இரண்டே வாரம்

நமது “குடி அரசு”ப் பத்திரிகை கொஞ்ச காலமாக கூலி அச்சுக் கூடத் தில் பதிப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவ்வச்சுக் கூடத்தால் பல தடவை களில் எதிர்பாராத தாமதங்களுடன் காலந்தவறி பத்திரிகை வெளியாக வேண்டி ஏற்பட்டதினிமித்தம், சந்தாதாரர்களில் பலர் ஏமாற்றமடைய நேர்ந்த தால் தங்கள் மனவருத்தத்தையும் கோபத்தையும் தெரிவித்து வருகிறார்கள். “குடி அரசு” எத்தனை விதமான எதிரிகளின் சூக்ஷிக்கும், கொடுமைக்கும் தப்புவித்து நடந்து வருகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை. ஆதலின், பத்திரிகையை இரண்டொரு வாரத்திற்கு மட்டும் நிறுத்தி வேறு அச்சுக்கூடம் ஏற்பாடு செய்து, கூடியவரை காலந் தவறாது அனுப்பிவர ஏற்பாடு செய்ய சில யந்திரங்களும் எழுத்துக்களும் வந்திருக்கிறது. இனியும் சில சாமான்கள் வாங்க சென்னைக்கு ஆள் போகிறது. ஆதலால், அதுவரை வாசகர்களை மன்னிக்கும்படி வேண்டுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 28.03.1926

You may also like...

Leave a Reply