திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26062016

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26.6.16,ஞாயிறு மாலை 4 மணிக்கு, சித்தோடு தட்டாங்குட்டையில் தோழர்.கமலக்கண்ணன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

தோழர்.எழிலன் தலைமை வகித்தார்.
தோழர்.இரத்தினசாமி,

தோழர்.சண்முகப்பிரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

89 வயதான மூத்த பெரியார் தொண்டர்.தோழர்.இனியன் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்..

சித்தோடு தோழர் பிரபாகரனின் கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்புடன் கலந்தாய்வு தொடங்கியது..

*கூட்டத்தில் கீழ்க்காண் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:*

*1)*திராவிடர் விடுதலைக் கழக மாநில செயற்குழு முடிவின் படி, பரப்புரைப் பயணமானது *சென்னை,மயிலாடுதுறை,பொள்ளாச்சி,சத்தியமங்கலம்* ஆகிய இடங்களில் இருந்து ஆகஸ்ட்-7ஆம் தேதி தொடங்கி,கழகம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட்-12 அன்று, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நிறைவடைகிறது. இப்பயணத்தில் ஈரோடு தெற்கு மாவட்டத்திலிருந்து தோழர்கள் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

*2)* சத்தியமங்கலத்திலிருந்து தொடங்கும் பயணம் ஈரோடு வழியாக வரும் போது, மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது..

*3)* பெரியார் முழக்கம் இதழுக்கான சந்தா சேர்ப்பு பணியை விரைந்து முடிப்பதென தீர்மானிக்கப்பட்டது..

*4)*சேர்க்கப்பட்ட பெரியார் முழக்கம் சந்தாக்களை ஒப்படைக்கும் நிகழ்வையும்,பயணத்தில் கலந்து கொள்ளும் தோழர்களின் பெயர்ப்பட்டியலையும் வரும் ஜுலை-10 ஆம் தேதியன்று ஆசிரியர்.சிவக்குமார் அவர்களின் இல்லத்தில் கூடும் மாவட்டக் கலந்தாய்வில் இறுதி செய்வதென தீர்மானிக்கப்பட்டது…

*மாவட்டக் கலந்தாய்வில் கலந்து கொண்ட தோழர்கள்:*

தோழர் ஆசிரியர் சிவக்குமார்,
தோழர்.குமார்,
தோழர்.சென்னிமலை செல்வராசு,
தோழர்.சிவானந்தம்,
தோழர்.திருமுருகன்,
தோழர்.கிருஷ்ணன்,
தோழர்.ரங்கம்பாளையம் பிரபு,
தோழர்.சி.எம் நகர் பிரபு,
தோழர்.பெருமாள்மலை முருகன்,
தோழர்.சித்தோடு முருகன்,
தோழர் சித்தோடு நடராசு,
தோழர்.கமலக்கண்ணன்,
தோழர்.கொங்கம்பாளையம் சௌந்தர்,
தோழர்.பிரபாகரன்,
தோழர்.நத்தக்காடையூர் சின்னதம்பி…

*கலந்தாய்வில் பங்கு கொண்ட தோழர்களுக்கு தோழர்.கமலக்கண்ணன் சிற்றுண்டி வழங்கினார்*

IMG-20160627-WA0021

You may also like...