Tagged: வேலூர் திவிக

வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம் 23012017

வேலூர் மாவட்ட திவிக சார்பில் குடியாத்தம் பகுதியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி அவர்களை வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த இந்து முன்னணியைச் சேர்ந்த ராஜசேகரை கைது செய்யக்கோரியும், அவனை தப்பவிட்ட காவல்துறையைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம். தோழர் கொளத்தூர் மணி கண்டன உரை காணொளி செய்தி பூரணாசுரன் சு

எழுச்சியுடன் நடைபெறும் பரப்புரை பயணம் ஆத்தூரில் சுவரெழுத்து

நம்புங்கள் அறிவியலை நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கக்தோடு திவிக முன்னெடுக்கும் நான்கு திசைகளிலிருந்தும் அறிவியல் பரப்புரை பயணத்தின் நோக்கத்தை வலியுறுத்தி 12082016 அன்று நடைபெற உள்ள நிறைவுரை பொதுக்கூட்டத்தின் சுவரெழுத்து  இராணிப்பேட்டை ஆத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் சிறப்புரையோடு.    

வேலூர் மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதத்தை கட்டாய மொழி பாடமாக அறிவித்ததை கண்டித்து 08 07 2016 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வேலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரை: தோழர்: ப.திலிபன். வேலூர் மாவட்டம் அமைப்பாளர் தி.வி.க. தோழர்: அய்யனார். தலைமை செயர்குழு உறுப்பினர் தி.வி.க தோழர்: இரா.ப.சிவா. வேலூர் மாவட்ட அமைப்பாளர் தி.வி.க. தோழர்: பாபுமாசிலாமணி. பாவேந்தர் மன்றம் தோழர்: செவ்வேல் தா.ஒ.வி தோழர்: கஜேந்திரன் நன்றியுரை: தோழர்:நரேன்

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா வேலூர்

14-4-2016 அன்று வேலூர் மாவட்டம் களத்தூரில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா களத்தூர் கிளை, மக்கள் மன்றத்தால் எழுச்சியோடு நடத்தப்பட்டது. நிகழ்வு ஜாதி ஒழிப்புப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் வீரவணக்கப் பாடலுடன் தொடங்கியது. தொடர்ந்து, மக்கள் மன்றத் தோழர்களின் பறைமுழக்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலைநிகழ்ச்சிகளின் நடுவே காஞ்சி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சி மாவட்ட செயலாளர் பரந்தாமன், காஞ்சி வழக்கறிஞர் அப்துல் ஹக்கீம், இயக்குநர் களஞ்சியம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பாக மகேஷ் அவர்களின் நன்றி உரையாற்றினார் களத்தூர் மக்கள் தொடர்ச்சியாக மணல் கொள்ளைக்கு எதிராக, பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே துணிச்சலோடு போராடிவருபவர்கள் ஆவார்கள்

JNU மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற கோரி குடியாத்தத்தில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ! வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ! 29.02.2016 அன்று மாலை மாலை 4 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் JNU மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற கோரிஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் கழக இரா.ப.சிவா. மா.பெ.பொ.கட்சியின் தோழர் சீனி.பழனி, மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் தோழர் சுந்தர், அம்பேத்கர் தொழிலாளர் இயக்கத்தின் தோழர் மேயர் சுந்தர், கழக தோழர்கள் பார்த்தீபன் நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர். கழக தோழர் கோடீஸ்வரன் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமை அமைப்பு தோழர்கள் உள்பட 40 தோழர்கள் கலந்துகொண்டனர் பெரியார் முழக்கம் 10032016 இதழ்

மக்கள் பேராதரவுடன் சித்தூரில் கழகக் கூட்டம்

10-1-2016 ஞாயிறு அன்று மாலை சேலம் மாவட்டம் சித்தூர் சந்தைத் திடலில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சேலம் (மேற்கு ) மாவட்டத் தலைவர் கு.சூரியக் குமார் தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுத் தோழர்களின் பறைமுழக்கம், தொடர்ந்து பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. இசைநிகழ்ச்சியைத் தொடர்ந்து காவை இளவரசனின் மந்திரமல்ல, தந்திரமே நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சித்தூர் தோழர் இரா.ரகு வரவேற்புரையாற்ற பொதுக்கூட்டம் தொடங்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செய்லாளர் ஆதிமுரசு, ஆதித் தமிழர்ப் பேரவை மாவட்டச் செயலாளர் க.இராதாகிருட்டிணன், நாமக்கல் மாவட்ட கழகத் தலைவர் மு.சாமிநாதன் ஆகியோர் உரையைத் தொடர்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அவ்வூரில் கழகக் கூட்டம் நடப்பது இதுவே முதல்முறையாகும். பெரும் திரளாகக் கூடிய பொதுமக்கள் கூட்டத்தின் இறுதிவரை இருந்து கூட்டத்தை, உற்சாகமாகக் கைதட்டியும், ஆதரவு குரல் எழுப்பியும் கவனித்தனர்....

மதவெறிக்கு எதிராக வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மதவெறிக்கு எதிராக வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 06.11.2015 வெள்ளிகிழமை காலை வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மாவட்ட அமைப்பாளர் ப.திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சிவா, கௌதமன், மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார், விடுதலை சிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரகுமார், எஸ்.டி.பி.அய். மாவட்ட தலைவர் முகமது ஆசாத், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் செந்தில், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம் மேயர் சுந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை சிங்கராயர், மா.பெ.பொ.க.யின் குப்பன், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கழக...

ஜாதி ஆணவ படுகொலை, மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் – வேலூர் 06112015

வேலூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 06.11.2015 வெள்ளிகிழமை காலை வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும்,மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராசேந்திரன்,கழக பரப்புரை செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  மாவட்ட அமைப்பாளர் ப.திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சிவா,கெளதமன், மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விழுப்புரம் அய்யனார், விடுதலைசிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் சந்திரகுமார், SDPI மாவட்ட தலைவர் தோழர் முகமது ஆசாத், ஆதித் தமிழர்பேரவை மாவட்ட செயலாளர் தோழர் செந்தில், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம் தோழர் மேயர் சுந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தோழர் சிங்கராயர்,...

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

6.11.2015 அன்று வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்ட அக்லக் படுகொலையை கண்டித்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள மாட்டிறைச்சிக்கான தடையை நீக்கக் கோரியும், தொடரும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், 30.10.2015 அன்று வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி கழகத்தின் சார்பில் வேலூர் சத்துவாச்சேரி காவல்நிலையத்தில் 21.10.2015 அன்று மனு அளிக்கப்பட்டது. மனு அளித்த அன்றைய நாளே வேலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சட்டம் அமுலில் இருப்பதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்தால் பதட்டமான சூழல் உருவாகும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு 29.10.2015 அன்று விசாரணைக்கு வந்தது. 30.10.2015 அன்று அரசு தரப்பின் விளக்கங்களைக் கேட்ட நீதிமன்றம் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட...