Tagged: ஈரோடு தெற்கு திவிக

ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் 18062017

10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள்.. திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் சூரம்பட்டி வலசு பெரியார் JCB பணிமனையில் இன்று மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது.. 24.6.17 முதல் 3.7.17 முடிய பத்து நாட்கள் தொடர்ச்சியாக, தினமும் இரண்டு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 24.6.17 – லோகநாதபுரம்,மோளக்கவுண்டன் பாளையம் 25.6.17 – வைராபாளையம், லட்சுமி தியேட்டர் 26.6.17 – சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு 27.6.17 -சூரம்பட்டி வலசு, சூரம்பட்டி போலிஸ் ஸ்டேசன் 28.6.17 – மரப்பாலம், கோணவாய்க்கால் 29.6.17 – பச்சப்பாளி, கொல்லம்பாளையம் 30.6.17 – கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் 1.7.17 – ஆர்.என் புதூர், சி.எம் நகர் 2.7.17 – சூளை, கனிராவுத்தர் குளம் 3.7.17 – வளையக்கார வீதி, சின்னமாரியம்மன் கோவில்.. பேச்சாளராக தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர். கோபி வேலுச்சாமி மற்றும் மந்திரமா...

ஈரோடு தெற்கு திவிக சார்பில் சித்தோட்டில் தெருமுனைக் கூட்டம் 01012017

தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு,திராவிடர் விடுதலைக் கழகம்,ஈரோடு தெற்கு மாவட்டம் ,சித்தோடு கிளைக் கழகம் சார்பாக 01.01.2017 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சித்தோடு சமத்துவபுரத்தில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.. தோழர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.. திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர்.ஆசிரியர் செங்கோட்டையன் உரையாற்றினார். ஆசிரியர் வீரா கார்த்திக் மாட்டிறைச்சி அரசியல் பற்றி விளக்கிப் பேசினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சமூகத்தில் மலிந்து கிடக்கும் மூடநம்பிக்கைகள் குறித்தும்,கடவுளர் கதைகள் குறித்தும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.. தோழர்.சித்தோடு முருகேஷ் சாதி ஒழிப்புப் பாடல்கள், பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்.. தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை சித்தோடு கமலக்கண்ணன்,யாழ் ஸ்டூடியோ எழிலன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.. முன்னதாக சமத்துவபுரம் பகுதியிலுள்ள 120 வீடுகளுக்கும் சென்று துண்டறிக்கைகளை வழங்கினர்.. நமது கூட்டக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சமத்துவபுரம் பகுதி மாட்டுக்காரர் முருகன் அனைவருக்கும்...

பயணத்துக்கு தயாராகிறது சத்தியமங்கலம் அணி

17.07.2016 ஞாயிறு மாலை 4 மணிக்கு கோபி மாவட்ட  அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நாத்திகசோதி மற்றும்  மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தின சாமி தலைமையிலும், மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், மாவட்ட செயலாளர் பவானி வேணு கோபால் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. 07.08.2016 அன்று சத்திய மங்கலத்தில் துவங்க உள்ள “நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்கள!” என்ற அறிவியல் பரப்புரை அணியை சிறப்பாக வழிநடத்தி ஆத்தூரில் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிறைவு நாள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் தோழர்கள் நிவாசு, சதுமுகை பழனிச்சாமி, இரகுநாதன், கிருட்டிணமூர்த்தி, தங்கம், அறிவு, அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்க்கண்டவாறு சத்தியமங்கலம் அணியின் பரப்புரைப் பயண அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. “நம்புங்க அறிவியலை! நம்பாதீங்க சாமியாரை!” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத் திட்டஅட்டவணை பின்வருமாறு. 07.08.2016 (ஞாயிறு) : காலை : 10 மணி சத்தியமங்கலம் துவக்கம்; முற்பகல் :...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26062016

