திருச்சி நீதி
டாக்டர் ராஜன் திருச்சி காங்கிரஸ் காரியக்கமிட்டியில் இருந்து விலகி காங்கிரசுக்கு எதிராய் முனிசிபல் தேர்தலுக்கு நின்றவர். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆக தனக்கு இஷ்டமில்லாத நிலையில் தன் மனச்சாட்சிக்கு விரோதமாய் காங்கிரசில் போலிக் கையெழுத்துப்போட்டு முனிசிபல் கவுன்சிலரானவர். இப்படிப்பட்ட இவருக்கு காங்கிரஸ் காரியக்கமிட்டியைப் பற்றி பேச என்ன நியாயம் உண்டு என்பது நமக்கு விளங்கவில்லை. நிற்க, டாக்டர் ராஜனுக்கும் தோழர் தேவருக்கும் ஏற்கனவே சொந்த மனஸ்தாபம் இருப்பதாய் சேர்மென் தோழர் பொன்னய்யா அவர்களே தனது பேச்சில் சொல்லியிருக்கிறார். எனவே டாக்டர் ராஜன் தேவரிடம் உள்ள தனது சொந்த விரோதத்துக்கு ஆக பழி தீர்த்துக்கொள்ள காங்கிரசுக்குள் தேர்தலின்போது கையெழுத்துப் போட்டு வந்து புகுந்ததுமல்லாமல் முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் உள்ள வகுப்பு மாச்சரியத்தை (அதுவும் கொஞ்ச காலமாக மறைந்து போயிருந்ததை) கிளப்பிவிட்டு கிறிஸ்தவர்களையும் கிளப்பிவிட்டு பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து முனிசிபல் தேர்தலில் தேவரை பழிதீர்த்துக் கொண்டிருக்கிறார். ஆகவே பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆகவோ ஒருவரை...