Tagged: இணையேற்பு விழா

தோழர்.தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி இணையேற்பு விழா ஈரோடு 03092017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் அவர்களின் மகன் தோழர் தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி ஆகியோர் வாழ்க்கை இணையேற்பு விழா , 03.09.2017 அன்று ஈரோடு அசோகபுரம் கே.கே.எஸ்.கே மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.. வாழ்க்கை இணையேற்பு நிகழ்விற்கு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். ஈ.கே.எம் நிறுவனங்களின் உரிமையாளர் “EKM முகமது தாஜ்”, “வெங்காயம்” திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராச்குமார், மருத்துவர் சக்திவேல், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, திராவிடர் விடுதலைக் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் தோழர் பால்.பிரபாகரன், மாநில வெளியீட்டுச் செயலாளர் தோழர் இராம.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் மருத்துவர் கலைச்செல்வன், திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செல்லப்பன், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, நாமக்கல்...

இணையேற்பு விழாவும் ! முற்போக்காளர்கள் கருத்துரைகளும் ! ஈரோடு 03092017

கழகத்தின் ஈரோடு மாவட்டச்செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் அவர்களின் இல்ல இணையேற்பு விழா ! இணையர்கள் : தமிழ்ப்ரியன் ராஜநந்தினி நாள் : 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 8.00 மணி முதல் 10 மணி வரை இடம் : கே.கே.எஸ்.கே.மஹால் திருமண மண்டபம், அசோக புரம்,ஈரோடு. கழகத்தலைவர்,கழகப் பொதுச்செயலாளர் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கழக மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இணையேற்பு விழா ! சோழபுரம் 20082017

”சிவ.விஜயபாரதி – பேரா.பே.சங்கீதா” ஆகியோரின் இணையேற்பு விழா கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. நாள் : 20.08.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 7.30.- 9.00 மணி. இடம் : மங்களம் வீரமுத்து திருமண மாளிகை,சோழபுரம். பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்

திராவிடர் வாழ்வியல் உறுதிமொழி ஏற்பு !

பொள்ளாச்சி ஆனைமலை,கா.க.புதூரில் கிருத்திகா – ஸ்டாலின் இணையருக்கு, கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் ! ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக ஆணவப்ப டுகொலைகள் நடந்து வருகிற இந்த நேரத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கா.க.புதூர் கிராமத்தில் 29.05.2016 ஞாயிற்றுக்கிழமை 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்த கிருத்திகா – ஸ்டாலின் ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் கழக தலைவர் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கா.க. புதூர் ஜாதி ஒழிப்பு போராளிகள் நினைவுத் தூண் முன்பிருந்து ஊர்வலமாக சென்ற பின் மதியம் 12.30 மணியளவில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மணவிழா துவங்கியது.பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தோழர் காசு.நாகரஜ்.அவர்கள் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெரியார் சரவணன்,தோழர் அறக்கட்டளை சாந்த குமார் கோவை கதிரவன்,அறிவியல் மண்ரம் ஆசிரியர் சிவகாமி, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, பேராசிரியர்...