Author: admin

கராச்சி  தீர்மானத்தின்  யோக்கியதை

கராச்சி  தீர்மானத்தின்  யோக்கியதை

  1931  ஜுலை  19  இல்  வெளியான  குடி  அரசில்  “”இன்னும்  என்ன  சந்தேகம்?  பிராமணா!  உன்  வாக்குப்  பலித்தது”  என்ற  தலைப்  பெயருடன்  வெளியான  தலையங்கத்தில்  கராச்சி  காங்கிரசின்  தீர்மானங்களைப்  பற்றி  எழுதியிருப்பதிலிருந்து சிலவற்றைக் கீழே குறிப்பிட்டிருக்கிறோம்.  இதைப்பார்த்த  பிறகாவது  காங்கிரஸ்  தீர்மானத்திலிருந்து  நாம்  திருடிக் கொண்டோமா?  அல்லது  நமது  கொள்கைகளிலிருந்து  காங்கிரஸ்காரர்கள்  திருடிக்  கொண்டிருக்கிறார்களா  என்பது  விளங்கும். 1931  ஜுலை  19  தேதி  தலையங்கக்  குறிப்புகள்: காங்கிரஸ்  காரியக்  கமிட்டியும்,  தோழர்  காந்தியும்  சேர்ந்து  27731ந்  தேதி  செய்த  பிரஜா  உரிமை  தீர்மானமானது  நாம்  காங்கிரசையும்  அதன்  தலைவர்கள்  என்பவர்களையும்  பற்றி,  அவர்கள்  எப்படிப்பட்ட  அபிப்பிராயக்காரர்கள்  என்று  குற்றம்  சொல்லி  வந்தோமோ?  அதே  அபிப்பிராயம்  இனி  வேறு  யாரும்  வேறு  எவ்வித  வியாக்கியானமும்,  தத்துவார்த்தமும்  செய்ய  முடியாதபடி  நன்றாய்  வெளிப்படையாய்  அழுத்தந்  திருத்தமாய்  சொல்லப்பட்டு  விட்டது. “”கராச்சிக் காங்கிரசில் சமதர்மக் கொள்கை ஏற்பட்டு விட்டது”  என்று  வாய்த்தப்பட்டை  அடித்ததெல்லாம் ...

ஆச்சாரியாருக்கு ஆப்பு

ஆச்சாரியாருக்கு ஆப்பு

  சம்மட்டி பொப்பிலி ராஜா மீதும் ஜஸ்டிஸ் கட்சியார் மீதும் குற்றம் சாட்டி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கும் ஒரு நீண்ட அறிக்கையைப் பல முறை படித்துப் பார்த்தேன். அந்த அறிக்கை முழுதும் வக்கீல் நியாயங்களும், குதற்க வாதங்களும், குறும்பு குறிப்புகளும் நிறைந்து இருக்கின்றனவே ஒழிய உண்மை பசை எள்ளளவேனும் காணவில்லை. தமிழ்நாட்டுச் சக்ரவர்த்தியான தாம் கூறும் புளுகுகளையெல்லாம் தமிழ்நாட்டார் நம்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் பேரிலேயே அவர் அவ்வாறு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் என்று தோற்றுகிறது. அவ்வறிக்கையில் முதன் முதலாக அவர் கூறுவதாவது. ஜஸ்டிஸ் கட்சியார், ஹரிஜனங்களுக்குச் சேவை செய்வதற்கென்று ஒரு ஸ்தாபனம் வைத்திருந்து பன்னிரண்டு மாத காலத்தில் தாமாகவே வசூலித்த பணத்திலிருந்து பள்ளிக்கூடங்களுக்காக எழுபத்தாறாயிர ரூபாயும், ஹரிஜன ஆஸ்டல்களுக்காக இருபத்தொன்பதினாயிர ரூபாயும் செலவழித்து, குழந்தைகளுக்கு ஐம்பதினாயிர ரூபாய்க்குப் புத்தகங்களும், துணி மணிகளும் வாங்கிக் கொடுத்து இவ்வாறு ஒரு வருடத்தில் “”தீண்டாமை” வகுப்பினருக்கு நான்கு லக்ஷ ரூபாய் வரை செலவிட்டிருந்தால்,...

எல்லாவரிகளும் எம்மனோர்க்குத்தானா?  புரோகிதர்களுக்கு ஏன் வரி இல்லை?  பிராமணர்களுக்கு சகல விதத்திலும் சலுகை  – பிராமணரல்லாதான்

எல்லாவரிகளும் எம்மனோர்க்குத்தானா? புரோகிதர்களுக்கு ஏன் வரி இல்லை? பிராமணர்களுக்கு சகல விதத்திலும் சலுகை – பிராமணரல்லாதான்

  தோழர்களே! இப்பொழுது சட்டசபை என்பது காங்கரஸ் சபை என்பதும், காங்கரஸ் என்பது பார்ப்பனர்கள் ஆதிக்கம் பெற்ற சபை என்பதும், நந்தமிழ் நாட்டார் அநேகர் அறிந்ததேயாகும். சட்டசபையில் பிராமண ஜாதி முன்னேற்றத்திற்காக எல்லா பிராமணர்களும் முழு வன்மையோடு உழைத்து வருவது, காங்கரஸ் பதவி ஏற்றதிலிருந்து கடந்த சில மாதங்களாக நடந்துவரும் நடவடிக்கைகளிலிருந்து பலர் அறிந்ததேயாகும். பல காங்கரஸ் பிரபலஸ்தர்களும் “பார்ப்பன நயவஞ்சக வார்த்தைகளுக்கிணங்கி மந்திரிப் பதவிகளை பார்ப்பனர்களுக்கு விட்டுவிட்டு பார்ப்பனரல்லாதார்க்கு ஏன் கஷ்டம் விளைவித்தோம்” என்று இப்பொழுது வருத்தப்படுவதாகவும் கேள்விப்படுகிறோம். இப்பொழுதிருக்கும் காங்கரஸ் சபையார் இயற்றும் எவ்வித சட்டங்களுக்கும் நாம் எல்லோரும் அடங்கி நடக்கத்தான் வேண்டும். அவர்களும், எல்லார்க்கும் பொதுவாகவும் சம்மதமாகவும் இருக்கும் சட்டங்களை ஏற்படுத்துவதே நியாயம். அதை விடுத்து அவர்கள் ஒருசாராருக்கு மட்டும் உதவி செய்வது அநியாயமல்லவா? அதற்குச் சில உதாரணங்களைத் தந்து இக்கட்டுரையை முடிப்போம். தோழர்களே! கூர்ந்து கவனியுங்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து அதனால் கிடைக்கும்...

1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது

1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது

  குடி அரசு ஆபீசு உண்மை விளக்கம் பிரசில் பதிப்பிக்கப்பட்ட “”பாதிரிகளின் பிரமச்சரிய லக்ஷணம்” என்னும் புத்தகங்கள் சர்க்காரால் பறிமுதல் செய்யப்பட்டு 1550 புத்தகங்கள் போலீசாரால் கைப்பற்றி இரசீது கொடுக்கப்பட்டது. இனி அப்புத்தகம் குடிஅரசு பதிப்பகத்திலோ, பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகத்திலோ கிடைக்காது. குடி அரசு  அறிவிப்பு  14.04.1935

சேலம் மக்களே உஷார்

சேலம் மக்களே உஷார்

  சேலம் நகரசபைத் தோழர்கள் தேர்தல் விஷயமாக தோழர் ஜெகதீச செட்டியார் செய்து வரும் முயற்சி வெற்றி பெற்று வருவது கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தோழர் ஜெகதீச செட்டியார் கட்சியை ஆதரித்து காங்கரஸ்காரருடன் போட்டி போட சேலம் பிரபலஸ்தர்கள் வலிய வந்திருப்பதாயும் அவர்களில் சிலர் சேலம் நகரசபை மாஜித் தலைவர்கள் என்றும் அறிகின்றோம். ஆகவே தோழர் ஜெகதீச செட்டியார் கட்சி மிகவும் வலிமையுடைய கட்சியாக இருக்கு மென்பதற்குச் சந்தேகமே இல்லை. தண்ணீர் குழாய் கண்ராக்ட்டு சம்மந்தமாக காங்கரஸ் மந்திரியார் பின்பற்றி வரும் கொள்கை சுயமரியாதையுடையவர்களை யெல்லாம் தட்டி யெழுப்பாமலிருக்குமா? எனவே தோழர் ஜெகதீச செட்டியார் கடசிக்கு முழு வெற்றியேற்படும்படி சேலம் மகாஜனங்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 24.04.1938

ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள்

ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள்

  இம்மாதம் (ஏப்ரல்) 30ந் தேதி தமிழ் நாடெங்கும் முனிசிபல் தேர்தல்கள் நடக்கப் போகின்றன. அதில் காங்கரஸ்காரர்கள் போட்டி போட முனைந்து அபேட்சகர்களை நிறுத்தி இருக்கிறார்கள். இன்று முதல் 15 நாள்களுக்கும் தமிழ்நாட்டின் முக்கிய பட்டணங்கள் எல்லாம் கலவரமாகவும், குழப்பமாகவுமே இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. இது ஒருபுறம் இருக்க தேர்தல் பலாபலன்களைப் பற்றியும் நமக்கு கவலையில்லை. ஆனால் காங்கரஸ்காரர்களுக்கு முனிசிபாலிட்டிகளில் வேலை செய்ய ஒருவித திட்டமும் இல்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும். பின் ஏன் காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டி தேர்தல்களில் பிரவேசிக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் சொல்லும் சமாதானம் என்னவென்றால், முனிசிபாலிட்டிகளில் லஞ்சம் தாண்டவமாடுகிறதாம். முனிசிபாலிட்டிகளில் கண்டிராக்டர்கள் ராஜ்யம் நடக்கின்றதாம். முனிசிபாலிட்டிகளில் வகுப்புவாதம் தாண்டவமாடுகின்றதாம். முனிசிபாலிட்டிகளில் பணக்காரர்கள் ஆட்சி நடக்கிறதாம். முனிசிபாலிட்டிகளை காங்கரஸ்காரர் அல்லாதார் கைப்பற்றி விடுவதால் சுயராஜ்யம் கிடைப்பது தாமதப்பட்டு விடுகிறதாம். ஆகிய இந்த ஐந்து காரணங்களுக்காக காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டியை காங்கரஸ் கைப்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். இன்று தமிழ் நாட்டில்...

