‘நீட்’ மற்றொரு உயிர் பலி: தமிழ்நாடு மாணவர் கழகம் மாணவரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதி நெம்பர் 10, முத்தூரைச் சேர்ந்த மாணவர் கீர்த்தி வாசன் நீட் தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருந்த நிலையில் 30.10.2021 அன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த உடன் 31.10.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

கிராமப்புற விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர் கீர்த்தி வாசன் தொடர்ந்து நான்காவது முறையாக நீட் தேர்வை எழுதியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் தோழர்கள் சபரிகிரி, விஷ்ணு, திருப்பூர் சந்தோஷ், பிரசாந்த், ராமகிருஷ்ணன் மற்றும் மகேந்திர குமார் உள்ளிட்ட மாணவர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 04112021 இதழ்

You may also like...