கராச்சி தீர்மானத்தின் யோக்கியதை
1931 ஜுலை 19 இல் வெளியான குடி அரசில் “”இன்னும் என்ன சந்தேகம்? பிராமணா! உன் வாக்குப் பலித்தது” என்ற தலைப் பெயருடன் வெளியான தலையங்கத்தில் கராச்சி காங்கிரசின் தீர்மானங்களைப் பற்றி எழுதியிருப்பதிலிருந்து சிலவற்றைக் கீழே குறிப்பிட்டிருக்கிறோம். இதைப்பார்த்த பிறகாவது காங்கிரஸ் தீர்மானத்திலிருந்து நாம் திருடிக் கொண்டோமா? அல்லது நமது கொள்கைகளிலிருந்து காங்கிரஸ்காரர்கள் திருடிக் கொண்டிருக்கிறார்களா என்பது விளங்கும். 1931 ஜுலை 19 தேதி தலையங்கக் குறிப்புகள்: காங்கிரஸ் காரியக் கமிட்டியும், தோழர் காந்தியும் சேர்ந்து 27731ந் தேதி செய்த பிரஜா உரிமை தீர்மானமானது நாம் காங்கிரசையும் அதன் தலைவர்கள் என்பவர்களையும் பற்றி, அவர்கள் எப்படிப்பட்ட அபிப்பிராயக்காரர்கள் என்று குற்றம் சொல்லி வந்தோமோ? அதே அபிப்பிராயம் இனி வேறு யாரும் வேறு எவ்வித வியாக்கியானமும், தத்துவார்த்தமும் செய்ய முடியாதபடி நன்றாய் வெளிப்படையாய் அழுத்தந் திருத்தமாய் சொல்லப்பட்டு விட்டது. “”கராச்சிக் காங்கிரசில் சமதர்மக் கொள்கை ஏற்பட்டு விட்டது” என்று வாய்த்தப்பட்டை அடித்ததெல்லாம் ...