விருதுநகர் தீர்மானங்கள்

விருதுநகர் தீர்மானங்கள்

  ஜஸ்டிஸ் கட்சியார் விருதுநகரில் தங்கள் வேலைத் திட்டமாய் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பற்றி தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அவை சமதர்மத் திட்டங்கள் என்றும், பொதுவுடைமைத் திட்டங்கள் என்றும் இவை ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஒத்துக் கொள்ளா தென்றும் அக்கட்சி அதை ஜீரணம் செய்ய முடியாதென்றும் எழுதினார். மறுபடியும் அதே மூச்சில் அவர் ராஜ பக்தியோடு கூடிய பொது உடமைத் திட்டம் என்றும் எழுதிவிட்டார். இவை எப்படியோ அர்த்தமில்லாமல் தேர்தல் வெறியால் உளருவதாகக் காணப்பட்டாலும் பார்ப்பனப் பத்திரிகைகள் இந்தத் தீர்மானங்கள் எல்லாம் கராச்சி தீர்மானங்களில் இருந்து திருடியவை என்று எழுதி இருக்கின்றன. இவைகளின் கருத்தெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி பொது மக்கள் கேவலமாய் நினைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதை எவரும் அறிவார்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தேர்தல் அவசியத்துக்காக எதையும் சொல்லலாம் என்கின்ற நியாயத்தின் மீது ஏதோ உளறிக் கொட்டினார் என்பது நமக்கு நன்றாயத் தெரியும். இனி அவர் கொஞ்ச...

சென்னைத் தேர்தலும்  பார்ப்பனர் உத்தியோகமும்

சென்னைத் தேர்தலும் பார்ப்பனர் உத்தியோகமும்

  சென்னையில் இம்மாதம் 9ந் தேதி நடந்த சென்னை சட்டசபை உபதேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாய் நிறுத்தப்பட்ட தோழர் ரங்கராமானுஜம் அவர்கள் பெருவாரியான ஓட்டுகளால் தோற்கடிக்கப் பட்டுப் போனார். இந்தத் தோல்வி இந்திய சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி போலவே குறிப்பிடத் தகுந்ததொரு தோல்வியாகும். இந்திய சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுப் போனதற்கு என்னென்ன காரணங்களிருந்தனவோ, அவை பெரும்பாலும் சென்னை சட்டசபைத் தேர்தலுக்கும் இருந்து இருக்கிறது. இந்தக் குறைபாடுகள் இப்படியே இருக்குமானால் இனியும் ஏற்படப் போகும் எல்லாத் தேர்தலுக்கும் இதே மாதிரி பலன் தான் எதிர்பார்க்க முடியும். எதிரிகளின் விஷமப் பிரசாரமே தோல்விக்குக் காரணமாய் இருந்தாலும் எதிரிகளை “”தயவு செய்து  இனிமேல் விஷமப் பிரசாரம் செய்யாதீர்கள்” என்று நாம் அவர்களைக் கேட்டுக் கொள்ள முடியுமா? அல்லது எதிரிகளின் விஷமப் பிரசாரம் இன்று நேற்றுத்தான் ஆரம்பிக்கப் பட்டதா? நூற்றுக்கணக்கான வருஷங்களாகவே ஏன் பல நூற்றுக்கணக்கான வருஷங்களாகவே நமது எதிரிகள் (பார்ப்பனர்கள்) செய்து...

குல்லூக பட்டரின் குயுக்தி வாதம்

குல்லூக பட்டரின் குயுக்தி வாதம்

  தோழர் ராஜகோபாலாச்சாரியார் வக்கீல் தொழிலை விட்டுவிட்டாலும், அவருடைய அரசியல் வாதங்களில் எல்லாம், வக்கீல் போலவே நடந்து வருகிறார் என்பது வெளிப்படை. அவருடைய வாதங்கள் எல்லாம் குயுக்தி வாதங்களும், குதர்க்க வாதங்களுமாகவே இருப்பது வழக்கம். பொது ஜனங்களை ஏமாற்றும் விதத்தில் பொருத்தமான புளுகுகளுடன் கூடிய வரட்டு வாதஞ் செய்வதில் அசகாய சூரர் என்பது புதிதல்ல. உதாரணமாக ஆலயப் பிரவேச மசோதா விஷயமாக அவர் கூறும் வாதத்தைக் கவனித்தால் உண்மை விளங்கும். பொப்பிலி ராஜா அவர்கள், தமது தேர்தல் பிரசங்கத்தில் ஆலயப் பிரவேச மசோதா பாழானதற்குக் காங்கிரசே காரணம் என்று உண்மையை உரைத்தார். அதற்கு தோழர் சி.ஆர்.சொல்லியிருக்கும் பதில் மிகமிக விசித்திரமானது. “”ஆலயப் பிரவேசம் சம்பந்தமான ஒரு வழக்கத்தை மாற்றுவதற்கு ஒரு அகில இந்திய சட்டந்தான் தேவை என்ற கஷ்டமான நிலைமையை ஏற்படுத்தியதற்குப் பிரதம மந்திரியும் அவர் கட்சியும் தான் பொறுப்பாளி” என்று குற்றஞ்சாட்டுகிறார். இதன் உண்மையை ஆராய்வோம். ஆலயப் பிரவேச மசோதாவுக்கு...

ஏழைகளை வதைக்கும் காங்கிரஸ்காரர்கள்

ஏழைகளை வதைக்கும் காங்கிரஸ்காரர்கள்

  உப்பு வரியும் அரிசி வரியும் இப்பொழுது உப்பு வரி மணங்குக்கு ஒரு ரூபாய் நாலு அணாவாகும். இதைப் பனிரண்டு அணாவாகக் குறைக்கும்படி காங்கிரஸ்காரர்கள் இந்தியா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இத்தீர்மானம் அரசாங்கத்தாரால் ஒப்புக் கொள்ளப்படுகிறதா? அல்லது வைசிராய் பிரபுவின் “”வீட்டோ” அதிகாரத்தினால் தள்ளப்படுகிறதா? என்பது வேறு விஷயம். அதைப் பற்றி நாம் இப்பொழுது முடிவு கட்டப் போவதில்லை. இந்தத் தீர்மானம் நிறைவேற்றியவுடன், காங்கிரசுக்கு ஜே போட்டு வயிறு பிழைக்கும் பத்திரிக்கைகளுக்குத் தலைக்கனம் தாங்க முடியவில்லை. தலைகால் தெரியாமல் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துக் காங்கிரஸ் வாலாக்களின் வீரப்பிரதாபங்களை புகழ்ந்து துள்ளிக் குதிக்கின்றன. இதனால் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களின் பத்திரிகைகள் ஏழைகளின் பொருளாதார நிலையை விருத்தி செய்து அவர்களைக் “”குபேரர்கள்” ஆக்கிவிட்டதாகக் கும்மாளம் போடுகின்றன. பொது ஜனங்களை எந்த விஷயத்தைச் சொன்னாலும் உண்மையென்று நம்பக்கூடிய “”சோணகிரிகள்” என்று உறுதியாக நம்பி இருப்பதனாலேயே இவைகள் இம்மாதிரி செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. காங்கிரஸ் ஏழை...

கங்கை கொண்ட (காங்கரஸ்)  சாக்கடை

கங்கை கொண்ட (காங்கரஸ்) சாக்கடை

  காங்கரசானது கங்கைக்குச் சமமாக ஒப்பிடப்படுவதுண்டு. கங்கைப் புனித நதியெனப் பெயர் பெறும். காங்கரசும் தேசீயம், சுயராஜ்யம் ஆகிய விஷயங்களில் நாட்டினுக்கும் மக்களுக்கும் அளப்பறிய நன்மை செய்யும் ஸ்தாபனமாகக் கருதப்படுகிறதன் காரணமாகக் கங்கைக்கு உவமானங் கூறப்படுகிறது. கங்கையிலும் சாக்கடைகள் கலக்கின்றன. காங்கரஸ், கங்கையிலும் சாக்கடைகள் கலக்கின்றன, கங்கையில் கலக்கும் சாக்கடைக் கங்கையுடன் ஐக்யமாகிப் புனிதமாகி விடுகிறது. காங்கரஸ் கங்கையில் கலக்கும் சாக்கடைகளோ தாம் புனிதமடைதல் ஒரு புறமிருக்கக் காங்கரஸ் கங்கையையே அசுத்தப்படுத்திவிட்டன. தேசீயம் வேண்டும் சபையில், சுயராஜ்யம் வேண்டும் சபையில், நாட்டினடிமையொழிய விரும்பும் சபையில், நாட்டின் க்ஷேமாபிவிர்த்தியை கோரும் சபையில் இன்று நர்த்தனமிடுபவை எவை எனக் கூர்ந்து நோக்கின் உண்மை வெளியாகும். காங்கரஸ் மகாசபையில் கூடியிருப்போர் அத்தனைபேரும், ஏன் 30 லக்ஷ மக்களும் சுயராஜ்யத் தாகங் கொண்டுதான், தேசீயப் பற்றுக் கொண்டுதான் சேர்ந்து இருக்கின்றனரா என்பதனைச் சிறிது ஆராய்ந்தால் உண்மை புலனாகும். காங்கரஸ் மகாசபையில் இன்று வகுப்பு வாதிகள், பதவி வேட்டைக்காரர்கள்,...

* தோழர் ஈ.வெ. ராமசாமி தீர்மானங்கள்

* தோழர் ஈ.வெ. ராமசாமி தீர்மானங்கள்

  விவசாயிகளை கடன் தொல்லையிலிருந்து விடுவிக்கவும், அவர்கள் மேலால் கடன்காரராகி கஷ்டப்படாமல் இருக்கவும் வேண்டிய காரியங்களை கடனுக்காக கடன்காரர்கள் பூமியை கைப்பற்ற முடியாமல் செய்வது முதலிய மார்க்கங்களைக் கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதை எல்லாம் செய்ய வேண்டும். அனியாய வட்டி லேவாதேவிக்காரர்களால் விவசாயிகள் அழிந்து போகாமல் இருக்கும்படி கூட்டுறவு நாணைய ஸ்தாபனங்களையும், நில அடமான பாங்குகளையும் தாராளமாக பெருக்கவேண்டும். நில அடமான பாங்கை மாகாணம் பூராவும் நல்ல அமைப்பில் ஏற்படுத்தி அதை ராஜாங்கத்தாரே நடத்த வேண்டும். சொத்து உரிமை சம்பந்தமாக விவகாரங்களைக் குறைப்பதற்காக சொத்து பாத்தியங்களைக் குறிப்பிடத்தகுந்த தெளிவான ஆதாரங்களை சர்க்காரார் வைத்திருக்க வேண்டும். அன்றியும் நிமித்த மாத்திரமாகவும் மலரணையாகவும் எழுதி வைக்கப்பட்டது என்று எதிர் வழக்கு வாதாடும் (ஆஞுணச்ட்டி) முறையை இல்லாமல் செய்ய வேண்டியதோடு அப்படிப்பட்ட வாதங்களை கோர்ட்டுகளில் ஒப்புக் கொள்ளாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்துவிட வேண்டும். விவசாயக்காரர்கள் விளைவின் பயனை அனுபவிக்காமல் தடுக்கும் தரகர்மத்திய...