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26.6.16,ஞாயிறு மாலை 4 மணிக்கு, சித்தோடு தட்டாங்குட்டையில் தோழர்.கமலக்கண்ணன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தோழர்.எழிலன் தலைமை வகித்தார். தோழர்.இரத்தினசாமி, தோழர்.சண்முகப்பிரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. 89 வயதான மூத்த பெரியார் தொண்டர்.தோழர்.இனியன் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.. சித்தோடு தோழர் பிரபாகரனின் கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்புடன் கலந்தாய்வு தொடங்கியது.. *கூட்டத்தில் கீழ்க்காண் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:* *1)*திராவிடர் விடுதலைக் கழக மாநில செயற்குழு முடிவின் படி, பரப்புரைப் பயணமானது *சென்னை,மயிலாடுதுறை,பொள்ளாச்சி,சத்தியமங்கலம்* ஆகிய இடங்களில் இருந்து ஆகஸ்ட்-7ஆம் தேதி தொடங்கி,கழகம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட்-12 அன்று, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நிறைவடைகிறது. இப்பயணத்தில் ஈரோடு தெற்கு மாவட்டத்திலிருந்து தோழர்கள் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. *2)* சத்தியமங்கலத்திலிருந்து தொடங்கும் பயணம் ஈரோடு வழியாக வரும் போது, மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.. *3)* பெரியார் முழக்கம் இதழுக்கான...

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு திவிக சார்பில் மனு

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மனு ! சமூக வலைத்தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் தீரன் சரவணன் குருசாமிக் கவுண்டர் என்ற நபர்,தான் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறிக் கொண்டு கொங்கு இனத்தைச் சார்ந்த பெண்களைக் காதலித்தால் பஸ்,லாரியை எற்றிக் கொலை செய்வோம் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.. மேற்படி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 29.02.2016 அன்று ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன்,பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளார்கள் குமார்,சென்னிமலை செல்வராசு,மாநகரச் செயலாளர் சிவானந்தம், சிவக்குமார்,மோகன்ராஜ்,விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் தோழர்.தமிழின்பன் ஆகியோர் மனு அளித்தனர் பெரியார் முழக்கம் 10032016 இதழ்

இந்து பார்ப்பன,பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ”இந்து பார்ப்பன,பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நாள் : 08.11.2015 ஞாயிற்றுக்கிழமை. கருத்தரங்கம் : நேரம் : காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை. இடம் : K.K.S.K.மஹால்,பவானி ரோடு,ஈரோடு. பொது மாநாடு : நேரம் : மாலை 6 முதல் 10 மணி வரை. இடம் : திருநகர் காலனி,ஈரோடு. தோழர் கொளத்தூர் மணி,தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் விடுதலை ராஜேந்திரன்,பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் அப்துல்சமது,மனித நேய மக்கள் கட்சி, தோழர் ஆளூர் ஷாநவாஸ்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தோழர் இரா.அதியமான்,நிறுவனர் தலைவர்,ஆதித்தமிழர் பேரவை, தோழர் புனிதப் பாண்டியன்,ஆசிரியர் தலித் முரசு, தோழர் வே.மதிமாறன்,முற்போக்கு எழுத்தாளர், தோழர் சுந்தரவள்ளி,முற்போக்கு எழுத்தாளர். மாநாட்டின் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவின் இசை நிகழ்சியும்,வீதிநாடகமும் நடைபெறும். தொடர்புக்கு : ரத்தினசாமி மாநில அமைப்புச் செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.9842712444 – 9944408677

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! – ஈரோடு தெற்கு

ஆர்ப்பாட்டம் ! அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 19.10.2015 அன்று மாலை 5 மணியளவில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாநில அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தின சாமி தலைமை தாங்கினார்,கழக மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் கோபி ராம.இளங்கோவன் முன்னிலை வகித்தார். அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! தமிழக அரசாணைக்கெதிராக செயல்படாதே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் விநாயக மூர்த்தி,தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர் தோழர் குமரகுரு,தோழர் கோபி குணசேகரன்,மற்றும் ஆதரவு இயக்க தோழர்கள்...