ராமராஜ்யம்  திரும்பி  வருகிறது 

 

பலாத்கார  உடன்கட்டை

வடநாட்டில்  தாமோ  என்ற  தாலூகாவைச்  சேர்ந்த  நோஹ்டோ  என்ற கிராமத்தில்  ஒரு புருஷன்  காயலாவாக  இருந்து  இறந்து போனார்.  அவரது  மனைவியை  உடன்கட்டை  ஏறும்படி  அவரின் உறவினர்கள் கட்டாயப்படுத்தி  நெறுப்புக்குள்  பிடித்து  தள்ளிவிட்டார்களாம்.  மனைவி தப்பி  ஓட  எவ்வளவோ  முயற்சித்தும்  பயன்  இல்லாமல்  சாம்பலாகிவிட்டதாக  அசோசியேட்  பிரஸ்  கூறுகிறது.

இந்து மதத்தின்  பெருமையும்,  ராமராஜியத்தின்  அருமையும்  சுயராஜியத்துக்கு  எவ்வளவு  தகுதி  உடையது  என்பதை  இந்தியர்கள்  உணர்வார்களாக.

பகுத்தறிவு  செய்தி விமர்சனம்  23.12.1934

You may also like...