ஆச்சாரியாரும் கதரும்  – கதர் கட்டி அலுத்தவன்

ஆச்சாரியாரும் கதரும் – கதர் கட்டி அலுத்தவன்

  தோழர் கனம் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சட்டசபை பட்ஜட் விவாதத்தின்போது கதர் சம்மந்தமாய் எழுந்த பிரச்சினைக்கு பதில் அளிக்கையில் ” எனக்கு அதிகாரமிருந்தால் கதர் கட்டாததற்கு ஆக சர்க்கார் தொழில் இலாக்கா டைரக்டரை டிஸ்மிஸ் செய்து விடுவேன்” என்று பேசியிருக்கிறார். இது தினசரி பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. இதுவரை அந்த சேதிக்கு எவ்வித மறுப்பும் வரவில்லை. ஆனதால் கனம் ஆச்சாரியார் அந்தப்படி பேசியிருக்கிறார் என்பது உண்மையேயாகும். இதிலிருந்து காங்கரஸ்காரர்கள் உத்தியோகம் பார்ப்பதின் கருத்தும் அவர்களது நிர்வாக யோக்கியதையும் எப்படிப்பட்டது. என்பது நன்றாய் விளங்கும். அது ஒரு புறமிருக்க அரசாங்க சிப்பந்திகள் கனம் ஆச்சாரியார் பேச்சிலிருந்து என்ன நினைப்பார்கள் என்பதை யோசிப்போம். கதர்கட்டாத ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டிய அளவுக்கு அயோக்கியராக பாவிக்கப்படவேண்டியவராகிறார். கனம் ஆச்சாரியாரால் அதிகாரமில்லாத காரணத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட முடியாத உத்தியோகஸ்தர்கள் போக மற்றபடி டிஸ்மிஸ் செய்யவோ அல்லது வேறுவிதமாய் தொலைக்கவோ தொல்லை கொடுக்கவோ செய்யப்படக்கூடிய உத்தியோகஸ்தர்கள்...

திருவாங்கூரும் பார்ப்பனீய கொடுமையும்

திருவாங்கூரும் பார்ப்பனீய கொடுமையும்

  திருவாங்கூரில் ஸர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்களது ஆட்சி இன்று ஒரு குட்டி ஹிட்லர் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. அங்கு அடக்குமுறை தாண்டவமாடுவது மாத்திரமல்லாமல் அது ஒரு பார்ப்பன ராஜ்யமாகவே ஆக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. அதன் முழு விபரத்தையும் அங்கு நடக்கும் பார்ப்பன கோலாகலங்களையும் வெளி ஜனங்கள் அறிய முடியாமல் செய்வதற்கு எவ்வளவு சூழ்ச்சி செய்யலாமோ அவ்வளவும் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள பத்திரிகைகள் உள்ள விஷயங்களை வெளியிட்டதற்கு ஆக ஜாமீன் பறிமுதல் செய்யப்பட்டதோடு பத்திரிகை நடத்த கொடுத்திருந்த அநுமதியையும் கேன்சல் (தள்ளுபடி) செய்யப்பட்டு வருகிறது. அசோசியேட் பிரஸ் என்னும் இந்தியப் பத்திரிகை செய்தி ஸ்தாபனத்தையும் விலைக்கு வாங்கப்பட்டோ அல்லது வேறு வழியில் கைவசப்படுத்தப்பட்டோ அதன் மூலம் விஷயம் வெளியாக்கப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது. சென்னைத் தினசரிப் பத்திரிகைகள் பெரிதும் பார்ப்பனப் பத்திரிகைகளானாலும் பார்ப்பன நிருபர்களையே கொண்டவைகளானதாலும் விஷயங்கள் வெளியாகாமல் அடக்கிவிடப்படுகின்றன. ~subhead சர்வம் பார்ப்பனமயம் ~shend இந்நிலைமையில் திருவாங்கூர் பிரஜைகள்...

விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு

விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு

  விருதுநகரில் ராமநாதபுரம் ஜில்லா முதலாவது ஜஸ்டிஸ் மகாநாடு சென்ற மார்ச் மாதம் 30, 31 தேதிகளில் திவான் பகதூர் ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் தலைமையில் நடந்த விபரங்கள் மற்ற பக்கங்களில் காணலாம். 1929ம் வருஷம் நெல்லூரில் ஜஸ்டிஸ் மாகாண மகாநாடு கூடிய பின்பு தஞ்சையில் தலைவர் தேர்தலுக்காக என்று ஒரு மகாநாடு கூட்டப்பட்டு, அதிலும் தலைவர் நியமனம் தவிர வேறு ஒரு காரியமும் நடைபெறாமல் கலைக்கப்பட்ட பிறகு ஜஸ்டிஸ் மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு இப்போதுதான் முதன்முதலாக விருதுநகரில் கூடியது என்று சொல்லலாம். அன்றியும் விருதுநகர் மகாநாடானது மற்ற மகாநாடுகளைப் போல் தலைவர் ஸ்தானத்துப் போட்டிச் சண்டை மகாநாடாகக் கூடிக் கலையாமல் தக்கதொரு வேலைத் திட்டத்தை நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டுவர முடிவு செய்து கொண்டு இனிது முடிந்த மகாநாடு என்று சொல்லத்தக்க மாதிரியில் கூடிக் கலைந்திருக்கிறது. மகாநாட்டுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் விஜயம் செய்து குதூகலத்துடனும், தீவிர...

சபாஷ் பரோடா

சபாஷ் பரோடா

  மதத்தின் போல், நமது நாட்டில், பரப்பி வைக்கப்பட்டுள்ள பலவித ஆபாசங்களில் மோசமான, ஆபத்தான ஆபாசம் மாந்திரீகம், யக்ஷணி வசியம் என்பனவாகும். வினைகளைத் தீர்க்கவும், நோய் போக்கவும் கூடாதவரைக் கூட்டி வைக்கவும் போன பொருளை மீட்கவும் புத்திர சந்தானம் உண்டாகவும் மந்திரக்காரனைத் தேடி அலையும் குடும்பங்கள் பல உள்ளன. பேய், பில்லி, சூனியம் முதலிய எண்ணற்ற ஆபாசங்கள், பலருக்கு வயிற்றுப்பிழைப்பு மார்க்கமாகவே போய்விட்டது. நெற்றியில் ஒரு அங்குல அளவு குங்குமப்பொட்டும், கையில் ஒரு உடுக்கையும் வைத்துக்கொண்டு காளி அருள் பெற்றவன், நெற்றி வியர்வை நிலமீது சிந்த, கையில் மண் வெட்டியோ, கோடாரியோ, கலப்பையோ தாங்கி பாடுபடும் பாட்டாளியைவிட பல நூறு மடங்கு செளக்கியமாக வாழுகிறான். மதத்தின் பேரால் முளைத்துள்ள ஆபாசங்கள், பேயர்கள் பலருக்கு, வெறியாட்டத்தையும், களியாட்டத்தையும் தந்து மக்களின் வாழ்வைப் பாழ்படுத்துகிறது. பட்டம் பெற்ற படிப்பாளிகளும், இந்த உடுக்கைக்காக உலுத்தர்களிடம் நம்பிக்கை வைக்கிறார்கள். பூசாரி, சாமி, சுவட்டோலைச் சோதிடன், அநுமார் உபவாசி,...

தெரிந்ததா  பார்ப்பனர்  சங்கதி?

தெரிந்ததா  பார்ப்பனர்  சங்கதி?

  சென்ற  27335ந்தேதி  மாலையில்  சென்னையில் நடந்த  காங்கிரஸ்  தேர்தல் கூட்டத்தில் தோழர்  டி. பிரகாசம்: ஜஸ்டிஸ்  கட்சியினரைக்  காட்டிலும்  ஆங்கிலேயர்கள்  ஆயிரம்  மடங்கு  நல்லவர்கள்,  வகுப்புவாரி  பிரதிநிதித்துவப்படி  உத்தியோகம்  பெற  அது  (ஜஸ்டிஸ்  கட்சி)  பாடுபட்டு  வந்திருக்கிறது.  ஆனால்  காங்கிரசின்  நோக்கம்  இதை  ஒழிக்க  வேண்டுமென்பதே  என்று  பேசியிருக்கின்றார். இதைக்  கொண்டாவது  காங்கிரஸ்  பார்ப்பனர்களின்  உண்மை  எண்ணம்  என்ன  என்று  தெரிந்து  கொண்டீர்களா? “”வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவத்தை  முக்கிய  கொள்கையாகக்  கொண்ட  ஜஸ்டிஸ்  கட்சி  அதிகாரத்தில்  இருந்ததனால்  பார்ப்பனரல்லாத  வகுப்பினர்கள்  உத்தியோகத்திற்கு  வந்து  விட்டார்கள்.  இக்கட்சியில்லா  விட்டால் எல்லா உத்தியோகங்களையும்  பார்ப்பனர்களே  கைப்பற்றி  ஏகபோகமாக  ஆளலாம்.  ஆதலால்  பார்ப்பனரல்லாதார்  கட்சியை  அடியோடு  ஒழித்து  விட்டால்  எந்த  வழியிலாவது  ஆங்கிலேயர்களை  மயக்கி  எல்லா  உத்தியோகங்களையும்  பார்ப்பனர்களே  வாங்கிக்கொள்ளலாம்.” இதுவே காங்கிரஸ் பார்ப்பனர்களுடைய அந்தரங்க நோக்கம்  என்பதையும்,  இதற்காகவே  ஜஸ்டிஸ்  கட்சியை  ஒழிக்க  மான  ஈனமின்றிப்  பொய்யும்  புரட்டும்  கூறிப்  பொதுஜனங்களை  ஏமாற்றுகிறார்கள்  என்பதையும் ...

தோழர் சத்தியமூர்த்தியின் தற்பெருமை

தோழர் சத்தியமூர்த்தியின் தற்பெருமை

  குட்டு வெளிப்பட்டது இந்தியா சட்டசபை அங்கத்தினர்களின் அந்தஸ்து அரசியல் வேலைகள் சம்பந்தமான விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று மாகாண அரசாங்கங்கள் கொடுத்த தகவல்களைக் கொண்டு இந்திய அரசாங்கத்தாரால் தயாரிக்கப்பட்டு அச்சிட்டு சர்க்கார் அங்கத்தினர் களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்புத்தகத்தில் தன்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு இந்திய அரசாங்க ஹோம் மெம்பர் கொடுத்த பதிலும் வருமாறு@ சத்தியமூர்த்தி@  என்னைப் பற்றி அந்தப் புத்தகத்தில் என்ன தகவல் கொடுத்திருக்கிறார்கள்? சர் ஹென்றி கிரெயிக்@  நான் நினைத்திருப்பதைக் காட்டிலும் கனம் மெம்பர் தன்னைப் பற்றி பிரமாதமாக நினைத்துக் கொண்டிருக் கிறார் போலிருக்கிறது. உண்மையாகவே, நான் கனம் மெம்பரைப் பற்றிய தகவல்களை வாசிக்கவில்லை. (சபையில் பலத்த சிரிப்பு) சத்தியமூர்த்தி@  அத்தகவல்களை வாசிக்காத பட்சத்தில், வரி செலுத்து வோரின் பணத்தை வீணாகச் செலவழித்து அதை அச்சடிப்பானேன்? சர். ஹென்றி கிரெயிக்@  அப்புத்தகத்தில் சில அம்சங்களை...

கல்வி மந்திரிக்கு ஜே!

கல்வி மந்திரிக்கு ஜே!

  பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை ஆண் பள்ளிக் கூடமாயின் ஜில்லாக் கல்வி உத்தியோகஸ்தர்களின் உத்திரவின்றியும், பெண் பள்ளிக்கூடமாயின் இன்ஸ்பெக்டர்சுகளின் உத்திரவின்றியும் 5 வருஷத்திற்கு முன்னதாக மாற்றக்கூடாதென்று உத்திரவு பிறப்பித்ததற்காகக் கல்வி மந்திரியைப் பாராட்டுகிறோம். இவ்வுத்திரவுப்படி கல்வி விஷயத்தில் நாம் எதிர்பார்க்கும் முழுப் பலனும் கிடைத்து விடாதென்பது நிச்சயமாயினும் நாம் சென்ற 10.2.35ல் நமது பத்திரிகையின் உப தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தபடி அரசாங்கத்தார் இந்த உத்திரவையாவது பிறப்பித்ததற்காகச் சிறிது சந்தோஷம் அடைகின்றோம். பாடப் புத்தகங்களை மாற்றும் அதிகாரத்தைக் கல்வி யதிகாரிகளுக்கு ஒப்பித்திருப்பதைப் புத்தக வியாபாரிகள் தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளுவார்கள் என்பது மறுக்க  முடியாததாகும். புத்தக வியாபாரிகள் தங்களுடைய பணத்தைக் கொண்டும், மேல் உத்தியோகஸ்தர் களின் சிபார்சுகளைக் கொண்டும், கட்சி செல்வாக்குகளைக் கொண்டும், 5 வருஷங்களுக்கு முன்னதாகவே ஏதோ நொண்டிச் சமாதானங்களைக் கொண்டு பாடப் புத்தகங்களை மாற்றச் செய்து தங்களுடைய புத்தகங்களை திணித்துக் கொள்ளை லாபம் சம்பாதிக்கவே முயற்சிப்பார்கள் என்பதிலும் இந்த முயற்சியில்...

எனது அறிக்கையின் விளக்கம்

எனது அறிக்கையின் விளக்கம்

  உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட “”நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும் இந்தியன் பினல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்ததாகும். அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜ துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரசாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத்தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாபீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீ. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள். இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மையான அளவுக்கு நானே...

சேலத்துக்கு என்ன பதில்  இது என்ன கத்தரிக்காய் பட்டணமா?

சேலத்துக்கு என்ன பதில் இது என்ன கத்தரிக்காய் பட்டணமா?

  இன்று பதவியில் உள்ள மந்திரிகள் சத்திய கீர்த்திகளாம், மகா யோக்கியர்களாம், தேசாபிமானத்துக்காகவும், மக்களுக்கு நன்மை செய்வதற்குமாகவே மந்திரி வேலை பார்க்கிறார்களாம். அவர்கள் தான் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாம். அதற்கு ஆதாரம் எலக்ஷனில் மெஜாரிட்டி ஓட்டுகளால் அவர்கள் வெற்றி பெற்றிருப்பதுதானாம். மற்றும் அவர்களுக்கு உதவியாய் அவர்களது கட்சியில் காங்கரசின் பேரால் இருக்கிற சட்டசபை மெம்பர்களும் காரியதரிசிகளும்கூட அவர்களைப் போலவே மகா யோக்கியர்களாம், உத்தமர்களாம், கண்ணியம் வாய்ந்த பெரிய மனிதர்களாம். ஆதலால் அவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் சரியானவைகளாம். அக்காரியங்களைப் பற்றி வேறு யாரும் ஆக்ஷேபணை சொல்லக்கூடாதாம். அப்படி மீறி யாராவது ஆக்ஷேபணையோ குறையோ சொல்லுகிறவர்கள் தேசபக்தர்கள் அல்லாதவர்களாம். தேசாபிமானம் இல்லாதவர்களாம். சுயநலக்காரர்களாம். அவ்வளவு மாத்திரம் அல்லாமல் யோக்கியர்கள் கூட அல்லவாம். கெட்ட எண்ணக்காரர்களாம். இவையும் இவை போன்றனவுமேதான் இன்றைய மந்திரிகள் முதல் அவர்களுடைய காரியதரிசிகள், கூலிகள், பத்திரிகைகள் முதலாகியவர்கள் வரை எல்லோர்களுடைய சகல செய்கைகளுக்கும் சமாதானமாக சொல்லப்பட்டு வருகின்றன. ~subhead பழைய...

ஜஸ்டிஸ் கட்சிக்குள் ஒற்றுமை

ஜஸ்டிஸ் கட்சிக்குள் ஒற்றுமை

  ஜஸ்டிஸ் ஜனநாயகக் கட்சியையும், ஜஸ்டிஸ் கட்சியையும் மீண்டும் ஒன்று சேர்க்க மும்முரமான முயற்சி நடைபெற்று வருகின்றன. 22.3.35 மாலை 2 மணிக்குக் கூடிய ஜஸ்டிஸ் கவுன்சில் கட்சி இவ்விஷயமாக யோசித்து ஓர் சமரசக் கமிட்டியை நியமிப்பதென்று தீர்மானித்து, ஜனநாயகக் கட்சியிலிருந்து 5 மெம்பர்களும், ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து 5 மெம்பர்களும் அக்கமிட்டியில் அங்கம் வகிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். குடி அரசு  பெட்டிச் செய்தி  24.03.1935

இந்தியாவைப் பற்றி பிரசாரம்

இந்தியாவைப் பற்றி பிரசாரம்

  அமெரிக்காவில் 15 வருஷங்கள் இருந்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பியிருக்கும் ஆசிரியர் டாக்டர் ஆங்கில்ஸேரியா இந்தியாவைப் பற்றி அமெரிக்காவில் படங்கள், நாடகங்கள், ரேடியோ, பொதுக் கூட்டம், பத்திரிகைக் கட்டுரைகள் முதலியவைகளின் மூலம் செய்யப்படும் பிரசாரத்தைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன் சாரம் வருமாறு@ “”இந்தியா பேசுகிறது” என்ற படம் 1933ம் வருஷம் மார்ச், ஏப்ரல் மாத வாக்கில் தயாரிக்கப்பட்டது. நானும் எனது நண்பர்களும் அதைப் பார்த்தோம். அமெரிக்க ஜனங்கள் இந்தியாவைப் பற்றி இழிவான அபிப்பிராயம் கொள்வதற்காகவே இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் அபிப்பிராயப்பட்டோம். உடனே நகரசபைக்குப் புகார் செய்து கொண்டோம். ஆனால் படத்தைத் தடை செய்யுமுன் ஒரு வாரம் காட்டப்பட்டுவிட்டது. வேண்டிய தீங்கு மிழைத்துவிட்டது. ஆகையால் இந்தப் படத்தை நான் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மற்றொரு வாரத்திற்குக் காண்பித்து காட்சியின் முடிவிலும் படம் எவ்வளவு பிற்போக்கானதென்பதைப் பற்றி ஒரு பிரசங்கம் செய்தேன். படம் தயாரித்தவர்கள் இந்திய விஷயங்களைப் பொய்ப் பிரசாரம் செய்திருக்கின்றனர்...

காங்கிரசின் வெற்றி

காங்கிரசின் வெற்றி

  பார்ப்பனர்கள் வெற்றி! ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பார்ப்பனரல்லாதார் வெற்றி!! அதிகாரத்துக்கு வந்துவிட்டால் உள்ள பதவிகளை இரு கட்சியாரும் அனுபவிப்பார்களே ஒழிய ஒருவரும் வேண்டியதில்லை என்று சொல்லி விடமாட்டார்கள்!!! ஆனால் காங்கிரஸ் ஆதிக்கத்திற்கு வந்தால் பதவி  உத்தியோகம் எல்லாம் பார்ப்பனர்களுக்கே போய் விடும். இதற்கு ஆதாரம் வேண்டு மானால் காங்கிரஸ் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் (ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்) உள்ள பதவிகளையும், உத்தியோகங்களையும் யார் அனுபவித்தார்கள் என்பதை உத்தியோக ஜாபிதாவை எடுத்துப் பாருங்கள். ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் பார்ப்பனரல்லாதார் பதவிக்கு வருவார்கள். உத்தியோகங்களும் கொஞ்சமாவது பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்குக் கிடைக்கும். பார்ப்பன சூழ்ச்சியில் பட்டால் அடியோடு பார்ப்பனரல்லாதார் சமூகமே பாழாய்ப் போய்விடும். குடி அரசு  பெட்டிச் செய்தி  24.03.1935

கோயிலுக்குள் போகலாம்

கோயிலுக்குள் போகலாம்

  திருச்செந்தூர் கோவில் பிரவேச வழக்கில் ஹைக்கோர்ட்டுத் தீர்ப்பு 19.3.35ல் நீதிபதிகள் ராமேசம், ஸ்டோன்ஸ் இருவர்களும் திருச்செந்தூர் ஆலயப் பிரவேச வழக்கில் தீர்ப்புக் கூறினார்கள். இந்த வழக்கு சட்ட சம்பந்தமான வியாக்கியானத்தைப் பற்றிய தகராறில் பிரிவி கௌன்சில் வரையில் போய் மறுபடியும் ஹைக்கோர்ட்டுக்கு வந்தது. இப்போது கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் “”எண்ணெய் வாணியர்” என்ற ஜாதியாருக்கு ஆலயப் பிரவேச உரிமை உண்டு. வழக்கின் வரலாறு திருச்செந்தூரிலுள்ள சில வாணியர்கள் தமது வகுப்பினருக்குப் பிரதிநிதிகள் என்ற ஹோதாவில் சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாக்களையும் ஸ்தலத்தார் என்று சொல்லப்படும் சில உரிமையாளரையும் பிரதிவாதிகளாக்கி, அந்த ஆலயத்தில் மற்ற மேல்ஜாதி ஹிந்துக்கள் போகும் இடம் வரையில் போய் தரிசனம் செய்யத் தமக்கு உரிமை உண்டென்று வழக்குத் தொடர்ந்தார்கள். முதலில் இது தூத்துக்குடி சப் கோர்ட்டில் நடந்தது. ஆ÷க்ஷபம் பிரதிவாதிகள் பின் வருமாறு தாவாச் செய்தார்கள். வெளிப் பிரகாரத்தில்கூட...

