Author: admin

திருச்சி நீதி

திருச்சி நீதி

டாக்டர் ராஜன் திருச்சி காங்கிரஸ் காரியக்கமிட்டியில் இருந்து விலகி காங்கிரசுக்கு எதிராய் முனிசிபல் தேர்தலுக்கு நின்றவர். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆக தனக்கு இஷ்டமில்லாத நிலையில் தன் மனச்சாட்சிக்கு விரோதமாய் காங்கிரசில் போலிக் கையெழுத்துப்போட்டு முனிசிபல் கவுன்சிலரானவர். இப்படிப்பட்ட இவருக்கு காங்கிரஸ் காரியக்கமிட்டியைப் பற்றி பேச என்ன நியாயம் உண்டு என்பது நமக்கு விளங்கவில்லை. நிற்க, டாக்டர் ராஜனுக்கும் தோழர் தேவருக்கும் ஏற்கனவே சொந்த மனஸ்தாபம் இருப்பதாய் சேர்மென் தோழர் பொன்னய்யா அவர்களே தனது பேச்சில் சொல்லியிருக்கிறார். எனவே டாக்டர் ராஜன் தேவரிடம் உள்ள தனது சொந்த விரோதத்துக்கு ஆக பழி தீர்த்துக்கொள்ள காங்கிரசுக்குள் தேர்தலின்போது கையெழுத்துப் போட்டு வந்து புகுந்ததுமல்லாமல் முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் உள்ள வகுப்பு மாச்சரியத்தை (அதுவும் கொஞ்ச காலமாக மறைந்து போயிருந்ததை) கிளப்பிவிட்டு கிறிஸ்தவர்களையும் கிளப்பிவிட்டு பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து முனிசிபல் தேர்தலில் தேவரை பழிதீர்த்துக் கொண்டிருக்கிறார். ஆகவே பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆகவோ ஒருவரை...

சர்வம் பார்ப்பன மயம் ஜகத்

சர்வம் பார்ப்பன மயம் ஜகத்

  தாழ்த்தப்பட்ட மக்களுடைய குறைபாடுகளை கவனித்து சீர்திருத்தம் செய்து முன்னேற்றம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட லேபர் கமிஷனர் வேலையை ஒரு பார்ப்பனருக்குக் கொடுத்து அதில் பார்ப்பனீயம் புகுத்தப்படுவதோடு அந்த இலாக்காவும் பார்ப்பனமய மாக்கப்படுகிறது. இப்போது போதாக்குறைக்கு சென்னை இன்ஸ்பெக்டர் ஆப் லோக்கல் போர்டாக தோழர் எஸ்.ரங்கநாதம் ஐ.சி.எஸ். அவர்களை நியமித்திருக்கிறார்கள். இவர் எவ்வளவு பிடிவாதப் பார்ப்பன ஆதிக்கக்காரர் என்பது தோழர் தேவர் விஷயத்தில் நடந்து கொண்டதிலிருந்தும் மற்றும் அவரது கலெக்டர் உத்தியோகத்தில் இருந்தும் மக்கள் நன்றாய் உணர்வார்கள். இம்மாதிரி பெரிய பெரிய பயனுள்ள அதிகார ஆதிக்கமுள்ள உத்தியோகங்களுக்கெல்லாம் பார்ப்பனர்களே நியமிக்கப்படுகிறார்கள். இதற்குப் பெயர்தான் ஜனநாயகம் போலும். இதுதான் ராமராஜ்யம் போலும். இதுதான் “இப்போது நடப்பது நம்ப ஆட்சி” போலும். நடந்தது நடக்கட்டும். இன்னும் என்னென்ன நடக்குமோ நடக்கட்டும். அதிக முறுக்கேறினால் அறுந்துபோகும் என்கின்ற ஆப்த வாக்கியம் மெய்யாகுமா பொய்யாகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு –...

ராஜிநாமா நாடகம்

ராஜிநாமா நாடகம்

வேறு என்ன செய்தால் வண்டவாளம் மறையும்? தோழர் சி. ராஜகோபாலாச்சாரியாரவர்கள் காங்கிரஸ் கமிட்டிகளிலிருந்து ராஜிநாமா கொடுத்துவிட்டதாக 11836ˆ ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அவ்வறிக்கையில் “இன்றிலிருந்து சென்னையிலோ அல்லது வெளியிடங்களிலோ உள்ள எந்தக் காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களுக்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என என் நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து ஆச்சாரியார் அவர்கள் காங்கிரஸ் சம்மந்தத்திலிருந்தே விலகிக் கொண்டதாக அர்த்தமாவதில்லை. நிர்வாக பதவிகளிலிருந்து மாத்திரம் விலகிக் கொண்டதாக அர்த்தமாகிறது. ஆனால் தோழர் காந்தியாரோ இரண்டு வருஷத்துக்கு முன்னதாகவே காங்கிரஸ் நிர்வாக சம்மந்தத்திலிருந்து விலகிக் கொண்டது மாத்திரமல்லாமல் காங்கிரசில் ஒரு நாலணா மெம்பராகக்கூட இருக்க இஷ்டமில்லை என்று விலகிக்கொண்டதாக விளம்பரப்படுத்தினார். அது சமயமும் அவரால் ராஜிநாமாவுக்கு காரணங்கள் காட்டப்பட்டதில் “காங்கிரசிலுள்ள சிலர் நடந்து கொள்ளும் காரியம் தனக்குப் பிடிக்கவில்லை” என்பதையும் ஒரு காரணமாய் காட்டினார் என்றாலும் காங்கிரஸ் பக்தர்கள் என்பவர்களுக்கும் காந்தியாருக்கும் நடந்த “பிரிவு” கட்டமானது நாடகங்களில் காட்டப்படும்...

தீண்டாமையும் இஸ்லாமும்

தீண்டாமையும் இஸ்லாமும்

  இந்து மதத்தில் தீண்டாமையானது பலமான இடம் பெற்றிருக்கிறது என்பதை எந்த இந்துவும் இதுவரை மறுக்கவே இல்லை. அப்படி மறுப்பவர்கள் தாங்கள் யோக்கியமான இந்துவா, இந்து சாஸ்திரங்களை புராணங்களை வேத சாஸ்திரங்கள் எனபவைகளை கடவுள் வாக்குகள். கடவுள் நடவடிக்கைகள் என்பவைகளை அப்படியே ஒப்புக்கொள்ளுபவர்களா அல்லது தங்களுக்கு இஷ்டமானபடி சமயத்துக்கு மக்களை ஏய்ப்பதற்கு ஆக பேசுபவர்களா? என்பதை முதலில் நாணயமாய் முடிவு செய்து கொள்ள வேண்டும். ஜாதி பேதங்களையும், தீண்டாமையையும் ஒழிக்க இந்து மதம் இடம் கொடுக்குமானால் இந்து மதத்துக்கும் இஸ்லாம் மதத்துக்கும் வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நாம் பந்தயம் கட்டி கேட்கின்றோம். மதத்தின் பேரால் வயிறு வளர்த்து மரியாதை சம்பாதித்துத் திரியும் சோம்பேறிகள், எல்லா மதங்களிலும் இருக்கலாம். அதனால் மத தத்துவ ஆதாரங்களின்படி தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும், பேதமும் இஸ்லாம் மதத்தில் இல்லை என்பதையும் இந்து மதத்தில் இருப்பதோடு அல்லாமல் அமுலிலும் மிக்க கொடுமையான தத்துவத்துடன் இருந்து வருகிறது...

தமிழைக் கட்டாய பாடமாக்காததேன்?  – உண்மை கண்டோன்

தமிழைக் கட்டாய பாடமாக்காததேன்? – உண்மை கண்டோன்

  இப்போது நடந்த சென்னை சட்டசபைக் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன் காங்கரஸ் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் பல ரசமான விவாதங்கள் நடந்தன. அதுசமயம் காங்கரஸ் தலைவர்களின் அந்தரங்க மனப்பான்மை வெளியாயிற்று. சட்ட சபைக் காங்கரஸ் மெம்பர்களுக்குள்ளேயே சிறு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. தாய்ப்பாஷையபிமானமும், தேசீய வேட்கையுமுடைய எம்.எல்.ஏ. ஒருவர் காங்கரஸ் தலைவர்களைக் கண்டு நாம் சென்ற வருஷ ஆகஸ்டு மாதத்தில் நடந்த கமிட்டி கூட்டத்திலேயே இந்தியைக் கட்டாய பாடமாக வைக்கும்போது தாய்ப்பாஷையையும் கட்டாயமாக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோமே இப்போது தாய்ப் பாஷையைக் கட்டாயப்படுத்தாமல் இந்தியைக் கட்டாய பாடமாக்கியதால் தானே இவ்வளவு எதிர்ப்பு உண்டாகி விட்டது; தாய்பாஷையும் கட்டாய பாடமாகப் பத்தாம் வகுப்பு வரையில் இருக்க வேண்டுமென்று உத்தரவு செய்து விடுங்கள் என்று கேட்டார். உடனே, தலைவர் அவரை ஏற இறங்கப் பார்த்து உண்மையாகவா இப்படி கேட்கிறீர் என்று கேட்டு “தாய்ப் பாஷையை – தமிழைக் கட்டாயமாக்கினால் எப்படி இந்தி எதிர்ப்பு...

உடைப்பதா அனுபவிப்பதா?

உடைப்பதா அனுபவிப்பதா?

1937 ஏப்ரலில் அனுபவத்துக்கு வரப்போகும் சீர்திருத்தத்தை உடைப்பது என்பது காங்கிரஸ்காரர்களின் கொள்கை என்று சொல்லி மக்களை இதுவரை காங்கிரஸ்காரர்கள் ஏமாற்றி வந்தார்கள். அந்தப் பிரச்சினையை முக்கியமாய் வைத்தே காங்கிரஸ்காரர் இந்திய சட்டசபைக்கும் போனார்கள். ஆனால் அங்கு சென்று அது விஷயமாய் யாதொரு காரியத்தையும் செய்யாமல் தாங்கள் ஒரு கூட்டத்தார் இருக்கிறார்கள் என்று காட்டிக் கொள்வதற்கு ஆகவே அவர்களது முழுநேரமும் செலவிட வேண்டியதாய் விட்டது. அதே தன்மையின் மீது ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் சென்றார்கள். அங்கும் அவர்கள் இல்லாதிருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று காட்டிக் கொண்டார்களே தவிர ஒரு காரியமும் புதியதாய் செய்யவில்லை. அன்றியும் ஒருவரோடொருவர் போரிட்டவண்ணமாய் இருக்கிறார்கள். இனிவரப் போகும் சட்டசபைக்கும் நிற்கப்போகிறார்கள். ஆனால் நல்ல வேளையாய் அதற்கு என்ன கொள்கை? என்ன பிரச்சினையின் மீது நிற்பது? பொது ஜனங்களுக்கு என்ன வாக்குறுதி கொடுப்பது? அங்கு போய் என்ன செய்வது? என்கின்ற விஷயங்களில் இதுவரை யாதொரு முடிவும் இல்லாமல் “பலசரக்கு கடைக்காரனுக்குப் பைத்தியம்...

