சைமனுக்காக சட்டசபை பகிஷ்காரம்

சைமன் சென்னையில் இருக்கும் தினத்தன்றே நமது தேசீய வீரப்புலிகள் சட்டசபைக்குப்போய் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து பிரயாணப்படி வாங்கி வந்துவிட்டார்கள். காங்கிரஸ் சட்டசபைக் கக்ஷிக்காரர்களின் சட்டசபை பகிஷ்காரக் கூச்சலுக்கு இதைவிட வேறு என்ன யோக்கியதைவேண்டும். இவர்களை நம்பி எத்தனையோ சோணகிரிகள் இன்னமும் ஏமாந்து போகிறார்கள் என்றால் இவர்களுக்கு என்ன மாதிரி சுயராஜ்யம் கொடுப்பது என்பது நமக்குப் புரியவில்லை.

குடி அரசு – செய்திக் குறிப்பு – 04.03.1928

You may also like...

Leave a Reply