கிருஷ்ணசாமி  ஜீவானந்தம் விடுதலை

கிருஷ்ணசாமி  ஜீவானந்தம் விடுதலை

  நமது ஆசிரியர் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களின் மீதும் தோழர் பி. ஜீவானந்தம் அவர்கள் மீதும் தொடரப்பட்டு இருந்த ராஜத் துவேஷ வழக்கு முன் குறிப்பிட்டிருந்தபடி 18.3.35 ந் தேதியில் விசாரணை நடைபெறவில்லை. அன்று ஜில்லா மாஜிஸ்ரேட் அவர்கள் தான் இன்னும் வழக்கு சம்பந்தமான ரிக்கார்டுகள் முழுவதையும் படித்துப் பார்க்கவில்லை யென்று கூறி 23.3.35ந் தேதிக்கு வாயிதா போட்டிருந்தார். 23.3.35ந் தேதியில் தோழர்கள் ஈ.வெ. கிருஷ்ணசாமியும் ஜீவானந்தமும் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்ததனால் விடுதலை செய்யப்பட்டார்கள். அந்த ஸ்டேட்மெண்டில், “”நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்” என்று பகத்சிங்கினால் எழுதப்பட்ட கடிதம் லாகூரிலிருந்து வெளியாகும் “”பீபிள்ஸ்” பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்ததை அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்ட விஷயம் தங்களுக்குத் தெரியாதென்றும், ஆகவே அதை மொழி பெயர்த்ததும், அச்சிட்டுக் கொடுத்ததும் ராஜ துவேஷத்தை உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அல்ல வென்றும் அதற்காக மன்னித்துவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. குடி அரசு  செய்தித் துணுக்கு   24.03.1935

கராச்சி கலகத்திற்கு மதமே காரணம்

கராச்சி கலகத்திற்கு மதமே காரணம்

  இந்த வாரம் கராச்சியில் நடந்த கலகத்தைப் பற்றிய செய்தி முழுவதையும் தினசரிப் பத்திரிகைகளில் அநேகர் படித்திருக்கலாம். இக் கலகத்தினால் நிரபராதியான மக்களில் 40 பேர்கள் வரையில் போலீசார் சுட்டதன் பயனாக மாண்டதோடு சுமார் 100 பேர் வரையில் காயம் அடையும் படியும் நேர்ந்துவிட்டது. இது நேரடியான இந்து முஸ்லீம் கலகமில்லாமல் போலீசாருக்கும், முஸ்லீம்களுக்கும் உண்டான கலகமானாலும் இதற்குக் காரணம் இந்து முஸ்லீம் மதவெறி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. நாதுராம் என்னும் இந்து ஒருவர், முஸ்லீம் மார்க்கத்தைத் தூஷித்து எழுதியதற்காக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அவரை அப்துல்காயம் என்னும் முஸ்லீம் ஒருவர் நடுக்கோர்ட்டிலேயே கொலை செய்த குற்றத்துக்காக வேண்டி அப்துல் காயத்திற்குக் கோர்ட்டாரால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதுவே கலகத்திற்கு அடிப்படையான காரணமாகும். இதற்கு முன் பல தடவைகளில் வடநாட்டில் நடந்த கலகங்களுக்கு எல்லாம் மத சம்பந்தமே காரணமாக இருந்திருக்கிறது என்பதும்...

ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்  முனிசிபல் ஜில்லா போர்டு தேர்தல்

ஸ்தல ஸ்தாபனத் தேர்தல் முனிசிபல் ஜில்லா போர்டு தேர்தல்

  ஏப்ரல் மாதத்தில் ஸ்தல ஸ்தாபனம் என்னும் முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு ஆகியவைகளுக்கு தேர்தல் நடக்கப் போகின்றது. இத்தேர்தல்கள் சென்ற நவம்பர் மாதத்திலேயே நடந்திருக்க வேண்டியவைகளாகும். ஆனால் நவம்பரில் தேர்தல் நடத்துவதில் காங்கரஸ்காரர்களுக்கு சிறிது கஷ்டமிருந்தது. என்னவெனில் முனிசிபல் ஓட்டர்களாக அப்போது முனிசிபாலிட்டிக்கு வரி செலுத்துகின்றவர்கள் மாத்திரம் இருந்து வந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் பெரும்பாலோர் பார்ப்பனரல்லாதாராய் இருந்ததோடு சிறிது விஷயமறிந்த ஞானவான்களாகவும் இருந்தார்கள். அந்த ஓட்டர்களைக் கொண்டு தேர்தல் நடந்தால் பெரிதும் பார்ப்பனரல்லாதார்களும் அதுவும் முன் இருந்தவர்களில் பலருமே வருவார்கள் என்றும் அதனால் பார்ப்பனர்களோ பார்ப்பனக் கூலிகளோ வர முடியாமல் போய்விடுமென்றும் கருதி அது சமயம் நவம்பரில் நடக்க வேண்டிய தேர்தலை நிறுத்தி விட்டு பெரிதும் பாமர மக்களைக் கொண்ட (அசம்பிளி) மஞ்சள் பெட்டி ஓட்டர்கள் அத்தனை பேரையும் முனிசிபல் ஓட்டர்களாக ஆக்க ஒரு சூò செய்தார்கள். ~subhead சகல பார்ப்பனரும் ஓட்டர்கள் ~shend அப்படிச் செய்தும் பார்ப்பன மந்திரிகள்...

விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு

விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு

  விருதுநகரில் ராமநாதபுரம் ஜில்லா ஜஸ்டிஸ் முதலாவது மகாநாடு இம்மாதம் 30, 31ந் தேதிகளில் சென்னை திவான் பகதூர் எ.ராமசாமி முதலியார் அவர்கள் தலைமையில் கூடப் போகிறது. இந்த மகாநாடானது ஜஸ்டிஸ் கட்சிக்கு இந்திய சட்டசபைத் தேர்தலில் ஒரு பெரிய தோல்வி ஏற்பட்ட பிறகும் அதைக் காரணமாக வைத்து ஜஸ்டிஸ் கட்சியின் எதிரிகள் ஜஸ்டிஸ் கட்சியை அடியோடு ஒழித்துவிடச் செய்த சூழ்ச்சியாகிய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்துப் பெரியதொரு வெற்றி ஏற்பட்ட பின்னும், பொது ஜனங்கள் யாவரும் ஜஸ்டிஸ் கட்சியில் இனி என்ன நடக்கப் போகிறது பார்ப்போம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நிலையில், விருதுநகரில், முனிசிபல் சேர்மன் தோழர் வி.வி.ராமசாமி அவர்களுடைய பெரியதொரு முயற்சியில் அவரையே வரவேற்புத் தலைவராய்க் கொண்டு, முதல் முதலாக ராமநாதபுரம் ஜில்லா முதலாவது ஜஸ்டிஸ் மகாநாடாகக் கூடுகிறது. இது பெயருக்கு ஜில்லா மகாநாடு ஆனாலும் பெரியதொரு பொது மகாநாடு என்றே சொல்ல வேண்டும். ஆகவே இதை நாம் வரவேற்கிறோம்....

கொச்சி  பிரஜைகளுக்கு  ஜே!

கொச்சி  பிரஜைகளுக்கு  ஜே!

  சர். சண்முகம் நமது  இயக்கத்  தலைவராகிய  சர்.ஆர்.கே. சண்முகம்  ஓ.இ.ஐ.உ.  அவர்கள்  பார்ப்பன  விஷமத்தின்  பயனாய்  கொச்சி  திவானாக  நியமனம்  பெற்றிருப்பது  கேட்டு  மகிழ்ச்சியடைகிறோம். தெளிந்த  அரசியல்  ஞானமும்,  நிர்வாகத்  திறமையும், பேச்சு  வன்மையும்,  பொருளாதார  நிபுணத்துவமும்,  சமதர்ம  உணர்ச்சியும்  அமையப்பெற்றவர்களில்  நமது  சண்முகம்  அவர்களுக்கு  மேம்பட்டவர்  இந்தியாவில்  வேறு  எவரும்  இல்லை  யென்பது  நமது  விரோதிகளாலும்  மறுக்க  முடியாததாகும். ஒரு  மாகாணத்தின்  கவர்னர்  பதவியை  வகிக்கக்கூடிய  யோக்கியதையும்  திறமையும்  உடைய  அவர்  ஒரு  சமஸ்தானமாகிய  கொச்சிக்கு  திவானாக  ஆனது  பற்றிக்  கொச்சி  சமஸ்தானம்  சந்தோஷம்  அடைய  வேண்டுமே  ஒழிய  தோழர்  சண்முகமோ  நாமோ  ஒரு பெரிய  பாக்கியமாகக்  கருதி  சந்தோஷமடைவதற்கில்லை. ஆயினும்,  வைதீகம்  நிறைந்த  சமஸ்தானமாகிய  அதில்  பாழும்  வைதீகக்  கொடுமையில்  பரம்பரையாகக்  கஷ்டப்பட்டு  வரும்  ஏழை  மக்களுக்கும்,  தாழ்த்தப்பட்ட  மக்களுக்கும்,  தாராள  மனப்பான்மையும்,  சமரச  நோக்கமும்  உடைய  சர். சண்முகம்  அவர்களின்  ஆட்சி  காலத்தில்  விமோசனம்  ஏற்படக்கூடும் ...

ஆச்சாரியார் இந்திரஜாலம்!

ஆச்சாரியார் இந்திரஜாலம்!

  சேலம் தகராறு மறுக்கமுடியாத ருஜúக்கள் பொம்மைப் பிரதிநிதிகள் மெளனம்! சேலம் தண்ணீர்த் திட்டத் தகராறு விஷயமாக சுகாதார மந்திரி கனம் டாக்டர் ராஜன் சார்பில் பிரதம மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார் சென்னை அசம்பிளியில் கூறிய சமாதானம் வழக்கம் போல் மழுப்பல் சமாதானமாகவே இருக்கிறது. தகராறு பற்றிய பூரா விஷயங்களையும் அசம்பிளியில் விளக்கிக் கூறாமல் அவரது செயலுக்கு ஆதாரமாக விஷயங்களைத் திரித்துக் கூறுவது காங்கரஸ் ராஜ்ய தந்திர முறையானால் அந்த முறை ஆதரிக்கத்தக்கதா என்பதை சேலம் நகரத்தாரே முடிவு செய்ய வேண்டும். தண்ணீர் திட்டச் செலவு 24 லட்சம் ரூபாயில் 12 லக்ஷத்தைக் கடனாகவும் 12 லக்ஷத்தை மானியமாகவும் சர்க்கார் கொடுப்பதினால் தண்ணீர்த் திட்ட விஷயத்தில் சர்க்கார் அதிக கவலை செலுத்துவதை எவரும் ஆட்சேபிக்கவில்லை. தண்ணீர் திட்டத்துக்கு செலவாகும் 24 லக்ஷமும் பாழாகக் கூடாதென்னும் விஷயத்தில் சர்க்காருக்கு எவ்வளவு கவலையும் பொறுப்பும் உண்டோ அவ்வளவு கவலையும் பொறுப்பும் சேலம் நகரசபையாருக்கும் உண்டு....

