சாரதா சட்டம்

சாரதா சட்டம் இந்தியசட்டசபையில் திருத்தப்படும் என்றும் ஏப்ரல் முதல் அமுலுக்கு வருவது ஒத்திவைக்கப்படும் என்றும் ஒரு வதந்தி கிளப்பி விடப்பட்டிருக்கிறது.

ஆனால் சென்னை சர்க்கார் அச்சட்டத்தின் பிரதிகளை பொது ஜனங்களுக்கு வினியோகித்திருப்பதுடன் பத்திரிகைகளிலும் வெளியிட்டி ருக்கிறார்கள். எனினும் எப்படி நடக்கும் என்று சொல்வது முடியாத காரியமா யிருந்தாலும் இவ்விஷயத்தில் சர்க்கார் ஏதாவது பின் வாங்கினார்களே யானால் அதன் பலனை கண்டிப்பாய் அடைவார்கள் என்பதை மாத்திரம் நாம் உறுதியாய் நம்பி இருக்கிறோம்.

குடி அரசு – செய்தி விளக்கம் – 23.03.1930

You may also like...

Leave a Reply