தோழர்  சிவலிங்கம்  மரணம்

 

நமது நண்பரும்,  சுயமரியாதை  இயக்க  பிரமுகருமான  ஜலகண்டாபுரம்  தோழர்  சி.கு.சிவலிங்கம்  அவர்கள்   221234ந்  தேதி  தமது  58  வது  வயதில்  காலஞ்  சென்றாரென்ற  செய்தி  கேட்டதும்  திடுக்கிட்டுப் போனோம்.

தோழர்  சிவலிங்கம்  அவர்கள்  வயது  சென்றவராயிருந்தாலும்  அங்குள்ள  சுயமரியாதை  தோழர்கட்கு  ஊக்கமளித்து  சுயமரியாதை  பிரசாரம்  செய்து  வந்தார். இவர்  ஜலகண்டாபுரம்  யூனியன்  போர்டிற்கு  ஆறாண்டு  தலைவராகவிருந்து  பல  அரிய  வேலைகள் செய்து  வந்தார்.  இப்படிப்பட்ட  பெரியார்  காலஞ்  சென்றதற்கு  வருந்துவதுடன்  நமது  அனுதாபத்தை  அவரது  குடும்பத்தாருக்கும்  அவருடைய  நண்பர்கட்கும்  தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

பகுத்தறிவு  இரங்கல் செய்தி  30.12.1934

You may also like...