நம்பிக்கையில்லாத் தீர்மானமும்  70000 ரூபாயும்

நம்பிக்கையில்லாத் தீர்மானமும் 70000 ரூபாயும்

  பார்ப்பன சூழ்ச்சிக்குச் சாவு மணி சென்னை ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் மூன்று மாத காலமாக தெருத் தெருவாய் திரிந்து அலைந்து கட்டாதவர்கள் கால்களையெல்லாம் கட்டியும், கெஞ்சாதவர்கள் கைகளை இழுத்தெல்லாம் கெஞ்சியும், தொடக்கூடாதவர்கள் என்று கருதியிருந்தவர்களின் கால் தூசிகளையெலாம் பஞ்சாட்சரமாக நெற்றியில் தானே அணியும்படி செய்தும், போடாத கரணமெல்லாம் போட்டும், செய்யக்கூடாத அயோக்கியத் தனங்களை எல்லாம் செய்தும், காசு பெறாத அயோக்கியர்களையெல்லாம் ஆப்த நண்பர்களாகக் கொண்டு அலைந்தும் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமானது கடைசியில் கொண்டு வந்தவர்களையே நாட்டுக்கும் மனித சமூகத்துக்கும் நம்பிக்கையில்லாதவர்களாக ஆக்கிவிட்டது. “குரங்கு தான் கெட்டதுமல்லாமல் வனத்தையும் கெடுத்தது’ என்று சொல்லும் பழமொழிபோல், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்த தோழர் முத்தைய செட்டியார், தான் கெட்டதுமல்லாமல் தோழர் சுப்பராயன் அவர்களையும் இழிவுபடுத்தி, அவருக்குக் கொஞ்சம் நஞ்சம் இருந்த மரியாதையையும் கெடுத்து...

பார்ப்பனர்கள் ஆரியர்களா? யூதர்களா? அவர்கள் யூதர்களே!  – ஒரு சந்தேகி

பார்ப்பனர்கள் ஆரியர்களா? யூதர்களா? அவர்கள் யூதர்களே! – ஒரு சந்தேகி

  பார்ப்பனர்களிடம் ஆரியர்கள் என்பதற்கு என்ன குணம் இருக்கிறது? எதைக்கொண்டு அவர்களை ஆரியர் என்பது? யூதர்களது புராதன பாஷையாகி எபிரேய பாஷையில் ” எல் ” என்பது கடவுள் என்ற அருத்தம் கொண்டதல்லவா? இயேசு (தெய்வ குமாரன்) மனுஷ குமாரனாக அவதரிப்பார் என்பது எபிரேய பாஷையில் எழுதப்பட்ட பழய ஏற்பாடு சொல்லுகிறதும் உலகம் அறிந்த விஷயமல்லவா? பழய ஏற்பாட்டின்படி ” ஜெஹோவா” பிரதானமான ஒரே கடவுளல்லவா? இந்து மதத்துக்கும் யூதர் நாகரீகத்துக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதிலிருந்து இந்து மதத்தின் ஆதீனக்காரர்களான பார்ப்பனர் யூதர்கள் தான் என்று யூகிக்க இடமில்லையா? எருசலேம் தேவாலயமும் இந்து கோவில்களும் சுற்றுப்பிரகாரம், தெப்பக்குளம், கொடிமரம், மண்டபம் , மூலஸ்தானம், தூபம், பூசை முதலிய விஷயங்களில் ஒன்றுபட்டிருக்கிறது. பாலஸ்தீன நாட்டில் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. இந்தியாவிலும் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. ஆகையால் இவ்வழக்கம் அங்கிருந்து தானே வந்திருக்கவேண்டும்? யூதர்களின் ஜிஹோவா...

கஷ்டமான பிரச்சினை  – சித்திரபுத்திரன்

கஷ்டமான பிரச்சினை – சித்திரபுத்திரன்

  மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை ஆ-ன்: மதங்கள் கடவுள்களால் உண்டாக்கப்பட்டவை. ப-தி: அல்ல அவை மனிதர்களால் உண்டாக்கியவை. ஆ-ன்: ஏன் அப்படிச் சொல்லுகிறாய். ப-தி: மதங்கள் எத்தனை உண்டு? ஆ-ன்: பல மதங்கள் உண்டு. ப-தி: உதாரணமாக சிலது சொல்லும். ஆ-ன்: எடுத்துக்காட்டாக இந்து மதம், புத்த மதம், கிறிஸ்து மதம், முகமது மதம், சீக்மதம், பார்சி மதம், ஜொராஷ்ட்டிர மதம் முதலியவைகளும் இவற்றில் பல உட்பிரிவுகளும் உண்டு. ப-தி: கடவுள்கள் எத்தனை உண்டு. ஆ-ன்: ஒரே கடவுள்தான் உண்டு. ப-தி: இவ்வளவு மதங்களும் யாருக்காக உண்டாக்கப்பட்டவை. ஆஸ்திகன்: மனித வர்க்கத்துக்காகத்தான். ப-தி: மதத்தால் ஏற்படும் பயன் என்ன! ஆ-ன்: மனிதன், கடவுளை அறியவும், கடவுளுக்கும், தனக்கும் சம்மந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும் கடவுள் கருணைக்கு பாத்திரனாகவும் பயன்படுவதாகும். ப-தி: அப்படியானால் ஒரே கடவுள் மனித வர்க்கத்துக்கு இத்தனை மதங்களை ஏற்படுத்துவானேன். ஆ-ன்: அது மிகவும் சிரமமான கேள்வியாக...

பெண்கள்  நாடு

பெண்கள்  நாடு

  ஆண்களுக்கு  வேலையில்லை பாலித்தீவு  என்பது  கிழக்கிந்திய  தீவுகளில்  ஒன்றாகும்.  அந்த  நாட்டின்  நடவடிக்கை  மிகவும்  ஆச்சரியப்படத்தக்கதாகும்.  பெண்கள்  எந்த  வேலைக்கும்  லாயக்கற்றவர்கள்;  சமையல்  செய்வதற்கும்,  பிள்ளை  பெறுவதற்கும்  தான்  லாயக்கானவர்கள்  என்று  எண்ணிக்  கொண்டிருக்கும்  முழு  மூடர்களுக்கு  வெட்கத்தை  யுண்டாக்கத்தக்க  நாடாகும். அந்தத்  தீவில்,  பெண்மக்களுக்கே  எல்லாச்  சுதந்திரமும்  இருந்து  வருகிறது.  நம்  நாட்டில்  ஆண்  மக்களுக்கு  இருக்கின்ற  எல்லா  உரிமையும்  அந்நாட்டில்  பெண்  மக்களுக்கு  இருக்கின்றது. அத்தீவில்,  வயலில்  கலப்பை  பிடித்து  உழுவதும்  பெண்மக்கள்.  பிறர்  வயல்களில்  பண்ணையாளாக  இருந்து  வேலை  செய்வதும்  பெண்மக்கள்.  இவ்வாறு பயிர்த்தொழில் வேலை முழுவதையும் பெண்மக்களே செய்கிறார்கள். தானியங்களைச்  சந்தைகளுக்கு  எடுத்துக்  கொண்டுபோய்  விற்பனை  செய்து அதன் மூலம் வரும் பணத்தை வரவு செலவு செய்வதும் பெண்மக்கள்தான்.  இந்த  வேலைகளுடன்,  புருஷன்  மார்களையும்,  குழந்தைமார்களையும்  வைத்துப்  பாதுகாத்து  வருகின்ற  வேலையையும்  பெண்மக்களே  செய்து  வருகிறார்கள். இன்னும் தென்னைமரம் ஏறுதல், சந்தைகளிலும் கடைகளிலும்  வியாபாரம் ...

வைசு. ஷண்முகம் உண்ணாவிரதம்

வைசு. ஷண்முகம் உண்ணாவிரதம்

  கானாடுகாத்தான் தோழர் வைசு. ஷண்முகம் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருவதன் நோக்கம், தனது கடன்காரர்கள் எல்லோருக்கும் நஷ்டமில்லாமல் ரூபாய் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இன்சால்வெண்டாவதால் தனக்குக் கஷ்டமும் நஷ்டமும் உண்டாகிறது; கடன்காரர்களுக்கும் கஷ்டமும் நஷ்டமும் உண்டாகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும்தான் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறோம். அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்து சுமார் 16 தினங்களாகியும் அவருடைய ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்துச் செய்ய வேண்டிய கடன்காரர்கள் வீணாகத் தவணை கூறிக் காலதாமதம் செய்து கொண்டே வருகிறார்கள். தோழர் ஷண்முகத்தின் நண்பர்களும், உறவினர்களும், கடன்காரர்களின் கையெழுத்து வாங்குவதற்கு எவ்வளவோ முயற்சித்தும் இன்னும் முழுதும் முடிந்தபாடில்லை. தோழர் ஷண்முகம் எந்த நோக்கத்தோடு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்ற உண்மையைக் கடன்காரர்கள் இன்னும் உணரவில்லை. அவர்கள் இதை உணராமல் இருக்கும்படி செய்வதற்காகவே சிலரால் சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. கடன்காரர்கள் உண்மையை உணர்வார்களானால் ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்திடப் பின் தாங்க மாட்டார்கள்....

மதுரை ஜில்லா 2-வது சுயமரியாதை மகாநாடு  வெங்கிடுசாமி படத்திறப்பு விழா

மதுரை ஜில்லா 2-வது சுயமரியாதை மகாநாடு வெங்கிடுசாமி படத்திறப்பு விழா

  தலைவர் அவர்களே! தோழர்களே! இன்று இம்மகாநாட்டில் காலஞ்சென்ற நமது தோழர் வெங்கிடுசாமி அவர்கள் உருவப்படத்தைத் திறந்து வைக்கும் பணியாற்றுவதை நான் ஒரு மகிழ்ச்சியின் காரியமாகவே கொள்கிறேன். இந்தச் சமயத்தில் இப்பணியைச் செய்யும் யாரும் திறந்து வைக்கப்படும் உருவத்தினரைப் பற்றி சில வார்த்தைகள் கூறுவது இயல்பேயாகும். தோழர் வெங்கிடசாமி அவர்கள் இவ்வூர் வாசி. அவரைப்பற்றி இவ்வூர் வாசிகளாகக் கூடியிருக்கும் இப்பெரிய கூட்டத்திற்கு உங்களுக்குத் தெரியாத எதை நான் கூறப் போகிறேன். நான் ஏதாவது சொல்லுவது என்பது “அப்பன் வீட்டுப் பெருமையை அண்ணனுக்கு தங்கை எடுத்துச் சொல்ல முயற்சித்தது போல” தான் முடியும் என்றாலும் நான் இது சமயத்தில் தோழர் வெங்கிடுசாமியைப் பற்றி மாத்திரம் அல்லாமல் இம் மாதிரியான படத்திறப்பு விழா முதலியது போன்ற காரியங்களை நாம் ஏன் செய்கிறோம் என்பதைப் பற்றியும் சிறிது கூற ஆசைப்படுகிறேன். ஏனெனில் இம் மாதிரி மகாநாடுகளில் நாம் அடிக்கடி பல பெரியார்களது படத்திறப்பு விழா நடத்துகிறோம்....

அன்னிய அரிசிக்குத் தடையா?

அன்னிய அரிசிக்குத் தடையா?