ஆம்பூரில் ஈ.வெ.ரா. விஜயம்

ஆம்பூரில் ஈ.வெ.ரா. விஜயம்

  தலைவர் அவர்களே! சகோதரர்களே! நான் இன்று நண்பர் தோழர் சித்தக்காடு கே.ராமையாவைப் பார்த்துப் பேசிவிட்டுப் போவதற்காகவே இங்கு வந்தேன். நான் வந்ததைத் தெரிந்து கொண்ட நீங்கள் என்னை பேசிவிட்டுத்தான் போகவேண்டுமென்று கண்டிப்பாக இட்ட கட்டளையை என்னால் மீற முடியவில்லை. எனக்கு அவசரமான வேலைகளிருக்கின்றன. என்னைப்பற்றி கூட்டத் தலைவர் நான் முஸ்லிம்களுக்கு அதிகம் வேலை செய்து வருவதாகவும், எனது பார்வையில் நடக்கும் பத்திரிகைகள் முஸ்லிம்களின் நன்மைக்கு தொண்டாற்றுவதாகவும் புகழ்ந்தார்கள். அப்படி அவர்கள் என்னைப் புகழ்ந்தது என்னைப் பெருமைப்படுத்துவதற்காகவும் நான் எடுத்துக் கொண்டிருக்கும் வேலையில் உற்சாக மூட்டுவதற்காகவும் சொல்லப்பட்டனவைகளாகவே கருதுகிறேன். ஆனால் உண்மை என்னவெனில் பிராமணரல்லாதாருடைய நன்மைக்கும் குறிப்பாக ஆதிதிராவிடர்கள் நன்மைக்குமே நான் முஸ்லிம்களுடைய உதவியை நாடியதாக இருக்குமே ஒழிய நான் முஸ்லிம்களுக்கு எதுவும் செய்திருக்க முடியாதென்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன். அன்றியும் முஸ்லிம்களுக்கு இன்று யாருடைய உதவியும் தேவையில்லை. இன்று இந்து மத சம்பிரதாயப்படி முஸ்லிம்களைப் பற்றி என்ன எழுதப் பட்டிருக்கிறதோ அதையே...

காங்கிரஸ் நிர்வாகம் எங்கும் ஊழல்

காங்கிரஸ் நிர்வாகம் எங்கும் ஊழல்

இப்போதுதான் புத்தி வருகிறது காங்கிரஸ் 1920ம் வருஷம் வரை அதாவது சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடந்து சீர்திருத்தம் பெறுவது என்கிற கொள்கையின் மீது கிளர்ச்சி செய்து பதவி அதிகாரம் முதலியவை பெறுவது என்கின்ற திட்டத்தில் வேலை செய்து வந்தவரை நிர்வாகம் அதிகமான ஊழல் இல்லாமல் நடந்துவரத் தக்கதாய் இருந்தது. ஆனால் அந்த நிருவாகம் பார்ப்பனரல்லாதார் இயக்க மூலம் பார்ப்பனரல்லாதார் கைக்கு மாறிய உடன் இனி சட்டப்படி ஒழுங்குக்கு கட்டுப்பாட்டு யோக்கியமான முறையில் கிளர்ச்சி செய்தால் தங்கள் கைக்கு நிர்வாகம் வரமுடியாது என்றும் தங்கள் வகுப்பார்களே ஏகபோகமாய் அனுபவிக்க முடியாது என்றும் கருதிய பார்ப்பனர்கள் காங்கிரசுக்கு புதிய கொள்கை ஏற்படுத்தி அதாவது சட்டம் மீறுவது, சட்டம் மறுப்பது, சர்க்கார் உத்திரவுகளை அலட்சியம் செய்வது முதலிய கொள்கைகளை ஆதரவாய் கொண்டு ஒழுங்கு விரோதமான முறைகளைக் கையாண்டு கிளர்ச்சி செய்வது என்பதற்கு ஏற்ற திட்டத்தில் கிளர்ச்சி செய்து வந்ததின் பயனாய் காங்கிரசில் கட்டுப்பாடு நாணயம் என்பன...

உஷார்! உஷார்!!  சுபாஷ் போஸ் வருகிறார்!!!  ஏன் வருகிறார்?

உஷார்! உஷார்!! சுபாஷ் போஸ் வருகிறார்!!! ஏன் வருகிறார்?

  காங்கரஸ் தலைவர் என்னும் பேரால் சுபாஷ் பாபு சமீபத்தில் நம் நாட்டுக்கு வரவழைக்கப்படப் போகிறார். அதாவது இம்மாதம் 9- ந் தேதி சென்னை மாகாணத்துக்கு வரப்போகிறாராம். இரண்டு வாரம் சுற்றுப் பிரயாணம் செய்வாராம். அவர் ஏன் வருகிறார்? அவரை யார் வரவழைக்கிறார்கள்? அவர் எதற்காக வரவழைக்கப்படுகிறார்? அவர் எப்படிப்பட்டவர்? அதற்காக நாம் என்ன செய்யவேண்டும்? என்கின்ற விஷயங்களை தமிழ் மக்கள் அறிய வேண்டியது மிகவும் அவசியமும் அவசரமுமான காரியமாகும். எனவே அதைப் பற்றி விளக்குவோம். தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி காங்கரஸ் சர்க்காரால் (பார்ப்பனர்களால்) சமாளிக்க முடியாத நிலைமையில் நடைபெறுகின்றது. இந்த இந்தி எதிர்ப்பைப் பற்றி பார்ப்பனர்களும், பார்ப்பன மந்திரிகளும், பார்ப்பன பத்திரிகைகளும், மற்றும் அவர்கள் தம் நிபந்தனை இல்லாத கூலிகளும் எவ்வளவுதான் விஷமத்தனமாகவும், இழிதன்மையாகவும் பழித்தும், பொய்க் கூற்றுகள் கற்பித்தும், வீணான குற்றச்சாட்டுகள் கூறியும், தப்புப் பிரசாரம் செய்து அலட்சியமாகப் பேசியும் எழுதியும் வந்த போதிலும் இந்தி...

விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சிப் பொதுக்கூட்டம்

விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சிப் பொதுக்கூட்டம்

அரசியல் பித்தலாட்டம் ஒரு நாட்டு மக்கள் முன்னேற வேண்டுமானால் அரசியலில் கட்சி, பிரதிகட்சி இருக்க வேண்டியதும், அவை ஒன்றுடன் ஒன்று போராட வேண்டியதும் நியாயமும் இயற்கையுமேயாகும். ஆனால் அவ்வித போராட்டமானது நியாயமான முறையிலும் ஒருவரை ஒருவர் துஷ்பிரசாரம் செய்யாமலும் இருப்பதே வரவேற்கத்தக்க விஷயமாகும். ஒரு கட்சியை மற்றொரு கட்சி தாக்குவதும் துஷ்டப் பிரசாரம் செய்வதும் ஒரு நிமிஷமும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாத காரியமாகும். நமது மாகாணத்தைப் பொறுத்த வரையில் காங்கிரசானது ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சென்ற இந்திய சட்டசபை தேர்தலுக்குப் பின் ஜஸ்டிஸ் கட்சி அழிக்கப்பட்டு விட்டதாகவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒன்றுதான் இருப்பதாகவும் உண்மைக்கு மாறாக தோழர் சத்தியமூர்த்தி முதல் சாதாரணத் தொண்டர் வரை தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால், புதியதாக ஜனக்கட்சி ஆரம்பிக்கப்பட்டவுடன் தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகள் இருப்பதாகவும், இந்நிலையில் மூன்றாவது கட்சிக்கு...

சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷன்  இனியும் மஞ்சள் பெட்டியா?  வெட்கம் இல்லையா?

சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷன் இனியும் மஞ்சள் பெட்டியா? வெட்கம் இல்லையா?

  காங்கரஸ்காரர்கள் கார்ப்பரேஷன் எலக்ஷனுக்கு 13 ஆட்களைப் பொறுக்கி எடுத்து விட்டார்கள். இவர்களுக்கு வரிகொடுப்போர் எதற்காக ஓட்டுச் செய்ய வேண்டும்? சட்டசபையிலேயே ஒரு மந்திரி சொல்லுகிறபடி ஒன்பது மந்திரிகள் ஆடுகிறார்கள். அவர்களுக்கு சொந்த புத்தி கிடையாது. இருந்தாலும் உபயோகிக்க முடியாமல் மானங்கெட்டு தவிக்கிறார்கள். சட்டசபை மெம்பர்கள் கதியும் அப்படியே. அது போலவே கார்ப்பரேஷனிலும் ஒருவர் (சத்தியமூர்த்தி என்கின்ற ஒரு பார்ப்பன தோழர்) சொன்னபடிக்கு தான் மற்றவர்கள் கேட்க வேண்டும். கேட்காவிட்டால் லஞ்சம் வாங்கினான் என்றோ, அடங்காப் பிடாரி – கட்டுப்பாட்டை மீறினான் என்றோ குற்றம் சாட்டி பெயரைக் கெடுத்து ராஜிநாமா செய்யச் சொல்லி வெளியில் விரட்டி விடுகிறார்கள். அய்யருடைய யோக்கியதை சிவசைலம் பிள்ளையை அவமானப் படுத்தியதிலும் தணிகாசலம் செட்டி ரோட்டுப் பெயர் மாற்றியதிலும் தெரியவில்லையா? ஆகவே காங்கரசின் பேரால் நிற்பவர்க்குத் தான் வெட்கம் இல்லை, மானம் இல்லை என்றாலும் காங்கரஸ் நிறுத்தின ஆட்களுக்கு ஓட்டுப்போடும் ஓட்டர்களுக்காவது மானம் வெட்கம் இருக்க வேண்டாமா?...

குடு குடுப் பாண்டி

குடு குடுப் பாண்டி

  குடு குடு, குடு குடு குடு, குடுக் குடுக். சதியாலோசனை நடக்குது சதியாலோசனை நடக்குது நடக்குதூ. குடு குடு, குடு குடு, குடுக் குடுக். அந்த மூலையிலெ நடக்குது. கடலோரத்திலே, காற்று வாக்கிலே, பத்து மந்திரி கூட்டத்திலே மாபாவிகள் நினைப்பிலே நடக்குது, நடக்குது, சதியாலோசனை நடக்குது. குடு குடு குடு குடு குடுக். என்ன நடக்குது சொல்லடி கம்பளத்தாயி? குடு குடு குடு குடு குடக். பத்திரிகையை நிறுத்தலாமா? ஜாமீன் கேட்கலாமா? பாண்டியனைப் பிடிக்கலாமா? விஸ்வநாதனைப் பிடிக்கலாமா வேண்டாம் – வேண்டாம், ராமசாமி ஒருவனைப் பிடித்தால் போதும். அப்புறம் பத்திரிக்கையைப் பிடிக்கலாம் என்று நடக்குது நடக்குது சதியாலோசனை நடக்குது. குடு குடு குடு குடு குடக். ஒரு பழைய சொக்காய் நீங்கள் கட்டிக் கிழித்த பீத்தல் துணி கொடுங்க. நடக்குது நடக்குது அந்த மூலையிலே நடக்குது. இந்தி எதிர்ப்பு படைக்கு 144 போடலாமா என்னு நடக்குது சதியாலோசனை. வாண்டாம் –...

