கழகப் பொறுப்பாளர்கள் சுற்றுப் பயணம் தோழர்களுடன் சந்திப்பு – உரையாடல்

கழகப் பணிகளை தீவிரப்படுத்தவும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆராயவும், கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்களை சந்திக்க சுற்றுப் பயணம் வருகிறார்கள்.

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களின் கவனத்திற்கு,

கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020, 2021) கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் இணைய வழியில் மட்டும் நடைபெற்று வந்தன. ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இயக்க பணிகள் சுணக்கமாகி விட்டது.

இதனைப் போக்கும் வகையில் மாவட்டம் தோறும் கழகப் பொருளாளர் மற்றும் அமைப்புச் செயலாளர், பரப்புரைச் செயலாளர், தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டத்தில் இயக்க செயல்பாடு மற்றும் கழக ஏடுகள் (புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம்) குறித்தும் தற்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர். பொறுப்பாளர்களின் சுற்றுப்பயண நிகழ்வின் முதல் பட்டியல் வெளியிடப்படுகிறது. வரும் வாரங்களில் மீதம் உள்ள மாவட்டத்திற்கான சுற்றுப்பயண விவர அறிக்கை வெளியாகும்

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் கலந்துரை யாடல் கூட்ட பயண விபரம் :

18.11.2021 வியாழக்கிழமை :

காலை : 11.00 மணி – மதுரை மாவட்டம். மதிய உணவு. மாலை 5:00 மணி – சிவகங்கை மாவட்டம் காரைக்குடி – இரவு தங்கல்.

19.11.2021 வெள்ளிக்கிழமை :

காலை 10:30 மணிக்கு – தஞ்சை மாவட்டம் பேராவூரணி. மதிய உணவு – மாலை : 4:00 மணிக்கு கும்பகோணம். இரவு 7:00 மணிக்கு – மயிலாடுதுறை. இரவுதங்கல்.

20.10.2021 சனிக்கிழமை :

காலை 11 மணிக்கு – கடலூர் மாவட்டம் – மதியம் : பெரம்பலூர் மாவட்டம் – மதிய உணவு – இரவு 7:00 மணிக்கு திருச்சி மாவட்டம்.

இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் :

23.11.2021 செவ்வாய்கிழமை :

காலை. 11:00 மணி – திண்டுக்கல் மாவட்டம், பழனி. மதிய உணவு. – மாலை. 4:00 மணி திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம். – மாலை – 7:00 பொள்ளாச்சி.

24.11.2021 புதன்கிழமை :

காலை 10:30 மணி கோவை மாவட்டம். – மாலை : 5:00 மணிக்கு திருப்பூர் மாவட்டம்.

25.11.2021 வியாழக்கிழமை :

காலை 10:00 மணி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு – மதிய உணவு – மாலை 4:00 மணி – ஈரோடு (வடக்கு) மாவட்டம் கோபி செட்டிபாளையம்.

மேற்கண்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத் திற்கான ஏற்பாடுகளை செய்து, அனைத்து தோழர்களுக்கும் உரிய தகவல் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை கழகம்,

திராவிடர் விடுதலைக் கழகம்

06.11.2021.

பயணக் குழுவில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் பங்கேற்கின்றனர்.

பெரியார் முழக்கம் 11112021 இதழ்

You may also like...