  தோழர்களே! இந்திய சட்டசபையில் அன்னிய அரிசிக்கு வரி விதிக்க வேண்டு மென்று தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. அதைப் பற்றி பொது ஜனங்கட்கு கூற வேண்டுமென்றும், அதனால் ஏழைகட்கு ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி எடுத்துக் கூறி அன்னிய அரிசிக்கு வரி விதிக்கக் கூடாதென்றும் இது போன்ற சங்கங்களால் தீர்மானங்கள் செய்து சர்க்காருக்கு அனுப்ப வேண்டு மென்றும் குடிஅரசில் இதற்கு முன் எழுதப்பட்டிருந்தன. அதன்படியே கோவை, திருச்சி, சென்னை முதலிய பல இடங்களில் தொழிலாளர்களால் அன்னிய அரிசிக்கு வரி விதித்தால் எங்கட்கு மிகுந்த கஷ்டமேற்படும் என்று தீர்மானித்து அரசாங்கத்தாருக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஏழை மக்களை உத்தேசித்து வேண்டுமென்றேதான் அரசாங்கத்தார் அன்னிய அரிசிக்கு வரி விதிக்க முன்வரவில்லை. ஆனால் நமது பிரதிநிதிகளாக இந்திய சட்டசபைக்குச் சென்றிருப்பவர்கள் தான் அதற்குக் கவலை எடுத்துக் கொண்டு வரிவிதிக்க வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதை நாம் கண்டிக்க வேண்டாமா? நமது உண்மையான நிலையை சர்க்காருக்கு எடுத்துக்காட்ட வேண்டாமா? இதை இப்படியே...

இது தர்மம் ஆகுமா?

இது தர்மம் ஆகுமா?

  இப்படிப்பட்ட ஹிந்து மதம் யாருக்கு நன்மை தரும்? “”மநு தர்ம சாஸ்திரம்” என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அநுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டதிட்டங் களால் அநுசரிக்கப்பட்டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும், எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்து கொள்ளுவது அவசியமாகும். ஆதி திராவிட சமூகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தார்கள் வரை இந்த மநுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்ட திட்டங்கள் அமைந்துள்ள “”இந்து” மதத்திலேயே அடிமைப்பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மநுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம். “பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி...

பார்ப்பனரும் வகுப்புவாதமும்

பார்ப்பனரும் வகுப்புவாதமும்

  நமது காங்கரஸ் (பார்ப்பன) பத்திரிக்கைகளுக்கு வகுப்புவாதம் கிடையாது. வகுப்பு துவேஷமும் கிடையாது என்பதற்கு உங்களுக்கு உதாரணம் கூறவேண்டுமானால் சொல்லுகிறேன் கேளுங்கள். இந்து, சுதேசமித்திரன் பத்திரிகைகள் கொச்சி திவான் சர். ஷண்முகத்தையும், மைசூர் திவான் சர். மிர்சா இஸ்மாயிலையும் தான் கண்டிக்குமே தவிர, திருவனந்தபுரம் திவான் சர்.வி.டி.கிருஷ்ணமாச்சாரியையும், காஷ்மீர் திவான் கோபாலசாமி அய்யங்காரையும் கொஞ்சங் கூட கண்டிக்காது. அவர்கள் சொந்த முறையில் கூட எவ்வளவு கெடுதலாய் நடந்து கொண்டாலும் அவர்களைப் பற்றி ஒன்றுமே பேசாது. அன்றியும், கொச்சி, மைசூர் இரண்டிலும்தான் காங்கரஸ்காரர்கள் தொல்லை விளைவிப்பார்களே தவிர மற்ற அய்யர், ஆச்சாரி, அய்யங்கார் திவானாயுள்ள இடங்களில் சிறிதும் தலைகாட்டாது. ஏனென்றால் பார்ப்பனருக்கு வகுப்புவாதம் கிடையாதல்லவா? எந்த வகுப்புவாதம் என்றால் பார்ப்பனருக்குள் அய்யர், அய்யங்கார், ஆச்சாரி, ராவு, ராயர், சர்மா, ஜடாவல்லபர், தீக்ஷதர், ஸரெளத்திரி முதலிய எந்த வகுப்பு ஜாதியாரானாலும் அவர்களுக்குள் மாத்திரம் வகுப்புவாதம் என்பது சிறிதுகூட கிடையவே கிடையாது. ஆனால் இவர்கள் அல்லாத...

வரவேற்கிறோம்  கொலையை வரவேற்கிறோம்

வரவேற்கிறோம் கொலையை வரவேற்கிறோம்

  சென்னை காங்கரஸ் கூலி கேடிப் பத்திரிகை ஒன்று தனது மார்ச் 10-ந் தேதி பத்திரிகையில் சுயமரியாதைக் கட்சியின் மீது அபாண்டமாக முழுப்பொய்யான விஷயங்களைக் கற்பித்து எழுதி அதை ஒரு சாக்காக பயன்படுத்திக் கொண்டு “தற்காப்புக்காக கொலை செய்யலாம் அது குற்றமாகாது” என்று மக்களைக் கொலை செய்யத் தூண்டிவிட்டு மக்களுக்கு மேலும் தைரியம் வரும்படியாக “கொலை செய்தவர்கள் சர்க்காரால் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்” என்று ஏதோ ஒரு கோர்ட் ஜட்ஜிமெண்டையும் எடுத்துக்காட்டி தூண்டிவிட்டிருக்கிறது. இதைப்பற்றி சிறிதும் நாம் கவலைப்படவில்லை. உண்மையிலேயே அப்படிப்பட்ட நிலைமையை வரவேற்கிறோம். இந்த நாட்டில் உள்ள சுயமரியாதைக்காரர்களில் 10 பேர்களோ, அல்லது 20 பேர்களோ அல்லது 100 பேர்களோ தான் இந்த தூண்டுதலால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இதனால் சுயமரியாதைக்காரர்கள் எண்ணிக்கை குறைந்து விடுமென்றோ, சுயமரியாதைக்காரர்களது உணர்ச்சி மாறி தங்கள் தொண்டில் அடங்கிவிடுவார்கள் என்றோ நாம் சிறிதும் கருதவில்லை. மற்றும் அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படுவது எது வெற்றி...

மடங்களுக்கு ஆபத்தா?

மடங்களுக்கு ஆபத்தா?

  சுயநலக்காரர்களின் எதிர்ப்பு நமது நாட்டில் சமயங்களைப் பாதுகாப்பதற்கு என்னும் பெயரோடு உள்ள மடங்களைப் பற்றியும், அந்த மடங்களின் அதிபர்களாக இருக்கின்ற ஆச்சாரியார்கள், தம்பிரான்கள், ஜீயர்கள் போன்ற அதிபதிகளைப் பற்றியும், அவர்கள் தங்களுடைய ஆதிக்கத்தில் இருக்கும் சொத்துக்களை எந்தெந்தக் காரியங்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள் என்பதைப் பற்றியும், அவர்கள் மதத்தின் பெயரால் தங்களுக்கு இருக்கும் செல்வாக்குகளை எந்தெந்த சுயநலமுள்ள காரியங்களுக்காகத் துஷ்பிரயோகம் பண்ணி வருகிறார்கள் என்பதைப் பற்றியும் நாம் அதிகமாக எடுத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறோம். இன்று, இந்த மடங்களும், அவற்றின் பணமும், செல்வாக்கும், நமது நாட்டில், சாதிச் சண்டைகளையும், மதச் சண்டைகளையும் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் இன்னும் பல மடங்கு அதிகமாக வளர்த்துப் பலப்படுத்தவே உபயோகப்படுகின்றன. இந்தச் சண்டைகளைப் பலப்படுத்துவதன் மூலம் தங்களை உயர்ந்த சாதியினராகவும், உயர்ந்த மத ஒழுக்கமுடையவராகவும் பாமரர்களாகிய பொதுஜனங்களுக்குக் காட்டி, அவர்கள் ஏமாறும்படி செய்து பணம் பறித்து வாழ்கின்ற பார்ப்பனர்களுக்கு இன்னும் செல்வாக்கையும்,...

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம்

  தோழர் ஈ.வே. ராமசாமி அறிக்கை சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் சமுதாய சம்மந்தமான கொள்கைகளின் எதிரிகளால் கிளப்பிவிடப்பட்ட பலவிதமான கற்பனைச் சேதிகளாலும் விஷமப் பிரசாரங்களாலும் பொது மக்களுக்குள் சில தப்பு அபிப்பிராயங்கள் பரவி வருவதாகத் தெரிகின்றது. இதைப்பற்றி பல சமயங்களில் நாம் பொது ஜனங்களுக்கு விளக்கி இருந்தும் சில பகுதிகளில் அவ்வித தப்பு அபிப்பிராயங்கள் மாறியதாகத் தெரியவில்லை. ஆதலால் முன்பு விளக்கியவைகளையே மறுபடியும் விளக்க வேண்டியிருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான கருத்தெல்லாம் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும், ஏழை மக்களுக்கும் நன்மை செய்வதற்கு உழைப்பதேயாகும். அதாவது அவர்களை தற்போது இருக்கும் கஷ்டமான நிலையிலிருந்து விடுவித்து சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் சமத்துவமாக வாழச் செய்ய வேண்டும் என்பதே. இந்தக் கருத்து வெற்றி பெற வேண்டுமானால் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல் ஆகிய மூன்று துறைகளிலும் கவலை எடுத்து உழைத்து வந்தாலொழிய பயனேற்படாது. ஆதலால், சுயமரியாதை இயக்கமானது முக்கியமாய் இத்...

பார்ப்பனர் சூழ்ச்சி  சாமிநாதய்யர் ஜெயசிந்தி

பார்ப்பனர் சூழ்ச்சி சாமிநாதய்யர் ஜெயசிந்தி

  ஜாதி அகங்காரத்திலும், தாங்கள் தான் எல்லோரையும்விட புத்திசாலிகள் என்னும் ஆணவத்திலும், தாங்கள் தான் எந்தக் காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிக்கக் கூடியவர்கள் என்கின்ற மமதையிலும் பார்ப்பனர்களுக்கு ஈடாக யாரும் இல்லை என்பது நாம் வெகுகாலமாக அநுபவத்தில் அறிந்து பொது ஜனங்களுக்குக் கூறி வரும் விஷயமாகும். இந்த அகங்கார புத்தி கொண்டே பார்ப்பனர்கள் இன்று அரசியல் துறை, சமுதாயத் துறை, சமயத் துறை, பாஷைத் துறை, சங்கீதத் துறை, நாடகத் துறை, வைத்தியத் துறை, பத்திரிகைத் துறை, உத்தியோகத் துறை, வியாபாரத் துறை, காப்பி கிளப்புத் துறை ஆகிய எல்லாத் துறைகளிலும் புகுந்து அவைகளில் பார்ப்பனரல்லாதாரை முன்னேற விடாமல் அமிழ்த்தி வருகிறார்கள். இவ்வுண்மை பார்ப்பனர்களாலும், பார்ப்பனர்களின் செல்வாக்காலும் நடத்தப்படும் பத்திரிகைகளில் இன்று நடைபெறும் கட்டுப்பாடான பிரசாரத்தைக் கவனித்து வரும் சுயமரியாதையும், ரோஷமும், பகுத்தறிவும் உள்ள பார்ப்பனரல்லாதார்க்கு விளங்காமற் போகாது. உதாரணமாக, அரசியல் துறையை எடுத்துக் கொண்டால் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி சாஸ்திரியார்,...

சாரதா சட்டம்  பலன் தர வேண்டுமானால்?

சாரதா சட்டம் பலன் தர வேண்டுமானால்?

    பெண்களை இளம் வயதில் மணம் செய்து கொடுக்கும் இந்துக்களின், அறிவீனமான கொடுமையான செய்கையைத் தடுப்பதற்காகச் சீர்திருத்த வாதியாகிய ஹரிவிலாச சாரதா அவர்களால் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டிருக்கும் பால்ய விவாகத்தடைச் சட்டம் தற்சமயம் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமலே இருந்து வருகிறது என்பதை நாம் பல தடவைகளில் குறிப்பிட்டிருக்கிறோம். அச்சட்டத்தை நிறைவேற்ற இந்திய சீர்திருத்தக்காரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் தோழர் காந்தியார், காலஞ்சென்ற பண்டித மோதிலால் நேரு முதலிய காங்கிரஸ்வாதிகளாகிய வைதீகர்களால்கூட பலமாக ஆதரிக்கப்பட்டும், பொது ஜனங்களின் அபிப்பிராயந் தெரிவதற்கென லெட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து சுற்றுப்பிராயணக் கமிட்டி நியமித்து விசாரணை செய்தும், கடைசியில் உயிரற்ற ஒரு வெறுஞ் சட்டமாகவே நிறைவேறியது. அச் சட்டத்தின்படி தொடுக்கப்படும் வழக்குகளில்கூட வைதீகர்களின் எதிர்ப்புக்கு அஞ்சியோ, அல்லது அரசாங்கத்தின் அலட்சிய புத்தியினாலோ, சாரதா சட்டத்தை மதிக்காதவர்கள் பயப்படுவதற்கு வழியில்லாத மிகச் சாதாரணமான அபராதமும், தண்டனைகளுமே கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் வைதீகர்கள், சாரதா சட்டத்தைச் சிறிதும் லட்சியம் பண்ணாமல்,...

வெற்றியின்  யோக்கியதை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமா?

வெற்றியின்  யோக்கியதை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமா?

    இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்து விட்டதைப் பற்றி இந்தியா பூராவிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடந்தன. அது மாத்திரமல்லாமல் வெற்றி பெற்ற காங்கிரஸ் வீரர்கள் இந்திய சட்டசபையில் செய்த  செய்கின்ற வேலைகளோ “”சர்க்காருக்குத் தோல்விக்குமேல் தோல்வியும் காங்கிரசுக்கு வெற்றிக்கு மேல் வெற்றியும்” என்பதாக பிலாக் கொட்டை போன்ற எழுத்தில் போட்டு பத்திரிகைகள் பக்கங்களை நிரப்புகின்றன. இதன் பயன் என்ன என்று பார்த்தால் அரிசிக்கு விலை ஏற்ற வேண்டும். அதற்காக அயல் நாட்டிலிருந்து வரும் நெல்லுக்கும் அரிசிக்கும் நொய்க் குருணைக்கும் வரி போட வேண்டும் என்று சாக்காரைக் கெஞ்சுவதும் தான் வெகு தடபுடலாக அடிபடுகின்றதே ஒழிய மற்றபடியான காரியம் என்ன என்று பார்த்தால் பெரியதொரு சைபர் தான். “”சர்க்கார் தோல்வியடைந்தார்கள்” என்பதனால் ஒரு காதொடிந்த ஊசியளவு பயனாவது மக்களுக்கு ஏற்படும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா? அல்லது வாயினாலாவது சொல்ல முடியுமா? என்று பார்த்தால் அதுவும் ஒன்றுமில்லை என்று தான்...

கண்ட்ராக்ட்டு ராஜ்யம்

கண்ட்ராக்ட்டு ராஜ்யம்

  காங்கரஸ்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களிலே, நுழைந்த காலத்திலே, அங்கு கண்டிராக்ட் ராஜ்யம் நடப்பதாகவும் பொதுமக்களின் பணம் கொள்ளை போவதாகவும், நகரசபை, ஜில்லா போர்டுகளிலிருந்து கொண்டு உற்றார் உறவினருக்கு கண்டிராக்ட் வாங்கித்தருவதாகவும், லஞ்ச லாவணம் தாண்டவமாடி நிர்வாகமே சீர்குலைந்து நாறுவதாகவும், இடிமுழக்கம் செய்தார்கள். நமது மக்களும் ஆச்சரியத்துடன் வாயைப் பிளந்து கொண்டு, காங்கரசாரின் பேச்சைக் கேட்டு, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர் சிருஷ்டித்த சதியாலோசனையில் பங்கெடுத்துக் கொண்டனர். காங்கரஸ்வாதிகள் தாங்கள் முனிசிபாலிட்டி, ஜில்லாபோர்டு முதலிய இடங்களைக் கைப்பற்றினால் கண்டிராக்ட்டு ராஜ்யத்தை ஒழித்து அவைகளைப் பரிசுத்தப்படுத்தப் போவதாகவும் சொன்னார்கள். நமது மக்களும் அதனை நம்பி காங்கரஸ்காரர்களிடம் ஸ்தல ஸ்தாபனங்களை ஒப்படைத்தனர். பிறகு நடந்ததென்ன? யார் கண்டிராக்ட்டு ராஜ்யமென்ற வீண்கூச்சலைக் கிளப்பினார்களோ அவர்களே கண்டிராக்ட்டு ராஜ்யத்தின் கர்த்தாக்களானார்கள்! யார் ஊழலை ஒழிப்போம் என்ற பித்தலாட்டப் பேச்சுப் பேசி ஓட்டுகளைப் பறித்தார்களோ அவர்களே ஒருவர் சிண்டை மற்றொருவர் பற்றிக் கொண்டு “நீ அயோக்கியன், நீதான் அயோக்கியன்” என்று...

வைசு. ஷண்முகம் பட்டினி விரதம்

வைசு. ஷண்முகம் பட்டினி விரதம்

  கானாடுகாத்தான் தோழர் வைசு. ஷண்முகம் அவர்களை நமது தோழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. அவர் நாட்டுக்கோட்டை நகரத்து வகுப்பைச் சேர்ந்தவர். இந்நாட்டில் காந்தி கிளர்ச்சி கிளம்புவதற்கு முன்பாகவே அதாவது சுமார் 20 வருஷத்திற்கு முன்பே செட்டிநாட்டில் சமூக சீர்திருத்தம் என்னும் பேரால் ஒரு பெருங் கிளர்ச்சியை கிளப்பி விட்டு அதில் முனைந்து வேலை செய்து கொண்டிருந்த இளம் வாலிபர்களில் தோழர் வைசு. ஷண்முகம் முதன்மை யானவரும், முக்கியமானவருமாய் இருந்தவர். அவரது முயற்சியாலும் அவரது தோழர்களது முயற்சியாலும் செட்டிநாட்டில் சமூகத் துறையில் ஓரளவு சீர்திருத்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதோடு இன்று அச்சமூகத்தில் கலப்பு விவாகம், விதவைகளை மணத்தல், கல்யாண ரத்து விவாகம், பெண்கள் விவாக விஷயத்தில் தங்கள் பெற்றோருக்கு அடிமையாகாமல் தங்கள் இஷ்டப்படி கணவர்களைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுதல், இஷ்டப்படாத கணவரிடம் இருந்து பிரிந்து விடுதல் ஆகிய  காரியங்கள் ஏற்பட்டதும், ஆடம்பரச் செலவுகள் குறைக்கப்பட்டு சிக்கனங்கள் கையாடும் மனப்பான்மை ஏற்பட்டதும், லட்சம் 10 லட்சக் கணக்கில்...

“பார்ப்பன பாம்புக்கு தேசீயப் பால்!”

“பார்ப்பன பாம்புக்கு தேசீயப் பால்!”

  தலைவரவர்களே! தோழர்களே! தாங்கள் அன்புடன் வாசித்தளித்த உபசாரப் பத்திரத்திற்கு நான் எனது மனப்பூர்வமான நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன். ~subhead என் வாழ்க்கை லட்சியம் ~shend தங்கள் வரவேற்புப் பத்திரத்தில் கூறியுள்ள அளவு தீண்டாமை ஒழிவதற்கு நான் ஒன்றும் அவ்வளவு பாடுபட்டு விடவில்லை என்றாலும் எனது வாழ்நாள் லòயத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டுமென்பது முக்கியமான பாகமாகும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கேற்ப ஏதோ ஒரு அளவு பாடுபட்டேன் – பாடுபடுகிறேன் என்பதும் உண்மையே. நான் சிறை சென்ற பல தடவைகளில் தீண்டாமைக்காகவென்றும் 2,3 முறை நான் சிறை சென்றிருப்பதும் உண்மைதான். ஆனால், அவை அவ்வளவும் ஆதி திராவிட மக்கள், பள்ளர், பறையர், சக்கிலிகள் என்று இழிவாய்க் கருதப்படுகின்ற உங்களுக்காகவே அல்ல என்பதையும், உங்களைவிட சிறிது வித்தியாசத்தில் சற்று மேலான ஜாதி என்று கருதப்படுகின்ற எங்கள் ஜாதி என்பதைப் பொருத்துள்ள தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற சுயவகுப்பு நலத்தையும் முன்னிட்டே...

காங்கிரஸ் ஒழிந்து விட்டதா?

காங்கிரஸ் ஒழிந்து விட்டதா?

  ஏன் அபேட்சகரை நிறுத்தவில்லை ஜஸ்டிஸ் கட்சியில் காலியான இரண்டொரு சென்னை சட்டசபை ஸ்தானங்களுக்கு அபேட்சகரை நிறுத்தாததால் ஜஸ்டிஸ் கட்சி ஒழிந்து போய் விட்டதென்றும் அதற்கு நாட்டில் சிறிதும் செல்வாக்கில்லை என்றும் காங்கிரஸ்காரர்களும் காங்கிரசின் பேரால் வாழும் பத்திரிகைகளும் செய்த விஷமப் பிரசாரத்துக்கு எல்லை இல்லை. சில பாமர மக்கள் இதை நம்பிக் கொண்டும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். அப்பொழுது “பகுத்தறிவு’ அதற்குத் தக்க பதில் புள்ளி விபரத்தோடு எழுதியிருந்தது. ஐயோ பாவம்! இந்த விஷமப் பிரசாரம் நடந்து 8 நாள் கூட ஆகவில்லை. இப்போது காங்கிரஸ் ஒழிந்து விட்டதா? நாட்டில் காங்கிரசுக்கு செல்வாக்கு இருக்கிறதா? என்று கேட்கக் கூடிய காலம் வந்துவிட்டது. என்னவென்றால் சமீபத்தில் காலியாகும் சென்னை நகரசபை ஸ்தானங்களுக்கு காங்கிரஸ் அபேட்சகர்களை நிறுத்துவதில்லை என்று தீர்மானம் செய்துவிட்டதாம். இது எல்லா பார்ப்பனப் பத்திரிகைகளிலும் காணப்படுகிறது. ஆகவே எந்த ஸ்தாபனமும் சமய சந்தர்ப்பம் சௌகரியம் ஆகியவை களை கவனித்துத்...