ஸ்ரீனிவாச சாஸ்திரியார்

ஸ்ரீனிவாச சாஸ்திரியார்

தி ரைட் ஹானரபிள் சாஸ்திரியார் என்று பெயர் வழங்கப்பெறும் தோழர் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் இப்போது காங்கிரஸ்காரர்களுடன் வெளிப்படையாய் சேர்ந்து கொண்டு பார்ப்பனரல்லாதார் இயக்கம் பிற்போக்கானதென்றும், அதை அடுத்தத் தேர்தலில் எப்படியாவது தோற்கடிக்கச் செய்யவேண்டும் என்றும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு நாட்டில் இடம் கொடுத்தால் பார்ப்பனர்கள் நிலை மிக மோசமாகிவிடும் என்றும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தாலேயே பல பார்ப்பனர்கள் பெரிய பதவிக்கும் அந்தஸ்துக்கும் போக முடியாமல் போய்விட்டதென்றும் கூறி பார்ப்பனர்களை நமக்கு எதிரியாக கிளப்பிவருகிறார். மற்றும் காங்கிரஸ் கொள்கைகளைப் பற்றி தனக்கு ஆட்சேபனை இல்லையென்றும், வேலைத்திட்ட நிபந்தனைகளில் மாத்திரம் சிறிது தளர்த்தி தன் போன்றவர் அதில் வந்து சேரும்படி செய்யவேண்டும் என்றும் காங்கிரசுக்கு விண்ணப்பம் போடுகிறார். இப்படிப்பட்ட சாஸ்திரியார் யார்? அவரது பூர்வோத்தரமென்ன? அவரது கொள்கை என்ன என்பவை முதலியவைகளை பொது ஜனங்கள் உணரவேண்டுமென்பது நமது ஆசை. சாஸ்திரியார் ஒரு சாதாரண உபாத்தியாயராய் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர், ஆங்கிலம் பேசுவதில் நல்ல உச்சரிப்பை உச்சரிக்கக்கூடியவர், பொதுக்கூட்டங்களில்...

ஈ.வெ.கிருஷ்ணசாமி, ஈ.வெ.ராமசாமி தாயார் தாயம்மாள் முடிவு

ஈ.வெ.கிருஷ்ணசாமி, ஈ.வெ.ராமசாமி தாயார் தாயம்மாள் முடிவு

95 வயதுகாலம் சுகமே வாழ்ந்து, சுகமே இருந்து வந்த எனதருமைத் தாயார் சின்னத்தாயம்மாள் 28-7-36ந் தேதி செவ்வாய் நள்ளிரவு 12 மணிக்கு முடிவெய்தினார். அம்மையார் இந்திய மக்களின் சராசரி வாழ்வுக்கு 4 பங்கு காலம் அதிகமாகவே வாழ்ந்துவிட்டார். தானாக நடக்க இருக்க, மலஜலம் கழிக்க சௌகரியமுள்ள காலம் அவ்வளவும் வாழ்க்கை நடத்திவிட்டு சௌகரியம் குறைந்த 2 மணி நேரத்தில் முடிவெய்திவிட்டார். 28ந் தேதி இரவு 930 மணிக்கு அம்மையிடம் அனுமதி பெற்றே ஜோலார்பேட்டை பிரசாரத்துக்குச் சென்றேன். 12 மணிக்கு ஆவி போக்கு வரவு நின்றுவிட்டது. காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தேன். சின்னத்தாயம்மாள் சேலம் டவுனுக்கு 3 மைலில் உள்ள தாதம்பட்டி என்கின்ற கிராமத்தில் ஒரு பிரபல செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். மிக்க செல்வமாய் வளர்க்கப்பட்டவர். உதாரணமாக தனது கிராமத்தில் புஷ்பவதி ஆனதற்கு சேலம் டவுனில் ஊர்வலம் விடத்தக்க தடபுடல் வாழ்க்கையில் இருந்தவர். ஈரோட்டில் ஏழைக் குடும்பத்தில் குழந்தைப் பருவத்திலேயே தகப்பனார்...

சாஸ்திரியார் – ஆச்சாரியார் சம்பாஷணை

சாஸ்திரியார் – ஆச்சாரியார் சம்பாஷணை

  சாஸ்திரியார்: ஓய், ஓய், ஆச்சாரியாரே! உம்ம காந்தியும் நீரும் ஒழிந்து போக மாட்டீர்களா? ஆச்சாரியார்: என்ன, என்ன இப்படி கோபிக்கிறீள் சாஸ்திரிவாளே? சா: கோபமா, மண்ணாங்கட்டியா? உம்ம தலையிலே நெருப்பை வாரிக் கொட்ட! ஆ: சும்மா சொல்லுங்கள் சாஸ்திரிகளே. கோபப்படாதீர்கள், சங்கதி என்ன? சா: சங்கதியா வேணான்றா! இங்காராவது சூத்திரப்பயல்கள் இருக்கிறார்களா? (என்று சுத்தியுமுத்தியும் திரும்பி பார்க்கிறார்.) ஆ: ஒருத்தருமில்லை சொல்லுங்கோள். சா: நீர்தான் மகாபுத்திசாலியாயிற்றே அப்படி இருக்க இந்த எம்.சி.ராஜா என்கிற – யன் பிராம்மணாள் ஓட்டலிலே, காப்பிகடைகளிலே “பறையன் பள்ளன்” எல்லாம் ஒண்ணா பின்னா புழங்கலாம் என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால் நீங்கள் 50-60 பிராம்மணாள் கொழுக்கட்டையாட்டமா அங்கே இருந்துண்டு அதெ பாசாக்கீட்றதா? இது என்ன கலி காலம். நீர் தான் உம் பெண்ணை காந்தி மகனுக்கு தந்தீர். தொலைந்து போமே. குரங்கு வனத்தைக் கெடுத்ததுமல்லாமெ சந்திரபுஷ்கரணியையும் கெடுத்த மாதிரி இப்படிப் பண்ணீட்டீரே இது நியாயமா? உம்ம...

காலஞ்சென்ற தோழர் ஏ.ஆர். சிவானந்தம்  வாழ்க்கை வரலாறு

காலஞ்சென்ற தோழர் ஏ.ஆர். சிவானந்தம் வாழ்க்கை வரலாறு

  உள்ளம் உவந்த உணர்ச்சியது வழியே கள்ளம் இன்றிக் காலங் கடத்தியவருள் தோழர் சிவானந்தம் ஒருவராவார். கரூர் தாலூகாவில் அரவக்குரிச்சியில் தோழர் இராமசாமி முதலியாரது திருமகனாக, 1884ம் ஆண்டிற் பிறந்தார். தோழர் இராமசாமி முதலியார் தொண்டை மண்டல வேளாள மரபினர். மிக்க செல்வந்தர். பிரபல மிராசுதாரருமாவர். தோழர் சிவாநந்தம் பண்டை முறைப்படி தமிழ்க்கல்வி நன்கு பயின்று தமது 20-வது வயதிலேயே குடும்ப பாரத்தையும் தாங்கலாயினார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்: சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமை யான்” என்னும் தமிழ் மறையின் தூய கொள்கையை நிலைபெறச் செய்ய வேண்டுமென்னும் உண்மை நோக்குடன் அவர் தமது 20-வது வயதில் பொது வாழ்க்கையிற் பெரிதும் ஈடுபடலாயினார். இயற்கையிலேயே ஏழைகளிடமும், தாழ்த்தப்பட்டோர்களிடமும் அளவற்ற பரிவும் அன்பும் உடையவர். இளமை தொட்டே தீண்டாமை, ஜாதி ஆணவம் முதலியவற்றை உள்ளூர வெறுத்து வந்தார். இவைகளே, மக்களுள் பிரிவினை உணர்த்தும் வன்பகையென்றும், இந்திய சமுதாயத்தை அரித்து வருங் கொடும் புழுக்களென்றும் உணர்ந்தவர்....

கிராம வாழ்க்கையும் ஆசிரியர் கடமையும்

கிராம வாழ்க்கையும் ஆசிரியர் கடமையும்

கிராம சீர்திருத்தம் என்பது ஏமாற்று வார்த்தை தோழர்களே! இன்று கொடுக்கப்பட்டிருக்கும் விஷயம் மிகவும் முக்கியமான விஷயம். இதைப்பற்றி ஒவ்வொருவரும் தங்கள் தங்களபிப் பிராயங்களைச் சொன்னார்கள். நான் தலைவர் என்கின்ற முறையில் முடிவுரையாக என் அபிப்பிராயத்தை கூறுகிறேன். நான் ஒரு எதிர் நீச்சக்காரன். என்ன காரணத்தாலோ நம் நாட்டு மக்களின் பெரும்பான்மையான அபிப்பிராயத்துக்கு நான் மாறுபட்டவனாக இருந்து வருகிறேன். பழமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாய்க் காணப்படுகிறது. நானோ பழமைப்பித்தை வெறுக்கிறவனாக இருக்கிறேன். அதனாலேயே நான் வெகு பேர்களால் வெறுக்கப்படுகிறேன். ஆனாலும் அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. கிராமமும் ஆசிரியரும் என்கின்ற பொருள் இன்றைய கூட்ட விஷயமாகும். அதைப்பற்றி மூவர் பேசினார்கள். அது சம்பந்தமாய் என் அபிப்பிராயத்தை தலைவர் முடிவுரை என்கின்ற முறையில் நான் பேசுகிறேன். ஆசிரியர்களை முதலில் எடுத்துக்கொள்ளுவோம். இன்றைய ஆசிரியர்களைப் பற்றி எனக்கு அதிக மதிப்புக் கிடையாது. அவர்கள் அறிவுக்கு முட்டுக்கட்டை ஆனவர்கள்...

திருவிதாங்கூர் அலங்கோலம்

திருவிதாங்கூர் அலங்கோலம்

  திருவிதாங்கூர் திவான் ஸர்.சி.பி.ராமசாமி நடத்தும் ஹிட்லர் தர்பாரைக் கண்டித்து சென்னை “ஹிந்து” பத்திரிக்கை ஒரு நீண்ட தலையங்கம் எழுதத் துணிந்து முன் வர வேண்டுமானால் திருவிதாங்கூர் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்க வேண்டுமென்று நாம் கூறவும் வேண்டுமா? ஆம்! திருவிதாங்கூர் நிலைமை இனி ஒரு நாளும், எவராலும் பரிகரிக்கவே முடியாதபடி அவ்வளவு பாழாகப் போய் விட்டது. சர்.சி.பி. திவானாயிருக்கும் வரை திருவிதாங்கூர் நிலைமை சீர்படாது என்று சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. சர்.சி.பி.யின் அடக்குமுறைகளைத் தாங்க முடியாமல் இன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழை, கோட்டயம் ஆகிய நான்கு நகரங்களிலும் சர்.சி.பி. சர்க்கார் பிறப்பித்திருக்கும் தடை யுத்தரவுகளை மீற திருவிதாங்கூர் சமஸ்தான காங்கரஸ் நிர்வாகிகள் தீர்மானித்து விட்டனர். இப்பத்திரிக்கை இன்று வெளிவருமுன் இந்த நான்கு நகரங்களிலும் சமஸ்தான காங்கரஸ் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பது நிச்சயம். தர்மராஜ்யம் எனப் புனை பெயர் பெற்ற திருவிதாங்கூரிலே கலவரங்களும், தடை யுத்தரவுகளும், சட்ட மறுப்புகளும்,...

