‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு

திருப்பூர் மாவட்டம் ஆத்துப் பாளையம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மதனின் ‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு விழா 18.02.2021, வியாழன் காலை 11.30 மணியளவில் நடை பெற்றது.

விழாவிற்கு திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக பகுத்தறிவுப் பாடல்களை து. சோ. பிரபாகர், பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோர் பாடினர். கழகப் பொருளாளர் துரைசாமி அங்காடியை திறந்து வைத்து உரையாற்றினார்.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்முன்னாள் வார்டு கவுன்சிலர் செந்தில்குமார்  விற்பனையை தொடங்கி வைத்தார்.  கழக அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, இயற்கை ஆர்வலர் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்திகழ்வில், திவிக கோவை மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் அகிலன், சங்கீதா, திருப்பூர் தெற்குப் பகுதிச் செயலாளர் ராமசாமி, மாநகரத் தலைவர் தனபால், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பிரகாஷ், கழகத் தோழர்கள் சரசு, சந்திரா, வீரலட்சுமி, தேன்மொழி, மணிகண்டன், ஹரீஷ் குமார், பிரசாந்த், ராஜசிங்கம், கதிர் முகிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் ஆத்துப்பாளையம்  முன்னாள் வார்டு கவுன்சிலர் ஊஞடஆ கீதாலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பகுதிப் பொறுப் பாளர் சந்தோஷ் இசைப்பிரியன், நண்பர்கள் ஜெகன், பிரபு, கிஷோர், கண்ணன், முத்து, வினோத், அஜித், ஜெகன் காயத்ரி, ஜோதி, சுபாஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 25022021 இதழ்

You may also like...