Tagged: சித்தோடு

ஈரோடு தெற்கு திவிக சார்பில் சித்தோட்டில் தெருமுனைக் கூட்டம் 01012017

தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு,திராவிடர் விடுதலைக் கழகம்,ஈரோடு தெற்கு மாவட்டம் ,சித்தோடு கிளைக் கழகம் சார்பாக 01.01.2017 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சித்தோடு சமத்துவபுரத்தில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.. தோழர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.. திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர்.ஆசிரியர் செங்கோட்டையன் உரையாற்றினார். ஆசிரியர் வீரா கார்த்திக் மாட்டிறைச்சி அரசியல் பற்றி விளக்கிப் பேசினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சமூகத்தில் மலிந்து கிடக்கும் மூடநம்பிக்கைகள் குறித்தும்,கடவுளர் கதைகள் குறித்தும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.. தோழர்.சித்தோடு முருகேஷ் சாதி ஒழிப்புப் பாடல்கள், பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்.. தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை சித்தோடு கமலக்கண்ணன்,யாழ் ஸ்டூடியோ எழிலன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.. முன்னதாக சமத்துவபுரம் பகுதியிலுள்ள 120 வீடுகளுக்கும் சென்று துண்டறிக்கைகளை வழங்கினர்.. நமது கூட்டக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சமத்துவபுரம் பகுதி மாட்டுக்காரர் முருகன் அனைவருக்கும்...

சித்தோட்டில் சட்ட எரிப்புப் போராளிகள் நினைவு நாள்

சித்தோட்டில் சட்ட எரிப்புப் போராளிகள் நினைவு நாள்

26.11.2016 சனிக்கிழமையன்று, திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக, சித்தோடு நான்கு முனைச் சந்திப்பில் மாலை 7.00 மணிக்கு “சட்ட எரிப்புப் போராட்டமும் பெரியார் தொண்டர்களின் தியாகமும்” என்கிற தலைப்பிலும், “பொது சிவில் சட்டத்தின் ஆபத்துகள்” என்கிற தலைப்பிலும் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. யாழ். எழிலன் வரவேற்க, மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தின சாமி தலைமையேற்றும், இரா. கமலக்கண்ணன் முன்னிலை வகிக்கவும், தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி. வேலுச்சாமி, வீரா கார்த்திக் மற்றும் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.  வேணுகோபால், ராசண்ணன், சத்தியராஜ், சித்தோடு தோழர்கள் முருகேஷ், நடராஜ், சுப்பையா, முத்துசாமி, பிரபு, ரமேஷ், பள்ளி பாளையம், காஞ்சிக்கோயில் திருமூர்த்தி, அய்யப்பன், சாமியப்பன், அரங்கம்பாளையம் பிரபு, தமிழ்ச் செல்வன் ஆகியோர் பங்கேற்க மாவட்டப் பொருளாளர் பி.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்புடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 08122016 இதழ்

பரப்புரைப் பயணம்:  சித்தோட்டில் மாவட்ட கலந்துரையாடல்

பரப்புரைப் பயணம்: சித்தோட்டில் மாவட்ட கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26.6.16, ஞாயிறு மாலை 4 மணிக்கு, சித்தோடு தட்டாங்குட்டையில் கமலக் கண்ணன் இல்லத்தில் நடைபெற்றது. எழிலன் தலைமை வகித்தார். கழகப் பொருப்பாளர்கள் இரத்தினசாமி, சண்முகப்பிரியன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 89 வயதான மூத்த பெரியார் தொண்டர் இனியன் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். சித்தோடு பிரபாகரனின் கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்புடன் கலந்தாய்வு தொடங்கியது. கழகப்பரப்புரைப் பயணத்தை நடத்துவது குறித்தும் கழக ஏட்டுக்கு சந்தா சேர்ப்பு குறித்தும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தோழர்களுக்கு கமலக்கண்ணன் சிற்றுண்டிவழங்கினார். பெரியார் முழக்கம் 22072016 இதழ்

தெருமுனைக் கூட்டம் சித்தோடு 20032016

தெருமுனைக்கூட்டம்,சித்தோடு ! ஈரோடு மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சித்தோடு கிளையில் சித்தோடு தட்டாங்குட்டை பகுதியில் 20.03.2016 மாலை 6 மணியளவில் தோழர் வேல்மாறன் தலைமையில் தோழர் கமலக்கண்ணன் முன்னிலையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் தோழர் முருகேசன் பெரியாரிய பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார் . அவரைத் தொடர்ந்து நாமக்கல் வடக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் பகுத்தறிவு பாடல் பாடினார் . ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேணு மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் ப.ரத்தினசாமி ஆகியோரது உரையைத் தொடர்ந்து காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது .இறுதியாக கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது . இரவு தோழர்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த தோழர்கள் மாவட்ட அமைப்பாளர் குமார் , காவை சித்துசாமி , நங்கவள்ளி சிவக்குமார் , கொங்கம்பாளையம் சத்தியராஜ், சவுந்திரபாண்டியன், ராஜேஷ், ரங்கம்பாளையம்...

திவிகழக கூட்டங்கள்

திவிகழக கூட்டங்கள்

‘சித்தோடு’ கிளைக் கழகம் நடத்திய ஜாதி எதிர்ப்பு கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு (தெற்கு) மாவட்டம் சித்தோடு கிளைக் கழக சார்பில் “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” என்ற முழக்கத்துடன் மற்றும் “கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்” சித்தோடு அருகில் உள்ள ஜே.ஜே நகரில் 21.02.2016 மாலை 6.30 மணி யளவில் சங்கர் தலைமையில், எழிலன் முன்னிலை யில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் முருகேசன் பெரியாரியல் பாடல்கள் பாடினார். காவலாண்டியூர் சித்துசாமி மற்றும் ஈசுவரன் ஆகியோர் கொள்கை விளக்க உரையாற்றினர். தொடர்ந்து காவை இளவரசன், “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து வீரன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார். நிறைவாக கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். கூட்ட துவக்க முதல் இறுதி வரை மக்கள் திரளாக இருந்து நிகழ்ச்சியை கேட்டனர். கமலக்கண்ணன் நன்றியுரை கூற கூட்டம் நிறைவு பெற்றது. ஈரோடு...