மருதையா பிள்ளைக்கும் மார்க்க சகாய தீக்ஷதருக்கும் சம்பாஷணை

மருதையா பிள்ளைக்கும் மார்க்க சகாய தீக்ஷதருக்கும் சம்பாஷணை

– கோமாளி யெழுதுவ�து மருதையாபிள்ளை: வாங்கய்யா தீக்ஷதரே! சௌக்கியமா? ரொம்பநாளாக காணமே. மார்க்க சகாய தீக்ஷதர்: ஆமாம், என்ன செய்கிறது? பிழைக்கிறவழி பார்க்கவேண்டாமா? மருதையா: நீங்கள் என்ன பாடுபடவா போகிறீர்கள், யாரோ சம்பாதிக்கிறான், எப்படியோ உங்கள் காரியம் நோகாமல் நடந்து விடுமே, என்ன குறை? மார்க்க: பூர்வீகம் போல் எண்ணிக்கொண்டு ஒன்றுந் தெரியாதவர் போல் பேசறீர்களே. மருதையா: பூர்வீகமென்ன? நவீனமென்ன? எப்போதும் போலவேதான் உதயம் அஸ்தமனம் ஆகிக்கொண்டே வருகிறது. உமக்கு மாத்திரம் என்ன வித்யாசப்பட்டு காண்கிறதோ? எனக்கு ஒன்றும் தோணவே இல்லையே. மார்க்க: ஆமாம், உமக்கென்ன தெரியவேண்டி இருக்கிறது? எங்களைப்போல தூங்கி விழித்ததும் எங்கு கல்யாணம், எங்கு கருமாதி என்று வீடுவீடாக அலைந்தாலல்லவோ தெரியும். அப்படித்தான் அலைந்தாலும் முன் போல ஏதாவது மரியாதையுண்டா? இல்லாவிட்டாலும் தக்ஷணையாவது அணாக்கணக்கில் உண்டா? எல்லாம் வர வரக் கெட்டுப் போய்விட்டது. அந்த வயித்தெரிச்சலைக் கிளப்பாதேயும். வேறு ஏதாவது பேச்சிருந்தால் பேசுங்கோ. மருதையா: என்ன தீக்ஷதரே, மிக...

இந்தி எதிர்ப்பும்  பார்ப்பனப் பத்திரிகைகளும்

இந்தி எதிர்ப்பும் பார்ப்பனப் பத்திரிகைகளும்

  இந்தி எதிர்ப்பு விஷயமாய் சென்னை மாகாணத்தில் இருந்து வரும் கிளர்ச்சியைப் பற்றியும், அது விஷயமாய் சர்க்கார் கையாளும் கொடுங்கோன்மை அடக்குமுறையைப் பற்றியும் அந்த அடக்குமுறையை சரியென்று சொல்லி பொது ஜனங்களை சமாதானப்படுத்த அரசாங்கத்தார் சொல்லும் காரணங்களாகிய அதாவது ்இந்தி எதிர்ப்பில் அரசாங்கத்துக்கு பல தொல்லைகள் ஏற்படுகிறது” என்பதைப் பற்றியும் மற்றும் ்இந்தி எதிர்ப்பு காரியங்கள் அரசாங்கத்தார் சகிக்கமுடியவில்லை” என்றும் “அது அரசாங்கமே நடைபெற வொட்டாமல் சங்கடத்தை விளைவிக்கக் கூடியதாய் இருக்கிறது” என்று திணறுவதாகக் காட்டிக் கொள்வதைப் பற்றியும் இந்தி எதிர்ப்புக்காரர்களுக்கு தாராளமான பணம் இருப்பதாகவும், கட்டுப்பாடாக இயக்கம் நடத்தப்படுவதாகவும் அதனால் தொண்டர்கள் ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல் புறப்பட்டு திக்குமுக்காடச் செய்வதால் கடுமையான அடக்குமுறைகளைக் கையாள வேண்டி இருந்தது என்று சொல்லுவதுடன் ஒரு பெரிய மெஜாரிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகள் தங்கள் இஷ்டப்படி காரியம் செய்யாமல் தடுக்கும்படியான பெரிய கிளர்ச்சியாய் போய் விட்டதால் இப்போது இதை அடக்க தங்களுக்கு இருக்கிற...

தமிழ் மக்களே!

தமிழ் மக்களே!

  பார்ப்பனர் ஆட்சி இந்தி என்றும், இந்துஸ்தானி என்றும் சொல்லிக்கொண்டு வடமொழியை (ஆரிய மொழியை) தமிழர்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைப்பதின் கருத்து என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் மலையாளத்தைப் பாருங்கள். மலையாளத்தில் வடமொழியும் வடமொழி நூலும் புகுந்து ஆதிக்கம் பெற்ற பின்னரே மலையாளப் பெண்கள் அதிலும் மேல் ஜாதி உயர் குடும்பப் பெண்களை பார்ப்பனர்கள் வைப்பாட்டிகளாக அனுபவிக்க முடிந்தது. இன்றும் சில பெண்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டிகளாக இருக்கவே விரும்புகிறார்கள். சில மலையாளிகள் தங்களை மலையாளித் தகப்பன் மகன் என்று சொல்லிக் கொள்வதைவிட மலையாளப் பார்ப்பானின் மகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறார்கள். நாம் எதற்காக இதை எடுத்துக்காட்டுகிறோம் என்றால் இந்தி – வடமொழி இந்நாட்டில் ஆதிக்கம் பெற்றால் தமிழ் மக்களை இந்த நிலைக்குத்தான் கொண்டு வந்து விடும் என்பதை எடுத்துக்காட்டவேயாகும். இப்பொழுது சூத்திரன் என்றால் யார்? சூத்திரச்சி என்றால் யார்? வடமொழி நூலும், பாஷையும் இங்கு ஆதிக்கமில்லாமல் இருந்தால் தமிழ் மக்களில்...

இரு மசோதாக்கள்  யார் வகுப்புவாதிகள்?

இரு மசோதாக்கள் யார் வகுப்புவாதிகள்?

  முன்னேற்றத்துக்கு யார் முட்டுக்கட்டை! பார்ப்பனீயத்தின் விளைவு இந்தியாவில் இன்று இரண்டு வகுப்பார்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சிறிது கூட விவகாரமே இருக்காது என்று கருதுகிறோம். அதாவது ஒன்று : பெண் மக்கள். இரண்டு : தீண்டப்படாத மக்கள் என்பவர்கள். இவ்விரு கூட்டத்தாரும் கல்வியில் 100க்கு ஒருவர் இருவர் கூட படித்தவர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லத்தக்கதாகத்தான் இருக்கிறார்கள். செல்வத்திலோ பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. ஏனெனில் சட்டப்படியே பெண்களது வாழ்க்கை என்பது ஆண்களுக்கு அடிமை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். பெண்கள் கற்று இருப்பதும் சொத்து வைத்திருப்பதும் மிக அருமையாகத்தான் இருக்கும். அதுபோலவே தீண்டப்படாதவர்கள் என்கின்றவர்கள் நிலையும் சமுதாய ஒழுங்குப்படியே மனிதத்தன்மை அற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் பிறவித் தொழிலாளிகள், செல்வம் சேர்க்க சந்தர்ப்பமும், சமசுதந்திரமும் இல்லாதவர்கள். சட்ட நிர்பந்தத்தினாலல்லாது படிக்கவோ அரசியல் ஸ்தானம் பெறவோ முடியாதவர்கள். இப்படிப்பட்ட இரு சமூகத்தாரையும் பற்றி அரசாங்கம் கவனித்ததல்லாமல் இதுவரை எந்த ஜனத்...

காங்கிரசும் முஸ்லீம்களும்

காங்கிரசும் முஸ்லீம்களும்

  காங்கிரசில் சில முஸ்லீம்கள் தீவிர உணர்ச்சி காட்டுவதாக காங்கிரஸ் பத்திரிக்கைகள் என்பனவற்றில் அடிக்கடி பிரஸ்தாபப்படுத்தப்படுகிறது. உண்மையாகவே முஸ்லீம்கள் எப்படி இப்படிப்பட்ட காங்கிரசில் இருக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. பதவி மோகம் உள்ளவர்களும் காங்கிரசை தன் சொந்த சுயநல வாழ்க்கைக்கு ஆதார ஸ்தாபனமாய் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கருதுபவர்களும் காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவதில் ஆச்சரியமில்லை. காங்கிரஸ் பக்தராய் நடிப்பதில் ஆட்சே பணை இல்லை. ஆனால், தன் காலில் நிற்கக்கூடிய சுதந்திர வாதிகளும் நடுநிலை வகிப்பவர்களும் தங்களது மதத்தையும் சமூகத்தையும் முதன்மையாய்க் கருதுபவர்களும் எப்படி காங்கிரசில் இருக்கிறார்கள் என்பதுதான் நமக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. இணையில்லாத தேசீய வீரர்கள் என்று போற்றப்பட்ட தோழர்கள் மௌலானாக்கள், மகமதலி, ஷவ்கத்தலி ஆகிய இரு பெரியார்கள் “நாங்கள் முதலில் முஸ்லீம் இரண்டாவதும் முஸ்லீம் மூன்றாவது தேசீய வாதிகள்” என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படியிருக்க இன்று காங்கிரசின் முக்கிய சூழ்ச்சியானது முஸ்லீம்களின் ஆதிக்கத்தை எப்படியாவது தாழ்த்துவது என்றே குறிக்கொண்டிருக்கும்போது அதை...

ஆச்சாரியார் கடற்கரைப் பேச்சு

ஆச்சாரியார் கடற்கரைப் பேச்சு

  தற்காலம் நமது நாட்டில் நடைபெறும் புரோகித ஆட்சியானது தனது தகுதியற்ற தன்மையையும், சக்தியற்ற தன்மையையும் வெளிப்படுத்திவிட்டது. சென்ற வாரம் சென்னை கடற்கரையில் பிரதம மந்திரி கனம் ஆச்சாரியார் தலைமையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஆச்சாரியாரும், மற்றொரு அய்யங்கார் பார்ப்பன மந்திரியான கனம் டாக்டர் ராஜனும் முக்கிய பேச்சாளர்களாக விளங்கி இருக்கிறார்கள். அதுபோலவே வெள்ளிக்கிழமை நடந்த சென்னை சட்டசபை நடவடிக்கையிலும் கனம் ஆச்சாரியாரும், ஆந்திரப் பார்ப்பனரான கனம் பிரகாசமும் முக்கிய பேச்சாளராக இருந்திருக்கிறார்கள். இவர்களது இரண்டு இடத்துப் பேச்சுகளிலும் கடற்கரைப் பேச்சைவிட சட்டசபைப் பேச்சு சற்று பிகுவாகவும், முறுக்காகவுமே இருந்திருக்கிறது. அதைப்பற்றி பின்னால் கவனிப்போம். என்றாலும் பார்ப்பன ஜாதிக்கு ஆட்சி தகாது என்பதும், அதற்கு ஆட்சி தெரியாது என்பதும் இந்த இரண்டு இடத்து 4 பேச்சுகளிலும் நன்றாய் விளங்கி விட்டது. கடற்கரைக் கூட்டத்தில் முதலில் பேசிய கனம் டாக்டர் ராஜன் முழுதும் நடுக்கத்துடன் உண்மைக்கு விரோதமாக, பித்தலாட்ட பாஷையில் கூட்டத்தாரை...

