய உலக ஞானப் பாண்டித்தியம் உடையவர். இவ்வியக்கத்திற்கே தனது வாழ்நாளை பயன்படுத்த கவலை கொண்டுள்ள ஒரு உண்மைச் சுயமரியாதை வீரர். அவர் தனது சுயமரியாதை உணர்ச்சிக் கேற்ற துணைநலம் கொண்டவர். ஆகவே அப்படிப் பட்ட ஒருவரால் நடத்தப் படும் பத்திரிகை சுயமரியாதை உலகத்திற்கு...

ஜாதி ஆதிக்க சுயராஜ்யம் 0

ஜாதி ஆதிக்க சுயராஜ்யம்

வட மாகாணத்தில் சுயராஜ்ஜியத்திற்காக என்று செய்யப்படும் சத்தி யாக்கிரக ஆர்ப்பாட்டம் பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஜாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த வருணாசிரம சுயராஜ்ஜிய சூட்சிகளும் அங்கு தாராளமாய் நடந்து கொண்டுதான் வருகின்றன. அங்கு வருணாசிரம சுயராஜ்ஜிய மகாநாடு என்பதாக ஒன்று பெருத்தமுறையில் ஏற்பாடு செய்து வருணாசிரமமும், ஜாதி உயர்வு தாழ்வும், மனுதர்ம சட்டங்களும் அவசியம் என்றும் அவைகளை நிலை நிறுத்த பிரசாரம் செய்ய வேண்டுமென்றும் பிரயத்தனங்கள் செய்யப்பட்டதை அறிந்து தாழ்த்தப்பட்ட மக்களாகிய ஆதி திராவிடர்கள் என்போர்கள் அம்மகாநாடு நடக்கமுடியாமல் சத்தியாக் கிரகம் செய்ததாகவும் அதற்காக, அவர்களில் பலரைச் சிறைப்படுத்தி இருப்ப தாகவும் பொது ஜனங்கள் எல்லாம் கூடி வருணாசிரமத்தை நிலை நிருத்துபவர் களைக் கண்டித்ததாகவும் காணப்பட்டிருக்கின்றன. வெள்ளைக்காரர் ராஜ்ஜிய மாகிய “பட்டப்பகலில்” இந்த அக்கிரமம் நடக்கும்போது இனி வருணாசிரம சுயராஜிய ராஜ்யத்தில் என்ன வித அக்கிரமம் நடக்காது என்பதை யோசித்துப் பார்க்கும்படி நினைப்பூட்டுகிறோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 04.01.1931

சித்திரபுத்திரன் 0

சித்திரபுத்திரன்

மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டுப் போகின்றது, அம்மன்கள் விக்கிரகங்களின் கழுத்திலிருக் கும் தாலிகள் திருட்டுப்போகின்றது, விஷ்ணு விக்கிரகத்தின் நெற்றியில் இருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்கிரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்கிரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம் முத்து ரத்தினம் திருட்டுப்போகின்றது. இவைகளின் வாகனத்தில் தேரில் நெருப்புப் பிடிக்கின்றது. அச்சு ஒடிகின்றது. இவைகளின் பயனாய் பலர் சாகின்றார்கள். மூடர்களே இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில் அந்த விக்கிரகங்களில் அந்த தேர் வாகனங்களில் “புனிதத்தன்மை தெய்வத்தன்மை அருள் தன்மை ஆண்டவனை ஞாபகப் படுத்தும் தன்மை” முதலியவைகள் இருக்கின்றதாக நினைக்கின்றீர்கள். உங்க ளிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா தயவு செய்து சொல்லுங்கள். இன்னும் ஒரே குட்டி சங்கதி. வட்டி வாங்குகின்றவர்கள் கோடீஸ்வர னாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய் பாப்பராய்ப் போகிறான் என்பதைப் பார்த்தும் கேட்டும் இன்னமுமா பாழாய்ப்போன கடவுள்...

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு 0

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இவ்வருஷம் ராமநாதபுரம் ஜில்லாவில் நடத்தப்பட வேண்டுமென்று அந்த ஜில்லா வாசிகளால் ஈரோடு மகாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது யாவரும் அறிந்தாகும். அந்தப்படி இவ்வருஷம் மார்ச்சு மாதம் கடைசியிலாவது ஏப்ரல் முதலிலாவது நடை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். ராமநாதபுரம் ஜில்லாவில் மகா நாடு நடத்துவதற்கு தகுந்த இடம் விருதுநகர் என்றே கருதுகின்றோம். ஏனெனில் ரயில் போக்குவரத்து சவுகரியமும் உர்ச்சாகமும், ஊக்கமும், செல்வமும் பொருந்திய சுயமரியாதை வீரர்கள் மிகுதியும் நிறைந்த நகரமும் மற்றும் அவ்வித வீரர்கள் மலிந்த சுற்றுப்பிரதேசங்களுக்கு மத்திய ஸ்தலமாகவும் மதுரைக்கு 25 மைல் தூரத்தில் மிக சமீபமாகவும் ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜ பாளையம், சிவகாசி முதலிய இடங்களுக்கும் அருப்புக் கோட்டை முதலிய இடங்களுக்கும் மத்திய பாகமாகவும் இருப்பதாகும். ஆகவே இந்த வருஷம் மாகாண மகாநாடு விருதுநகரில் நடை பெறுதல் மிக்க நலமென்றே கருதுகிறோம். மகாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவராய் திரு. று.ஞ.ஹ. சௌந்திர பாண்டியன் அவர்களும், மகாநாட்டு காரியதரிசிகளாய் திருவாளர்கள்...

சுசீந்திரம் எச்சரிக்கை 0

சுசீந்திரம் எச்சரிக்கை

சுசீந்திரம் தெருவில் நடக்கும் உரிமை சம்மந்தமாய் திருவாங்கூர் ஹைகோர்ட்டில், அந்த ஊர் பாதைகளில் யாவருக்கும் நடக்க உரிமை உண்டென்று தீர்ப்புக் கிடைத்து தண்டிக்கப்பட்ட சத்தியாக்கிரகிகள் விடுதலை அடைந்தும்கூட பார்ப்பன விஷமத்தனத்தின் பலனாய் மறுபடியும் பொது ஜனங்கள் நடக்க தடையேற்பட்டு மறுபடியும் சத்தியாக்கிரகம் நடக்க வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யலாம். வம்புச்சண்டைக்கு போகாமல் இருக்கலாமே ஒழிய வலிய வரும் சண்டையை எப்படி விட முடியும் என்று திருவாங்கூர் அரசாங்கத் திற்கு பணிவான எச்சரிக்கை செய்கின்றோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 04.01.1931

புதிய பத்திரிகைகள் 0

புதிய பத்திரிகைகள்

செட்டியார் நாட்டில் திரு. அ. பொன்னம்பலனார் ஆசிரியத் தலை மையில் சண்டமாருதம் பத்திரிகையும், பிரஞ்சு இந்திய நாட்டில் திரு.எஸ். குருசாமி அவர்கள் ஆசிரியத் தலைமையில் புதுவை முரசுப் பத்திரிகையும் துவக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு, உண்மைச் சுயமரியாதை உணர்ச்சி உள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இன்று சுயமரியாதை இயக்கத்திற்கு சில பத்திரிகைகளே இருக்கின்றன. அதாவது “குடி அரசு” “குமரன்” “நாடார் குலமித்திரன்” “முன்னேற்றம்” “தமிழன்” “புதுவை முரசு” “சண்டமாருதம்” ஆகிய வாரப் பத்திரிகைகளேயாகும். “திராவிடன்” தினசரி ஒன்று இருந்தாலும் அது இருக்குமோ, போய் விடுமோ; இருந்தாலும் சுயமரியாதைக் கொள் கைக்கே உழைக்குமோ என்பது பற்றி பலருக்கு சந்தேகமும் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் அதையும் சேர்த்தே பார்த்தாலும் இவை மாத்திரம் போதாதென் போம். சீக்கிரத்தில் சுயமரியாதைத் தொண்டனும் கிளம்பி விடுவான் என்றே தெரிகின்றது. ஏனெனில் அதன் ஆசிரியர் தனக்கு மறுபடியும் வேலையும் அவசியமும் வந்துவிட்டதாகக் கருதி முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார். இனியும் ஜில்லாதோறும் ஒரு...

தோன்றிவிட்டது சமதர்ம உணர்ச்சி 0

தோன்றிவிட்டது சமதர்ம உணர்ச்சி

பீரார் நாட்டில் லேவாதேவிக்கார பணக்காரர்கள் வீட்டிலும் ஏராள மாக பூமிகள் வைத்திருக்கும் மிராசுதாரர்கள் வீட்டிலும் கைத்தொழி லாளிகளும் விவசாயத் தொழிலாளிகளும் கூட்டம் கூட்டமாகப் புகுந்து பணங்களையும், தானியங்களையும் கொள்ளையடித்ததோடு கடன் பத்திரங்கள், பாண்டுகள், கணக்குப் புஸ்தகங்கள் முதலிய கடன் கொடுத்த ஆதாரங்களையும், பூமிகள் குத்தகைக்குக் கொடுத்த ஆதாரங்களையும் தேடி எடுத்து அவைகளை நெருப்பிட்டுக் கொளுத்தி சாம்பலாக்கி விட்டதாகச் செய்திகள் தினசரிப் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. அவைகள் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இதுமாத்திரமல்லாமல் இந்தப்படி செய்ததற்கு மற்றொரு நோக்கமும் அதில் காணப்படுகின்றது. அதாவது, இந்த மாதிரி ரொக்க சொத்துக்களும், பூமி சொத்துகளும் அநேகமாய் பார்ப்பனர் முதலாகிய உயர்ந்த சாதிக்காரர்கள் இடமும், லேவாதேவிக்காரர் கள் இடமுமே போய் சேரக்கூடியதாய் இருப்பதால் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்களையும் கண் வைத்துக் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பதாகத் தென்படுகிறது. ஆகவே இவற்றிலிருந்து இந்த முறையை உயர்ந்த ஜாதி தத்துவத் தையும், பணக்காரத் தத்துவத்தையும் அழிப்பதற்கே கையாளப்பட்டதாக நன்றாய்த் தெரிய வருகின்றது. உலகத்தில்...