கழகத்தின் செயல்பாடுகள் மதுரை மண்டல கலந்துரையாடல் கூட்டம்

02.06.13 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஒட்டன் சத்திரத்தில் மதுரை மண்டலப் பொறுப்பாளர்களின்  கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் தி.தாமரைக் கண்ணன்  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதுரை, தேனி,  திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத் தோழர்கள் பங்கேற்றனர்.

ஜூன் 3 ஆம் வாரத்தில் மதுரை மண்டலப் பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிவகுப்பை பழனியில் நடத்துவது எனவும், ஆகஸ்ட் 3 ஆம் வாரத்தில் தொடர்ச்சியாக 15 நாட்கள் கிராமப்புறப் பிரச்சாரப் பயணம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

சுயமரியாதை கலைபண்பாட்டுக் கழகத்தின்  மதுரை மண்டல அமைப் பாளராக செம்பட்டி மு.இராஜாவும், சு.க.ப.க. திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளராக பீட்டர் அந்தோணிராஜும், சிவகங்கை சு.க.ப.க மாவட்ட அமைப்பாளராக தோழர் இளங்கோவும், திராவிடர் விடுதலைக்கழகத்தின்  சிவகங்கை மாவட்ட அமைப்பாளராக தோழர் முத்துக்குமாரும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

பெரியார் முழக்கம் 18072013 இதழ்

You may also like...