வங்காளம் கற்பிக்கும் பாடம்

வங்காளம் கற்பிக்கும் பாடம்

  வங்காளத்திலும் பாஞ்சாலத்திலும் சிந்துவிலும் ஆசாமிலும் முஸ்லிம் மந்திரிசபை ஏற்பட்டது. இந்தியாவிலே ராமராஜ்யம் ஸ்தாபித்து மீண்டும் வர்ணாச்சிரம ஆட்சியை நிலைநிறுத்தப் பாடுபட்டு வரும் காங்கரஸ்காரருக்கு மிக்க மனக் கொதிப்பையும் பொறாமையும் வயிற்றெரிச்சலையும் உண்டு பண்ணியது. சென்ற ஏப்ரில் 1 – ந்தேதி முதற்கொண்டே அந்த நான்கு மந்திரிசபைகளையும் கவிழ்க்க காங்கரஸ்காரர் பகிரங்கமாகவும் அந்தரங்கமாகவும் சூழ்ச்சிகள் செய்து வருகின்றனர். அவர்கள் முயற்சி பாஞ்சாலத்திலும் வங்காளத்திலும் ஆசாமிலும் பலிக்கவில்லை. சிந்துவில் ஓரளவு பலித்தது. முதலில் ஸர். குலாம் ஹúசேன் ஹிதயத்துல்லா ஸ்தாபனம் செய்த மந்திரி சபையைக் கவிழ்த்து காங்கரஸ்காரர் சொற்படி நடக்கும் அல்லாபக்ô மந்திரி சபையை ஏற்படுத்தினார். அந்த மந்திரி சபை முஸ்லிம் நலனுக்கு முரணாகவும் மாகாண க்ஷேமத்திற்கு பாதகமாகவும் நடந்து வருவதினால் அதைக் கவிழ்க்க வேண்டுமென்று முஸ்லிம் லீக் தீர்மானித்து விட்டது. தற்கால சிந்து மந்திரிகள் காங்கரஸ்காரர் உதவியினாலே உயர்வாழ வேண்டியவர்களாக இருக்கின்றனர் காங்கரஸ்காரருக்குச் சொந்த பலம் அதிகமில்லையாயினும் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி பேசி...

பார்ப்பன ஆட்சி இன்னும்  என்ன செய்ய வேண்டும்?

பார்ப்பன ஆட்சி இன்னும் என்ன செய்ய வேண்டும்?

  “தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து, மனிதனைக் கடிக்க ஆரம்பித்து விட்டது” என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது போல் பார்ப்பனீயம் அதாவது பார்ப்பன ஆட்சி, அங்கு கை வைத்து இங்கு கை வைத்து அடிமடியில் கையைப் போட்டுவிட்டது என்று சொல்ல வேண்டியதாகிவிட்டது. காங்கரசைப் பற்றியும், காந்தியைப் பற்றியும் நாம் எதிர்த்தும் மக்களை ஜாக்ரதையாய் இருக்க வேண்டுமென்று எச்சரித்து வந்ததுமானது, அரசியல் ஆதிக்கம் நமக்கு கூடாதென்றோ வெள்ளையர், அன்னியர் இந்நாட்டை விட்டு போகக் கூடாதென்றோ அல்ல என்பதை அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கின்றோம். ~subhead காந்தியையும் காங்கரஸையும் எதிர்ப்பதேன்? ~shend ஆனால் மற்றென்ன காரணம் என்றால் இந்நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து வயிறு பிழைக்க வந்து இந்நாட்டு ஆதி மக்களை பல வழிகளிலும் ஏய்த்தும், கொடுமைப்படுத்தியும் வெற்றி கொண்டு, அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி ஆட்சி புரிந்த 3 – வகையாரில் அதாவது ஆரியர், முஸ்லீம்கள், ஐரோப்பியர் ஆகியவர்களில் ஆரியர்களே மிக மிக கொடுமை செய்து மக்களை...

சுயமரியாதை இயக்கப் போதனை  “சாந்தி வாழ்வே எனது ஆசை”

சுயமரியாதை இயக்கப் போதனை “சாந்தி வாழ்வே எனது ஆசை”

  தோழர்களே! சுயமரியாதை இயக்கம் என்ன போதிக்கிறது என்பதை மக்கள் முதலில் தெரிந்து கொண்டால்தான் சுயமரியாதை இயக்கத்தில் சேருவதும் அதைப்பற்றி பேசுவதும் ஒருவனுக்கு பொருத்தமாகும். சுயமரியாதை இயக்கம் ஒவ்வொரு மனிதனையும் முதலில் தன்னை மதிக்கச் சொல்லுகிறது. தன்னை மதிப்பது என்றால் தனது பஞ்சேந்திரியங்களையும் அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவைகளால் ஏற்பட்ட பிரத்தியக்ஷ அனுபவங்களைக் கொண்டு ஆராய்ந்தறிந்த உண்மையை மதிக்கச் சொல்லுகிறது. இன்று மனித சமூகத்தில் பெரும்பாலான மக்கள் அனேக காரியங்களில் இந்த தன்மையை மதிப்பதில்லை, அனேக காரியங்களுக்கு இந்த அனுபவங்களைப் பொருத்துவதில்லை. மனிதன் உலகிலுள்ள மற்ற ஜீவராசிகளை விட மேலானவன் என்பதற்கு எடுத்துச் சொல்லும் ஆதாரம் மற்ற ஜீவர்களுக்கு உள்ளதைவிட மேலான ஐம்புலன் உணர்ச்சி இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. இதைத்தான் சுயமரியாதை இயக்கமும் ஆதரித்து அவைகளை மரியாதை செய், அவற்றிற்கு மதிப்புக் கொடு, அவற்றின் முடிவுப்படி நட என்று சொல்லுகிறது. ~subhead நம்மவர்கள் போக்கு ~shend...

காங்கிரஸ் சூழ்ச்சி விளக்கம்

காங்கிரஸ் சூழ்ச்சி விளக்கம்

தோழர்களே! சமீபத்தில் வரும் அரசியல் சீர்திருத்தமானது எவ்வளவு தான் பயனற்றது என்றும் அதை உடைத்து எரியவேண்டும் என்றும் காங்கிரஸ்காரர்களாலும் மற்றும் பல தேசீயவாதிகள் என்பவர்களாலும் வாயினால் சொல்லப்பட்டாலும் காரியாம்சத்தில் எப்படியாவது சீர்திருத்தத்தின் கீழ்வரும் தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று ராஜவிஸ்வாசம், ராஜபக்தி, ராஜிய சட்டத்துக்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கு கட்டுப்படுதல் என்கின்ற காரியங்களுக்கு சர்க்காருக்கு சத்தியம் செய்து கொடுத்து மந்திரி பதவிகளை ஏற்று அதை அமுல் நடத்துவதென்றே சொல்லிக்கொண்டு இப்பொழுதிருந்தே எல்லா அரசியல் கட்சியாருள்ளும் போட்டிப் பிரசாரங்கள் நடந்துவருகின்றன. இந்த லட்சணத்தில் இந்த கொள்கை உடைய காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சி ராஜவிஸ்வாச கட்சியென்றும், அதை 500 கெஜ ஆழத்தில் வெட்டிப் புதைக்க வேண்டும் என்றும் சட்டசபைத் தேர்தல்களில் தங்களுக்கே ஓட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அதிதீவிரமாய் பிரசாரம் செய்து வருகிறார்கள். இது “அவன் கெடக்கிறான் குடிகாரன் எனக்கு இரண்டு சொப்பு கள்ளு ஊத்து” என்று வெறிகாரன் சொல்லுவதுபோல் இருக்கிறது. காங்கிரஸ்காரர் என்பவர்களுக்கு இன்று மானம்,...

திருச்சியில் இந்தி எதிர்ப்பு படை  வழியனுப்பு உபசாரம்  7000 பேர் கூட்டம்

திருச்சியில் இந்தி எதிர்ப்பு படை வழியனுப்பு உபசாரம் 7000 பேர் கூட்டம்

  தோழர்களே! இன்றைய கூட்டம் இந்தி எதிர்ப்புப் பிரசாரத்துக்கு ஆக செல்லும் படையை வழியனுப்புவதற்காக என்றே கூட்டப்பட்டது என்பது அழைப்பு விளம்பரத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட கூட்டத்தில் வந்து சிலர் குழப்பம் விளைவிக்க நினைத்தது சுத்த முட்டாள்தனமாகும். இந்த கூட்டத்தில் இரண்டொருவர் ்காந்திக்கு ஜே” போடுவதும் ்இந்தி வாழ்க” என்று கத்துவதும் மண்ணை வாரி இறைத்து வேஷ்டியை வீசி மக்களை எழுந்து போகும்படி காலித்தனம் செய்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். கூட்டத்தை கலிபுல்லா சாயபு மிக்க வலுவுடன் அடக்கி இராவிட்டால் இன்று பலர் உதைபட்டு துன்பப்பட்டு இருப்பார்கள். போலீசும் இல்லாத இந்த சமயத்தில் காலிகளுக்கு இக்கூட்டத்தார் புத்தி கற்பிக்க ஆரம்பித்து இருந்தால் என்ன நிலை ஏற்பட்டு இருக்கும்? கூட்டத்தில் இந்தியை ஆதரிக்கிறவர்கள் எவ்வளவு பேர் என்று தோழர் கலீபுல்லா சாயபு கேட்டபோது கை தூக்கிய எண்ணிக்கையிலிருந்தே இத் தொல்லைக்காரர்களின் யோக்கியதை நன்றாய் விளங்கி இருக்கும். அவர்களும் பெரிதும் பார்ப்பனர்களாகத்தான் இருந்திருப்பதாய் தெரிகிறது. இம்மாதிரி காலித்தனத்தால்...

இந்தி எதிர்ப்பும் அரசாங்கமும் எதிரிகளும்

இந்தி எதிர்ப்பும் அரசாங்கமும் எதிரிகளும்

  இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காக இதுவரை 197-பேர்கள் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். நூற்று இருபது பேர்கள் வரை தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு 4 – மாதம், 5-மாதம், 6-மாதம் கடின காவலும், ஒரு மடாதிபதி சந்யாசிக்கு 2-வருஷ கடின காவலும், மற்றொரு பி.ஏ. படித்த யாழ்ப்பானத்து சன்யாசியாருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனையும் அளித்திருப்பதோடு இவர்கள் எல்லோருக்கும் ஜெயிலில் இ (சி) கிளாஸ் உணவும் தகுதியும்தான் கொடுக்கப்பட வேண்டுமென்றும் தீர்ப்பளித்து அந்தப்படியே அவர்கள் அத்தனை பேரையும் மொட்டை அடித்து கிரிமினல் கைதிகள் உடுப்புக் கொடுத்து மிகக் கொடூர வாழ்வு வாழும்படி நடத்தப்பட்டு வருகிறார்கள். சிறை சென்ற தொண்டர்களில் பலர் பெருத்த செல்வவான்களின் பிள்ளைகள் சிலர் மாதம் 100, 200 – ரூபாய் சம்பாதிக்கக் கூடியவர்கள். சில தொண்டர்களின் பெற்றோர்கள் சென்னை வந்து தொண்டர்களுக்குப் பல வித உபசாரங்கள் சொல்லி காங்கரஸ்காரர்கள் தயவு பிடித்து அழைத்துப் போக முயற்சித்தும் தொண்டர்கள் மறுத்து விட்டார்கள். இரண்டொரு லட்சாதிபதிகள்...

வெளிநாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்களுக்கு வேண்டுகோள்

வெளிநாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்களுக்கு வேண்டுகோள்

தோழர்களே! பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரம் செய்வதற்காக “தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசார மத்தியக் கமிட்டி” என்ற பெயரால் ஒரு கமிட்டி ஏற்படுத்தி அப்பிரசாரத்திற்கு ஜில்லாக்கள் தோறும் நிதி வசூலித்து வருகிறோம். வசூல் செய்து முடிந்ததும் ஜில்லாக்கள் தோறும் பிரசாரம் செய்ய போகிறோம். ஒரு சிறு தமிழ் தினசரி பத்திரிகையும் துவக்க எண்ணியுள்ளோம். ஆதலால் கொளும்பு, பர்மா, சிங்கப்பூர், பினாங், ஜாவா, சுமத்திரா, கொச்சின், சைனா, டர்பன் ஆகிய வெளிநாடுகளிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்கள் எங்கள் பிரசாரக் கமிட்டிக்கு உதவி செய்ய வேண்டுகிறோம். முக்கியஸ்தர்களாய் உள்ளவர்கள் முயற்சி எடுத்து பணம் வசூலித்து அனுப்ப விரும்புகிறோம். அந்தப்படி வசூலித்து அனுப்பப்படும் ஒவ்வொரு காசும் பார்ப்பனரல்லாதார் சமூகம் சுயமரியாதை பெறவும் பார்ப்பனீயம் அழிக்கப்படவும் பயன்படுத்தப்படும். அவ்விதம் உதவி செய்பவர்கள் þ கமிட்டி பொக்கிஷதார் விருதுநகர் (சேர்மன்) தோழர் வி.வி. இராமசாமி அவர்கள் பெயருக்கு செக்கு எழுதி “குடி அரசு” ஆபீஸ் மூலம் அனுப்பும்படி வேண்டுகிறோம். மூவார் தோழர்கள்...

டாக்டர் சுப்பராயனும்  C.R. ஆச்சாரியாரும்

டாக்டர் சுப்பராயனும் C.R. ஆச்சாரியாரும்

  சென்னை காங்கிரஸ் கட்டிடத்தில் ஜஸ்டிஸ் கட்சியை வரப்போகிற தேர்தலில் முறி அடிப்பதற்கு தீவிரப் பிரசாரம் செய்யவேண்டும் என்று யோசனை செய்து காங்கிரஸ்காரர்கள் 11736ந் தேதி தோழர் சத்தியமூர்த்தி தலைமையில் ஒரு கூட்டம் கூட்டினார்கள். அதற்கு முக்கிய பேச்சாளராக டாக்டர் சுப்பராயன் அவர்களும் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் பேசி இருக்கிறார்கள். தோழர்கள் சுப்பராயனும் ஆச்சாரியாரும் பிரிந்து பிரிந்து ஒன்றுகூடி இருப்பது இது ஒரு பத்தாவது தடவை ஆக இருக்கலாம். இருவரும் தலைக்கு ஒரு லட்சியத்தை பிடிவாதமாகக் கொண்டவர்கள். அந்த லட்சியங்கள் தான் அடிக்கடி அவர்களை பிரிக்கவும் கூட்டவும் செய்து வருகிறது. அதென்ன வென்றால் தோழர் சுப்பராயனின் லட்சியமெல்லாம் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்பதேயாகும். தோழர் ஆச்சாரியார் லட்சியமோ எப்படியாவது பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதேயாகும். ஆகவே அரசியல் என்பது யோக்கியமற்றதும் நாணயமற்றதுமாகும் என மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியதை மெய்ப்பிக்க இவ்விரு...

காவேரிப்பட்டணத்தில் தோழர் ஈ.வெ.ரா.  ஆடம்பரமான ஊர்வலம்  பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்

காவேரிப்பட்டணத்தில் தோழர் ஈ.வெ.ரா. ஆடம்பரமான ஊர்வலம் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்

  தான் இந்தி எதிர்ப்பு சம்பந்தமாய் வந்திருப்பதாகவும் இந்தி எதிர்ப்புக்கு அவர்கள் உதவியை எதிர்பார்ப்பதாகக் கூறி – சென்ற ஒரு வருட ஆட்சி பார்ப்பன வருணாச்சிரம ஆட்சியாக இருந்து வருகிறது என்பதைப் பல ஆதாரங்களைக் காட்டிப் பேசினார். உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கிறது என்றும் பார்ப்பனரல்லாதார் ஆங்கில உயர்தரக் கல்வி பெற்று உத்தியோகங்கள் அடைவதைத் தடுக்க வார்தாத் திட்டம் என்றும் இந்திப் பாடம் என்றும், உபாத்தியார், பள்ளிக்கூடம், சிலேட்டுப் பலகை எதுவுமின்றி அட்டைகள் மூலம் கல்வி போதிப்பது என்றும் கூறி நமது தமிழ் மக்கள் மேல்படிப்புப் பெறுவதைத் தடுப்பதன் மூலம் நமது மக்களைத் தற்குறிகளாக்கித் தாங்களே எல்லாப் பதவிகளையும் வகித்து என்றென்றும் தலைதூக்க முடியாமல் செய்யும் சூழ்ச்சியிலிறங்கி இருக்கிறார்கள் என்று விளக்கினார். காங்கரஸ்காரர்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டி எந்த ஒரு விஷயத்திலும் நாணயமாய் நடந்து கொள்ளவில்லை என்பதை ருசுக்களோடு எடுத்துக் காட்டினார். ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காலத்தில் இரட்டை ஆட்சியின்...

எனது திட்டம்

எனது திட்டம்

தலைவரவர்களே! தோழர்களே! ஜஸ்டிஸ் கட்சியின் வேலைத்திட்டம் என்று இப்போது என்னால் ஆமோதிக்கப்படும் வேலை தீர்மானமானது சுமார் 2 வருஷத்துக்கு முன்னமேயே என்னால் அக்கட்சிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்திற்கு பல சரித்திரங்கள் உண்டு. இத்திட்டம் முதல் முதலில் எப்படி ஏற்பட்டது என்றால் தோழர்கள் காந்தியாரும் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் நானும் ஒத்துழைக்க ஏதாவது சந்தர்ப்பம் ஏற்படக்கூடாதா என்ற பிரச்னை எழுந்த காலத்தில் என்னால் யோசித்து எழுதப்பட்டு þயார்களில் ஒருவர் ஆமோதிப்பும் பெற்று காந்தியாருக்கு அனுப்பிக் கொடுக்கப்பட்ட திட்டங்களின் தத்துவமாகும். அவை ஏற்றுக் கொண்டதாக தோழர் காந்தியாரிடமிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் வராததாலேயே ஜஸ்டிஸ் கட்சிக்கு சமர்ப்பித்தேன். அவர்கள் அவற்றை சில வார்த்தைத் திருத்தங்களுடன் ஒப்புக்கொண்டார்கள். அதன்பின் தான் இதே திட்டங்கள் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களால் இவை பொது உடமைத் தீர்மானங்கள் என்றும் ராமசாமியை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளுவதற்கு ஆக ஜஸ்டிஸ் கட்சியார் கொடுத்த விலை என்றும் சொல்லப்பட்டதாகும். மற்றும் பார்ப்பன தேசீயப் பத்திரிக்கைகளாலும்...

பாண்டியன் ராமசாமி வேண்டுகோள்

பாண்டியன் ராமசாமி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஜில்லாவிலும், தாலூகாவிலும் பார்ப்பனரல்லாதார் மகாநாடுகள் கூட்ட ஆங்காங்குள்ள இயக்கத் தோழர்கள் முயற்சி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்ளுகிறோம். W.P.A. சௌந்திரபாண்டியன் ஈ.வெ. ராமசாமி குடி அரசு அறிவிப்பு 19.07.1936

“இரணியன் அல்லது இணையற்ற வீரன்”

“இரணியன் அல்லது இணையற்ற வீரன்”

இன்று நாடகம் நடத்திய தோழர் அர்ஜுனன் வெகுவீரமுடன் நடந்து கொண்டதைக் காண எனக்கும் இரணியனாக வேஷம் போடலாமா என்ற ஆசை என்னை அறியாமல் ஏற்படுகிறது. ஆனால் தாடி இருக்கிறதே என்று யோசனையைக் கைவிட்டேன். நாடகங்கள் எல்லாம் குறைந்தது 2மணி நேரத்தில் முடிவு பெறவேண்டும். மத்தியில் பாட்டுக்களைக் கொண்டு வந்து நுழைப்பதால் கதையின் ஸ்வாரஸ்யம் குறைந்துபோகிறது; உணர்ச்சி மத்தியில் தடைப்படுகிறது. நாடகங்களில் இரண்டுவிதமுண்டு. ஒன்று பாட்டாக நடத்திக் காண்பிப்பது; மற்றொன்று வசன ரூபமாய் நடத்திக் காண்பிப்பது. வசன ரூபமாய் காண்பிப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். பல உபந்யாசங்கள் செய்வதைவிட இத்தகைய நாடகம் ஒன்று நடத்தினாலும் மக்களுக்கு உணர்ச்சியையும், வீரத்தையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்தி ஓர் கவர்ச்சியை உண்டாக்குகிறது. நம் எதிரில் நடந்த மாதிரிதான் ஆதியில் இரணிய நாடகம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை பார்ப்பனர்கள் தமக்குச் சாதகமாக திருத்தி உபயோகப் படுத்திக்கொண்டார்கள். பழைய நாடகங்களை நாம் சீர்திருத்திப் புதிய முறையில் நடத்திக் காண்பிக்க வேண்டும். நாடகங்களில்...

கிருஷ்ணகிரியில் ஈ.வெ.ரா.

கிருஷ்ணகிரியில் ஈ.வெ.ரா.

  இந்த காங்கரஸ் மந்திரி சபை பொய்யும் பித்தலாட்டமும் செய்து வோட்டுகளைப் பெற்று பதவிக்கு வந்தது என்பதை எடுத்து விளக்குகையில் போலீஸ் சர்க்கிளின்ஸ்பெக்டர் அருகாமையிலிருந்து கொண்டு ஒரு காங்கரஸ்காரன் பொய் என்று கூச்சலிட்டான். இரண்டொரு காங்கரஸ் காலிகள் ஆங்கங்கே நின்று கொண்டு கூச்சலிட்டுக் கூட்டத்தைக் கலைக்க முயன்றும் பலிக்காமையால் மறைந்து விட்டார்கள். பிறகு தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் எப்படி காங்கரஸ்காரர்கள் மானமிழந்து சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதாக சத்தியம் செய்து கொடுத்து சரணாகதியடைந்து மந்திரி பதவி பெற்றார்கள் என்றும், பிறகு வெள்ளைக்கார உத்தியோகஸ்தர்களையும் கவர்னரவர்களையும் துதிபாடித் திரிகிறார்கள் என்றும், வகுப்பு வாதமில்லாதவர்கள் மந்திரி பதவிகளிலும் உத்தியோகங் களிலும் தங்கள் பார்ப்பன வகுப்புக்கே சலுகை காட்டி வருகிறார்கள் என்றும், எப்படி வரியைக் குறைப்பதற்காகப் போனவர்கள் வரியை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள் என்றும் எப்படி கட்டாய இலவச கல்வி கொடுப்பதாகச் சொன்னவர்கள் கட்டாய இந்தியின் பேராலும், பள்ளிக்கூடங்களை மூடுவதன் மூலமும், வார்தா திட்டத்தின் மூலமும் அட்டை கடுதாசி...

