பகுத்தறிவு

 

நமது  “”பகுத்தறிவு”  தினசரியானது  நாம்  எதிர்பார்த்ததற்கு  அதிகம்  வளர்ச்சியடைந்து  வருகிறது.  நேற்றுடன்  ஒவ்வொரு நாளும்  3200  காப்பிகள்  வெளிவந்தது.  தமிழ்நாட்டில்  நமதியக்க  சம்பந்தமாக  உள்ள  சகல  செய்திகளும்  பிரதி தினமும்  தாராளமாக  வெளிவர வேண்டு மென்பதற்காகவே  இத்தினசரி  ஆரம்பிக்கப்பட்டது.  தினசரி  தனது  கடமையை  தைரியமாகச்  செய்ய  ஊக்கம்  காட்டிய  வெளியூர்  சந்தாதாரர்களையும்  ஏஜண்டுகளையும்  பாராட்டுகிறோம்.  மூவாயிரத்து  இருநூறாக  இருப்பது  இன்னம்  அதிகமாகாததற்கு காரணம்  சந்தா  அனுப்பாத  சந்தாதாரர்களுக்கும்  முன்பணம்  அனுப்பாத  ஏஜண்டுகளுக்கும்  நாம்  பத்திரிகை  அனுப்பாததேயாகும்.  இன்னும்  இரண்டு  தினத்துக்குள்  சேலம்,  திருச்சி,  திருப்பத்தூர்,  பொள்ளாச்சி,  கோவை  இவ்வூர்  ஏஜண்டுகள்  கேட்டுக்  கொண்டபடியால்  அன்றாடம்  பேப்பர்  மாலைக்குள்  கிடைக்கும்படி  செய்ய  ஏற்பாடு  செய்யப்படும்.

புரட்சி  அறிவிப்பு  29.04.1934

You may also like...