சிறையில் இந்தி எதிர்ப்பாளர் துயரம்

சிறையில் இந்தி எதிர்ப்பாளர் துயரம்

  சட்டமறுப்புக் காலத்திலே கிரிமினல் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றியபோது இந்திய தேசீய வாதிகள் எல்லாம் ஒரு முகமாக எதிர்த்தனர். அச்சட்டங்களை நிறைவேற்றிய பிரிட்டிஷ் சர்க்கார் மீது ஓயாது வசை புராணம் பாடினர். தேர்தல் காலத்திலே அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை ஒரு முக்கிய பிரச்சினையாக மதித்துக் காங்கிரஸ்காரர் பதவியேற்றால் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாகவும் வாக்குறுதியளித்து பாமர மக்களின் வோட்டுகளைப் பறித்தனர். காங்கரஸ்காரர் செய்த விஷமப் பிரசாரத்தின் பயனாகவும் காங்கரஸ்காரர் பதவிக்கு வந்தால் மண்ணுலகமே பொன்னுலகமாகிவிடுமென பாமர மக்கள் முட்டாள்தனமாக நம்பியதின் பயனாகவும் இப்பொழுது 7 – மாகாணங்களிலே காங்கரஸ் மந்திரிசபைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் எல்லைப்புற மாகாணத்தைத் தவிர வேறு எந்த காங்கரஸ் மாகாணத்திலும் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க முயற்சி செய்யப்படவே இல்லை. மாறாக காங்கரஸ்காரரால் வெறுக்கப்பட்ட ஸி.ஐ.டிகளும், 144 தடையுத்தரவுகளும் இன்றியமையாத தேவையென்றும் அவைகளின் உதவியின்றி எந்தச் சர்க்காரும் இயங்க முடியாதென்றும் காங்கரஸ் மந்திரிகளே பகிரங்கமாகக் கூற முன்வந்துவிட்டார்கள். காங்கரஸ் மந்திரிகள் கட்டளைப்படி...

சத்தியமூர்த்தி வாய்க்கொழுப்புக்கு ஆப்பு

சத்தியமூர்த்தி வாய்க்கொழுப்புக்கு ஆப்பு

  ஆச்சாரியார் மந்திரிசபையின் ஆச்சரியமான போக்கைப்பற்றியும், கட்டாய இந்தியின் தீங்கைப்பற்றியும், இந்தியால் தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலைக்கும், தமிழ் மக்கட்கும் நேரும் இன்னல்களைப் பற்றியும், அடக்கு முறையைப் பற்றியும், பிரஜா உரிமை, பேச்சுரிமை ஆகியவைகளைப்பற்றியும், கிரிமினல் அமென்மெண்ட் ஆக்டின் தன்மையைப்பற்றியும், காங்கரஸ் கட்சிக்கும் பார்ப்பனீயத்திற்கும் உள்ள ஒற்றுமையைப் பற்றியும், தேசீயப்போர்வையில் வகுப்புவாத ஆட்சி நடத்துவதுபற்றியும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், மதராஸ் ஆகிய விடங்களில் பள்ளிக்கூடங்களை மூடிவரும் கொடுஞ் செயல்களைப்பற்றியும், புதிய கடன் 3லீ கோடிக்கும், அதிக வரி 13க்கும் பள்ளிக்கூடங்களை மூடி வேறு வேலையிருக்க முடியுமா? என்பதுபற்றியும் மக்கள் கண்ணை மூடி காங்கரசை ஆதரித்ததினாலேயே கட்டாய இந்தி வந்து புகுந்தது என்றும் பொது ஜனங்கள் எதையும் நன்கு ஆலோசித்து உணர்ந்து செய்ய வேண்டும் என்றும் சுமார் 1லீ மணி நேரம் இடி முழக்க முழக்கினார். குறிப்பு: 08.07.1938 ஆம் நாள் தூத்துக்குடி மேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்....

தஞ்சையில் சத்தியமூர்த்தியார்

தஞ்சையில் சத்தியமூர்த்தியார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் என்னுடைய தஞ்சை உபன்யாசத்துக்கு பதில் என்னும் தலைப்பில் அடியில் கண்டபடி பேசி இருப்பதாக சுதேசமித்திரன் பத்திரிகையில் பார்த்தேன். ஆனால் அதே விஷயம் மற்றும் வேறு சில சென்னை பத்திரிகைகளில் சிறிது விஷமத்தனமாகவும் அதாவது ராவணன், விபீஷணன் கதைகளை ஒப்பிட்டு பேசி இருப்பதாகத் தெரிகிறது. இவற்றுள் எதை உண்மையாய் வைத்துக் கொள்வதானாலும் சரி. இப்போதைக்கு எனது அபிப்பிராயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். சுதேசமித்திரனில் காணப்படுவதாவது: வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ~shend “ஸ்ரீமான் நாயக்கர் தன் பிரசங்கத்தில் காங்கிரஸ் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தை ஒப்புக்கொண்டால் அவர் காங்கிரசில் சேரத் தயாராக இருப்பதாக கூறினாராம்… ஸ்ரீமான் நாயக்கர் அபிப்பிராயத்தை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக காங்கிரஸ் எப்போதும் தேசமக்கள் யாராய் இருந்தாலும் யாவரும் சமஉரிமை அடைய வேண்டும் என்ற நோக்கத்தையே கொண்டுள்ளது. ஒரு சிறுபான்மை ஜாதியினரே உத்தியோகங்களை வகிப்பதை காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்காது. இவ்விஷயம் காங்கிரசால்...

ஒரு வருஷ ஆட்சி படலம்

ஒரு வருஷ ஆட்சி படலம்

  காங்கரஸ் மந்திரிகள் பதவி ஏற்று ஒரு வருஷமாகி விட்டது. அதாவது அவர்கள் தேர்தலுக்கு நிற்கும் போது மந்திரி பதவி ஏற்பதில்லை என்றும் அரசியல் சட்டத்தை உடைத்தெறிவதற்கும் ஏகாதிபத்தியத்தைத் தொலைப்பதற்காகவுமே சட்டசபைக்குப் போகிறோம் என்றும் சொல்லி பாமர மக்களை ஏய்த்து ஓட்டுப் பெற்று சட்டசபை அங்கத்தினர்களான பிறகு அரசியல் சட்டத்தை உடைப்பதானால் மந்திரி பதவி ஏற்றுத்தான் ஆகவேண்டுமென்றும் சொல்லி பதவி ஏற்க முன்வந்து காங்கரஸ் கமிட்டி பேரால் அனுமதி உண்டாக்கிக் கொள்ளத் துணிந்து கொண்டு பதவி ஏற்ற பிறகு அரசாங்கத்தார் தங்களை பதவியில் வைக்காவிட்டால் என்ன செய்வது என்று பயந்து அதற்காக ்நாங்கள் பதவி ஏற்றாலும் புதிய அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்” என்கின்ற வாக்குறுதியை சர்க்காருக்கு கொடுக்கவும் காங்கரஸ் கமிட்டி மூலமே தீர்மானித்துக் கொண்டு அந்த வாக்குறுதி கொடுப்பதையும் பாமர மக்கள் ஏமாறும்படி அதாவது சர்க்காரை வாக்குறுதி கேட்பது போல் பாவனை செய்து அந்த வாக்குறுதி கேட்பதற்கு ஆக வாக்குறுதி...

பார்ப்பனரல்லாதார் இயக்கம்  சுற்றுப்பிரயாணத்தில் செய்த உபன்யாசங்களின் சாரம்

பார்ப்பனரல்லாதார் இயக்கம் சுற்றுப்பிரயாணத்தில் செய்த உபன்யாசங்களின் சாரம்

  தலைவர் அவர்களே! தோழர்களே!! நாங்கள் ஒரு மாத காலத்துக்கு மேலாகவே தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்து வருகிறோம். சென்னை நகரத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு போதிய ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து எங்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். சென்னை சென்னையில் தான் இயக்கப் பிரமுகர்கள் என்பவர்கள் எங்களை சிறிதும் சட்டை செய்யவில்லை. அவர்களுக்கு பயம் என்றே கருதுகிறோம். ஏனெனில் பிரசாரம் ஏற்பட்டால் பிறகு தங்களுக்கு மரியாதை இல்லாமல் போகுமே என்கின்ற பயமேயாகும். காலமெல்லாம் பட்டம், பதவி, பணம் பெற்று சுகமாக தூங்கிக் கொண்டு இருந்துவிட்டு சமயம் வரும்போது எப்படியோ தந்திரம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி அது செய்கிறேன் இது செய்கிறேன் என்று வாயளந்து பதவிபெறும் வழக்கம் பட்டணத்தில் தான் இருந்து வருகிறது. ஆனால் இனி அது பலிக்காது என்று கருதுகிறேன். ஜனங்களிடத்தில் வந்து தாங்கள் செய்ததை சொல்லி எதிரிகளின் விஷமங் களை மறுத்துக் கூறினாலல்லது இனி தேர்தல்களில் வெற்றிபெற...

பாண்டியன் ராமசாமி பிரசாரக்கமிட்டி

பாண்டியன் ராமசாமி பிரசாரக்கமிட்டி

சேலத்தில் கூட்டம் பிரசாரக்கமிட்டி நியமனம் “சென்றமுறை நாங்கள் இங்கு வந்தபோது பிரசாரத்துக்குப் பொருளுதவி செய்வதாக தலைவர்கள் வாக்குறுதியளித்தார்கள். எங்கள் முயற்சி வெற்றிபெறுமென்று நம்புகிறேன். சுற்று பிரயாண காலத்தில் நான் கண்ணுற்ற முக்கியமான காட்சி என்னவெனில் காங்கிரஸ் கூட்டங்களுக்குச் செல்வதைக் காட்டிலும் ஜஸ்டிஸ் கட்சி கூட்டங்களுக்கு ஜனங்கள் ஏராளமாக வருவதாகும். இதனால் பொதுஜன ஆதரவு நமக்கு அதிகமாக இருந்து வருவது புலனாகிறது. பிரசாரமில்லாததினாலேயே நமது கட்சி அயர்ச்சி யுற்றிருக்கிறது. தீவிரமாக பிரசாரம் செய்தால் ஜனங்கள் நமது கட்சி விஷயங்களில் சிந்தனை செலுத்துவது நிச்சயம். நமது தோல்விக்கு நமது பலவீனமே காரணம்; எதிரிகளின் வலிமையல்ல. எனவே நமது குறைபாடு களை யுணர்ந்து ஊக்கமாக உழைக்க எல்லோரும் முன்வரவேண்டும்”. குறிப்பு: 27.06.1936 ஆம் நாள் சேலம் போல்க்ஸ் பங்களாவில் நடைபெற்ற தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் பிரசார மையக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் குழு உறுப்பினர் தோழர் ஈ.வெ.ரா. பேசியது. – குடி அரசு வேண்ட�ுகோள் 12.07.1936

ஆச்சாரியார் ஆட்சி நீடிக்க வேண்டும்  அடக்குமுறைகளும் வலுக்க வேண்டும்  அப்பொழுதுதான் மக்கள் உண்மையை உணர்வார்கள்

ஆச்சாரியார் ஆட்சி நீடிக்க வேண்டும் அடக்குமுறைகளும் வலுக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் உண்மையை உணர்வார்கள்

  தலைவரவர்களே! தோழர்களே! இன்று இந்த சென்னை கடற்கரையில் இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டத்தில் நான் பேச நேர்ந்ததைப்பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கூட்டமானது எனது நண்பர் கனம் ஆச்சாரியார் அவர்கள் தமிழ் மக்கள் மீது பலாத்காரமாய் சுமத்தும் பார்ப்பன பாஷையாகிய ஹிந்தியைத் தடுப்பதற்காக கூட்டப்பட்ட ஹிந்தி எதிர்ப்புக் கூட்டமாகும் என்பது நீங்கள் அறிந்ததேயாகும். இது தோழர் ஆச்சாரியார் சென்ற வாரத்தில் இதே கடற்கரையில் ஹிந்தி ஆதரித்து பேசுவதற்காக என்று கூட்டப்பட்ட கூட்டத்தில் அதன் தலைவர் தோழர் முத்துரங்க முதலியார் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த மக்களை எழுந்து போகும்படி சொன்னது போல் அதாவது “இக்கூட்டம் ஹிந்தியை ஆதரிக்கின்றவர்களுக்கு மட்டுமேயன்றி ஆதரிக்காதவர்களுக்கு இங்கு வேலையில்லை” என்று சொல்லி போலீஸ் குதிரைப் படையை விட்டு கூட்டத்தைக் கலைத்தும் போலீஸ் தடியைக்கொண்டு கூட்டத்தை விரட்டியும் அடித்தது போல் இக்கூட்டம் ஒரு சாராருக்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. இக்கூட்டம் ஹிந்தியை எதிர்ப்பதற்கு உண்டான காரணங்களைச் சொல்லவே கூட்டப்பட்டதானாலும் அன்றைய தினம்...

“தினமணி”க்கு சவால்

“தினமணி”க்கு சவால்

தென்னாட்டுப் பத்திரிகை யுலகத்தில் மழலைப்பருவங் கடவாதிருக்கும் “தினமணி” மூத்த பத்திரிகைகளைக் கிழடு தட்டிய பத்திரிகைகள் என்றும் விளக்கெண்ணெய், வெண்டைக்காய்ப் பத்திரிகைகள் என்றும் கேலிசெய்து தன்னைத்தானே விளம்பரப்படுத்தி வருவதைத் தென்னாட்டார் அறிந்திருக்கக் கூடும். மழலை உளறலை லக்ஷ்யம் செய்யலாமா எனப் பொறுப்புடையவர்கள் அடங்கியிருப்பதினால் “தினமணி”யின் திமிர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தமிழ்ப் பத்திரிகை உலகத்துக்குத் தானே சக்கரவர்த்தி என பாவித்துக்கொண்டு தலைகால் தெரியாமல் குதிக்கிறது. வசைபுராணம் பாடுவதில் தோழர் சத்தியமூர்த்தியையும் வென்றுவிடப் போட்டி போடுகிறது. ஜஸ்டிஸ் கட்சிக்குக் கருமம்செய்யத் தனக்கு இருந்து வரும் ஆவலையும் அடிக்கடி காட்டிக்கொள்கிறது. ஜுலை 2ந் தேதி வெளிவந்த “தினமணி”யில் “நாயக்கரின் பாவனை” என்ற தலைப்புடன் எழுதப்பட்டிருக்கும் உபதலையங்கத்தில் “தினமணி”யின் ஆணவமும் அற்பத்தனமும் அறியாமையும் ஒருங்கே மிளிர்கின்றன. ஜுலை 1ந் தேதி மாலை சென்னைப் பச்சையப்பன் கலாசாலை மைதானத்தில் தோழர் ஈ.வெ.ராமசாமி நிகழ்த்திய பிரசங்கத்தைக் கண்டித்து உப தலையங்கம் எழுதப் புறப்பட்ட “தினமணி” தோழர் நாயக்கரின்...

பார்ப்பனர் யோக்கியதை

பார்ப்பனர் யோக்கியதை

ஒடுக்கப்பட்ட மக்களின் சிவில் உரிமை சம்பந்தமான சில குறைபாடுகளை நீக்கும் பொருட்டு தோழர் எம்.ஸி. ராஜா இந்தியச் சட்ட சபையில் ஒரு மசோதா கொண்டு வந்திருக்கிறார். அது மிகவும் மிதமான ஒரு மசோதா. பொதுஜன அபிப்பிராயம் அறியும் பொருட்டு அது பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. ஜில்லா கலைக்டர்களும் தமது ஜில்லாக்களிலுள்ள பொது ஸ்தாபனங்களுக்கு அந்த மசோதாவை அனுப்பி அபிப்பிராயமறிய முயன்று வருகிறார்கள். திருநெல்வேலி, மதுரை வக்கீல் சங்கத்தார் அந்த மசோதாவை ஆதரிக்க முடியாதென்று அபிப்பிராயம் கூறிவிட்டதாகத் தெரிகிறது. தென்னாட்டு வக்கீல் சங்கங்களில் பார்ப்பனர் ஆதிக்கம் பெற்றிருப்பது உலகப்பிரசித்தமான விஷயம். தேவகோட்டை வக்கீல் சங்கத்தில் பார்ப்பன வக்கீல்களுக்கென தனியாகத் தண்ணீர்ப் பானை வைத்திருப்பதையும், அந்தப் பானையில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று தடையேற்படுத்தி யிருப்பதையும் நாம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். தேசீயக் கொடியேற்றுவதைப் பற்றியோ பள்ளிக்கூடங்களில் ஹிந்தி போதனை செய்வதைப்பற்றியோ தீர்மானங்கள் வந்திருந்தால் இந்தப் பார்ப்பன வக்கீல்கள் ஆதரித்துத் தமது “தேசபக்தியை”க் காட்டிக்கொள்ள தயங்க...

தமிழர் இருப்பதா! இறப்பதா!

தமிழர் இருப்பதா! இறப்பதா!

  அமெரிக்கா செல்வப் பெருக்குடைய நாடு, சுதந்தர நாடு, ஜனநாயகத்துக்குப் பேர் போன நாடு. ஆனால் அமெரிக்க ஜனநாயகம் ஒரு புதுரகம். அமெரிக்க ஜனநாயகத்துக்கு அடிப்படையாக இருப்பது முதலாளி நாயகமே. இது கேட்போருக்குப் புதுமையாகத் தோன்றலாம். ஆனால் உண்மை நிலை அதுவே. ஜனநாயகத்தின் அங்கங்களான காங்கரஸ், தேர்தல் தொகுதி, வாக்காளர், பொதுத் தேர்தல் முதலிய விநோதங்கள் எல்லாம் அமெரிக்காவில் உண்டு. ஆனால் காங்கரசுக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் தோரணைதரன் விசித்திரமானது. அமெரிக்காவிலே ஆயில் கிங், மோட்டார் கிங், காட்டன் கிங் என பல கோடீசுரர்கள் உண்டு. தேர்தல் காலங்களில் இக்கோடீசுரர்கள் தம் ஆட்களைத் தேர்தலுக்கு நிறுத்தி தமது சொந்தப் பணத்தைச் செலவு செய்து வெற்றி பெறும்படி செய்துவிடுவார்கள். ஈட்டி எட்டின மட்டும்தான் பாயும்; பணமோ பாதாளம் வரை பாயக் கூடியது. ஆகவே இந்த கோடீசுரர்களின் கையாட்கள் தான் பொதுவாகத் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க காங்கரசுக்கு மெம்பர்களாகச் செல்வது. கோடீசுரர் உதவியினால் காங்கரஸ்...

வெளிநாட்டுத் தோழர்களுக்கு வேண்டுகோள்  அன்புள்ள தோழர்களே!

வெளிநாட்டுத் தோழர்களுக்கு வேண்டுகோள் அன்புள்ள தோழர்களே!

இன்று நமது தமிழ் மொழியையும், தமிழர் நாகரீகத்தையும் கொலை செய்து தமிழர்களை, ஆரியர்களுக்கும் ஆரிய நாகரீகத்திற்கும் அடிமைப்படுத்தி பழைய மனுதர்ம முறைக்குக் கொண்டுவர இந்தி மொழியை கட்டாயமாகப் புகுத்த சென்னை மாகாண முதல் மந்திரி கனம் ஆச்சாரியார் முயற்சித்து விட்டார். இதைக் கண்டித்து சென்னை மாகாணம் முழுதும் பெருத்த கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. இது சம்மந்தமாக சுமார் 114 பேர்கள் வரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சுமார் 41 பேர்கள் வரை தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். இன்னும் பலரை கைது செய்யலாம். ஆகையால் வெளிநாட்டிலுள்ள தமிழ்நாட்டுத் தோழர்களே இந்தப் போரைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி தொடர்ந்து செய்ய வேண்டுமானால் அதிகமான பணம் வேண்டும். ஆகையால் நீங்கள் உங்களாலான பண உதவி செய்யும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். குடி அரசு – வேண்டுகோள் – 03.07.1938

நமது விண்ணப்பம்

நமது விண்ணப்பம்

  இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வேண்டி ்நமது” சுயராஜ்ஜிய சர்க்கார் இதுவரை 120 பேர்களை அரஸ்ட் (கைது) செய்து சுமார் 40 பேர்கள் வரை கிரிமினல் அமெண்ட்மெண்ட் ஆக்ட் 7-1-எ படி 4-மாதம், 6-மாதம் கடின காவல் சிட்சை கொடுத்துத் தண்டித்து கேப்பைக்கூழும், களியும் போட்டு மொட்டை அடித்து ஜெயில் உடை கொடுத்து குல்லாய் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள். மற்றும் தோழர்கள் சி.டி.நாயகம் (மாஜி டிப்டி ரிஜிஸ்ட்ரார்), ஈழத்து சிவானந்த அடிகள் பி.எ. (ஒரு சந்யாசி), கே. எம். பாலசுப்பிரமணியம் பி.எ.பி.எல்., ஷண்முகநந்த சுவாமி (ஒரு சந்யாசி), சி.என். அண்ணாதுரை எம்.ஏ. (ரிவோல்ட் பத்திராதிபர்), சுவாமி அருணகிரி நாதர் (ஒரு மடாதிபதி) முதலாகிய முக்கியஸ்தர்களை 3-வருஷம் வரை தண்டிக்கும்படியான இண்டியன் பினல் கோட் சட்டம் 117 பிரிவுப்படி கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிலர் ஜாமீனில் இருக்கிறார்கள் என்றாலும் இனியும் இந்த இரண்டு சட்டப்படியும் தினமும் 3 பேர்,...

திருப்பூர் மாவட்டத்தின் பிரச்சார பயணம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ”எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம், எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” எனும் முழக்கத்தோடு திருப்பூர் மாவட்ட பிரச்சார பயணம் 09.10.2015 காலை 11 மணிக்கு ஆரம்பமானது. தமிழகம் முழுவதும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தற்போது நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிற இந்த பிரச்சார பயணம் மக்களை நேரில் சந்தித்து ஜாதீய கொடுமைகள் குறித்தும்,அடுத்த தலைமுறைக்கான வேலையின்மை குறித்தும்,இட ஒதுக்கீடு குறித்தும் பல்வேறுவகையான கருத்துக்கள் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. நேற்று ஊத்துக்குளியில் துவங்கிய திருப்பூர் மாவட்ட பிரச்சார பயணத்தில் கழக மாநில அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி,கழக மாநில பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். திராவிடர் கலைக்குழுவின் தோழர் சங்கீதா அவர்கள் கொள்கை பாடல்களை பாடி நிகழ்சியை துவங்கினார்.திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் தோழர் முகில்ராசு அவர்கள் அறிமுக உரையாற்றினார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பகுத்தறிவு கருத்துக்களையும் கூறி தன்”மந்திரமா?தந்திரமா?நிகழ்சியை தோழர் காவை...